Friday, 31 January 2020

இசை என்பது… (சிறுகதை)


siragu isai enbadhu2
குட்டிக் கரடி ராணி திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தது போல் தனது அம்மாவிடம் “இசைனா என்னமா? எது இசை?”– என்று கேட்டது. ராணி இப்போதுதான் மியூசிக் வகுப்பில் சேர்ந்திருந்தது. அதன் ஆசிரியை புதிதாகச் சேர்ந்த மாணவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். குட்டீஸ்களுக்குப் பதில் தெரியவில்லை. “சரி! அடுத்த வகுப்புக்கு வரும்போது நீங்க எல்லாரும் இதுக்குப் பதில் தெரிஞ்சிட்டு வந்து எனக்குச் சொல்லனும்! சரியா?”–என்றார் அவர். அதனால்தான் ‘இசை என்றால் என்ன?’ என்று தெரிந்து கொள்ள அம்மாவிடம் கேட்டது.

அம்மாகரடி இரவு உணவு தயாரிப்பதில் மும்மரமாக இருந்தது. அது ராணியின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. “ராணி! நாளைக்கு நாம டிரெக்கிங் போறோம்!”–என்றது அது. டிரெக்கிங் என்றவுடன் ராணி உற்சாகமாகி விட்டது. அப்படிப் போகும்போது ராணியின் நண்பர்களும் அதில் சேர்ந்து கொள்வார்கள். அனைவரும் கூட்டமாக ஆடியும் பாடியும் பேசி மகிழ்ந்தபடியும் மலையேறுவார்கள். மிகவும் ஜாலியாக இருக்கும். அதுவுமல்லாமல் மலையில் சுவையான திணைகிழங்கு வகைகள் உண்ணக் கிடைக்கும். ராணி டிரெக்கிங் குறித்த சிந்தனைகளில் மூழ்கிவிட்டது. அது அம்மாவிடம் தான் கேட்;ட கேள்வியை சுத்தமாக மறந்து விட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

புறநானூறு வழியே தமிழ்ச் சமுதாயத்தைக் காணல்.


siragu purananooru1
முன்னுரை
புறநானூறு பழந்தமிழர்களின் வாழ்நிலையைத் தெரிவிக்கும் மிகச்சிறந்த நூல். உ.வே.சாமிநாதய்யர் புறநானூறு ஓலைச்சுவடிகளைத் தொகுத்த பொழுது 267வது, 268வது பாடல்கள் முழுவதுமாகச் செல்லரித்து இருப்பதைக் கண்டார். 244வது, 355வது பாடல்கள் பெரும்பகுதி சிதைந்த நிலையிலும் மேலும் 32 பாடல்கள் சிறிது சிதைந்த நிலையிலும் கிடைத்து, 398 பாடல்களும் அச்சில் ஏறி, அக்காலத் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கும் அரிய கருவூலங்களாக நமக்குக் கிடைத்துள்ளன.
சமூக அமைப்பு

நடோடிச் சமுதாயமாக இருந்த மனித இனம் நாகரிக சமூகமாக வளர்ச்சி அடைந்த பொழுது ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உலகின் மற்ற பகுதிகளில் ஒரு விதமாகவும், ஆரியர்கள் குடியேறிய இந்தியாவில் வேறு விதமாகவும் ஏற்பட்டன. ஆரியர்கள் திணித்த வர்ணாசிரம முறையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டமே இந்திய வரலாறாக உள்ளது. ஆரியர்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டிலும் பரவி  இருந்தது. ஆரியர்களின் சூழ்ச்சித் திறனை எதிர்த்து வெல்ல முடியாதவர்களில், அடிபணிந்தவர்கள் மருத நிலத்திலும் நெய்தல் நிலத்திலும் நாகரிக சமூகமாக வளர்ச்சி அடைந்தனர். மற்றவர்கள் குறிஞ்சி, முல்லை நிலங்களில் குறுநில மன்னர்களாக இருந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 30 January 2020

தூரத்தில் நான் கண்ட உன் முகம்


siragu ilakkiya kaadhal1
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணி பாடும் ராகம்
என்று நிழல்கள் படத்தில் பாடகி ஜானகி அவர்களின் ஒரு பாடல் உண்டு. தன் காதலனை எண்ணி பாடப்படுவதாக அந்தப் பாடல் இருக்கும், அதைப் போலவே புறநானூற்றில் நக்கண்ணையார் என்பவர் தன் காதலனை எண்ணி பல பாடல்கள் பாடியுள்ளார்.
யார் இந்த நக்கண்ணையார் ?

நக்கண்ணையார் சங்ககால பெண்பாற் புலவர். புறநானூறு, அகநானூறு, நற்றினையில் ஒரு சில பாடல்களை எழுதி உள்ளார். இவரின் புறநானூற்றுப் பாடல்களை, படிக்கின்றபோது நக்கண்ணையார் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி மீது வைத்திருந்த காதல் நமக்கு நன்று புலப்படும். இந்தக் காதல் பாடல்களை ஏன் புறநானூற்றில் வைத்தனர் என அய்யம் எழலாம். ஏனெனில் புறநானூற்றுப் பாடல்கள் வீரத்தை, கொடையை, போர் பற்றிய செய்திகளைத் தான் மிகுந்து கொண்டிருக்கும். இதில் தலைவன் தலைவி பெயர்கள் வெளிப்படையாக இருப்பதாலும், இது கைக்கிளை துறையை (ஒருதலைக் காதல்) சார்ந்து இருக்கின்ற காரணத்தாலும் இந்த காதல் பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது என்பர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/

கங்கா


siragu jeyakandhan3
முன்னுரை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழுக்கு வந்த கலைவடிவம் நாவல். மேலைநாட்டு இலக்கியத் தாக்கத்தால் தமிழில் அறிமுகமான நாவல், வடிவம் அளவு கருத்துச் செறிவு முதலான காரணங்களால் பெரும் செல்வாக்கைப் பெற்ற கலைவவமாகத் திகழ்ந்தது. எழுத்தின் ஆற்றலும் கூர்மையும் அணியாகக் கொண்டு படைக்கப்பட்ட நாவல்கள் மக்களின் வாழ்க்கையை வாழ்வியல் சூழல் மாற்றத்தை மறுமலர்ச்சியை வெளிப்படுத்தும் ஊடகமாகச் செயல்பட்டன சிந்தனையாளர்களும் இயக்கவாதிகளும் நாவலைத் தம் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் கருவியாகக் கொண்டனர். இவ்வரிசையில் ‘‘ஜெயகாந்தன்’‘ குறிப்பிடத்தக்கவர்.

ஜெயகாந்தன் 1950 களில் படைப்புகளை எழுதத் தொடங்கி அறுபதாண்டு காலமாகத் தனது எழுத்தின் வலிமையால் பல பரிசுகளைப் பெற்றவர். சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, சுயசரிதை, கவிதை எனப் பல வடிவங்களில் படைப்புகளைத் தந்தவர். இவரது சிறுகதைகளும், நாவல்களும் இவரை ஞானபீட பரிசுக்குரியவராக அடையாளம் காட்டிற்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 24 January 2020

ஜெயகாந்தன் கண்ட வள்ளலார்.


siragu jeyakandhan1
வடலூர் கடலூருக்கு அருகில்தான் இருக்கிறது. வடலூர் வள்ளல் பெருமானின் உயிர் இரக்கம் ஜெயகாந்தனுக்குள்ளும் இறங்கி அவரையும் இணக்கமாக்கியிருக்கிறது. அதே நேரத்தில் வள்ளல் பெருமானின் உயிர் இரக்கத்திற்கும், அதன் முரணான வன்முறைக்கும் இடையேயான மோதலை உள்வாங்கி எழுதப்பெற்ற நாவல் ஆயுத பூஜை.
மிக மென்மையாக அதே நேரத்தில் வன்மை மறைமுகமாக இந்நாவலில் சொல்லப்படுகிறது. அரசாங்கக் காவலர் பணியைக் கருணையினால் பெற்ற ஒருவர் அதனைத் துறந்து கருணை இல்லம் நடத்தும் பாங்கே இங்குக் கதையாக விளங்குகிறது.

அவருக்கு உடன்பிறந்தவர்கள் பலர். அப்பா ஒரு கலவரத்தில் இறந்து விடுகிறார். அவரைத் தொடர்ந்து அம்மாவும் இறந்துவிட குடும்பப் பொறுப்பு முழுவதும் இவரின் தலையில் விழுகிறது. இவர் தன் தம்பிகள், தங்கைகள் ஆகியோரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்கிறார். வத்தல் வடாகம், வீட்டு வேலைகள் ஆகியன செய்து குடும்பம் ஓடுகிறது. காவல்துறை அளித்த வீட்டை விட்டு இவர் தனியாக ஒருபகுதியில் குடியேறி வாழ்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 23 January 2020

குடி பெயர்க்கப்படுவோருக்கு அளிக்கப்படும் இழப்பீடு குறித்து சோழர்காலக் கல்வெட்டுச் செய்திகள்

வளர்ந்து வரும் நகர்கள் எதிர் கொள்வது நகர விரிவாக்கம், அதனால் மக்களில் சிலருக்குப் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. அதுமட்டுமின்றி புதிய திட்டங்கள் தீட்டப்படுகையிலும் அப்பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு வகையில் இழப்பை எதிர் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது.
siragu Chennai-Metro1

சென்னை பெருநகர் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் காரணமாக, மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்தப்பட உள்ள நிலம் குறித்து அந்த இடங்களில் வாழும் பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றபொழுது நிகழ்ந்ததைச் செய்தித்தாள் வழங்கிய செய்தியின் மூலம் அறியலாம். ‘‘கூட்டத்தில் நில அளவையர் பேசும்போது, ‘‘ஏற்கனவே மெட்ரோ ரயில் அமைக்கும் வழித்தடம் முடிவு செய்யப்பட்டு விட்டது. அதில், ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டவர்கள், தங்களது நிலத்தைத் தானாகவே வழங்கிட வேண்டும். அதற்குரிய இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்படும். அப்படி இல்லையென்றால் அரசே கையகப்படுத்தக்கூடிய நிலை ஏற்படும்’’ என்றார். இதற்குக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘கருத்துக் கேட்புக் கூட்டம் என வரவழைத்து விட்டு எங்களை மிரட்டும் தொனியில் பேசுவது நியாயமா? நீங்களே ஒரு முடிவு எடுத்து விட்டு அதை எங்கள் மீது திணிக்கலாமா’’ எனக் கூறி, கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் பாதியில் முடிவடைந்தது’’ என்பது நாளிதழ் கூறும் செய்தி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 17 January 2020

தொகுப்பு கவிதை (2020 புத்தாண்டு பிறந்தது!, கந்தக நிறம்)

2020 புத்தாண்டு பிறந்தது!

-  ”கலையரசு” எஸ். எஸ். சர்மா

siragu 2020

புத்தாக்கச் சிந்தனைகள் மலர்ந்திடப்
பிறந்தது புத்தாண்டு!
விடைபெற்றது! நடை கட்டியது
இருபது பத்தொன்பதாம் ஆண்டு!
வந்துவிட்டோம் இருபது இருபதுக்கு!
கூடியது இன்னுமொரு அகவை
வேகமுடன் விரைகிறது காலம்!
கடிவாளம் போட்டுக் கட்டுண்டிராது
காண்போம் புதிய சகாப்தம்!
எழுச்சியும் வளர்ச்சியும்
எண்ணமும் திண்மையும்
ஏற்றம் தரும்! எதிர்நீச்சல் போட்டு

எட்டிப் பிடித்திடுவோம்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.