Tuesday 22 November 2016

சிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும்


siragu-children2

நாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாகவே மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் தற்காலத்தில் பெருமுயற்சிகள் எடுத்து எழுத்துவடிவில் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குறிப்பாக நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான, சிறுவர் பாடல்கள் தற்காலத்தில் தேய்ந்து அருகி வருகின்றன. இதற்குக் காரணம் சிறுவர்கள் தம்விளையாட்டு எண்ணம் மறக்கப்பெற்று அவற்றிக்கு நேரமும் வாய்ப்பும் இல்லாமல் போனது என்பதே ஆகும். சிறுவர்கள்தம் விளையாட்டு எண்ணம் தொலைக்காட்சி, கணினி விளையாட்டு ஆகியவற்றால் கவரப்பெற்று விளையாட்டு, ஆடல், பாடல், விடுகதை போன்றவற்றிற்கு நேரம் இல்லாமல் போயிற்று. விளையாட்டைக் காண்பவர்களாக மட்டுமே இக்காலக் குழந்தைகள் வளர்ந்து வரும் இவ்வகை குறைவதற்கான காரணம் ஆகும்.


மேலும் பள்ளிகளில் நாட்டுப்புற மரபு சார்ந்த விளையாட்டுக்களுக்கு இடமில்லாமல் இருப்பதும் ஒரு பெருங்குறையாகும். பள்ளிகளில் உலகமயமாக்கப்படுதல் காரணமாக உலக அரங்கில் விளையாடப்படும் விளையாட்டுகள் விளையாடச் சொல்லித்தரப்பெறுகின்றன. இதன் காரணமாக கிராமப்புற விளையாட்டுகள் மறைந்துவருகின்றன. மேலும் கிராமப்புற விளையாட்டு சார்ந்த பாடல்களும் சிறுவர்களால் விளையாடப்படாத காரணத்தினால் அழிவுக்குள்ளாகி வருகின்றன. இருப்பினும் இவற்றில் இருந்துத் தப்பிக் கிடைக்கும் சிறுவர் பாடல்களைத் தொகுப்பது அவற்றை ஆராய்வது என்பது இக்காலத்திற்குத் தேவையான ஒன்றாகும். எதிர்கால சமுதாயத்திற்குத் தமிழகத்தின் மரபு சார் விளையாட்டுக்களை பதிவாக்கம் செய்யும் முயற்சியாகவும் இது விளங்கக் கூடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment