Tuesday 26 September 2017

இனியாவது பேசுவோம் மறந்துபோன தொப்புள்கொடி உறவை!


Siragu malayaga thamilargal1
ஆயிரத்து எண்ணூற்று இருபதுகளில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்து போன தமிழர்களின் வாழ்வு இருநூறு ஆண்டுகளை எட்டுகிறது. இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகத்திற்கு துரோக உடன்படிக்கையான, அதிபர் சிறிமாவோ பண்டாரநாயக்க – இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி செய்துகொண்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு தொடக்கம் இரண்டாயிரத்து பதினான்குடன் ஐம்பது வருடங்களை கடந்தாயிற்று. உலகில் வாழும் அனைத்து மக்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவை அத்தனையும் பெற தகுதியுள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களை இரண்டு நாடுகளும் பண்டத்தைபோல பங்கு போட்டுக்கொண்டனர்.
கடலுக்கு அப்பால் இலங்கையில் இன்றைய கணக்கீட்டின்படி பதினைந்து லட்சம் பேர் மலையகத்தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ்வைத் தொடர்கின்றனர். இங்கே குறிப்பாக தமிழகத்தில் அதே எண்ணிக்கையில் பல மாவட்டங்களில் தாயகம் திரும்பிய தமிழர்களாக வாழ்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலிருந்து பிஜி, மொரிசியஸ், மலேசியா, பர்மா, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளுக்கு கூலிகளாக அழைத்து செல்லப்பட்டாலும் ஒப்பீட்டளவில் தேயிலை தோட்டங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையில் நவீன சமூகத்தின் எந்த ‘சுதந்திரமும்’ இதுவரை கிட்டவில்லை என்பதே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்குக் கிடைக்கும் கசப்பான உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment