Thursday, 27 February 2020

அன்னி மிஞிலி


siragu ilakkiyam1
அன்னி மிஞிலி சங்கக் காலப் பாடல்களில் நாம் காணும் பெயர். யார் இவர்? இவர் பெண்!! அதுவும் வஞ்சினம் கொண்டு சூளுரைத்த பெண், அகநானூறு 196 மற்றும் 262 இவர் பெயரைப் பதிவு செய்திருக்கின்றது. இரு பாடல்களையும் எழுதியவர் பரணர். பரணர் சங்க இலக்கியப் புலவர்களுள் முக்கியமானவர். சங்க இலக்கியப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்வது இவர் பாடல்களின் தனிச் சிறப்பு.

சரி அன்னி மிஞிலி யாரை எதிர்த்துச் சூளுரைத்தாள்? கோசர்களை எதிர்த்து? யார் இந்த கோசர்கள் என்று பல வரலாற்றுத் தரவுகளும், குழப்பங்களும் உண்டு. சுருக்கமாகக் கோசர்கள் என்றால் யார் எனப் பார்க்கும் போது, கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும், கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் இவர்கள் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். காஷ்மீரத்திலிருந்து வந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். எனவே அவர்கள் யார் என்பது ஆய்விற்கு உரியது. ஆனால் அவர்களைப் பற்றிய செய்திகள் நிறையச் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 26 February 2020

திறன்மிகு தியாகராயர் சாலை இராமியா


siragu t nagar2
அண்மைக் காலமாய்த் “திறன்மிகு” (Smart) என்ற சொல் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சாலைகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தத் திறன்மிகு சாலைகளை  (Smart Roads) அரசு அமைத்துக்கொண்டு இருக்கிறது. அவற்றுள் சென்னை, தியாகராய நகரில் உள்ள தியாகராயர் சாலையும் ஒன்று.
முன்பு தியாகராயர் சாலையின் இரு மருங்கிலும் நடைபாதைக் கடைகள் நிரம்பி இருந்தன. அக்கடைகள் இருப்பது நடைபாதையில் நடப்பவர்களுக்கு இடையூறாக இருப்பாகக்கூறி அவற்றை அகற்ற முயன்றார்கள். ஆனால் தங்கள் வாழ்வுரிமை பாதிப்பதாகக்கூறி நடைபாதை வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்காடி தங்கள் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டனர். வழக்கமான முறையில் நடைபாதைக் கடைகளை அகற்ற முடியாததைக் கண்ட “மிகத்திறமையான” அரசு அதிகாரிகள் திறன்மிகு சாலைத் திட்டத்தின் மூலம் அதை செய்துவிடலாம் என்று ஒருவழியைக் கண்டனர். “புலிக்குப் புல் வாங்கிப் போட்ட செலவுரூ.500″ என்பதுபோல் நடைபாதை வணிகர்களின் வாழ்வுரிமைக்கு மாற்று இடம் ஒதுக்கிக் கடைகள் கட்டுவதாக அத்திட்டத்தை வடிவமைத்தனர்.
திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு அது தங்களைப் பாதிக்கும் என்று நிறுவமுடியாத நிலையில் நடைபாதை வணிகர்கள் அதை எதிர்க்க முடியவில்லை.

பணமதிப்பு இழப்பு கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டாலும் நடைமுறையில் அப்படி எதுவும் நடக்காததுபோல் நடைபாதை வணிகர்களுக்கு அளித்த உறுதிமொழியும் பொய்யாகிப்போனது. அதுஒருபக்கம் இருக்கட்டும். யார் யார் பயன் அடைந்தார்கள்? என்ன என்ன விளைவுகள் ஏற்பட்டன?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 25 February 2020

தமிழகத்தில், அரசுப்பள்ளி குழந்தைகளின் உணவிலும் மதவாத அரசியல்!


siragu school lunch1
2014 ஆம் ஆண்டு பதவியேற்றத்திலிருந்து, பா.ச.க மதவாத அரசியலை அனைத்துத் தளங்களிலும் திணித்துக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் கவனித்து கொண்டுதானிருக்கிறோம். உணவு விசயத்திலும், மாட்டிறைச்சிக்கு தடை என்ற ஒரு ஆணையை பிறப்பித்து நாடெங்கிலும் கலவரத்தைத் தூண்டிவிட்டது. தென்னிந்தியாவில் பெரியளவிற்கு கலவரங்கள் ஏற்படவில்லை என்றாலும், வடமாநிலங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதில் 300க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய அரசு நேரடியாக இறங்கவில்லை என்றாலும், என்ஜிஓ என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி நடக்கிறது. இஸ்கான் என்ற மதப்பிரசார அமைப்பின் மூலம் தமிழகத்தின், சென்னை அரசுப்பள்ளிகளில் காலை உணவு வழங்குகிறோம் என்ற பெயரில் உள்ளே நுழைகிறார்கள். அதற்கு தமிழக அரசும் அனுமதியளிக்கிறது என்பது தான் தற்போது கடும் கண்டனத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது.
அமெரிக்காவின் இஸ்கான் (ISKCON) என்னும் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா’ என்கிற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவின் பல மாநிலங்களில், குழந்தைகளுக்கு உணவு இலவசமாக அளிக்கும் சேவையை செய்து வருகிறது. இது ஒரு இந்து மத பிரசார அமைப்பு என்பதாகும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தற்சமயம் தமிழகத்தில், அரசின் உதவியுடன், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு, அக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் ஒன்றை முன்னுறுத்தி, அனுமதி கேட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஆசிய பண்பாட்டிற்குச் சமய இலக்கியங்கள் அளித்த சமய நடைமுறைகள் மற்றும் பண்பாட்டுக் கொடைகள் – (பகுதி -2))


siragu pattinapaalai1
பண்டமாற்று
 தம்மிடம் உள்ள பொருள்களைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக வேறு பொருட்களைப் பெற்றுச் செல்லும் முறையாகிய பண்டமாற்று முறை அக்காலத்தில் வழக்கிலிருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
பரதவர்கள் மீன் குவியல்களை இடையர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக அவர்களிடமிருந்து சீவல், கௌதாரி போன்றவற்றைப் பெற்றுச் சென்றமையையம். நெய்தல் நிலச் சிறுமியர் இடைச்சியர்களிடமிருந்து அவரைக்கு ஈடாகப் பவளத்தைப் பெற்றுச் சென்றமையையும்,
கவரும்மீன் குவைகழியவர் கானவர்க் களித்துச்
சிவலும்சே வலும்மாறியும் சிறுகழிச் சியர்கள்
அவரைஞ னலுக்கெயிற்றியர் பவளமுத் தளித்தும்
உவரிநெய் தலும் கானமும் கலந்துள ஒழுக்கம்.
என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது.
 சமய வழக்கங்கள்

 சமுதாயத்திலுள்ள நிறுவனங்களில் ஒன்றாகிய சமயம் தொடர்பான வழக்கங்களைத் திருமுறைகள் மூலம் அறியமுடிகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 24 February 2020

கோயில் திருப்பண்ணியர் விருத்தமும் சமுதாய முன்னேற்றமும்


siragu kovil thiruppanniyar1
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி செய்கிறார்கள். எவரும் சும்மா இருப்பதே சுகம் என்று இருப்பதில்லை. ஒவ்வொரு பணியும் ஒரு சமயத்தில் பணியாகின்றது. மற்றொரு சமயத்தில் கடமையாகின்றது. கோயிலில் செய்கின்றபோது எப்பணியும் திருப்பணி ஆகின்றது. கோயில் பூசை செய்வோர் தொடங்கி, திருஅலகிடுவோர் வரை கோயில்பணிகள் பலவாறாக உள்ளன. இப்பணிகளுள் ஒன்று பண்ணிசைத்தல் என்பதாகும். கோயிலில் இசைத் தமிழும் இயற்றமிழும் நாடகத் தமிழும் வளர்க்கப்பெற்றுவந்தன. இவற்றில் இசைத்தமிழான பண் இசைத்தல் பற்றி ஒரு சிற்றிலக்கியமே உள்ளது. கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் என்பது அவ்விலக்கியத்தின் பெயராகும். பண்ணியர் என்பதை பல வகைகளில் பொருள் கொள்ளலாம். பண்ணியர் என்பது இங்குப் பண்ணிசைப்பவர்கள் குறித்த இலக்கியம் என்ற நிலையில் பெருமை பெறுகின்றது. பண்ணியர் என்பதை தில்லைப் பெருமான் என்று பொருள் கொண்ட உரையாளர்களும் உண்டு.
நம்பியாண்டார் நம்பியால் கட்டளைக் கலித்துறையில் இயற்றப்பட்ட எழுபது பாடல்கள் கொண்ட தொகுப்பு திருப்பண்ணியர் விருத்தம் என அழைக்கப்படுகின்றது. இவ்விலக்கியத்தின் ஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானின் பெருமை விதந்து ஓதப்படுகிறது. அதனுடன் கோயில் சார்ந்த பணிகள், பணியாளர்கள், கோயில் சார்ந்த சமுதாயம் போன்றன பற்றிய செய்திகளும் காட்டப்பெற்றுள்ளன.
இப்பாடல்களின் வழியாக அக்கால சமுதாயம் எவ்வாறு கோயில் சார்ந்து வாழ்ந்தது என்பதையும், கோயில் திருப்பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றன என்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது.

நம்பியாண்டார் நம்பி திருமுறைகளை வகுத்தவர் ஆவார். இவரின் தொகுப்பு முயற்சியால் சைவம் தழைத்தது. சைவ நூல்கள் என்றும் பாதுகாப்பினைப் பெற்றன. திருக்காப்பினைச் செய்த இவர் தன் காலத்தில் தான் வாழ்ந்த சமுதாயத்தின் நிலைப்பாட்டை, சமயத்தால் சமுதாயம் முன்னேற இயலும் என்ற நிலையில் பக்தி சார்ந்த படைப்புகளைப் படைத்தளித்துள்ளார். இப்படைப்புகள் இனிய படைப்புகளாக, சமுதாயத்தின் முன்னேற்றம் சொல்லும் படைப்புகளாக விளங்குகின்றன. இவரின் படைப்புகளுள் ஒன்று கோயில் திருப்பண்ணியர் விருத்தம். இப்பனுவல் சிறந்த முறையில் சமுதாயத்தை சமய நெறிப்படி வாழ வழி செய்விப்பதாக உள்ளது. சமயத்தின்பாலும், இறைவன் மீதும் பற்றும் பக்தியும் கொண்ட சமுதாயம் முன்னேற்றம் கொள்ளும் என்பதற்கு இவரின் இப்படைப்பே சான்றாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

பெரியபுராணமும் பெரியகோயிலும்


siragu periya kovil6
“அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை, மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.”
என இவ்வாறாக வியப்புக்குறியுடன் துவங்கும் கட்டுரை “பிரகதீஸ்வரம் – அதுவே விஸ்வரூபம்” என்ற தலைப்பில் ‘எழுத்துச் சித்தர்’ என்று குறிப்பிடப்படும் பாலகுமாரன் அவர்களால் பத்தாண்டுகளுக்கு முன்னர், அதாவது, தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டக் காலத்தில் எழுதப்பட்டு, அது நாளேட்டிலும் வெளியானது [1] (மீண்டும் அண்மைய தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வின் பொழுது, மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் இதே கட்டுரையை “ராஜராஜனின் விஸ்வரூபம், தஞ்சைப் பெருவுடையார் கோயில்: நடிகர் சிவகுமாரின் எழுத்தோவியம்” என்ற தவறான ஒரு தலைப்பில் சிவகுமார் எழுதியதாகத் தினமணி வெளியிட்டது [2] என்பது இங்கு கட்டுரை சொல்ல விரும்பும் கருத்துக்கு அப்பாற்பட்டது).

இக்கட்டுரையில் பாலகுமாரன், “மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா? கலைஞர்கள் செய்திறனா? இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர்,” என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஜெயகாந்தனின் சாளரம் காட்டும் நாகரீகம்


siragu jeyakandhan1
ஜெயகாந்தனின் சிறுதைகளில் ஒன்றான ‘‘புதிய வார்ப்புகள்” தொகுப்பில் சாளரம் என்ற கதையை தேர்ந்தெடுத்துள்ளேன். இச்சிறுகதையில் நடந்திருக்கும் செய்தியை மறைமுகமாக கூறியுள்ளார். அப்படியென்றால் இக்கதையை புரிந்து கொள்வதற்கு இரண்டு முறை படிக்க வேண்டும் ஏனென்றால் நடைமுறைக்கு மாறான விசயத்தை பார்க்கும் பொழுது நாமும் அதை அப்படியே கூறக்கூடாது என்று நாகரீகமாக இக்கதையை கையாண்டுள்ளார்.
சாளரத்தின் தலைப்பு பொருத்தம்

சாளரம் என்பது சன்னல் அவர் வீட்டில் உள்ள சாளரத்தை அவர் திறந்ததே கிடையாது. ஏனென்றால் அது வாடகை வீடு. அதனுடன் அந்த சாளரத்தை திறந்தால் கீழ்வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி தெரியும். ஒருநாள் புழுக்கமாக இருக்கிறது என்று சாளரத்தை திறந்த பொழுதுதான் ஒரு காட்சியை கண்டார். அக்காட்சியை வைத்து வேறு ஒரு கதை எழுத முடிவு செய்தார் ஆனால் அக்கதைக்கு ஏற்ற தலைப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. யோசித்துக் கொண்டே இருக்கும். பொழுது வேறு ஒரு சாளரத்தின் வழியே பார்க்கிறார். மீண்டும் ஒரு அவருவருப்பான விசயத்தை அவரால் காணமுடிந்தது. அதைக் கண்டவுடன் தன் கதைக்கு ஏற்ற தலைப்பு ‘‘மிருகம்” என்று வைத்தார். மிகுந்த சந்தோசம் அவருக்கு எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்று இறுமாப்பு அடைந்தார். எந்த சாளரத்தின் வழி கேள்வி எழும்பியதோ அந்த சாளரத்தின் வழியே பதிலும் கிடைத்தது என்று உற்சாகம் அடைந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.