Sunday 20 November 2016

சாதி மறுப்பு திருமணங்கள் குறித்து உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு – ஒரு பார்வை !!

siragu-castes1

இந்திய நாட்டில் 6000 க்கும் மேற்பட்ட சாதிகள் இருப்பதாக உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. மிக வலுவாக இங்கே சாதியக் கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கின்றது. அண்ணல் அம்பேத்கர் கூறியது போல சாதியம் இங்கே ஏணி மரப்படிகள் போல் இருக்கின்றன. தனக்கு மேல் தன்னை அடக்கி ஆதிக்கம் செலுத்தும் கூட்டத்தைப் பற்றி கவலையின்றி தான் ஆதிக்கம் செலுத்தவும் – அடக்கி ஆண்டிடவும் மக்கள் இருக்கின்றார்கள் என்ற மன நிலையே இன்றும் சாதியை நீர்த்துப் போகாது வைத்திருக்கின்றது.


அந்த அமைப்பை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்க வேண்டும் என்றால் காதல் மணம் புரிந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்ற நிலைப்பாடு சாதியை மறுப்பவர்களிடம் உண்டு. சாதி மறுத்து காதல் மணம் புரிபவர்களை கொடூரமாகக் கொன்று விடும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில் சங்கர் என்பவர் ஆதிக்க சாதி பெண்ணை திருமணம் செய்தார் என்பதற்காக கொடூரமாக நடுசாலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். பல இடங்களில் காவல் துறையினர் காதல் மணம் புரிந்தவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தர மறுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. சமூகம் சாதிமறுப்பு திருமணங்களை எப்படி பார்க்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்திய உச்சநீதிமன்றத்தின் பார்வை என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment