Monday 28 November 2016

சிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும் – பகுதி – 2


சிறுவர் பாடல்கள் பொது வரையறை
siragu-siruvar-vaaimozhi2

குழந்தைகளுக்காக எழுதப்பெறும் பாடல்கள், குழந்தைகள் தமக்குத் தாமே எழுதிக்கொள்ளும் பாடல்கள் ஆகிய இரு நிலைகளில் சிறுவர் பாடல்கள் அடிப்படையில் அமைகின்றன. சிறுவர்களுக்காக எழுதப்படும் மூத்தோரின் பாடல்களின் தன்மையைப் பின்வரும் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன.

சிறுவர் இலக்கியம் என்ற தொடரானது ‘Children literature‘ என்ற சொல்லின் மொழிப் பெயர்ப்பாக அமைகிறது. ‘Child’ என்பது சின்னஞ்சிறு குழந்தையைக் குறிப்பதால், குழந்தை எனும் சொல்லுக்குப் பதிலாக, சிறுவர் என்னும் சொல்லைக் கொண்டு இவ்வியலக்கியத்தைச் சிறுவர் இலக்கியம் என்று அழைத்தனர். சிறுமியர் என்ற சொல்லையும் உள்ளடக்கியதாகச் சிறுவர் இலக்கியம் கருதப்பட்டாலும் இது ஆண்பாலையே முதன்மைப்படுத்துவதாக அமைவதால் சிறுவர் இலக்கியம் எனும் தொடரை விடுத்துக் குழந்தை இலக்கியம் என்று குறிப்பதும் உண்டுஎன்று சிறுவர் இலக்கியம் என்பதற்கான பெயர்ப் பொருத்தத்தை ஆராய்கின்றனர் அறிஞர்கள்.


3 வயது முதல் சுமார் 16 வயது வரையிலான குழந்தைகளுக்காகப் படைக்கப்பெறுவது சிறுவர் இலக்கியம். அதாவது பள்ளிக்கல்வி முடியும் வரையிலான பருவத்தினருக்குரியது எனலாம்என்று சிறுவர் இலக்கியத்திற்கான வயது வரையை உறுதி செய்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment