Wednesday 30 November 2016

கவிதைச் சோலை (தமிழ்மொழி வாழி!, வெளிநாடு வந்தேனடா …!)

தமிழ்மொழி வாழி!



siragu-yaaliniyum1
வளஞ்செழித்த நிலமோடு மங்காத புகழோடு
பிறந்த தமிழரினமே பல்லாண்டு வாழி!
பெற்றபேறு களிலெலாம் தமிழனாய் பிறப்பெடுத்த
பண்பாட் டுடையபெருந் தமிழினமே வாழி!
தாயாகத் தமிழைப் பெற்றத் தமிழரின்;

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=24214

Tuesday 29 November 2016

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3


காகம்-அப்படியானால் பாம்பைக் கொல்ல நான் செய்ய வேண்டிய உபாயம் என்ன?
நரி-இந்த நகரத்து அரசகுமாரி குளிக்கிற நீராட்டுக்குளத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளைக் கழற்றுவாள். அந்த நகைகளில் ஒன்றைக் கொண்டுவந்து மக்கள் பார்க்கும்படியாக அந்த மரப்பொந்தில் போட்டுவிடு.
siragu-pancha-thandhira-kadhai2

காக்கையும் அவ்விதமே செய்தது. அதைப் பின்தொடர்ந்து வந்த அரசனின் பணியாளர்கள் நகையைத் தேடி பொந்தினைப் பிளந்தார்கள். அப்போது சீறிவந்த நாகத்தையும் கொன்றார்கள். இவ்விதம் காகம் தன் தொல்லை நீங்கிச் சுகமாக வாழ்ந்தது.
எனவே சரியான உபாயத்தினால் எல்லாம் கைவசமாகும். புத்தியிருப்பவன் பலவான். முன்பு புத்தி பலத்தினால் ஒரு முயல் சிங்கத்தையே கொன்றது என்று தமனகன் கூறியது.
கரடகன்-அது எப்படி?
தமனகன்-(முயல் சிங்கத்தைக் கொன்ற கதையைச் சொல்கிறது)
siragu-pancha-thandhira-kadhai3


ஒரு காட்டில் மதோன்மத்தன் என்று ஒரு சிங்கம் இருந்தது. அது எவ்வித முறையுமின்றி அக்காட்டிலுள்ள மிருகங்களை எல்லாம் கொன்று தின்று வந்தது. அப்போது மிருகங்கள் யாவும் ஒன்றுதிரண்டு அதனிடம் சென்று, “மிருகங்களுக்கெல்லாம் அரசனே! இம்மாதிரித் தாங்கள் எல்லையின்றி விலங்குகளைக் கொன்றுவந்தால் எல்லா விலங்குகளும் அழிந்துபோய்விடும். பிறகு தங்களுக்கும் இரை கிடைக்காது ஆகவே நாங்கள் தினம் ஒரு விலங்காக உங்களிடம் வருகிறோம். நீங்கள் அவ்விலங்கை உண்டு பசியாறலாம்” என்றன. சிங்கமும் “அப்படியே செய்கிறேன்” என்று சத்தியம் செய்துகொடுத்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 28 November 2016

சிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும் – பகுதி – 2


சிறுவர் பாடல்கள் பொது வரையறை
siragu-siruvar-vaaimozhi2

குழந்தைகளுக்காக எழுதப்பெறும் பாடல்கள், குழந்தைகள் தமக்குத் தாமே எழுதிக்கொள்ளும் பாடல்கள் ஆகிய இரு நிலைகளில் சிறுவர் பாடல்கள் அடிப்படையில் அமைகின்றன. சிறுவர்களுக்காக எழுதப்படும் மூத்தோரின் பாடல்களின் தன்மையைப் பின்வரும் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன.

சிறுவர் இலக்கியம் என்ற தொடரானது ‘Children literature‘ என்ற சொல்லின் மொழிப் பெயர்ப்பாக அமைகிறது. ‘Child’ என்பது சின்னஞ்சிறு குழந்தையைக் குறிப்பதால், குழந்தை எனும் சொல்லுக்குப் பதிலாக, சிறுவர் என்னும் சொல்லைக் கொண்டு இவ்வியலக்கியத்தைச் சிறுவர் இலக்கியம் என்று அழைத்தனர். சிறுமியர் என்ற சொல்லையும் உள்ளடக்கியதாகச் சிறுவர் இலக்கியம் கருதப்பட்டாலும் இது ஆண்பாலையே முதன்மைப்படுத்துவதாக அமைவதால் சிறுவர் இலக்கியம் எனும் தொடரை விடுத்துக் குழந்தை இலக்கியம் என்று குறிப்பதும் உண்டுஎன்று சிறுவர் இலக்கியம் என்பதற்கான பெயர்ப் பொருத்தத்தை ஆராய்கின்றனர் அறிஞர்கள்.


3 வயது முதல் சுமார் 16 வயது வரையிலான குழந்தைகளுக்காகப் படைக்கப்பெறுவது சிறுவர் இலக்கியம். அதாவது பள்ளிக்கல்வி முடியும் வரையிலான பருவத்தினருக்குரியது எனலாம்என்று சிறுவர் இலக்கியத்திற்கான வயது வரையை உறுதி செய்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 27 November 2016

ஆபிரகாம் பண்டிதர்

யார் இந்த ஆபிரகாம் பண்டிதர்?
siragu-abraham-pandidhar2

தமிழிசை சாகித்தியங்களின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்ற முத்துத் தாண்டவர் முதலிய மூவரைப் போல, தமிழிசை இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவதற்கென வாய்த்த வல்லுநர்கள் மூவர். கருணாமிர்த சாகரம் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூல் எழுதிய விபுலாநந்தர், சிலப்பதிகார இசை நுணுக்கம் எழுதிய டாக்டர் எஸ். ராமநாதன் ஆகியோர்தான் அந்த மூவர்.
“தமிழக முழுமைக்கும் உதவிய நற்பெரும் மருத்துவர்; கடல் போன்ற கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூல் எழுதியவர்; வீணை வித்தகர்; அறிஞர் போற்றிய இசை ஆராய்ச்சி அன்பர்; பெரும்புலவர்களைப் புரிந்து பேணிய வள்ளல்; இசை மாநாடுகள் இனிது நடத்தியவர்; பரோடா இந்திய இசை மாநாட்டில் 24 சுருதி பற்றிச் சொற் பெருக்கு ஆற்றிய ஆய்வாளர்; சுருளிமலைத் துறவியார் கருணானந்தர்பால் அரிய மருந்து முறைகளைக் கற்றுக்கொண்ட அறிஞர்; சிலப்பதிகார இசை நுணுக்கங்களையும் சங்க இலக்கிய இசையியலையும் முதன் முதலில் ஆராய்ந்து பிற ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் நின்றவர்; மேற்கு நாட்டினர்க்குத் தென்னக இசையியல் பற்றிக் கட்டுரைகள் எழுதியும், கருணாமிர்த சாகரத்தை ஆங்கிலத்தில் எழுதியும் ஐரோப்பிய இசையியலையும் தமிழ் இசையியலையும் ஒப்பீடு செய்து பணியாற்றியவர்; பழம் இசை நூல்களைத் திரட்டி அச்சிட்டு அளித்து, மறைந்துபோகாமல் காத்த இசைப்புரவலர்.”
தமிழிசை வளம்:
தமிழிசைக் களஞ்சியத்தை உருவாக்கிய முனைவர் வீ. ப. கா. சுந்தரம், ஆபிரகாம் பண்டிதரை அறிமுகப்படுத்தும் முறை இது. வரலாற்று வல்லுநர், பறவையியல் வல்லுநர் (ஆர்னிதாலஜிஸ்ட்), புகைப்படக் கலைஞர், ஓவியர், சோதிடர், இசைத்தமிழ் வல்லுநர், இசைப்பாடல் ஆசிரியர் எனப் பல்வேறு ஆற்றல்கள் பெற்றுத் தமிழுக்குத் தொண்டாற்றிய ஆபிரகாம் பண்டிதரை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 22 November 2016

சிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும்


siragu-children2

நாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாகவே மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் தற்காலத்தில் பெருமுயற்சிகள் எடுத்து எழுத்துவடிவில் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குறிப்பாக நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான, சிறுவர் பாடல்கள் தற்காலத்தில் தேய்ந்து அருகி வருகின்றன. இதற்குக் காரணம் சிறுவர்கள் தம்விளையாட்டு எண்ணம் மறக்கப்பெற்று அவற்றிக்கு நேரமும் வாய்ப்பும் இல்லாமல் போனது என்பதே ஆகும். சிறுவர்கள்தம் விளையாட்டு எண்ணம் தொலைக்காட்சி, கணினி விளையாட்டு ஆகியவற்றால் கவரப்பெற்று விளையாட்டு, ஆடல், பாடல், விடுகதை போன்றவற்றிற்கு நேரம் இல்லாமல் போயிற்று. விளையாட்டைக் காண்பவர்களாக மட்டுமே இக்காலக் குழந்தைகள் வளர்ந்து வரும் இவ்வகை குறைவதற்கான காரணம் ஆகும்.


மேலும் பள்ளிகளில் நாட்டுப்புற மரபு சார்ந்த விளையாட்டுக்களுக்கு இடமில்லாமல் இருப்பதும் ஒரு பெருங்குறையாகும். பள்ளிகளில் உலகமயமாக்கப்படுதல் காரணமாக உலக அரங்கில் விளையாடப்படும் விளையாட்டுகள் விளையாடச் சொல்லித்தரப்பெறுகின்றன. இதன் காரணமாக கிராமப்புற விளையாட்டுகள் மறைந்துவருகின்றன. மேலும் கிராமப்புற விளையாட்டு சார்ந்த பாடல்களும் சிறுவர்களால் விளையாடப்படாத காரணத்தினால் அழிவுக்குள்ளாகி வருகின்றன. இருப்பினும் இவற்றில் இருந்துத் தப்பிக் கிடைக்கும் சிறுவர் பாடல்களைத் தொகுப்பது அவற்றை ஆராய்வது என்பது இக்காலத்திற்குத் தேவையான ஒன்றாகும். எதிர்கால சமுதாயத்திற்குத் தமிழகத்தின் மரபு சார் விளையாட்டுக்களை பதிவாக்கம் செய்யும் முயற்சியாகவும் இது விளங்கக் கூடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 21 November 2016

இலங்கையில் அழிக்கப்படும் இந்துக்களின் அடையாளங்கள்!


siragu-srilanga-kovil

இன அழிப்புப் போரை நடத்தி முடித்த இலங்கை அரசு, தற்போது இந்து மதத்தை இலங்கை மண்ணிலிருந்து வேறோடு அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தமிழர்களை தனிமைப்படுத்தி முடக்குவதில் குறியாக உள்ளது சிங்கள அரசு என ஆவேசத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சமீபத்தில் இலங்கைக்கு யாத்திரிகராக சுற்றுலா சென்று வந்துள்ள, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம. ரவிக்குமார். அங்கு நேரடியாகக் கண்ட காட்சிகளை நம்மிடம் விவரித்தார்.

இலங்கையில் போர் முடிந்தும் இன்னும் தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ராணுவ முகாமைப் பார்க்க முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்தப் பகுதிக்குச் சென்றாலே கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத்தான் அனுமதிக்கிறார்கள்.


நான் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கொழும்பிலிருந்து வடக்கு மாகாணப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தேன். அப்போது ஆறு மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இந்து கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்தேன். அங்கு இந்து கடவுளுடன் புத்தருக்கு என்று தனிப்பீடம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக அய்யனார், விநாயகர், மாரியம்மன், முனிஸ்வரன் கோவில்களில்தான் இது போன்ற புத்த மதத்தினரின் ஆக்கிரமிப்பைப் பார்க்க முடிந்தது. சிவ லங்காவை புத்த லங்காவாக மாற்றும் முயற்சியில் சத்தமில்லாமல் இறங்கி இருக்கிறது இலங்கை அரசு. தமிழர்களை வேரோடு கிள்ளிய சிங்கள ராணுவம் தற்போது இந்து கோவில்களைத் தேடித்தேடி அழித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 20 November 2016

சாதி மறுப்பு திருமணங்கள் குறித்து உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு – ஒரு பார்வை !!

siragu-castes1

இந்திய நாட்டில் 6000 க்கும் மேற்பட்ட சாதிகள் இருப்பதாக உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. மிக வலுவாக இங்கே சாதியக் கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கின்றது. அண்ணல் அம்பேத்கர் கூறியது போல சாதியம் இங்கே ஏணி மரப்படிகள் போல் இருக்கின்றன. தனக்கு மேல் தன்னை அடக்கி ஆதிக்கம் செலுத்தும் கூட்டத்தைப் பற்றி கவலையின்றி தான் ஆதிக்கம் செலுத்தவும் – அடக்கி ஆண்டிடவும் மக்கள் இருக்கின்றார்கள் என்ற மன நிலையே இன்றும் சாதியை நீர்த்துப் போகாது வைத்திருக்கின்றது.


அந்த அமைப்பை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்க வேண்டும் என்றால் காதல் மணம் புரிந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்ற நிலைப்பாடு சாதியை மறுப்பவர்களிடம் உண்டு. சாதி மறுத்து காதல் மணம் புரிபவர்களை கொடூரமாகக் கொன்று விடும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில் சங்கர் என்பவர் ஆதிக்க சாதி பெண்ணை திருமணம் செய்தார் என்பதற்காக கொடூரமாக நடுசாலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். பல இடங்களில் காவல் துறையினர் காதல் மணம் புரிந்தவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தர மறுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. சமூகம் சாதிமறுப்பு திருமணங்களை எப்படி பார்க்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்திய உச்சநீதிமன்றத்தின் பார்வை என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 17 November 2016

வானம்பாடி(சிறுகதை)


siragu-vaanambaadi1

வானம்பாடிப்பறவை ஒன்று வானில் பறந்துசென்று கொண்டிருந்தது. அப்போது அது, ஒரு சிறுமி மிகுந்த வருத்தத்துடன் தன்வீட்டுக் கொல்லையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தது. அந்தச்சிறுமியின் பெயர் மாயா. நான்காம் வகுப்புப் படிக்கிறாள். வானம்பாடிக்குக் குழந்தைகள் வருத்தத்துடன் இருப்பது பிடிக்காது. உடனடியாக அது அந்தச்சிறுமியின் முன்னால் போய் அமர்ந்தது.

“நான் தான் வானம்பாடி! நீ ஏன் வருத்ததுடன் இருக்கிறாய்?” – என்று கேட்டது.
“ஓ…வானில் பாடியபடி பறக்கும் பறவை நீதானா? உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” – என்றாள் மாயா. அவள் குரல் சுரத்தில்லாமல் இருந்தது.


“உன் பிரச்னை என்னன்னு சொல்லு! என்னால தீர்த்து வைக்கமுடியுமான்னு பாக்குறேன்!” – என்றது வானம்பாடி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 16 November 2016

நகரத்தார் தரும சாசனத்தின் வழி அறியலாகும் நகரத்தார் வரலாறு


siragu-nagarathaar2

நகரத்தார்கள் வரலாறு, பெருமை, புகழ், சிறப்பு போன்றவற்றைக் காலந்தோறும் இலக்கியங்கள் பதிவு செய்துவந்துள்ளன. இவை தவிர கல்வெட்டுகள், பட்டயங்கள் போன்றனவும் நகரத்தார் பெருமைகளை வரலாறுகளைக் காட்டுகின்றன. அவற்றைத் தொகுத்து நகரத்தார் வரலாற்றினைத் தகுந்த முறையில் கட்டமைக்க வேண்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நகரத்தார் அறப்பட்டயம் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ள நகரத்தார் பெருமைகளை, வரலாறுகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

நகரத்தார் அறப்பட்டயங்கள் என்ற நூல் கோவிலூர் ஆதீனத்தால் தற்போது வெளியிடப்பெற்றுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள வ.சுப. மாணிக்கம் அவர்களின் பதிப்புரை குறிக்கத்தக்கது. பல செய்திகளை, ஆய்வுக்கண்களை இப்பதிப்புரை திறந்து வைக்கின்றது.
siragu-nagarathaar6

கி.பி. 1600 முதல் அதாவது பதினாறாம் நூற்றாண்டு முதல் 1800ஆம் ஆண்டு அதாவது பதினெட்டாம் நூற்றாண்டு வரை சில அறச் செயல்களைக் குறிப்பாக பழனி பாதயாத்திரை குறித்தான தகவல்களைப் பட்டயங்களாக நகரத்தார் எழுதிக் கொண்டுள்ளனர். இப்பட்டயங்களில் குறிப்பிட்டபடியே இன்றுவரை பழனி பாதயாத்திரை நடைபெற்று வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது. ஓலைச்சுவடிகளில் எழுதப்பெற்ற இத்தகவல்கள் அடங்கிய தொகுப்பு பல நிலையில் அச்சாக்கம் பெற்று மீளவும் கோவிலூர் ஆதீனத்தால் வெளியிடப்பெற்றுள்ளது.

இப்பட்டயங்களில் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நகரத்தார் பற்றிய வரலாறுகளை மட்டும் எடுத்துரைக்கும் நிலையில் இக்கட்டுரை அமைகிறது.


‘‘நகரச் சாசன அட்டவணை’’ என்ற தலைப்பிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ள நகரத்தார் தர்ம சாசனம் என்ற சாசனத்தில் முதல் பகுதியில் உள்ள  பட்டயத்தில் இடம்பெற்றுள்ள நகரத்தார் பெருமைகள் பின்வருமாறு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 15 November 2016

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரையில் உணவகத்தில் பணியாற்றும் தனசேகர்

siragu-dhanasekar1

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரையில் உணவகங்களில் உணவு தயாரிப்புப் பணியில் இருக்கிறேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் இளைஞர் தனம் என்று செல்லமாக அழைக்கப்படும் தனசேகர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் ஆற்றுப்பாலம் அருகில் உள்ளது ராஜேஸ் என்ற இளைஞர் நடத்தும் உணவகம். இங்குதான் பணியாற்றுகிறார் தனசேகர் (26). உணவு தயாரிப்புப் பணிதான் இவரது முக்கியப் பணி. இருப்பினும் சாப்பிட வருபவர்களுக்கு சேவை செய்வதையும் விரும்பி செய்கிறார்.

தூய்மையாக அழுத்தம் திருத்தமாக “ழ”-கரத்தை உச்சரிக்கும் இவரது மொழியால் இவரிடம் பேச்சு கொடுக்க, ஆச்சரியம் மேல் ஆச்சரியமாக கிடைத்தது. காரணம் இவரது படிப்புதான். தனசேகர் முதுநிலை பட்டதாரி அதாவது எம்.எஸ்.சி., பி.எட்., எம்.பில். முடித்துள்ளார்.

படிப்புக்கேற்ற வேலைதான் வேண்டும் என்று வீட்டில் சும்மா படுத்து சுவற்றுச் சுண்ணாம்பை சுரண்டிக் கொண்டிருக்கும் இக்கால இளைஞர்கள் மத்தியில், உணவுக் கரண்டியை கையில் பிடித்து தகுந்த வேலை கிடைக்கும் வரை ஓய்ந்து கிடந்தால், அது வாழ்க்கை இல்லை என்று உணவு தயாரிப்பதிலும்… வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை எவ்வித முகச்சுளிப்பும் இன்றி எடுத்துப் பரிமாறுவதிலும் தனசேகர் நெஞ்சை அள்ளுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 14 November 2016

இன்றைய இளம் வயது குழந்தைகளின் பயணம் எதை நோக்கி……


இன்றைய இளம் வயது குழந்தைகளின் பயணம் ஏராளமான சவால்கள் நிறைந்தது என பள்ளிக் குழந்தைகளுக்கு ஆலோசனை செய்து வரும் வழக்கறிஞர் பத்மப்ரியா ஞானசேகரன் சொல்கிறார்.
இது பற்றி அவரிடம் விரிவாகப் பேசினோம்.
padmapriya

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறேன். இன்றைய இளம் வயது குழந்தைகள் வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் சவால்கள் என்ன?, அதிலிருந்து அவர்கள் தப்புவது எப்படி? என்பதை ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று அவர்களை சந்தித்து உரையாடுவது எனது சமூகப்பணி.

பெரும்பாலும் இன்று நகரங்களைப் பொறுத்தவரை கணவன்-மனைவி வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தையோடு அவர்கள் நேரம் கழிப்பது என்பது மிகவும் குறைவு தான். மேலும் குழந்தைக்கு என்ன தேவையோ அதனை உடனுக்குடன் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். இன்றைய குழந்தைகள் படிப்பதற்கு தேவையான விசங்களைத் தவிர்த்து, பொழுது போக்கிற்காக அம்மா, அப்பாவிடம் கேட்டு பெறும் விசயங்கள்தான் அதிகமாக உள்ளன. எடுத்துக்காட்டாக மடிக்கணினி, அலைபேசி, இரு சக்கர வாகனம் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.


இன்றைய தொழில் நுட்பம் என்பது புலி வாலைப் பிடித்த கதை தான். அதை சற்று கவனக்குறைவாக பயன்படுத்தினாலும் நம்முடைய வாழ்க்கையை காலி செய்து விடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 13 November 2016

அமெரிக்க அதிபர் பதவி, பெண்களுக்கு ஒரு தகர்க்கவியலாத கண்ணாடிக்கூரை


siragu-american-election1

நடந்து முடிந்த (நவம்பர் 8, 2016) அமெரிக்கத் தேர்தலில், அதிபர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு, அவரது வெற்றியின் மூலம் ஆண்களே 240 ஆண்டுகளாகத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பொறுப்பை ஏற்று வந்த நடைமுறையில் ஒரு மாறுதல் வரும் என மிகவும் எதிர் பார்க்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றிலும் இந்த அதிபர் தேர்தலில்தான் ஒரு பெண்மணி பெரிய கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பும் முதல் முறையாகக் கிடைத்தது. பற்பல திடீர் திருப்பங்கள், ஒவ்வொரு நாளும் வேட்பாளர்கள் குறித்து மாறி மாறிக் கிளம்பிய அவதூறுகள் என்று பரபரப்பாக நகர்ந்தது தேர்தல் பிரச்சாரம். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளிலும் குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கும் போகலாம் என்ற நிலையில் ஒரு நீண்ட இரவாக அந்நாள் அலைக்கழித்தது. இறுதியில் அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக, மீண்டும் ஒரு ஆணையே மக்கள் வெற்றிபெறச் செய்ததால் ‘டானல்ட் டிரம்ப்’ அவர்கள் அடுத்த அதிபராக அறிவிக்கப்பட்டதும், இந்த முறை ‘மேடம் பிரசிடெண்ட்’ என்ற மாற்றம் வரும் என்று கொண்டிருந்த நம்பிக்கைக்கு முடிவு கட்டப்பட்டது.
siragu-america-election7

தனது போட்டியாளர், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டானல்ட் டிரம்ப்பை விட சுமார் மூன்று இலட்சம் (3,37,636 – செய்தி கிடைத்த நேரம் வரை) வாக்குகளை அதிகம் பெற்றார் ஹில்லாரி கிளிண்டன். அவருக்கு ஆதரவாக வாக்களித்த இந்த அதிகப்படி வாக்குகளை மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுக்காட்ட விரும்பினால், இது புளோரிடா மாநிலத்தின் டாம்ப்பா நகரில் (Tampa, Florida) வாழும் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஹில்லாரி கிளிண்டனுக்கு வாக்களிப்பது போன்றது. முன்னர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட அல் கோர் எதிர்கொண்டது போலவே, நாட்டுமக்களால் அதிகளவிலான பெரும்பான்மை மக்கள் வாக்குகளைப் (popular votes) பெற்றாலும், தேவையான அளவு தேர்தல் குழு வாக்குகளை (electoral votes) பெறாது போனதால் ஹில்லாரி கிளிண்டனின் வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது ஓர் இரங்கத்தக்க நிலையே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Saturday 12 November 2016

மீண்டும் வாரும் புத்த பிரானே!(கவிதை)


siragu-puththar
தானாக தோன்றினால்
அது சுயம்பு லிங்கம்
கும்பிட யாருமேயில்லாத ஊரில்
இரவோடு இரவாக
சிறு மலை உச்சியை கண்டாலும்
வந்து உட்காரந்த்திருக்கும்
புத்த பிரானின் சிலைகள்
தானாய் தோன்றியவையோ?
புத்த பிரானே!

எம் தேசத்தில்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=22130

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-2


(குறிப்பு: பஞ்சதந்திரக் கதைகள் சொல்லப்படும் முறை, ஈசாப் கதைகளை ஒத்திருக்கிறது. அதாவது இவை எனப்படும் நீதிபுகட்டும் கட்டுக்கதைகளாக உள்ளன. ஈசாப் கதைகளில் போலவே இவற்றிலும் பிராணிகள் மனித குணங்கள் உள்ளவையாகச் சித்திரிக்கப்பட்டு, அவை பேசவும் செய்கின்றன. ஆனால் இக்கதைகளின் அமைப்பு ஈசாப் கதைகளைப் போல இல்லை. ஈசாப் கதைகள் தனித்தனிக் கதைகள். பஞ்சதந்திரக் கதைகளின் அமைப்பு, ஒருவகையில் ஆயிரத்தோரு இரவுகள் எனப்படும் அரபிக் கதைகளைப் போல, ஒன்றினுள் ஒன்றாகத் தொடர்ந்து செல்வதாக உள்ளது.)
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
அந்தச் சிங்கத்திற்கு ஒரு மந்திரி இருந்தது. அந்த மந்திரிக்கு இரண்டு மகன்கள் – கரடகன், தமனகன் என்ற நரிகள். சிங்கத்தின் பயத்தைப் பார்த்து அவை இரண்டும் பேசத் தொடங்கின.
siragu-panja-thandhira-kadhai
தமனகன்: நம் அரசன் தண்ணீர் குடிக்கப்போய், குடிக்காமல் ஏன் சும்மா இருக்கிறார்?

கரடகன்: அதை நாம் ஏன் விசாரிக்க வேண்டும்? நமக்கு அதனால் இரை கிடைக்குமா? பெருமை உண்டாகுமா? கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? அதனால் நீ சும்மா இரு. தனக்கு ஒவ்வாத காரியத்தைச் செய்பவன், ஆப்பைப் பிடுங்கிய குரங்கு போல் ஆவான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Thursday 10 November 2016

ஆதரவற்றோர் பள்ளியில் சீணு


siragu-aadharavatror

“அப்பா, அம்மாச்சி வீட்ல இருக்கிற, அந்த சீணு பையன் நம்ம அம்மாவை அம்மா அம்மான்னு கூப்பிட்டு மடில உட்காரான்பா, நானும் அண்ணனும் அவன தள்ளி விட்டுட்டோம்பா” என்று கண்களை விரித்தப்படி சொன்னாள் ஐந்து வயது தங்கம்.
“அப்படியா கண்ணு, சரி நீங்க போய் விளையாடுங்க” என பிள்ளைகளை வெளியே அனுப்பிய குமரன், அஞ்சலையிடம் “எத்தன தடவ சொல்லிருக்கேன் அந்தப் பையன் அங்க இருக்கும் போது புள்ளைகள அங்க அழைச்சிட்டு போகாதன்னு, அப்படியே கூட்டிட்டுப் போனாலும் அவன கொஞ்சக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல, என் புள்ளைங்க முன்னாடி அவன் உன்ன அம்மான்னு கூப்பிடக் கூடாதுன்னு எத்தன தடவை சொல்றது? ” எனச் சீறினான்.
“இல்லங்க அவன் தான் ….” என இழுத்தாள் அஞ்சலை

“வாய மூடுடி, இனிமே அவன் உன்ன அம்மான்னு கூப்பிட்றத புள்ளைங்க சொன்னா தொலைச்சிடுவேன்” என அதட்டி விட்டு வெளியே சென்றான் குமரன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இயற்கை விவசாயியான திருநங்கை!


devi

இயற்கை விவசாயமும், நாட்டு மாடுகள் வளர்ப்பு தான் என்னுடைய உயிர் நாடி. விவசாயம் இல்லாமல் கிராமம் இல்லை. அதுவே நம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் தேவி சேலத்தைச் சேர்ந்த திருநங்கை. விவசாயி, சமூக சேவகி, அரசியல்வாதி என பல பாதைகளில் பயணிப்பவர்.


“சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள அரண்மனைக்காடு கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். ஏழைக்குடும்பம். நான் 11 மாத கைக்குழந்தையாக இருக்கும் போதே அப்பா காலமாகிவிட்டார். உடன் பிறந்தது அக்கா, அண்ணன். அக்காவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அண்ணன் சிறு வயதிலேயே வீட்டை விட்டு சென்றுவிட்டார். பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்த நான், என்னுடைய 17 வயதில் பாலின மாறுபாடு காரணமாக அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறிவிட்டேன். சிறிது தயங்கினாலும் அம்மா ஏற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Wednesday 9 November 2016

சுற்றுலாத்தலங்களை விளக்கும் அற்புதக் காட்சி அமைப்புகள் கொண்ட ஆவணப்படம்… …


siragu-tanjavur

அரைமணியில் பிரமாண்டத்தை காட்டிய ஆவணப்படம்… சுற்றுலாத்தலங்களை விளக்கும் அற்புத காட்சி அமைப்புகள்…
இளைஞர்களே இனி வரும் கால இந்தியாவின் அஸ்திவாரங்கள் என்பது வெறும் வார்த்தை அல்ல… நம் கலாச்சாரத்தின் மதிப்பையும், பண்பாட்டையும் இனி ஏட்டில் மட்டுமல்ல… திரையிலும் கொண்டு வந்து விடுகிறது சினிமாத்துறை என்பது வரம்தான்…
அதை சரியான திசையில் கொண்டு சென்றால் இந்தியாவின் புகழ் கொடி முக்கியமாக தமிழ்நாட்டின் புகழ் என்றும் பாடப்படும் என்பதற்கு ஒரு ஆவணப்படம் சாட்சியாக இருக்கிறது. இதன் பின்னணியில் உழைத்தவர்கள் ஒரு இளைஞர் பட்டாளம். உழைப்பு மிக பிரமாண்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அழகு கொஞ்சும் தஞ்சைத்தரணியில் காண்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. கல்லில் கலை வண்ணம் கண்ட அற்புதமான இடம். தலையாட்டும் பொம்மைகளும், விண்ணுயர்ந்து நிற்கும் பெரிய கோயில் மட்டுமின்றி ஏராளமான காணக் கிடைக்காத பொக்கிசங்கள் நிறைந்த மண்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அமெரிக்கத் தேர்தல் கூத்து

siragu-american-election1

ஈராண்டுகளுக்கு முன் இந்தத்தேர்தல் கூத்து துவங்கியது. சனநாயக்கட்சி (டெமோகிரேட்), குடியரசுக்கட்சி (ரிபப்லிகன்) கட்சிகளுக்குள் குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் கூத்து துவங்கியது. சனநாயக்கட்சிக்குள் ஹில்லரி கிளிண்டனும், பெர்னி சாண்டர்சும் போட்டியிட்டனர். ரிபப்லிகன் கட்சிக்குள் பலர் போட்டியிட்டனர். அதில் முடிவில் டொனல்டு டிரம்பும், ஹில்லரி கிளிண்டனும் வென்று இன்று வேட்பாளர்களாக நிற்கின்றனர். இந்த வாரம் செவ்வாய் கிழமையன்று குடியரசுத் தேர்தல் நடைபெறவுள்ளது. யார் வெல்வார்கள் என்று தேர்தல் கணிப்பாளர்கள் அவரவர் கொள்கைப்படி கூறிவருகின்றனர். இனி வேட்பாளர்கள் குறித்து பார்ப்போம்.
siragu-american-election2


டொனல்டு டிரம்பு: இவர் ரிபப்லிகன் கட்சியின் வேட்பாளராக வெல்வார் என்பதை அக்கட்சியினரே ஓராண்டிற்குமுன் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள். ஆனால் இவரை எதிர்த்து நின்றவர் அனைவரும் கோமாளிகளாக நடந்து கொண்டதாலும், அரசியல் முதிர்ச்சியேதுமில்லாததாலும் தோற்றனர். டிரம்பு கட்சியினரின் கோபத்தைப்புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டது அவரது வெற்றிக்கு வழிவகுத்தது. டிரம்பு ஒரு பொழுதுபோக்காளர், தொலைக்காட்சியில் நடந்து கொண்டது போலவே

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 7 November 2016

உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்வில் தமிழர் உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்பு


event2

கடந்த 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் சிகாகோ நகரில் கூடி உருவாக்கப்பட்ட “உலகத் தமிழ் அமைப்பு” இந்த ஆண்டு வெள்ளி விழா கண்டுள்ளது. “தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழர் உரிமை” என்ற முழக்கத்துடன் உலகமெங்கும் வாழும் தமிழர் நலனுக்காகவும், தமிழர் உரிமைகளைப் பாதுகாக்கவும் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து வரும் இவ்வமைப்பின் வெள்ளி விழா நிகழ்வு கடந்த 08 அக்டோபர் 2016 விர்சீனியாவில் உள்ள ஆல்டி நகரில் நடைபெற்றது.
event6


தமிழர்களின் உரிமைக்காகவும், அயல்மொழித் திணிப்பில் இருந்து தமிழ் மொழி காக்கவும் போராடி தன் இன்னுயிரை ஈகம் செய்த தமிழீழ, தமிழக மாவீரர்கள், ஈகியர்களுக்கு விழாவில் கூடியிருந்தவர்கள் அனைவரும் அமைதி அஞ்சலி செலுத்தினர். சிறப்பு அழைப்பாளார்கள் குத்துவிளக்கேற்ற, உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் ஐயா. வைத்தியலிங்கம் க. தேவ் அவர்களின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. விழா ஒருங்கிணைப்பாளர் திரு இரவி சுப்ரமணியம் அவர்கள் மாநாட்டு முன்னோட்டம் குறித்து விளக்கினார். வட அமெரிக்கத் தமிழச் சங்கப் பேரவையின் தலைவர் திருமதி செந்தாமரை பிரபாகர், தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் திரு. சிவசைலம் தெய்வமணி, அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவையின் சார்பாக திரு. எலியாசு அவர்களும் வெள்ளி விழா காணும் உலகத் தமிழ் அமைப்பின் வரலாற்றையும் பணிகளையும் நினைவுகூர்ந்து வாழ்த்துரை வழங்கினர். புரட்சிக்கவி பாரதிதாசன் “சங்கே முழங்கு”, “தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்புவோம்” பாடல்களுக்கு தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் எழுச்சி நடனத்துடன் விழா தொடங்கியது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இளம் தமிழர் படையே வருக வருக!(கவிதை)


Siragu-ellaam-kodukkum-tamil1

இளம் தமிழர் படையே வருக வருக
இனம் தழைக்க வேற்படை வருக வருக!
கொடுந்தீமை படையினை அழிக்க சினம்
கொண்டு தமிழர் யாவரும் வருக வருக

எத்திசையிலும் போர் முரசெழுப்பியே வன்நரிப்
படைகள் வருவதனை யாவரும் ஏற்ப்பீரோ?
வடநாட்டினநரிக் கூட்டமொன்று நம்

வளமான நிலம் தேடி வருவதனை அறிவீரோ?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=22017

பஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்


siragu-panjathandhira-kadhaigal1

கதைகள் என்றால் ஆசைப்படாதவர்கள் இல்லை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் கதை என்றால் ஆசைதான். ஆங்கிலத்திலும் பெரியவர்களும் சிறுவர் கதைகளான ஈசாப் கதைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் போன்றவற்றைப் படித்து மகிழ்கிறார்கள். தமிழிலும் இவ்வாறே அநேகக் கதைகள் உள்ளன. தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள் என்று எத்தனை எத்தனையோ. சிறுவயதில் இவற்றையெல்லாம் படித்து மகிழ்ந்தது உண்டு. இப்போது நிறைய பேருக்கு ஆங்கிலப் படிப்பின் காரணமாக இம்மாதிரிக் கதைகளின் தொடர்பு விட்டுப்போய் விட்டது.

பஞ்சதந்திரக் கதைகள், அரிய அறிவுரைக் கதைகளாகும். இவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலவற்றைச் சிறிய தொகுப்புகளிலும், யூ ட்யூப் முதலிய காணொளிகளிலும் இப்போது காண்கிறோம். அசலான கதைகளை அப்படியே எடுத்துரைத்தலும் சொல்லுதலும் படித்தலும் கேட்டலும் இல்லாமல் போய்விட்டது. யாருக்கும் நேரமில்லை! அதற்காகவே இந்தப் பகுதி. இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, உறுதியாகப் பெரியவர்களுக்கும் பயன்தரும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 4 November 2016

ஏகாந்த வீணை… மயக்கும் இசை… வீணை செய்வதில் கைதேர்ந்த தஞ்சை கலைஞர் ராமலிங்கம்…


siragu-egaandha-veenai5
தஞ்சாவூர்:
காணும் பொருட்களில் கலை வண்ணம் கண்ட ஒரே ஊர் தஞ்சைதான். இங்கு உருவாக்கப்படும் வீணைகளுக்கு உலக அளவில் பெரும் புகழ் உண்டு. அந்த வீணையில் அற்புதமான வேலைப்பாடுகள் அமையப்பெற்று இருக்கும்.
அப்படிப்பட்ட வீணையை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பலர் உள்ளனர். இதில் வாடிக்கையாளர்கள் மனதில் நினைப்பதை அப்படியே கொண்டு வருவதில் திறமை வாய்ந்தவர் தஞ்சையை சேர்ந்த ஆர்.ராமலிங்கம். இவருக்கு வயது 75.
வாருங்கள்… இவர் பற்றி தெரிந்து கொள்வோம்.

கோயில்கள் சூழப்பட்ட தஞ்சை கர்நாடக இசையை வளர்த்த நகரம் என்பதையும் அறிந்து கொள்ள

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Tuesday 1 November 2016

இரயில் சிநேகிதம்


siragu-train-friends3

பயணம் திட்டமிட்டதாயிருந்தாலும் சரி, எதிர்பாராததாயிருந்தாலும் சரி நமக்குள் மூழ்கி யோசிக்கும் வாய்ப்பைத் தரும். தனியே செல்லும்போது இதற்கான கால அவகாசம் அதிகம். உடன் பயணிக்கும் உறவினர்கள் / நண்பர்களுடன் உரையாடினாலும் அமைதியாகச் சிந்திக்கும் சந்தர்ப்பத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.

நாம் நெருக்கமானவர்களுடனும் அறிமுகமானவர்களுடனும் மட்டும் பயணம் செய்வதில்லை. முன் பின் அறிமுகமில்லா முகங்கள் பலவற்றைக் கடந்து வருகிறோம். இரயில் சிநேகிதம் என்று பொதுவில்குறிப்பிட்டாலும் பயணங்கள் ஏற்படுத்தும் நட்பையே இங்கே குறிப்பிடுகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.