Wednesday 3 August 2016

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 2


இரண்டாவது பகுதி-சுதந்திராக் கட்சி

நேருவின் அரசு வலிமை கொண்ட சமதர்மத்திற்கு சுதேசி என்பது மட்டுமே ஒரே எதிர்ப்பாக முன்வைக்கப்படவில்லை. 1950களின் பிற்பகுதி முதல் 1960கள் முழுவதும், நேருவின் பொருளாதாரத்திற்கு சுதந்திராக் கட்சியும் சவாலாக இருந்தது. அக்கட்சி குறைந்தபட்ச அரசாங்கக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரச் சந்தைகளுக்குச் சார்பான பழைய தாராளவாத நிலைப்பாட்டைக் கொண்டதாகும். (நாராயணமூர்த்தி, குர்ச்சரண் தாஸ் போன்ற பிரபலங்கள் பின்னர் பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பிக்க முயன்றார்கள் என்பதால், அதன் வரலாற்றைச் சற்றே கவனிப்பது பயனுடையதாக இருக்கும்.)

Siragu Economy2


தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியின் ஒரு காலக் கூட்டாளியுமான (இராஜாஜி எனப்பட்ட) சி. இராஜகோபாலாச்சாரி (இவருடைய மகள் காந்தியின் மகனை மணந்தார்) 1959இல் சுதந்திராக் கட்சியைத் தொடங்கினார். மிக உறுதியான சமூகப் பிற்போக்குவாதி அவர். இந்துமத மற்றும் கலாச்சார விசயங்களில் ஊக்கத்தோடு இயங்கியவரும், பாரதிய வித்யா பவனை ஏற்படுத்தியவருமான கே. எம். முன்ஷி, சமதர்ம எதிர்ப்புவாதியாக மாறுவதற்கு முன்பு காங்கிரஸ் சமதர்மக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான மீனு மசானி என்னும் பொருளாதார வல்லுநர், ஆங்கிலவாதியான பார்சிப், பெருந்தொழிலதிபர் சர் ஹோமி மோடி, பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்நிலையில் பணிபுரிந்த அரசு அதிகாரிகள் பலர், சுதந்திராக் கட்சியின் மையக் குழுவில் இருந்தனர். (அண்மையில் மறைந்தவரும், இந்தியாவின் முன்னணி வலதுசாரி நூல் வெளியீட்டகமான வாய்ஸ் ஆஃப் இந்தியா என்பதை நிறுவியவரும், இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்மீது தீவிர எதிர்ப்புக் காட்டியவருமான சீதாராம் கோயல் என்பவரும் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.)

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment