Tuesday 5 September 2017

கக்கூஸ் ஆவணப்படத்தின் மதிப்பாய்வு


Siragu kakoos1

துப்புரவுத் தொழிலாளர்களை அரசாங்கமும், நீதித்துறையும் படுத்தும் கொடுமைகளையும், அவர்கள் இந்த நச்சுச்சூழலில் சிக்கி வெளியே வரமுடியாமல் இருக்கும் சமூகச்சூழலையும் விளக்கி, தோழர் திவ்யாபாரதி “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இப்படம் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலங்களை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின், நீதித்துறையின் மனிதாபிமானம் அற்ற போக்கையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. துப்புரவுத் தொழிலாளர்கள் இத்தொழில் வேண்டாம் என்று வேறு தொழில்களுக்குப் போய்விடலாம் என்று கடுமையாக முயன்றாலும், அவர்களால் வெளியே வரமுடியாதபடி, இச்சமூகம் அவர்களை வலுக்கட்டாயமாக அழுத்திவைத்து இருப்பதும் இதில் காட்டப்பட்டு உள்ளது.


“இப்பொழுதெல்லாம் யார் சாதியைப் பார்க்கிறார்கள்?, அப்படியே இருந்தாலும் கிராமப்புறங்களில் ஓரளவு இருக்கலாமே ஒழிய நகர்ப்புறங்களில் இல்லவே இல்லை” என்று அதிமேதாவித்தனமாகப் பேசும் அறிவுஜீவிகளை இப்படம் நார்நாராகக் கிழித்துத் தொங்கப்போட்டு இருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/

No comments:

Post a Comment