Friday 29 September 2017

சமூகப் புரட்சியாளர் சாகுமகராஜ்!!


Siragu shahu_maharaj1
சத்திரபதி சாகு மகராஜ் 26 ஜூன் மாதம் 1874 ஆம் ஆண்டு மாராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இந்திய வரலாற்றில் முதன்முதலில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியவர் இவர். சாதி ஒழிப்பிற்காவும், தீண்டாமைக்கு எதிராகவும் குரல் எழுப்பியவர். பகுஜன் சமாஜின் மாணவர்கள் விடுதி இயக்கத்தின் முன்னோடி. பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து மதத்தின் ஆதிக்கத்தையும் எதிர்த்தவர். சமூக நீதியின் தந்தை, அண்ணல் அம்பேத்கரின் இயக்கத்தை முழுதும் ஆதரித்தவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல நிலைகளில் திட்டங்கள் கொண்டு வந்தார். கல்வியும், வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தார். பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்காக பல விடுதிகளை கோல்லாபூரில் (kolhapur) திறந்தவர். அதே போன்று கல்வி கற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உறுதி செய்தார். 1902 லேயே இத்தகைய திட்டங்களை வகுத்து சமூக நீதியை நிலைநாட்டினார் என்பதே மிகச்சிறப்பான செய்தி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 28 September 2017

ஏழையின் கலைந்த கனவு! (கவிதை)


Siragu-en-kanmoodinaai1

சகோதரி அனிதா!
நீயாய் நீ சாகவில்லை
நீ சாகடிக்கப்பட்டாய்
“நீற்” உன்னை சாகடித்தது!
உன் கனவுகளோ சாகவில்லை
உன் கனவுகளை
உன்னைப்போல் ஆயிரமாயிரம்
அனித்தாக்களுக்குள் விதைத்துவிட்டல்லவா
போயிருக்கிறாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 27 September 2017

தோற்றம் கண்டு இகழாதே…! (சிறுகதை)


Siragu-thotram-igalaathe1.png
ஒரு காட்டின் சிறுகுன்றின் மீது அந்த தேவாலயம் அமைந்திருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புள்ளிமான்குட்டி ராணி தனது பெற்றோர்களுடன் தொழுவதற்காக அங்கே வரும். அவ்வாறு வருவதற்கு அது மிகுந்த ஆவலாய் இருக்கும். அதற்குக் காரணம் உண்டு. அந்த ஆலயத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த நந்தவனத்தில் விதவிதமாய் பூக்கள் பற்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும். ராணியைப் போன்றே மற்ற மிருகங்களின் குட்டிகளும் அங்கே வரும். பெரியவர்கள் பிரார்த்தனையில் இருக்க, குட்டிகள் சேர்ந்துகொண்டு நந்தவனத்தில் ஆட்டம் போடும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அந்த தேவாலயத்தைச் சுற்றிமுளைக்கும் சிறுகடைகள் உண்டு. அங்கே கொறிப்பதற்குத் தின்பண்டங்கள் வேறுகிடைக்கும். சொல்ல வேண்டுமா? குட்டிகள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிடும்.
ராணிக்கு அந்த நந்தவனத்தில் பிடிக்காத விசயம் ஒன்றும் இருந்தது. அது குரங்குக் குட்டிகள். அவைகள் பார்ப்பதற்கு வரிக்குதிரைக்குட்டிகள் போன்றோ, சிவிங்கிக் குட்டிகள் போன்றோ, முயல்களைப் போன்றோ அழகாக இராது. அறுவறுப்பாக இருக்கும். அதனால் இவைகள் அந்தக் குரங்குகளை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாது. அவைகள் மரத்தின் கிளைகளில் பரிதாபமாக அமர்ந்தபடி இவைகள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும். ஒருநாள் ராணியின் அம்மா இதனை கவனித்துவிட்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 26 September 2017

இனியாவது பேசுவோம் மறந்துபோன தொப்புள்கொடி உறவை!


Siragu malayaga thamilargal1
ஆயிரத்து எண்ணூற்று இருபதுகளில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்து போன தமிழர்களின் வாழ்வு இருநூறு ஆண்டுகளை எட்டுகிறது. இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகத்திற்கு துரோக உடன்படிக்கையான, அதிபர் சிறிமாவோ பண்டாரநாயக்க – இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி செய்துகொண்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு தொடக்கம் இரண்டாயிரத்து பதினான்குடன் ஐம்பது வருடங்களை கடந்தாயிற்று. உலகில் வாழும் அனைத்து மக்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவை அத்தனையும் பெற தகுதியுள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களை இரண்டு நாடுகளும் பண்டத்தைபோல பங்கு போட்டுக்கொண்டனர்.
கடலுக்கு அப்பால் இலங்கையில் இன்றைய கணக்கீட்டின்படி பதினைந்து லட்சம் பேர் மலையகத்தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ்வைத் தொடர்கின்றனர். இங்கே குறிப்பாக தமிழகத்தில் அதே எண்ணிக்கையில் பல மாவட்டங்களில் தாயகம் திரும்பிய தமிழர்களாக வாழ்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலிருந்து பிஜி, மொரிசியஸ், மலேசியா, பர்மா, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளுக்கு கூலிகளாக அழைத்து செல்லப்பட்டாலும் ஒப்பீட்டளவில் தேயிலை தோட்டங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையில் நவீன சமூகத்தின் எந்த ‘சுதந்திரமும்’ இதுவரை கிட்டவில்லை என்பதே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்குக் கிடைக்கும் கசப்பான உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 21 September 2017

நீட்டினும் நீட்டாமை!! (கவிதை)


Siragu-en-kanmoodinaai1


வணிகம் போற்றும் வறட்டுலகில்
மனிதம் மிக்க மருத்துவராய்
இனியொரு விதி செய்ய
வித்திட்டவள்
அனிதாவெனும் ஆற்றல்மிகு நங்கை!

அவள் விதைத்ததெலாம்
நல்வினையாகும் நேரத்தில்
கொல்வினையாய் கொண்டதொரு
நீட் எனும் கயிறே..

விழுங்கியது அவர் உயிரே..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/

Wednesday 20 September 2017

பிரமிள் கவிதைகள் -படிமம் –படிப்பினை


Siragu piramil3
நவீன தமிழ் இலக்கியத்தில் பெரும்பங்களிப்பைச் செய்தது சி.சு.செல்லப்பா அவர்கள் நடத்திய ‘எழுத்து’ இதழ். இலக்கிய விமர்சனங்களோடு தன் பயணத்தை தொடங்கிய எழுத்து இதழ் பிற்காலத்தில் இதழ்களின் வளர்சிக்கு ஒரு குறியீடாக காட்டப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது எழுத்து இதழில் எழுதியவர்களுக்கு முகவரியாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
அவ்வகையில் ‘எழுத்து’ இதழில் கவிதைகள் எழுதியவர்களின் அறுபத்து மூன்று கவிதைகளையும் அக்கவிதைகளை எழுதிய இருபத்து நான்கு கவிஞர்களையும் “புதுக்குரல்கள்” என்று தொகுத்து வெளியிட்டது. அத்தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர்களில் வெகுசிலர் மட்டுமே கவிதையை தொடர்ந்து செய்து வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் ‘பிரமிள்’ என்று அழைக்கப்படுகிற இலங்கையில் பிறந்து தமிழகத்தில் வாழ்ந்த சிவராமலிங்கம்.

“புதுக்குரல்” தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர்களில் வடித்தெடுப்பது சற்று கடினமென்றாலும் இக்கட்டுரைக்காகவாவது பிரமிளை முன்னிலைப்படுத்த அவசியமாகிறது. மேலும் பிரமிள் கவிதை அமைப்பு, உத்திமுறை மற்றும் படிமம் ஆகியவற்றின் காரணமாக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 19 September 2017

பெரியார்: நான் யாராயிருந்தாலென்ன?


Siragu periyar3
“கடவுள் இல்லை” என்று தட்டச்சு செய்து இணையத்தில் தேடினால் கூகுள் இணையத்தேடலில் கிடைப்பவை பெரும்பாலும் ‘பெரியார் ஈ. வெ. ராமசாமி’ அவர்களைப் பற்றிய செய்திகளையும் படங்களையும் கொண்ட முடிவுகளாகவே இருக்கும். அவ்வாறே “பகுத்தறிவுப் பகலவன்” என்றாலும் அவர் குறித்த செய்திகள்தான் கிடைக்கும். ‘பகுத்தறிவுப் பகலவன்’, ‘தந்தை’, ‘பெரியார்’ என்ற பெயர்களெல்லாம் மக்கள் அன்புடன் அவருக்கு வழங்கிய பட்டங்கள். ஆனால், அவர் தானே தனக்குப் பற்பல புனைபெயர்களைப் புனைந்து கொண்டு தனது பகுத்தறிவுக் கொள்கைகளை அப்புனைபெயர்களில் எழுதியுள்ளார். 
 இவற்றில், ‘சித்திரபுத்திரன்’, ‘பழைய கறுப்பன்’ என்பவை நன்கு அறியப்பட்ட புனைபெயர்களாகும். இதைத் தவிர தேசீயத்துரோகி, ஒரு தொழிலாளி, சுமைதாங்கி, யார் எழுதினாலென்ன, எவர் எழுதினாலென்ன, ஒருநிருபர், நமது அரசியல் நிருபர், பொதுநலப்பிரியன், குறும்பன், உண்மை காண்போன், நம்பிக்கையிழந்தவன், பார்ப்பனரல்லாதான், உண்மை விளம்பி, வம்பளப்போன், பழைய காங்கிரஸ்காரன், வம்பன், குட்டிச்சாத்தான் என்ற புனைப் பெயர்களிலும் இவர் எழுதியிருக்கலாம் என்ற பெரியாரியலில் ஆர்வம் கொண்டோர், அவர் எழுதும் முறையை நன்கறிந்த வாசகர்கள் கருதுவதுண்டு. இப்புனைப்பெயர்களில் பல அவரை வசைபாடிய பெயர்களாகவும், அதையே அவர் புனைப்பெயராக வைத்துக் கொண்டதாக இருப்பதும் வெள்ளிடைமலை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 18 September 2017

வேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள்


Siragu navodaya school2
நீட் எனும் அரக்கனைத் தொடர்ந்து, நம்மை நோக்கி குறி வைக்கப்படும் அடுத்த அம்பு நவோதயா பள்ளிகள். இது நம் தமிழ்மொழிக்கும், சமூகநீதிக்கும் பேராபத்தை விளைவிக்கக்  கூடியது. இதனை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், நம் தமிழ்ச்சமூகத்தை மிகவும் கல்வி மறுக்கப்பட்ட பின்தங்கிய நிலைக்குக் கொண்டு சென்று விடும். மத்திய பா.ச.க அரசு தொடர்ந்து நம்மை போராட்டக்களத்திலேயே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறது போலும்.!

இந்த நவோதயா பள்ளிகளைப்  பற்றி சற்று விரிவாக பார்ப்போமா. 1986 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இந்த ஜவஹர்லால் நவோதயா பள்ளிகள் என்பதாகும். பின்தங்கிய மக்களுக்காக மாவட்டத்தில் ஒன்று என, கல்வி பெற முடியாத குழந்தைகளுக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக,  உண்டு உறைவிடப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டதாக கூறினார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில், வசதியான, மேல்தட்டு மாணவர்கள்தான் பயில்கின்றனர் என்பதுதான் உண்மை. இத்திட்டம் அறிமுகமான போதே தமிழகம் இப்பள்ளியை எதிர்த்து வந்திருக்கிறது. முக்கியமாக திராவிடர் கழகம் இதற்காக எதிர்த்து போராடியிருக்கிறது. ஏனென்றால், நாம் ஏற்கனவே இரு மொழி கொள்கையுள்ள மாநிலம். மும்மொழி கொள்கையை ஏற்காத மாநிலம். நவோதயா பள்ளி மூன்று மொழிகள் கற்க வேண்டும் என்ற விதியில்  இயங்குகிறது. அதிலும்,  இந்தியும், ஆங்கிலமும் தான் பயிற்று மொழியாக இருக்கிறது. இதில்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA/

Thursday 14 September 2017

ஏன் கண்மூடினாய்…? (கவிதை)


Siragu-en-kanmoodinaai1
பொங்கச்சோறு தினமும்
கிடையாது
நல்ல துணி உடுத்தவும்
முடியாது
பள்ளிக்கூடப் பையும்
பொத்தலாத்தான் இருக்கும்
புதுசா வாங்குன புத்தகம்
தரும் வாசணை
அறிஞ்சதே கிடையாது
பக்கத்து வீட்டு அக்கா
போன வருஷம்
தந்த புத்தகம்தான்

கிழிசலோட அடிக்கோடோட

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Wednesday 13 September 2017

அணைக்கும் கரங்கள் (சிறுகதை)


Siragu anaikkum karangal2

”பத்மலட்சுமி குழந்தைகள் காப்பகம்“ அன்று கோலாகலமாயிருந்தது. அங்கு ஒரு வயதிலிருந்து நான்கு வயது வரை உள்ள பிஞ்சுக் குழந்தைகள் தன் பிஞ்சுப் பாதங்களுடன் அங்குமிங்கும் குதித்தோடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ஆயாக்களோ மூச்சு வாங்க அவர்கள் பின்னால் ஒடிக்கொண்டிருந்தனர். மேடை போட்டு பந்தல் கட்டி வண்ண வண்ண பலூன்களால் அலங்கரித்து விழா ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. பார்வையாளர்கள் உட்கார நாற்கலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஒரு ஆயா இன்னொரு ஆயாவைக் கேட்டாள், ”இன்னைக்கு என்ன விசேசம்? நம்ம டாக்டர் அம்மாவுக்குப் பிறந்த நாளா?


நீ வேறே…………. இன்னிக்குக் குழந்தைகள் காப்பகத்தின் மூன்றாவது ஆண்டு முடிந்து நான்காவது ஆண்டு ஆரம்பிக்கிறதாம். டாக்டர் அம்மாவைப் போல இந்த உலகத்திலே யாரும் இருக்க மாட்டாங்க. தன்னலம் கருதாமே இந்த அநாதை குழந்தைகள் காப்பகத்தை நடத்திக்கிட்டு இருக்காங்க.”.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 12 September 2017

மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் அருங்காட்சியகம், அட்லாண்டா


Siragu Martin1

மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் (1929 -1968) அறிமுகம் தேவையற்ற ஓர் உலகத் தலைவர். அமெரிக்க கறுப்பின வரலாற்றில் மறக்கமுடியாத திருப்புமுனையை ஏற்படுத்திய ஆப்ரிக்க-அமெரிக்க மனித உரிமைப் போராளி. மகாத்மா காந்தியின் வழியில், அவர் கையாண்ட வன்முறையற்ற போராட்ட முறையை அமரிக்க மண்ணில் நிகழ்த்திக் காட்டி இந்திய மக்களின் உள்ளங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். பிற உலகநாடுகளுக்குப் பயணிப்பதை சுற்றுலா எனக் கருதுவதாகவும், தனது இந்தியப் பயணத்தை யாத்திரையாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டவர். 

ஆப்பிரிக்க-அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் தலைவராகவும், அட்லாண்டா நகரின் வரலாற்றுப் புகழ் மிக்க எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் சமயத் தலைவராகவும் பணியாற்றியவர். கறுப்பின மக்களின் சமவுரிமைக்காக இறுதிவரை போராட்டம் நிகழ்த்தியவர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங். இவரது பணியைப் பாராட்டி, 1964-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட இவரும், மகாத்மா காந்தி எதிர்கொண்ட முடிவைப் போலவே, ஏப்ரல் 4, 1968 அன்று மெம்ஃபிஸ் நகரில் இனவெறியன் ஒருவனால் சுடப்பட்டு, 40 ஆம் அகவையை எட்டும் முன்னரே உயிரிழந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 11 September 2017

நீட் எனும் தூக்குக்கயிறு.!


Siragu neet exam3

ஒரு அற்புதமான, திறமையான மருத்துவரை தமிழகம் இழந்திருக்கிறது. இழக்க வைத்திருக்கிறார்கள். இந்த கொடுமையை நம்மால் தடுக்க முடியவில்லையே என்று எண்ணும்போது நம் மனம் குற்றயுணர்ச்சியில் தவிக்கிறதே. அதுவும் சமூகநீதியில் முன்னே நிற்கும் நம் மாநிலம் இப்படிப்பட்ட ஒரு தவற்றை இழைத்திருக்கிறது என்றால், நம் வருங்கால சந்ததியினர் நம்மை குற்றவாளிகளாக, துரோகிகளாக அல்லவா பார்ப்பார்கள்.


இந்தியாவிலேயே மருத்துவக்கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்கின்றன. நம் மாநிலத்தில்தான் மிக அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. நம் மாநில மாணவர்கள் படித்து அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் வெளி வருகின்றனர். கிராமப்புற சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொள்கின்றனர். ஆரம்ப சுகாதர மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். ஆனால், இவ்வாண்டு நம் மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்து எறிந்திருக்கிறது இந்த நீட் எனும் நுழைவுத்தேர்வு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 6 September 2017

க.நா.சு கவிதைகள் ஒரு பார்வை


Siragu ka.na.su1

20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பாரதியாரால் மேற்கொள்ளப்பட்ட மரபை மீறிய புதிய வகையிலான கவிதை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் “free verse”என்று மேலை நாட்டினரால் மேற்கொள்ளப்பட்ட வசனகவிதை முறையை தமிழில் பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி மேற்கொண்டு பல சோதனைகளைச் செய்தார். அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில் செத்துக் கொண்டிருந்த பழைய யாப்புக் கவிதை மரபிற்கு மாற்றாக புதிய முறை அவசியம் என்று ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், க.நா.சு ஆகியோர் கணித்திருந்தனர். இவர்களில் ந.பிச்சமூர்த்திக்குப் பின் புதிய சோதனைகளை புதுமைபித்தன் தீவிரமாக கைகொண்டார். எனினும் இப்புது ரீதியான கவிதை முறைக்கு பண்டிதர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.


எந்த ஒன்றும் புதியதாக வருகிறபோது அவை எதிர்ப்பை சந்திக்கும் என்று இலக்கியத்தில் பரவலாகக் காணப்பட்டு வருகிறது. அது போல் மரபை மீறி முயன்ற கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்த நிலையில் அதனைக் கையாண்டு வெற்றி பெற்றவர்களுள் க.நா.சு குறிப்பிடத்தக்கவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 5 September 2017

கக்கூஸ் ஆவணப்படத்தின் மதிப்பாய்வு


Siragu kakoos1

துப்புரவுத் தொழிலாளர்களை அரசாங்கமும், நீதித்துறையும் படுத்தும் கொடுமைகளையும், அவர்கள் இந்த நச்சுச்சூழலில் சிக்கி வெளியே வரமுடியாமல் இருக்கும் சமூகச்சூழலையும் விளக்கி, தோழர் திவ்யாபாரதி “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இப்படம் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலங்களை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின், நீதித்துறையின் மனிதாபிமானம் அற்ற போக்கையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. துப்புரவுத் தொழிலாளர்கள் இத்தொழில் வேண்டாம் என்று வேறு தொழில்களுக்குப் போய்விடலாம் என்று கடுமையாக முயன்றாலும், அவர்களால் வெளியே வரமுடியாதபடி, இச்சமூகம் அவர்களை வலுக்கட்டாயமாக அழுத்திவைத்து இருப்பதும் இதில் காட்டப்பட்டு உள்ளது.


“இப்பொழுதெல்லாம் யார் சாதியைப் பார்க்கிறார்கள்?, அப்படியே இருந்தாலும் கிராமப்புறங்களில் ஓரளவு இருக்கலாமே ஒழிய நகர்ப்புறங்களில் இல்லவே இல்லை” என்று அதிமேதாவித்தனமாகப் பேசும் அறிவுஜீவிகளை இப்படம் நார்நாராகக் கிழித்துத் தொங்கப்போட்டு இருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/

Monday 4 September 2017

வாசிங்டன் டி.சி. பகுதியில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு!


Siragu kurundhogai maanaadu4

ஆகஸ்ட் 26‍-ஆம் நாள் சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது! எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை முறையாக மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து ஒரு பன்னாட்டு விழா நடைபெற்றது! காலை 9 மணிக்கு,  தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கியது விழா. அடுத்து குத்து விளக்கு ஏற்றுதலை திருமதி கீதா பிரபாகரன்,  திருமதி ஜெயந்தி சங்கர், திருமதி கல்பனா மெய்யப்பன், நளினி முத்துவேல், இரமா செந்தில்முருகன் முதலியோர் முன்னின்று நடத்தினர்.  தொடர்ந்து வாசிங்டன் தமிழ்ச்சங்க இளையோர் பலர் இணைந்து தாய் மொழியே வணக்கம் , யாமறிந்த மொழிகளிலே, மற்றும் குறுந்தொகைப் பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆட, விழா களை கட்டியது.


மாநாட்டை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம். வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டம், மற்றும் சில தமிழ் அமைப்புகளும் இணைந்து நடத்தின.  பேரவையின் துணைத் தலைவர் திரு. சுந்தர் குப்புசாமி ஆற்றிய துவக்க உரையில், பன்னாட்டு திருக்குறள் மாநாடு, பன்னாட்டுப் புறநானூறு மாநாடு என்ற வரிசையில் இந்த அமைப்புகள் இணைந்து நடத்தும் மூன்றாவது மாநாடு இது என்று குறிப்பிட்டார். அடுத்ததாக வரவேற்புரை நிகழ்த்தி,  விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை அறிமுகமும் செய்தார் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் இர. பிரபாகரன். குறுந்தொகை சார்ந்து நடத்தப்பட்ட, பாட்டு மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பாடவும் பேசவும் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர், திரு. கலியமூர்த்தி IPS (பணி நிறைவு) அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.