Monday 18 September 2017

வேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள்


Siragu navodaya school2
நீட் எனும் அரக்கனைத் தொடர்ந்து, நம்மை நோக்கி குறி வைக்கப்படும் அடுத்த அம்பு நவோதயா பள்ளிகள். இது நம் தமிழ்மொழிக்கும், சமூகநீதிக்கும் பேராபத்தை விளைவிக்கக்  கூடியது. இதனை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், நம் தமிழ்ச்சமூகத்தை மிகவும் கல்வி மறுக்கப்பட்ட பின்தங்கிய நிலைக்குக் கொண்டு சென்று விடும். மத்திய பா.ச.க அரசு தொடர்ந்து நம்மை போராட்டக்களத்திலேயே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறது போலும்.!

இந்த நவோதயா பள்ளிகளைப்  பற்றி சற்று விரிவாக பார்ப்போமா. 1986 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இந்த ஜவஹர்லால் நவோதயா பள்ளிகள் என்பதாகும். பின்தங்கிய மக்களுக்காக மாவட்டத்தில் ஒன்று என, கல்வி பெற முடியாத குழந்தைகளுக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக,  உண்டு உறைவிடப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டதாக கூறினார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில், வசதியான, மேல்தட்டு மாணவர்கள்தான் பயில்கின்றனர் என்பதுதான் உண்மை. இத்திட்டம் அறிமுகமான போதே தமிழகம் இப்பள்ளியை எதிர்த்து வந்திருக்கிறது. முக்கியமாக திராவிடர் கழகம் இதற்காக எதிர்த்து போராடியிருக்கிறது. ஏனென்றால், நாம் ஏற்கனவே இரு மொழி கொள்கையுள்ள மாநிலம். மும்மொழி கொள்கையை ஏற்காத மாநிலம். நவோதயா பள்ளி மூன்று மொழிகள் கற்க வேண்டும் என்ற விதியில்  இயங்குகிறது. அதிலும்,  இந்தியும், ஆங்கிலமும் தான் பயிற்று மொழியாக இருக்கிறது. இதில்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA/

No comments:

Post a Comment