Wednesday 27 September 2017

தோற்றம் கண்டு இகழாதே…! (சிறுகதை)


Siragu-thotram-igalaathe1.png
ஒரு காட்டின் சிறுகுன்றின் மீது அந்த தேவாலயம் அமைந்திருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புள்ளிமான்குட்டி ராணி தனது பெற்றோர்களுடன் தொழுவதற்காக அங்கே வரும். அவ்வாறு வருவதற்கு அது மிகுந்த ஆவலாய் இருக்கும். அதற்குக் காரணம் உண்டு. அந்த ஆலயத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த நந்தவனத்தில் விதவிதமாய் பூக்கள் பற்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும். ராணியைப் போன்றே மற்ற மிருகங்களின் குட்டிகளும் அங்கே வரும். பெரியவர்கள் பிரார்த்தனையில் இருக்க, குட்டிகள் சேர்ந்துகொண்டு நந்தவனத்தில் ஆட்டம் போடும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அந்த தேவாலயத்தைச் சுற்றிமுளைக்கும் சிறுகடைகள் உண்டு. அங்கே கொறிப்பதற்குத் தின்பண்டங்கள் வேறுகிடைக்கும். சொல்ல வேண்டுமா? குட்டிகள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிடும்.
ராணிக்கு அந்த நந்தவனத்தில் பிடிக்காத விசயம் ஒன்றும் இருந்தது. அது குரங்குக் குட்டிகள். அவைகள் பார்ப்பதற்கு வரிக்குதிரைக்குட்டிகள் போன்றோ, சிவிங்கிக் குட்டிகள் போன்றோ, முயல்களைப் போன்றோ அழகாக இராது. அறுவறுப்பாக இருக்கும். அதனால் இவைகள் அந்தக் குரங்குகளை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாது. அவைகள் மரத்தின் கிளைகளில் பரிதாபமாக அமர்ந்தபடி இவைகள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும். ஒருநாள் ராணியின் அம்மா இதனை கவனித்துவிட்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment