Wednesday, 31 October 2018

வாக்குப் பதிவு எந்திரம்

Siragu vaakku endhiram1
வாக்குப் பதிவு எந்திரம் நம்பிக்கைக்கு உரியது அல்ல என்று மிக மிக… மிகப் பெரும்பான்மையான மக்கள் புரிந்து வைத்துக் கொண்டு உள்ளனர். தங்கள் எண்ணத்தை அவர்கள் சமூக வலைத் தளங்களில் பதியவும் செய்கின்றனர். அதை எதிர்த்து வாதிட முடியாத காவிகள் / பார்ப்பனர்கள் ஒரேயடியாக அடித்துப் பேசுகின்றனரே ஒழிய, முறையான கருத்துகளை முன் வைப்பது இல்லை. “வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்றால் இந்த இடத்தில் காவிகளுக்கு வாக்கு குறைந்தது ஏன்? அந்த இடத்தில் வேறு கட்சிகள் வென்றது எப்படி?” என்று பல் முளைக்காத குழந்தை கூட கைகொட்டி நகைக்கும் படியான சொத்தை வாதங்களை முன்வைக்கின்றனர். இவை போன்ற வினாக்கள் எழுந்தால் அவற்றிற்கு விடை அளிக்க வேண்டும் என்பதற்காகவே எந்திரத்தை விட்டுப் பிடித்து இருக்கலாம், அல்லது இந்த மாதிரி முடிவுகள் தான் இப்போது தேவை என்று நினைத்து எந்திரங்களை அதற்கு ஏற்ப வடிவமைத்தும் இருக்கலாம் என்பதைப் பல் முளைக்காத பச்சைக் குழந்தையும் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு புறம் கிடக்கட்டும்.
மக்கள் முழு மனதுடன் எதிர்க்கும் இந்த வாக்குப் பதிவு எந்திரத்தை அதே வேகத்தில் அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை அல்லது எதிர்க்க முடியவில்லை. அரசியல் கட்சிகளில் பார்ப்பன ஆதிக்கம் உள்ள கட்சிகளே பெரும்பாலும் உள்ளன. அக்கட்சிகளை ஆட்டிப் படைக்கும் பார்ப்பனர்கள் (வெளியில் எதிர்ப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும்) காவிகளின் இன்றைய வளர்ச்சியைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அவாளுடைய ஒரே அச்சம் காவிகளின் கண் மண் தெரியாத வேகம் மக்களைப் புரட்சியின் பக்கம் துரத்தி விட்டு விடக் கூடாது என்பது தான். ஆகவே தேர் ஓடும் போது அது குறித்த திசையில் செல்வதற்காக முட்டுக் கட்டைகளைப் போடுவது போல் மிகவும் கவனமாக “எதிர்க்கிறார்கள்”.
\
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 30 October 2018

சிபிஐ -ல், மத்திய பா.ச.க ஆட்சியின் தலையீடும், உச்சநீதிமன்ற உத்தரவும்.!


Siragu avasara kaala2
பா.ச.க கட்சியின், திரு மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஆட்சி, கடந்த நான்கரை ஆண்டுகளாகவே, பலவித ஊழல் பிரச்சனைகளில் சிக்கி, விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.  பணமதிப்பிழப்பில் கறுப்புப்பணம் திரும்பி வராததை மத்திய ரிசர்வ் வங்கியே தெரிவித்துவிட்டது. இதன்மூலம் பலகோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டிருக்கின்றன. மேலும், வியாபம் ஊழலில், பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், சம்பந்தப்பட்டவர்கள் மர்மமான முறையில் கொலையும் செய்யப்படுகிறார்கள் என்பதுவும் நமக்கு  தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் தான், பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக,  ரபேல் பற்றிய ஊழல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெடித்திருக்கிறது. இந்த ரபேல் விமான ஊழல் ஒப்பந்தத்தின் மூலம், ஒரு லட்சத்து, 71 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், ரிலைன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அவர்களே, நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை, முன்னாள், பிரான்ஸ் அதிபர் காய்ஸ் ஹாலண்டே, டஸ்ஸால்ட் முத்த அதிகாரி, லொயிக் சிகலான் ஆகியோரின் வாக்குமூலங்கள் உறுதி செய்கின்றன. எதிர்க்கட்சித்தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் இதனை வெளிகொண்டுவந்து, அதற்கான போராட்டங்களையும் கையில் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 26 October 2018

அடுத்தது என்ன? (சிறுகதை)


Siragu aduththadhu enna1
காலை மணி ஐந்து. வெளியில் எங்கும் அந்தகாரமாயிருந்தது. சம்பந்தம் நடைப்பயிற்சி யோகா செய்ய வீட்டை விட்டு கிளம்பி விட்டார். மழையாக இருந்தாலும், புயலாய் இருந்தாலும், மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றாலும் அவருக்கே உடம்பு சரியில்லையென்றாலும் அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

சம்பந்தம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. டில்லி, மும்பாய், பூனே, போபால் நாட்டின் பல பாகங்களில் பணி செய்தாலும் பணி இறுதியில் மூன்று வருடங்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தில் பணி செய்து ஒய்வு பெற்றார். மிகவும் ஜாக்கிரதையானவர். அஞ்சல் பெட்டியில் கடிதத்தைப் போட்டுவிட்டு அதன் பின் பக்கம் போய் பத்திரமாய் உள்ளே போய்விட்டதா அல்லது பின் பக்கம் ஏதாவது ஓட்டை வழியாக விழுந்தது விட்டதா? என்று பார்த்துவிட்டுத்தான் வருவார். எப்போதும் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதைப் போல் பேசி அசத்துவார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 25 October 2018

கும்பமுனி அல்ல! நாஞ்சில் நாடன்


siragu-naanjil naadan1
நாஞ்சில் நாடன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரின் சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுதி சாகித்திய அகாதமியின் விருது பெற்றுள்ளது. இவரின் எழுத்துக்களில் தன் அனுபவக்கூறு மிகுந்து காணப்படுகிறது. இவரின் எழுத்துப் பழக்கம், இவரின் நடவடிக்கைகள் ஆகியவை கும்பமுனி என்ற பாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. பல கதைகளில் கும்பமுனி என்ற கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இப்பாத்திரத்திற்குத் துணைப் பாத்திரமாக கண்ணுப்பிள்ளை என்ற பாத்திரமும் அமைகின்றது.

மனைவியின்றித் தனிக்கட்டையாக வாழ்ந்து வரும் கும்பமுனிக்கு, கண்ணுப்பிள்ளைதான், தேநீர், உணவு போன்றவற்றைத் தயாரித்துத் தரும் பணியாளர் ஆவார். இவர் காலை முதல் இரவு வரை கும்பமுனியுடன் வாழ்ந்துவிட்டுப் பின் தன் இல்லம் திரும்பி, அதன் பிறகு நாளைக் காலை வருவது என்று பணி செய்பவர். இவர் அடிக்கடி ஊர் நடப்புகள் பற்றியும், கும்பமுனியின் நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனப்படுத்தும் விமர்சனகர்த்தாவாகக் கதைகளில் காட்டப்பெறுகிறார். இவரின் விமர்சனங்களுக்குப் பதில் தருபவராக கும்பமுனி படைக்கப்பெற்றுள்ளார். இவர் இருவரது உரையாடலில் எள்ளலும், நகைச்சுவையும், எரிச்சலும், இயலாமையும் தொனிக்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 23 October 2018

முத்தொள்ளாயிரம் ஒரு பார்வை

Siragu muththollaayiram2
உலா இலக்கியங்களுக்கு முன்னோடி முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களைப் பற்றியது.

இந்நூல் பெயர்க்காரணம் மூன்று வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்கள் என்றும், மூவேந்தருள் ஒவ்வொருவருக்கும் 900 பாடல்கள் என்ற இரு வேறு கருத்துகள் உண்டு. ஆக இந்த நூலின் மொத்த பாடல்கள் 2700 ஆக இருந்திருக்க வேண்டும், ஆனால் நமக்கு 108 பாடல்களே கிடைத்துள்ளன. புறத்திரட்டு என்பதில் இருந்துதான் இந்த 108 செய்யுள்களையும் தொகுத்துள்ளனர். இந்த பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளையில் அதாவது ஒருதலைக்காதல் கொண்டு பாடப்பட்டது. மூவேந்தர்களை எண்ணி அவர்கள். உலா வரும் போது அவர்களைக் கண்டு காதல் கொள்ளும் பெண்களின் மொழியாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. இந்த அடிப்படையைத்தான் பின்னாளில் பக்தி இலக்கியங்களில் ஆழ்வார் நாயன்மார் கையாண்டு உள்ளனர், கடவுளை தலைவனாக நினைத்து உள்ளம் உருகி பாடல்கள் எழுதினர் என்பது அறிஞர்களின் கருத்து.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 19 October 2018

தொகுப்பு கவிதை (அர்ச்சனைகள், தம்பிக்கு)

அர்ச்சனைகள்

                                         
sirau maanudam1

அந்தநாள் கனிந்து வந்து கொண்டிருக்கிறது
ஆமாம், அது வெகுதொலைவில் இல்லை.

எந்தநாளில் எவரெழுதி வைத்த சாத்திரமோ
எந்தநாளில் எவருக்காக எவரெவரோ எழுதி வைத்த நீதியோ
எந்தநாளில் எவரெவர் ஒடுக்கப்பட வேண்டுமென
எவனெவனோ கடைபிடித்த சடங்குகளோ.

அந்தநாளில் அவரெழுதி வைத்த
சாத்திரத்தை, நீதியை, சடங்குகளை
குருதிக் குளியலால் இனியும் நாங்கள்

ஏன் புனிதப்படுத்த வேண்டும்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/

Thursday, 18 October 2018

பாப் ஆர்ட் – ஓவியர் ஆன்டி வார்ஹோல்

 Siragu Andy_Warhol_1975

மனிதர்களையும், நிகழ்வுகளையும், இயற்கையையும் காண்பதைக் கண்டவாரோ; அல்லது மக்களறிந்த தொன்மக் கற்பனைக் கதைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் தங்களது கற்பனையில் உருவாக்கி இருபரிமாண ஓவியங்களாகவும் முப்பரிமாண சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தும் முறை மனித வரலாற்றில் கலை என விவரிக்கப்பட்டது. கலையின் அடிப்படை என்பது ஒலியற்ற எழுத்துவடிவற்ற முறையில் மொழி எல்லைகளையும் கால எல்லைகளையும் கடந்து ஒரு செய்தியை வாழும்காலத்தின் மக்களுக்கும் எதிர்காலத்தின் மக்களுக்கும் சொல்லிச் செல்வது. குகை மனிதர்கள் சுவரில் தீட்டிய வெள்ளை சிவப்புவண்ணக் கீறல்களோ அல்லது கோயில்களில் காணும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் அடிப்படை நோக்கம் காட்சித் தொடர்பு (Visual communication). கலைஞர் ஒருவரின் தனித்தன்மை அவரது படைப்பில் மிளிர்ந்து அவரது கருத்து மக்களைக் கவர்ந்தால் அவர் புகழ் பெற்ற கலைஞர் என்ற பெயர் எடுக்கிறார். எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோரும் எழுதினாலும் ஒருசிலரே அழகு நயத்தின் அடிப்படையில் கலைஞர் என்றும் பாவலர் என்றும் இலக்கிய உலகில் புகழ் பெறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
காலந்தோறும் ஊடகங்கள் மாறி வந்துள்ளன. சிற்பங்களும் ஓவியங்களும் கால எல்லை, மொழி எல்லை கடந்து அவை சொல்லும் செய்தி என்னவென்று உலகின் பல மூலைகளில் உள்ள மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்திருந்தது; அதாவது படத்துடன் ஒரு சுருக்கமான பொருள் விளக்கக் கையேடு கொடுக்கத் தேவையற்ற நிலையில், இயல்பை விவரிக்கும் படைப்புகள் (representational visual communication) அவை. அதுவரை கலையின் கருத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் 19 நூற்றாண்டில் வேறு கோணத்தில் திரும்பியது. ஒரு கலைஞர் தனது கருத்தை எவ்வாறு தனது பார்வையில் விவரிக்கிறார் என்ற கோணத்தில் கலை திரும்பிய பொழுது; அந்தக் கருத்தாக்கத்தை கலைஞர் தனது படைப்பில் வெளிப்படுத்தும் உணர்வுக்கு (abstract expressionism) முக்கியத்துவம் ஏற்பட்டு, கலை மரபு என்ற எல்லை கைவிடப்பட்டு நவீனக்கலை (Modern art) என்பதன் காலம் துவங்கியது. ஐரோப்பா நவீனக்கலையின் தாயகம், 19 நூற்றாண்டின் மத்தியில் இருந்து சற்றொப்ப 1970 வரை, ஒரு நூற்றாண்டின் கால அளவிற்கு, பல கலைஞர்களாலும் பல ஊடகங்களும் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்டது. ஒரு படைப்பென்பது பார்வையாளரின் சிந்தனையைத் தூண்டவேண்டும் என்ற நிலையை கலைப்படைப்புகள் அடைந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.