Tuesday, 9 August 2016

செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி …


Siragu senthaarp1

தனது காதல் துணையைத்தொடர்பு கொள்ள நினைத்தபொழுதே அலைபேசியை எடுத்து குறுஞ்செய்தியாகவோ, அல்லது உரையாடலாகவோ, அல்லது காணொளி மூலம் பேசும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது. ஆனால் அக்காலத்துக் காதலர்களுக்கு அந்த வாய்ப்பு இருந்ததில்லை. தங்கள் காதலை மடல்கள் வழி தெரிவித்தனர். தமிழிலக்கியத்தில் தலைவன் தலைவியின் காதலை வளர்ப்பதில் தோழன் தோழியரது பங்கும் பெரும் பங்கு. தோழியும், தோழனும், விறலியும், பாணனும் காதலர்களின் காதல் கைகூட தூது சென்ற வண்ணம் இருந்தனர்.


Siragu-senthaarp12

மனிதர்களைத் தவிர்த்து கிளி, மேகம், அன்னம் என்று பலவற்றையும் காதலர்கள் தூதனுப்பியதாகவும் பாடல்கள் உள்ளன. உண்மையில் அவை செய்தியைக் கொண்டு சேர்த்தன என்று சொல்ல வழியில்லை. அது ஒருவகை உளவியல் அணுகுமுறை. தனது மனத்தில் உள்ள காதலை பெற்றோரிடமோ, தோழியிடமோ தெரிவித்து, தலைவன் அல்லது தலைவி மீது தான் கொண்ட அன்பை வெளிப்படையாக சொல்லத் தயங்கும் நேரத்தில் கிளி, அன்னம், மயில் போன்று பதில் ஒலி எழுப்பக்கூடிய பறவைகளிடமோ; அல்லது மேகம், தென்றல், அலை போன்று தன்போக்கில் கடந்து செல்வனவற்றிடம் தூது சொல்லி தங்கள் மனநினைவுகளை அசைபோடும் முறையின் வெளிப்பாடு அது. அன்னம், மயில், கிளி, முகில், நாரை, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு என்பன தூதாக அமைத்துப் பாடுவதற்குச் சிறந்தவை என்பது தமிழறிஞர்கள் கருதியுள்ளதாகத் தெரிகிறது. தமிழ் கூட தூது செல்வதாக இலக்கியம் உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 8 August 2016

எப்போது சீரமைக்கப்படும் திருநெல்வேலி தென்காசி நெடுஞ்சாலை?


திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள நெடுஞ்சாலையின் மோசமான நிலையினால் கடந்த ஆறு மாதங்களாக விபத்து அதிகரித்து வருகின்றது.

Siragu-thirunelveli-road1

விலை மதிக்க முடியாத மனித உயிரின் இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, கடந்த வாரம் நெல்லை மாவட்டம் மாறாந்தை என்னும் ஊரின் அருகில் ஏற்பட்ட விபத்தினால் ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.

மரணப் படுக்கையில் உள்ள குழியினைப் போன்று, போக்குவரத்து அதிகமுள்ள ஒரு நெடுஞ்சாலையின் மோசமான நிலையினைக் கண்டு தினந்தோறும் அலுவலகத்திற்கு பணிக்காக பேருந்தில் பயணம் செய்பவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும் மனம் குமுறுகின்றனர், ஒரு அரசினை மக்களாகிய நாம் எதற்காக தேர்ந்து எடுக்கிறோம் என்ற அக்கறை ஆளும் அரசின் மனதிலும், அரசு அதிகாரிகளின் மனதிலும் உள்ளதா என்னும் கேள்வி ஒவ்வொரு மனிதரின் மனதிலும் எழாமல் இல்லை.


மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசு அவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து, அதனை நிறைவேற்றித் தருவது அரசின் தலையாய கடமை என்பதை எப்போது உணரப் போகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 7 August 2016

நாகர்கோவிலில் ஒரு ஆச்சர்யம்: “சிட்டுக்குருவிகளை காக்கும் சந்தை வியாபாரிகள்!”


Siragu-Chittukkuruvi3

முன்பெல்லாம் சாதாரணமாக வீடுகள், வீதியோர மரங்கள், ஆலய சுவர்கள் என பார்க்க முடிந்த சிட்டுக் குருவிகள் இப்போது அரிதினும், அரிதாகி விட்டது. இதற்குக் காரணம் செல்லிடைப் பேசியின் கதிர் வீச்சு, விவசாய நிலங்கள் குறைந்தது, சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டது என ஆயிரம், ஆயிரம் காரணங்களை முன்வைக்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
Siragu-Chittukkuruvi1
இதன் விளைவு இப்போது சிட்டுக்குருவிகளை அதிகம் காண்பதற்கே இல்லாமல் போய் விட்டது. இதற்கு மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் சர்வ சாதாரணமாக சிட்டுக்குருவிகளைக் காணமுடிகிறது. அதற்குக் காரணம் நாகர்கோவில் அப்டா சந்தையில் உள்ள வியாபாரிகள் என்பது தான் ஆச்சர்யமே! அதற்கு பாதை போட்டு கொடுத்துள்ளது குமரி மாவட்ட இயற்கையின் நண்பர்கள் என்னும் அமைப்பு. தமிழக அளவில் விவசாயிகளும், வியாபாரிகளும் தங்களுக்குள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அளவில் உருவாக்கிய சந்தை இந்த அப்டா தான்! அதில் தான் இப்போது சிட்டுக் குருவிகள் அட போட வைக்கின்றது.

இது எப்படி சாத்தியமானது?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 4 August 2016

போட்டிபோடு(சிறுகதை)


Siragu competition story2

தலைமை ஆசிரியரிடமிருந்து சுற்றறிக்கை வந்திருந்தது. இந்த ஆண்டும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நமது பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பெறுகிறது; ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம், வெற்றி பெறுவோர்க்குப் பரிசுகள் ஆண்டுவிழாவில் வழங்கப்படும்; பெயர்தர நாளை கடைசிநாள். இதுதான் சுற்றறிக்கையின் சாராம்சம். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை அது. வகுப்பாசிரியர் அறிக்கையை ஒரு முறை உரக்க வாசித்துவிட்டு நிமிர்ந்தார். சில மாணவர்கள் எழுந்து போட்டித்தலைப்புகளின் கீழ் தங்கள் பெயரைப் பதிவு செய்தனர். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி இரண்டிலும் பெயர்தர முத்து எழுந்தான்.

“டேய் முத்து! எப்படியும் உனக்குப் பரிசுகிடைக்கப் போறதில்ல! பிறகு எதுக்குடா பேர் கொடுக்குற?”- பின்னாலிருந்து அவன் நண்பர்கள் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தனர்.


அவர்கள் சொல்வது உண்மைதான், முத்துவிற்குப் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி இரண்டிலும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு முறை போட்டி அறிவிக்கப்படும்போதும் அவன் அதில் தவறாமல் கலந்துகொள்வான். இருந்தும் என்ன பயன்? ஒவ்வொரு முறையும் அவனது வகுப்புத்தோழர்களான கார்த்திக், விக்னேஷ் இருவரும் பரிசைத் தட்டிச் சென்றுவிடுவார்கள். இப்படி பரிசு கிடைக்காமல் தோற்று ஏமாந்து போவதைக்காட்டிலும் பேசாமல் போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்துவிடலாம் என்று அவன் எண்ணியதுண்டு. இப்போது நண்பர்களின் கேலியும் அவனைச் சீண்டவே, பெயர் கொடுக்க எழுந்தவன் பெயர் கொடுக்காமல் உட்கார்ந்துவிட்டான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 3 August 2016

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 2


இரண்டாவது பகுதி-சுதந்திராக் கட்சி

நேருவின் அரசு வலிமை கொண்ட சமதர்மத்திற்கு சுதேசி என்பது மட்டுமே ஒரே எதிர்ப்பாக முன்வைக்கப்படவில்லை. 1950களின் பிற்பகுதி முதல் 1960கள் முழுவதும், நேருவின் பொருளாதாரத்திற்கு சுதந்திராக் கட்சியும் சவாலாக இருந்தது. அக்கட்சி குறைந்தபட்ச அரசாங்கக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரச் சந்தைகளுக்குச் சார்பான பழைய தாராளவாத நிலைப்பாட்டைக் கொண்டதாகும். (நாராயணமூர்த்தி, குர்ச்சரண் தாஸ் போன்ற பிரபலங்கள் பின்னர் பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பிக்க முயன்றார்கள் என்பதால், அதன் வரலாற்றைச் சற்றே கவனிப்பது பயனுடையதாக இருக்கும்.)

Siragu Economy2


தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியின் ஒரு காலக் கூட்டாளியுமான (இராஜாஜி எனப்பட்ட) சி. இராஜகோபாலாச்சாரி (இவருடைய மகள் காந்தியின் மகனை மணந்தார்) 1959இல் சுதந்திராக் கட்சியைத் தொடங்கினார். மிக உறுதியான சமூகப் பிற்போக்குவாதி அவர். இந்துமத மற்றும் கலாச்சார விசயங்களில் ஊக்கத்தோடு இயங்கியவரும், பாரதிய வித்யா பவனை ஏற்படுத்தியவருமான கே. எம். முன்ஷி, சமதர்ம எதிர்ப்புவாதியாக மாறுவதற்கு முன்பு காங்கிரஸ் சமதர்மக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான மீனு மசானி என்னும் பொருளாதார வல்லுநர், ஆங்கிலவாதியான பார்சிப், பெருந்தொழிலதிபர் சர் ஹோமி மோடி, பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்நிலையில் பணிபுரிந்த அரசு அதிகாரிகள் பலர், சுதந்திராக் கட்சியின் மையக் குழுவில் இருந்தனர். (அண்மையில் மறைந்தவரும், இந்தியாவின் முன்னணி வலதுசாரி நூல் வெளியீட்டகமான வாய்ஸ் ஆஃப் இந்தியா என்பதை நிறுவியவரும், இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்மீது தீவிர எதிர்ப்புக் காட்டியவருமான சீதாராம் கோயல் என்பவரும் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.)

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 2 August 2016

இங்கேயே இருக்கிறது


Siragu positive thinking3

நீங்கள் தேடும் ஒவ்வொன்றும் உங்கள் அருகில் தான் இருக்கிறது, ஆனால் என்ன, நீங்கள் அதை உணர மறுத்திடும் பொழுது அவற்றை விட்டு நீங்கள் விலகி வந்துவிட்டு, அவை விலகிப் போய்விட்டதென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். எது வேண்டும் என்பதில் உள்ள தெளிவின்மையே இதற்குக் காரணம் என்று சொல்வதும் உண்டு. நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு அதிகமாக உங்களுக்குள் இருக்கிறதோ அவ்வளவு அதிகமான நல்ல செயல்கள் உங்கள் வாழ்வைச் சுற்றி நடக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதைத்தான் சிக்மண்ட் பிராய்ட் என்ற உளவியல் மேதை கூறுகிறார். ஆகவே இது எங்கிருக்கிறதோ? எப்பொழுது கிடைக்குமோ? என்றில்லாமல், இங்கேதான் இருக்கிறது இப்பொழுதிருந்தே அது எனக்கு வந்துவிட்டது என்பதை நீங்கள் நினைக்கும் பொழுது அதை  நிச்சயம் நீங்கள் அடைந்து அனுபவிப்பீர்கள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.


காசு பணம் எல்லாமும் இருந்தாலும் நீங்கள் எதை அடைய வேண்டுமோ அவற்றின் மீதான ஆவலே உங்களை அதைப் பெற வைக்கிறது. காசு பணம் இருக்கிறது என்பதற்காக நீங்கள் எதையும் வாங்கிவிடுவதில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. அந்த ஆவலை நேர்மறையான எண்ணங்கள் மூலமாக வரவழைத்துக்கொண்டு

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 1 August 2016

36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மாடு பூட்டி கல் செக்கு!


Siragu-ka-lchekku2

செக்கு மேட்டின் கிர்ர்.. கிர்ர்.. சத்தத்தை ரசித்தபடி பலகையில் அமர்ந்து மாடுகளை ஓட்டுகிறார் ஒரு பெரியவர். கல் செக்கில் பொறுமையாக வித்துகளை கிளறி எண்ணெய் ஆட்டுகிறார் சீனிவாசன். செக்கில் வழியும் எண்ணெயின் வாசனை காற்றில் பரவி அந்தப் பகுதி முழுவதையும் மணக்கச் செய்கிறது.

சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய வழக்கொழிந்து போன மாடுகள் மூலம் கல் செக்கு இயக்கப்பட்ட பாரம்பரிய எண்ணெய் உற்பத்தித் தொழிலுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பாரதியார் நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் ஒரு நேர்க்காணல்.

மாடு பூட்டி செக்கு இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்திருப்பதன் நோக்கம்?


சீனிவாசன்: என்னுடைய தாத்தா, பெரியப்பா எல்லோரும் மாடுகள் ஓட்டி கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து விற்று தொழில் நடத்தி வந்தவர்கள். காலப்போக்கில் எண்ணெய் எடுக்கும் நவீன இயந்திரங்கள், பாக்கெட் எண்ணெய் வரத்தால் கல் செக்கு எண்ணெய்க்கு மவுசு குறைந்துபோனது. 1980க்குப் பின்னர் கல் செக்கில் மாடு பூட்டி எண்ணெய் பிழிந்து எடுப்பது ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது. இப்போது சில இடங்களில் டிராக்டர், மின்சார இயந்திரங்களை கொண்டு கல் செக்கு இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.