Wednesday, 14 November 2018

கோண்டு ஓவியம்


Siragu Gond Art1
கோண்டு ஓவியம் என்பது இந்தியப் பழங்குடியினரான கோண்டு மக்கள் (Gondi or Gond) வரையும் ஓர் ஓவிய முறை. இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களது மொழி தெலுங்கு மொழியின் தாக்கம் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கோண்டு பழங்குடியினர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் வாழ்கிறார்கள், மத்தியப்பிரதேசத்தின் அண்டை மாநிலங்களிலும் பரவியுள்ளார்கள். கோண்டு என்பது பச்சைமலை என்ற பொருள் தரும். இவர்கள் மூதாதையர் வழிபாட்டைக் கடைப்பிடிப்பவர்கள், இராவணனை தங்கள் முன்னோர் என்று கருதுபவர்கள். ஆதலால் இராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்வுகள் இவர்களுக்கு ஏற்புடையதன்று.

இவர்கள் இயற்கையை மிகவும் போற்றுபவர் என்பதால் இவர்கள் ஓவியங்களின் கருத்துகள் இயற்கை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். சுவர் ஓவியங்களாகச் செம்மைப்படுத்தப்பட்ட மண்சுவர்களில் பெரும்பான்மையாகவும், சில சமயங்களில் நன்கு மெழுகிய மண் தரைகளிலும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரைவர். அடர்த்தியான தன்மை கொண்ட வண்ணங்களில், குறிப்பாக காவி, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்கள் ஓவியங்களில் இடம் பெறும். படங்களில் காவி சிவப்பு மஞ்சள் பழுப்பு வண்ணங்களின் தாக்கம் அதிகமாகவும், நீலம், பச்சை தேவைக்கேற்பவும், கருப்பு வெள்ளை குறைவாகவும் இருக்கும். ஓவியத்திற்கான நிறத் தேர்வு இயற்கையில் காணப்படும் நிலையைக் காட்டும் வகையிலேயே பெரும்பான்மையாக அமையும். பழங்குடியின் ஓவியக்கலையாக இருந்ததை உலகஅரங்கில் வெளிக்கொணர்ந்தவர் ஜங்கர் சிங் ஷியாம் (Jangarh Singh Shyam, 1962-2001) என்பவர். இவரால் கோண்டு ஓவியங்கள் மண்சுவர்களில் இருந்து சட்டமிடப்பட்ட கேன்வாஸ் துணிகளுக்கு இடம்பெயர்ந்து, புதிய பாணியை ஏற்றுக்கொண்டு உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 13 November 2018

ராஜலட்சுமி


siragu rajalakshmi1
ராஜலட்சுமி முதலும் அல்ல இறுதியும் அல்ல என்பதே இந்தச் சமூக அமைப்பின்  குற்றம். 12 வயது சிறுமியை கழுத்தறுத்து கொல்லத் துணியும் மனம், கவ்வியிருக்கும் சாதி இருளுக்கு சாட்சி; பெற்றத் தாய் முன் அவர் மகளை கழுத்தறுக்கும் இந்த சாதிய ஆணாதிக்க மரபில் என்ன நியாயத்தை இந்தச் சட்டமும் நீதியும் வழங்கிட முடியும்? சட்டங்கள் கடுமையானதாகவே உள்ளன. ஆனால் தண்டனை பல நேரங்களில் ஆதிக்க சாதியினருக்கு வலிக்காமல் இருக்கின்ற காரணத்தால் சட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே நியாயங்களை செப்புகின்றன. இந்த மண்ணில் தேடினாலும் சமூக நீதி கானல் நீர் என்பதை தொடர்ந்து கொண்டிருக்கும் இது போன்ற பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
சிறுமியிடம் பாலியல் வன்முறை, அதை வீட்டில் அந்தக் குழந்தை சொன்னக் காரணத்தால் கழுத்தறுத்து கொலை. வேடிக்கையான சமூக அமைப்பு அல்லவா? ராஜலட்சுமியின் தாய் தன் மகளின் முண்டம் தனியே துடிப்பதை கண்டு விம்மி விம்மி அழுவதைத் தவிர வேறு வழியில்லா நிலை, ஒடுக்கப்படும் மக்களின் நிலையே அது தானே? சாதியை தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு கண்டங்கள் தாண்டும் தண்டங்களுக்கு இவர்களின் பகட்டு சாதி கொலை செய்யத் தூண்டுகிறது என்ற உண்மை உரைக்கப்போவது இல்லை.  இதை சாதிக் கோணத்தில் பார்க்க முடியாது வெறும் சிறுமியை பாலியல் தொல்லை தந்ததாக மட்டுமே பார்க்க இயலும், என அரிதான முத்துகள் உதிர்க்கும் கனவான்கள், அந்த கொலைகாரன் பறத் தேவடியா என ராஜலட்சுமியின் தாயை தள்ளிவிட்டு, மகள் கழுத்தை அறுத்ததை வசதியாக மறந்துவிடுகின்றனர். 21 ஆம் நூற்றாண்டில் தான் தமிழ்நாடு இருக்கின்றதா? பழம் பெறுமை பேசுவது, அதில் சாதியை நிலை நிறுத்துவது, என சாதியம் மீண்டும் தலைதூக்குவது, நாம் 10 நூற்றாண்டுகள் பின்னோக்கி நகர்கிறோம் என்றே பறைசாற்றுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-2/

Sunday, 11 November 2018

படேல் சிலையின் பின்னணியில், பொதுத்துறை நிறுவனங்கள்!


siragu patel1
கடந்தவாரம் குஜராத் மாநிலத்தில், உலகிலேயே மிக உயரமான சிலை, அதாவது 183 மீட்டர் உயரமுள்ள சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தது, நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதற்கான செலவு 3000 கோடி ரூபாய் என்றும் சொல்லப்பட்டது. மேலும் இந்த சிலை சீனாவில் செய்து கொண்டுவரப்பட்டுள்ளது என்ற செய்தியும் நாம் அறிந்ததே. இப்போது நாடு இருக்கும் நிலையில், எதற்கு இவ்வளவு செலவில் ஒரு சிலை என்று மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல் மத்திய அரசின் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை…. வரப்போவதுமில்லை.!
தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால், இந்த சிலைக்கான நிதி என்பது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய தகவல். அது பின் வருமாறு,
1, இந்தியன் எண்ணெய்க் கழகம் – ரூ.900 கோடி
2. ஓஎன்ஜிசி – ரூ. 500 கோடி
3, பாரத் பெட்ரோலியம் – ரூ. 250 கோடி
4. கெயில் நிறுவனம் – ரூ. 250 கோடி
5, பவர் கிரிட் – ரூ. 125 கோடி
6. குஜராத் மினிரல்ஸ்
வளர்ச்சிக்கு கழகம் – ரூ. 100 கோடி
7. என்ஜினியர்ஸ் இந்தியா – ரூ. 50 கோடி
8. பெட்ரோனெட் இந்தியா – ரூ. 50 கோடி
9. பால்மேர் லாரே – ரூ. 50 கோடி

இந்த நிதிக்கு, சமூக பொறுப்புக்கான நிதி என்று பெயரிட்டு நிதி பெற்றிருக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இனியாவது சொல் !! (கவிதை)


siragu iniyaavadhu sol1

சின்னச் சின்ன
சண்டையிட்டு
வாழ்ந்தார், நம்மவர்.
கொடுங்கோலர்
சிலரே,
மண் மழை, தட்பம்
வெப்பம்
ஒத்தியைந்த வளமை
இங்குண்டு.

கனவுத் தேசமிதைக்
காண
வந்தார் அயலவர்.
பூக்குவியலில்
நாகங்கள் புகுந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Friday, 9 November 2018

சத்தியம்


Religious Leader Mahatma Gandhi 1869 - 1948
அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு ஒரு தியாக வரலாறு. அவரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு வேறு யாரின் துணையோ அல்லது வேறு நூல்களின் துணையோ தேவையில்லை. அவரே எழுதிய சத்திய சோதனை போதும். சத்திய சோதனை ஒரு மகத்தான மனிதர் தானே எழுதிய தன் வரலாற்று நூல் மட்டும் அல்ல. இந்தியாவின் வரலாற்றை, சத்தியத்தின் வரலாற்றை, இந்திய மக்களின் எழுச்சியை, இந்தியாவின் ஆன்ம பலத்தை விளக்கும் மிகப்பெரிய ஆவணம். சத்திய உணர்ச்சி பொங்கித் ததும்பும் உன்னத காவியம். அந்தக் காவியத்தின் ஒவ்வொரு எழுத்திலும் சத்தியம் நூறுக்கு நூறு விழுக்காடு சத்தியமாக விளங்குகிறது.
சத்திய சோதனை நூல் இந்திய மக்கள் இல்லம் தோறும் இருக்கவேண்டிய புத்தகம். இந்திய மக்களின் மனங்கள் தோறும் இருக்க வேண்டிய புத்தகம்.

சத்திய சோதனை நூல் முழுவதும் சொல்லப்பட்டிருப்பது சத்தியம் என்ற ஒன்று மட்டுமே. சத்தியம் ஒன்றே அதன் 623 பக்கங்களிலும் நிரம்பிக்கிடக்கிறது. சத்திய சோதனை நூலினை ஆரம்பம் முதல் இறுதி வரை படிக்கலாம். அல்லது இறுதியில் இருந்துத் தொடங்கி ஆரம்பம் வரை படிக்கலாம். ஒரு நாளை ஒரு பக்கம் படிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் படிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வரியேனும் படிக்கலாம். எப்படிப் படித்தாலும் சத்தியம் என்ற அடிநாதத்தின் வெற்றி குறைவில்லாமல் சத்திய சோதனை நூலுக்குள் வெளிப்பட்டு நிற்பதை உணரமுடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 8 November 2018

497 – சட்டப்பிரிவு நீக்கமும் அதன் சமுதாய தாக்கமும்


siragu-section-497
சுமார் 150 ஆண்டுகள் பழமையான 497 சட்டப்பிரிவை நீக்கி சமீபத்தில் உத்தரவிட்டது இந்திய உச்ச நீதிமன்றம். இந்த சட்டத்தின் பயன்பாடு மற்றும் இதன் நீக்கத்தின் விளைப்பாடு பற்றி ஓர் அலசல்..
497 – சட்டப்பிரிவு
இந்த பிரிவின்படி திருமணமான ஒரு ஆண் வேறொருவர் மனைவியுடன் உறவில் ஈடுபட்டால் குற்றம். இதில் ஆண் மட்டுமே குற்றவாளி. அந்தப் பெண்ணின் கணவர் சம்மதத்துடன் நடந்தால் அது குற்றம் இல்லை. இந்த சூழலில் பெண் ஒரு போக பொருளாக பாவிக்கப்படுகிறாள். அதேபோல் திருமணமாகாத பெண்ணுடன் நடந்தால் அதுவும் குற்றம் இல்லை. எந்த சூழலிலும் பெண் குற்றவாளியாக கருத்தப்படமாட்டாள்,  அவளுக்கு எந்த தண்டனையும் கிடையாது. அதேநேரத்தில் அவள் கணவனை எதிர்த்து வழக்கு தொடுக்கவும் முடியாது. இந்த காலகட்டத்தில் இது நிச்சயம் குறைபாடுள்ள ஒரு சட்டப்பிரிவு என்பதில் சந்தேகம் இல்லை.

திருமண உறவைக் காத்ததா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 1 November 2018

மங்கல மரபினரான மருத்துவர் குலமும் அவர்களது மாட்சியும் வீழ்ச்சியும்


நூலும் நூலாசிரியரும்:
siragu mangala samugaththaar1

இன்று பெரும்பாலோர் தங்கள் குலப்பெருமையைப் பேசுவதையும், அனைவருமே தாங்கள் “ஆண்ட குலத்தின் வாரிசுகள்” எனத் தயக்கமின்றிச் சொல்வதையும், அவர்கள் தங்கள் பெருமையை வீதியோர சுவரொட்டி, மேடைப்பேச்சு முழக்கங்கள் முதற்கொண்டு இணையத்தின் வலைப்பூக்கள், முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள் வரை விட்டு வைக்காமல் பரப்புரை செய்வதையும் எதிர்கொள்வது நம்மில் பலருக்கு அன்றாட வாழ்வாகிவிட்டது. தங்கள் சமூக நிலையை உயர்த்த உருவாக்கப்பட்ட நூல்கள் சிலவற்றை பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் ஆய்வு செய்து “தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்” என்ற நூலில் வெளியிட்டுள்ளதைக் குறித்து நாமும் முன்பொரு நூலறிமுகக் கட்டுரையில் பார்த்த நினைவிருக்கலாம். (தமிழகத்துச் சாதி சமத்துவப் போராட்டங்கள் – http://siragu.com/தமிழகத்துச்-சாதி-சமத்துவ/). அவ்வாறாக, நா. வானமாமலை அவர்கள் குறிப்பிடும் நூல்களின் வரிசையில் தோன்றிய மற்றொரு நூலாக, திரு. தங்கம் விசுவநாதன் அவர்கள் எழுதி நந்தினி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாறு” என்ற நூலையும் நாம் கருதலாம். நந்தர் என்ற புனைபெயரில் தங்கம் விசுவநாதன் அவர்கள் மங்கல சமூகத்தார் குறித்து ஆய்வு செய்து வெளியிட்ட நூல்கள் இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளன (எனக்குப் படிக்கக் கிடைத்த நூல், “ஆய்வுநூல்-2″ தொகுதி மட்டுமே என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்).

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.