Monday, 23 September 2019

அமெரிக்காவில் இந்திய பிரதமரின் ஊர்வலம்


siragu howdy modi4
செப்டம்பர் 17, 2019 எழுத்தாளர் Pieter Friedrich ஹுஸ்டன் சிட்டி கவுன்சில் கூட்டத்தில், இந்திய பிரதமர் மோடி அவர்களின் “Howdy Modi” என்ற ஊர்வலத்திற்கு எதிராக முழங்கியுள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு:-
இந்து தேசியத்தை வலியுறுத்தும் பா.ச.க-வின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 22, “Howdy Modi” எனும் ஊர்வலத்தில் பங்கேற்க ஹுஸ்டன் வருகின்றார். அந்த ஊர்வலத்தில் ஹுஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னர் பங்கேற்க உள்ளார்.
மோடியின் கரங்களில் குருதி தோய்ந்துள்ளது. அவரை வரவேற்க கைக்குலுக்கும் நபர்களின் கரங்களில் ஒட்டிக்கொள்ளப் போகும் குற்றங்களின் பங்களிப்பிலிருந்து அவர்கள் தங்கள் கைகளை கழுவிட முடியாது.

“Howdy Modi” எனும் இந்த ஊர்வலம் அமெரிக்காவில் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையால் முன்னெடுக்கப்படுகின்றது. ஆர்எஸ்எஸ் துணை இராணுவ அமைப்பு போல் செயல்படக்கூடிய ஒன்று. அதன் சீருடை ஹிட்லர் யூத் அமைப்பின் உறுப்பினர்கள் அணிந்திருந்தை ஒத்திருக்கும். இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதே வருடம் தான் ஹிட்லரின் நாஜி அமைப்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆர்எஸ்எஸ் இத்தாலியின் முசோலினி பாசிச அமைப்பை போல் தன்னை வடிவமைத்துக்கொண்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 20 September 2019

செம்மொழி இலக்கியங்களில் கடல் சார் உயிரியல்

siragu kadalsar uyirinam3
கிழக்கு மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் அந்தமான், லட்சத்தீவுகள் கடற்கரைகள் உள்ளடங்கிய இந்திய கடற்பகுதி வெப்ப மண்டல பகுதியில் உள்ளடங்கியது. இந்திய கடற்கரையின் நீலம் சுமார் 7916 கி.மீட்டர்கள் ஆகும். இதில்22.6 விழுக்காடு தீவு பகுதிகளைச் சார்ந்தது. இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் சுமார் 2மில்லியன் கி.மீட்டர்கள்.
உலகளவில் உள்ள கடல்களில், இந்து மகாசமுத்திரம் சிறியது. அதில் பெரும் பங்கு வகிப்பது இந்திய கடல்தான். அரபிக் கடல், வங்காள விரிகுடா, அந்தமான் கடல் மற்றும் லட்சத்தீவு கடல் ஆகியவை இந்திய கடலில் அடங்கும். கட்ச் வளைகுடா, காம்பட் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா ஆகியவை இந்திய கடல்பகுதியில் உள்ள மூன்று முக்கிய வளைகுடாக்களாகும்.
siragu kadalsar uyirinam4

சுமார் 980 கி.மீட்டர் நீளம் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரை, இந்திய கடற்கரையின் மொத்த நீளத்தில் 17விழுக்காடு ஆகும். இதில், வங்காள விரிகுடா 355 கி.மீட்டர் அளவிலும், பாக் சலசந்தி, மன்னார் வளைகுடா மற்றும் அரபிக் கடல் ஆகியவை 625 கி.மீட்டர் அளவிலும் இடம் பெற்றுள்ளன. மணல் பாங்கான கடற்கரை,சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலக்காடுகள் மற்றும் பவளப்பாறைகள் ஆகியவை தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய சூழ்நிலைகளாகும். பவளப்பாறைகள், இராமநாதபுரம் மற்றும் தூத்தூக்குடி மாவட்டங்கள் உள்ளடங்கிய மன்னார் வளைகுடா மற்றும் பாக் சலசந்தி பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இயற்கை மற்றும் இயற்கை வளம் பேணுதலுக்கான சர்வதேச ஐக்கிய கூட்டுறவு அமைப்பின்படி, கடல் ஏற்ற – வற்ற இடைப்பகுதி மற்றும் அது சார்ந்தநீர்ப்பகுதி, தாவர, விலங்கினங்கள், சரித்திர மற்றும் கலாச்சார விசேச அம்சங்கள் ஆகியவை சட்டங்கள் மற்றும் ஏனைய நற்பயனளிக்கும் முறைகள் மூலமாக முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி மட்டும் பாதுகாக்கப்பட்டிருந்தால், அது கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி எனப்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 19 September 2019

முல்லைப்பாட்டில் மேலாண்மைச் சமுதாயம்


siragu mullaipaattu1
மேலாண்மை என்பதை ‘‘மக்களை வைத்துச் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிப்பது” என்று வரையறுக்கிறார் பார்கர் போலெட். வீரிச் கோண்ட்ஸ் என்ற அறிஞர் ‘‘மேலாண்மை என்பது நிறுவனம் அல்லது அமைப்பின் இலக்குகளை அடைய மனித வளம், பொருள்வளம் மற்றும் நிதிவளம் ஆகியவற்றைகளைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வழிமுறை” என்று வரையறுக்கிறார். மக்களைக் கொண்டு ஓர் அமைப்பு தன் நோக்கத்தை வெற்றிகரமாக அடையும் செயல்திட்டம் மேலாண்மை என்ற பொதுக்கருத்தை இவ்விரு அறிஞர்களின் கருத்துகள் வழியாகப் பெறமுடிகிறது.
மேலைநாடுகளில் மேலாண்மை என்ற துறை வளர்ச்சி பெற்று ஏறக்குறைய நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் வளரும் நாடுகளுக்கு இம்மேலாண்மைத் தத்துவங்கள் பரவி அவையும் அத்தத்துவங்கள் வழி நிற்க முயலுகின்றன. இவற்றோடு பழமையான மொழிகளில், இலக்கியங்களில், பல மேலாண்மைக் கூறுகள் அமைந்துகிடப்பதை இன்றைக்கு அறியமுடிகிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கியங்களில் பல்வேறு மேலாண்மைச் சிந்தனைகள் விரவிக்கிடக்கின்றன. பண்டை இலக்கியமான சங்க இலக்கியங்களில் பல மேலாண்மைக் கருத்துகள் தெரிவிக்கப்பெற்றுள்ளன. அவற்றில் முல்லைப்பாட்டில் காணப்படும் மேலாண்மைக் கூறுகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 17 September 2019

பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் …


siragu periyar1

“பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’, ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும்” (பக்கம் – 286); என்று நகைச்சுவையாகத் தனது கருத்தை வலியுறுத்த முனையும் பெரியார், நாம் ஒருவரை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது அவருடைய பணம், படிப்பு, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, திறமை ஆகியவற்றுக்காக அல்ல என்கிறார்.
அப்படியானால் எதற்காக நாம் ஒருவரை நினைவில் நிறுத்துகிறோம்? அதற்குப் பெரியாரே கூறும் விடை, “மனிதர்களாக — மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத்தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆகுங்கள் என்பதற்காகவே யாகும்” என்ற தெளிவான ஒரு வரையறையை வகுக்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 13 September 2019

சங்க இலக்கியங்களில் கடலியல் சமூகம்


siragu kadaliyal2
தமிழர்களின் உள்ளத்து உணர்ச்சிகளையும் வேட்கைகளையும் புலப்படுத்துவதற்கு இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டவை சங்க இலக்கியங்கள். மக்கள் தங்கள் வாழிடங்களை ஐந்து வகை நிலங்களாகப் பாகுபாடு செய்துள்ளனர். வயல், காடு, மலை கடல், மணல்பகுதிகள் என ஐந்தாகப் பிரித்து, தனித்தனிப் பெயரிட்டு அழைத்தனர். தங்கள் வாழிடங்களுக்கேற்ப, அக்காலத்தில் காணப்பட்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள், தொழில், விழாக்கள், சடங்குகள், உணவுமுறை போன்றவற்றை சங்கப்பாடல்களில் பதிவு செய்துள்ளனர். இப்பாடல்களில் மனித சமுதாயத்தின் உயர்ந்த கருத்துக்களையும் வாழ்வியல் விழுமியங்களையும் காணமுடிகிறது. சங்க அகப்பாடல்களில் குறுந்தொகையில் கடலியல் சார்ந்த வரலாற்றுச் செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. குறுந்தொகை நெய்தல் திணைப் பாடல்களில் இடம்பெறும் கடலியல் சமூக வரலாற்றை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

சங்ககால புலவர்கள் 473 பேரில் 205 பேர் குறுந்தொகையிலுள்ள 401 பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களுள் 46 புலவர்கள் குறுந்தொகை நெய்தல் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இந்நூல் 72 நெய்தல் திணைப்பாடல்கள் உள்ளன. இவற்றில் மூன்று பாடல்களை 381, 313, 326 இயற்றிய புலவர்கள் பெயர் தெரியவில்லை. அம்மூவனாரே கடல் சார்ந்த சமூக வரலாற்றை மிகுதியாகப் பத்துப்பாடல்களில் பாடியுள்ளார். அம்மூவனர் கடல் சார்ந்த நிலப்பகுதியின் வரலாறு, அங்கு வாழும் விலங்குகள். பறவைகள், செடி, கொடிகள், தொழில், உணவு முறை, மக்களின் இயல்புகள் மற்றும் தலைவன் தலைவியின் திணை அகஒழுக்கம் குறித்த செய்திகளை மிகுதியாகப் பாடியுள்ளார். சங்க இலக்கியங்களாகத் திகழ்ந்த பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாகும். எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவை புறச் செய்திகளைக் கூறுகின்றன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை , அகநானூறு என்ற ஐந்தும் அகம் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பரிபாடல் அகம் புறம் இரண்டையும் ஒருங்கே உணர்த்தும் நூலாகும். சங்க இலக்கியங்கள் மனித வாழ்வை முதன்மைப்படுத்தி பாடுகின்றன. இயற்கை அதற்கு உறுதுணையாய் இரண்டாம் இடமே பெறுகின்றது. சங்க இலக்கியத்தில் விண்ணைத் தொட்டு நிற்கும் மலைகளையும், நீண்ட கடற்பரப்பையும், வயல்வெளிகளையும், அடர்ந்த காடுகளையும் உணர்ச்சி ததும்ப வலிமைமிக்க கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர். அகப்பாடல்களில் முதற்பொருளையும், கருப்பொருளையும் அறிவியல் பூர்வமாகப் பாடியுள்ளனர். இவை உரிப்பொருளுக்கு பின்னணியாக அமைந்துள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 11 September 2019

பார்ப்பன பெண்களின் முன்னேற்றத்தில் சுயமரியாதை இயக்கம் !


siragu-suyamariyaadhai1
அண்மையில் தோழர் ஓவியா எழுதிய கருஞ்சட்டைப் பெண்கள் என்ற நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் பற்றி பல செய்திகளை சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக தந்தை பெரியார் அவர்களாலும், சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளாலும் பயன் பெற்றோர் பார்ப்பனர் அல்லாத பெண்கள் மட்டுமல்ல பார்ப்பன பெண்களும் என்ற தகவலை குடியரசு ஏட்டில் 1930 இல் வெளிவந்த ஒரு கடிதம் மற்றும் குமரன் இதழில் வெளிவந்த கடிதம் இவற்றை தொகுத்து தரப்பட்டிருந்த செய்தியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பார்ப்பன பெண்கள் என்றாலும் மனுவின் படி அனைத்துப் பெண்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களே!
பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என தெளிவாக கூறுகின்றது.(மனு அத்தியாயம் 9; சுலோகம் 32)

குறிப்பாக விதவைகளின் மறுவாழ்வை வலியுறுத்தி அன்றைய காலக்கட்டங்களில் சுயமரியாதை இயக்கம் சுழன்று பரப்புரை செய்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூட அதனை வலியுறுத்தி பல பாடல்களை இயற்றி உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 9 September 2019

இனியது கேட்கின்… இனிது இனிது இனியவை நாற்பது


siragu inidhu inidhu1
 ‘நானாற்பது’ என அறியப்படும், பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ‘நாற்பது’ எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களுள் இரண்டாவது நூல், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எழுதிய ‘இனியவை நாற்பது’ என்ற நூல். ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு ‘நன்மை தருவனவற்றை’ அல்லது ‘இன்பம் தருவனவற்றை’, ‘இனியவை’ எனக் கூறும் 40 பாடல்கள் கொண்ட தொகுதி என்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது. ‘இனிது நாற்பது’, ‘இனியது நாற்பது’, ‘இனிய நாற்பது’ என்ற பெயர்களும் இந்த நூலையே குறிக்கும்.

இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்துப் பாடல் மும்மூர்த்திகளான சிவன், திருமால், பிரம்மா ஆகியோரை வணங்குதல் இனிது எனக் கூறுகிறது. பிரம்மாவைக் குறித்துக் குறிப்பிடுவதாலும், இன்னா நாற்பது கருத்துகளினை அடியொட்டி எழுதப்பட்டுள்ள கருத்துகளாலும் இந்த நூல் இன்னா நாற்பது நூலுக்குப் பிறகு தோன்றியது என்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தது எனவும் கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.