Wednesday 16 November 2016

நகரத்தார் தரும சாசனத்தின் வழி அறியலாகும் நகரத்தார் வரலாறு


siragu-nagarathaar2

நகரத்தார்கள் வரலாறு, பெருமை, புகழ், சிறப்பு போன்றவற்றைக் காலந்தோறும் இலக்கியங்கள் பதிவு செய்துவந்துள்ளன. இவை தவிர கல்வெட்டுகள், பட்டயங்கள் போன்றனவும் நகரத்தார் பெருமைகளை வரலாறுகளைக் காட்டுகின்றன. அவற்றைத் தொகுத்து நகரத்தார் வரலாற்றினைத் தகுந்த முறையில் கட்டமைக்க வேண்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நகரத்தார் அறப்பட்டயம் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ள நகரத்தார் பெருமைகளை, வரலாறுகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

நகரத்தார் அறப்பட்டயங்கள் என்ற நூல் கோவிலூர் ஆதீனத்தால் தற்போது வெளியிடப்பெற்றுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள வ.சுப. மாணிக்கம் அவர்களின் பதிப்புரை குறிக்கத்தக்கது. பல செய்திகளை, ஆய்வுக்கண்களை இப்பதிப்புரை திறந்து வைக்கின்றது.
siragu-nagarathaar6

கி.பி. 1600 முதல் அதாவது பதினாறாம் நூற்றாண்டு முதல் 1800ஆம் ஆண்டு அதாவது பதினெட்டாம் நூற்றாண்டு வரை சில அறச் செயல்களைக் குறிப்பாக பழனி பாதயாத்திரை குறித்தான தகவல்களைப் பட்டயங்களாக நகரத்தார் எழுதிக் கொண்டுள்ளனர். இப்பட்டயங்களில் குறிப்பிட்டபடியே இன்றுவரை பழனி பாதயாத்திரை நடைபெற்று வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது. ஓலைச்சுவடிகளில் எழுதப்பெற்ற இத்தகவல்கள் அடங்கிய தொகுப்பு பல நிலையில் அச்சாக்கம் பெற்று மீளவும் கோவிலூர் ஆதீனத்தால் வெளியிடப்பெற்றுள்ளது.

இப்பட்டயங்களில் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நகரத்தார் பற்றிய வரலாறுகளை மட்டும் எடுத்துரைக்கும் நிலையில் இக்கட்டுரை அமைகிறது.


‘‘நகரச் சாசன அட்டவணை’’ என்ற தலைப்பிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ள நகரத்தார் தர்ம சாசனம் என்ற சாசனத்தில் முதல் பகுதியில் உள்ள  பட்டயத்தில் இடம்பெற்றுள்ள நகரத்தார் பெருமைகள் பின்வருமாறு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment