Tuesday 12 September 2017

மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் அருங்காட்சியகம், அட்லாண்டா


Siragu Martin1

மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் (1929 -1968) அறிமுகம் தேவையற்ற ஓர் உலகத் தலைவர். அமெரிக்க கறுப்பின வரலாற்றில் மறக்கமுடியாத திருப்புமுனையை ஏற்படுத்திய ஆப்ரிக்க-அமெரிக்க மனித உரிமைப் போராளி. மகாத்மா காந்தியின் வழியில், அவர் கையாண்ட வன்முறையற்ற போராட்ட முறையை அமரிக்க மண்ணில் நிகழ்த்திக் காட்டி இந்திய மக்களின் உள்ளங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். பிற உலகநாடுகளுக்குப் பயணிப்பதை சுற்றுலா எனக் கருதுவதாகவும், தனது இந்தியப் பயணத்தை யாத்திரையாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டவர். 

ஆப்பிரிக்க-அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் தலைவராகவும், அட்லாண்டா நகரின் வரலாற்றுப் புகழ் மிக்க எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் சமயத் தலைவராகவும் பணியாற்றியவர். கறுப்பின மக்களின் சமவுரிமைக்காக இறுதிவரை போராட்டம் நிகழ்த்தியவர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங். இவரது பணியைப் பாராட்டி, 1964-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட இவரும், மகாத்மா காந்தி எதிர்கொண்ட முடிவைப் போலவே, ஏப்ரல் 4, 1968 அன்று மெம்ஃபிஸ் நகரில் இனவெறியன் ஒருவனால் சுடப்பட்டு, 40 ஆம் அகவையை எட்டும் முன்னரே உயிரிழந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment