Monday 1 August 2016

36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மாடு பூட்டி கல் செக்கு!


Siragu-ka-lchekku2

செக்கு மேட்டின் கிர்ர்.. கிர்ர்.. சத்தத்தை ரசித்தபடி பலகையில் அமர்ந்து மாடுகளை ஓட்டுகிறார் ஒரு பெரியவர். கல் செக்கில் பொறுமையாக வித்துகளை கிளறி எண்ணெய் ஆட்டுகிறார் சீனிவாசன். செக்கில் வழியும் எண்ணெயின் வாசனை காற்றில் பரவி அந்தப் பகுதி முழுவதையும் மணக்கச் செய்கிறது.

சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய வழக்கொழிந்து போன மாடுகள் மூலம் கல் செக்கு இயக்கப்பட்ட பாரம்பரிய எண்ணெய் உற்பத்தித் தொழிலுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பாரதியார் நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் ஒரு நேர்க்காணல்.

மாடு பூட்டி செக்கு இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்திருப்பதன் நோக்கம்?


சீனிவாசன்: என்னுடைய தாத்தா, பெரியப்பா எல்லோரும் மாடுகள் ஓட்டி கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து விற்று தொழில் நடத்தி வந்தவர்கள். காலப்போக்கில் எண்ணெய் எடுக்கும் நவீன இயந்திரங்கள், பாக்கெட் எண்ணெய் வரத்தால் கல் செக்கு எண்ணெய்க்கு மவுசு குறைந்துபோனது. 1980க்குப் பின்னர் கல் செக்கில் மாடு பூட்டி எண்ணெய் பிழிந்து எடுப்பது ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது. இப்போது சில இடங்களில் டிராக்டர், மின்சார இயந்திரங்களை கொண்டு கல் செக்கு இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment