Thursday, 28 February 2019

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை


siragu vanaviyal1
மாந்த இனத்தின் வாழ்வியல் கூறுகளில் வனவியல் எவ்வாறு ஒன்றியும் இணைந்தும் ஊடுருவியும் உள்ளது என்பதை சங்கத் தமிழ் இலக்கியம் எவ்வகையில் எடுத்துரைக்கின்றது என்பதை பேராழியின் துளி நீரரை சுவைத்துப் பார்க்கும் நோக்கில் நவில்வதே இக்கட்டுரை.
மனித இனம் முதலில் தோன்றிய பகுதி கடல்கொண்ட தமிழகத்தின் தென்பகுதி என்றும் அதன் பெயர் “லெமூரியா” என்றும் அதன் வரலாற்றை நுணுகி ஆராய்ந்து வரையறுத்த வரலாற்று ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் லெமூரியா என்பது “லெமூர்” என்ற குரங்கின் பெயர்தான் என்பதை நோக்கும் போது பிற்காலத்தில் மனித இனத்தின் மூதாதையர் குரங்குதான் என்று டார்வின் என்ற மேனாட்டு மாந்தவியல் அறிஞனின் கூற்று ஒத்துப் போவதை உணரலாம்.

இங்கு தொடங்கும் வனவியல் என்பது தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், நுண்ணுயிரியல். இயற்கையின் சூழலியல் சுற்றுப்புறவியல் என பல்கிபெருகிய அனைத்தையும் உள்ளடக்கிய “பேரியல்” என்பதே வனவியல் என்பதை மனிதில் நிறுத்தினால் அதில் உள்ளடங்கிய தாவரவியலையும் விலங்கியலையும் பறவையியலையும் சேர்ந்த ஒரு சில செய்திகளை கீழ்கண்டவாறு நுகரலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 27 February 2019

தக்கார் அரசியல், தகவிலர் அரசியல்


siragu thakkaar arasiyal1
ஆரோக்கியமான அரசியல்பால் அக்கறையுடன், நடப்பு அரசியலைக் கவனித்து வருபவர்களையும் தலையைப் பிய்த்துக்கொண்டு ஓட வைத்து விடுவார்கள் போலிருக்கிறது, இப்போது அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகள்..
அரசியல் மாற்றத்துக்கு பற்பல தளங்கள் உண்டு. கட்சி அரசியல், இயக்க அரசியல், ஊடக அரசியல், சாதீய/மத ஒடுக்குமுறை மீறும் அரசியல், அரசு இயந்திரப் பணியாளர்கள் அரசியல், தனியார்துறை மற்றும் பொருளாதார அரசியல், சமூக மாற்ற அரசியல், பண்பாட்டு மீட்சி அரசியல், மொழிசார்ந்த அரசியல், விவசாயம் சார்ந்த ஏற்றங்கள் நோக்கிய அரசியல், பெண்கள் மீதான அடக்குமுறை மீட்சி அரசியல், கல்வி மாற்றங்களுக்கான அரசியல், சமூக வளைதளங்களில், பொதுவெளிகளில் பொதுமக்கள் கூடி விவாதிக்கும் விமர்சக அரசியல் என்று அனைத்துத் தரப்பிலும் இருக்கும் அனைவரும் சேர்ந்து இழுக்கவேண்டிய தேர்தான் இது.

இந்த ஒருங்கிணைந்த முன்னகர்வுகளால்தான் நம்மால், அரசியல் மாற்றத்தை நோக்கி மக்களுக்கான சட்டங்களை நாம் சட்டமன்றத்தின் மூலமும், நாடாளுமன்றத்தின் மூலமும் நம்மால் வென்றெடுக்க முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 26 February 2019

5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது எக்காலத்திற்கும் ஏற்கக்கூடியதல்ல!


siragu 5 and 8 class1
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திடீரென்று தமிழக பள்ளிக் கல்வித்துறையிடமிருந்து சுற்றறிக்கை ஒன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலுள்ள அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், 5 மற்றும் 8 ஆகிய இரு வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்தொகை கட்ட தேவையில்லை என்றும், அது மட்டுமல்லாமல் வரும் இந்த 2018-2019 ஆம் ஆண்டே செயல்படுத்தப்படுமென்றும் கூறப்பட்டிருந்தது.
இதனை கேள்விப்பட்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும், பொது மக்களும் மிகவும் வியப்புற்று பதட்டத்தில் இருந்தனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களே இதை ஏற்கவில்லை. பெற்றோர்கள் கலக்கத்தில் இருந்தனர். பொதுமக்களும் சமூகஊடகங்களில் தங்கள் எதிர்கருத்துகளை பரவலாக பதிவு செய்து வந்தனர். அதன்பிறகு, நேற்று மாலை, தமிழக அரசின் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள், இந்த கல்வி ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்காது என்று தற்காலிமாக சொல்லியிருக்கிறார்.

இரண்டாவதாக இந்தத் தேர்வு நடக்கும் என்ற அறிவிப்பு கூட, சட்டப்பேரவையிலோ, அமைச்சரோ அறிவிக்காமல், எதிர்கட்சிகளை ஆலோசிக்காமல், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சார்பில் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் எப்படி ஒரு அரசாங்கத்தால் அலட்சியப்படுத்தப்படுகிறது? மக்களுக்கு, இந்த அரசின் மீது அய்யம் ஏற்படாதா? இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான அறிவிப்பை, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கவனத்திற்கு வராமல் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதுவும், அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது என்றால், இந்த அரசின் பொறுப்பற்றத் தன்மையைத்தான் இந்த செயல் நிரூபிக்கிறது!.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 21 February 2019

பெரியாரின் இந்தி எதிர்ப்பு போரும், அவர் மீது பதியப்பட்ட வழக்கும் !!


Siragu periyar2
1937 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ராஜகோபாலச்சாரியார் இந்தியை கட்டாயமாக நுழைத்தபோது, தந்தை பெரியார் இதனை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். தமிழறிஞர்களையும் சுயமரியதை இயக்க தொண்டர்களையும் இணைத்து இந்தி எதிர்ப்பு மாநாடுகளை நடத்தினார்.

இந்தி எதிர்ப்பு படை தமிழ்நாடு முழுக்க பயணித்து இந்தி திணிப்பை எதிர்த்தது. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னை ஒற்றைவாடைத் திரையரங்கில் 13.11.1938 அன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் தந்தை பெரியாருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இம்மாநாட்டில் தந்தை பெரியார் இந்தி திணிப்பை எதிர்த்து உரையாற்றினார். இந்த உரைக்காக தந்தை பெரியார் மீது சென்னை அரசாங்கத்தாரால் 117-ஆவது 7(1) செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு 5.02.1938 காலை 11:25 மணிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டு 4 வது நீதிபதி மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 19 February 2019

தமிழ் வளர்ச்சியில் ஐரோப்பியரால் விளைந்த திருப்புமுனை


Siragu German Thamizhiyal - Subashini
நூலும் நூலாசிரியரும்:
சமயம் பரப்பும் நோக்கில் அமைந்திருந்த ஐரோப்பியரின் தமிழக வருகை, தொன்று தொட்டு காலந்தோறும் தமிழகத்தில் இருந்துவந்த தமிழின் நிலைக்கும், தமிழ்க்கல்வியின் நிலைக்கும் ஒரு திருப்புமுனையாக இருந்தது. ஐரோப்பியர் தங்களது சமயப்பணி வளர்ச்சிக்காக தமிழறிய எடுத்துக் கொண்ட அணுகுமுறையும், தொழிற்புரட்சியின் காரணமாக உருவாகிய அச்சுநூல் பதிப்பிக்கும் முறையும் ஒருங்கிணைந்ததில் தமிழின் வளர்ச்சியும் தமிழ்க்கற்பித்தலின் வளர்ச்சியும் ஐரோப்பியர் வருகையால் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியது. தமிழின் வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதுவே முனைவர் க. சுபாஷிணியின் ஆய்வின் முடிவு.

ஜெர்மனியில் வாழும் நூலாசிரியர் தனது தமிழறிவையும், தமிழாய்வு ஆர்வத்தையும், ஜெர்மானிய மொழியறிவையும், ஜெர்மனி மற்றும் மற்றபிற ஐரோப்பிய நாடுகளின் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், அரசின் ஆவணச் சேமிப்புக் கருவூலங்கள் ஆகியனவற்றைத் தக்கபடி பயன்படுத்திக் கொள்ள அவருக்குக் கிடைத்த வாய்ப்பையும் நழுவவிடாததால், தமிழ் குறித்த இந்த ஆய்வுநூல் கூறும் கருத்துக்களை உலகம் அறிவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.அயல்நாடுகளில் வாழும் தமிழர் எவ்வாறு தங்கள் சூழ்நிலையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் குறித்த புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தலாம் என்பதைச் செயலில் காட்டும் வழிகாட்டியாக இருப்பதற்கு க. சுபாஷிணியைப் பாராட்டலாம். நூலுக்கு இத்துறையின் ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் முன்னுரை அளித்திருக்கின்றார். இந்த நூலால் நாம் அறியும் செய்திகள் என்ன?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 17 February 2019

இந்த ஐந்தாண்டுகளில் பா.ச.க அரசின் செயல்பாடுகள் தோல்வியை தழுவியிருக்கிறதா?

Siragu mega team1
கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் மோடியின் தலைமையிலான பா.ச.க அரசு, தோல்வியை கண்டிருக்கிறதா, வெற்றி பெற்றிருக்கிறதா என்ற கேள்வி எழுமானால், நிச்சயம் தோல்வியைத்தான் தழுவியிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனென்றால், இவர்களின் செயல் திட்டங்கள் அனைத்தும் தோல்வியைத்தான் கண்டிருக்கின்றன. அது சமூக ரீதியான வகையிலும் சரி, பொருளாதார ரீதியான வகையிலும் சரி,  கல்வி ரீதியிலான வகையிலும் சரி, நிர்வாக ரீதியிலான வகையிலும் சரி, அனைத்திலுமே மக்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.!
2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகள் என்று சொன்னவைகளில்எதுவுமே, இந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை!

100 நாட்களில் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் மீட்கப்படும் என்று சொல்லப்பட்டது. மீட்கப்பட்ட அந்த  பணம் நாட்டின் ஒவ்வொருவரின் பெயரிலும் 15 லட்சம் வங்கியில் போடப்படும் என்றும் கூறப்பட்டது. அது மீட்கப்படவில்லை, மக்களின் பெயரில் போடப்படவும் இல்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அடுத்து பார்த்தோமானால், அமெரிக்க டாலரை 30 ரூபாய்க்கு கொண்டுவந்து, இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்துவோம் என்றும் சொன்னார்கள். ஆனால், அது ரூ. 70 யை தாண்டிவிட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாயில் கிடைக்கும் என்று சொன்ன பா.ச.க, ஆட்சிக்கு வந்ததும், 80 ரூபாய் வரை கொண்டு சென்றுவிட்டது.  எரிவாயு உருளையின் விலை, 350 ரூபாயாக இருந்தது. அது தற்போது பா.ச.க-வின் ஆட்சியில், ரூ.900 வரை சென்றுவிட்டது. மக்களின் அனைத்து வாழ்வாதார தேவைகளான, உணவுப்பொருட்கள், மருந்து விலை, பேருந்து கட்டணங்கள், கல்வி கட்டணங்கள் என அனைத்தையுமே உயர்த்திவிட்டு, மக்கள் வாழவே முடியாதபடிக்கு வழியை குறுக்கிவிட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 14 February 2019

தொகுப்பு கவிதை (சாட்சியங்கள், அம்மானை வழக்கு)

சாட்சியங்கள்

-இல.பிரகாசம்
Siragu pirappokkum1
துவைக்கத் தொடங்கியவுடன்
அழுக்குகள் மிஷினைக் கவ்விக் கொண்டன
துணியின் அழுக்குகள் பலவிதமானவை
அவை நீண்டநாள் பாவு நூலுடனும்
வெளிறிப் போன உடலுடனும் பந்தம் கொண்டிருந்தன.
இன்று அதற்கு கொடுக்கப்பட்ட அழுக்கு
புதுவிதமாக இருந்திருக்கும்.

அந்தத் துணியிலிருந்த ரத்தக் கறைகள்
நாற்றம் வீசத் தொடங்கிற்று..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.