Friday 29 September 2017

சமூகப் புரட்சியாளர் சாகுமகராஜ்!!


Siragu shahu_maharaj1
சத்திரபதி சாகு மகராஜ் 26 ஜூன் மாதம் 1874 ஆம் ஆண்டு மாராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இந்திய வரலாற்றில் முதன்முதலில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியவர் இவர். சாதி ஒழிப்பிற்காவும், தீண்டாமைக்கு எதிராகவும் குரல் எழுப்பியவர். பகுஜன் சமாஜின் மாணவர்கள் விடுதி இயக்கத்தின் முன்னோடி. பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து மதத்தின் ஆதிக்கத்தையும் எதிர்த்தவர். சமூக நீதியின் தந்தை, அண்ணல் அம்பேத்கரின் இயக்கத்தை முழுதும் ஆதரித்தவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல நிலைகளில் திட்டங்கள் கொண்டு வந்தார். கல்வியும், வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தார். பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்காக பல விடுதிகளை கோல்லாபூரில் (kolhapur) திறந்தவர். அதே போன்று கல்வி கற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உறுதி செய்தார். 1902 லேயே இத்தகைய திட்டங்களை வகுத்து சமூக நீதியை நிலைநாட்டினார் என்பதே மிகச்சிறப்பான செய்தி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment