Tuesday, 18 December 2018

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள்!


Siragu election result1
தற்சமயம் நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும் செய்தியென்னவென்றால், மோடி அலை என்ற ஒரு மாயபிம்பத்தை தோற்றுவித்து, அதன் மூலம் மக்களை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்த பா.ச.க அரசை, ஒரு மதவாத அரசை, சனநாயகத்திற்கு கேடு விளைவிக்க எத்தனிக்கும், ஒரு சர்வாதிகார அரசை, மக்கள் நலனில் சிறிதும் அக்கறைகொள்ளாத ஒரு அரசை, கொதித்தெழுந்து மக்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், மதசார்பற்ற சமூகநீதிக்கு போராடும் சக்திகள் ஒன்றிணைந்து ஒரே குரலாக, மதவாத பா.ச.க-வை எதிர்த்தது தான். மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளும், சனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் ஒன்றிணைந்து போராடுகின்றன என்பதை மக்கள் உணர்ந்ததால் தான், பாசிச பா.ச.க-விற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சி தான் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால், அங்கு சாதி அடிப்படையிலான ரெட்டிகளுக்கும், கம்மாக்களுக்கும் இடையே அதிகாரப்போட்டி வந்ததின் விளைவு, அரசின் மீது அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. அதனை, மிகவும் துணிச்சலாக அணுகுகினார் சந்திரசேகர ராவ். ஆட்சியை களைத்துவிட்டு தேர்தலுக்கு ஆயுத்தமானார். மீண்டும் தன்னுடைய ஆட்சியை மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற்று தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மிசோராமில், காங்கிரசு தன்னுடைய நீண்டகால ஆட்சியை இழந்திருக்கிறது. அம்மாநில கட்சியான தேசிய முன்னணி அரிதி பெரும்பான்மை பெற்று, தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. 5 தேர்தல்களில், இரண்டு மாநிலக் கட்சிகள் வென்றிருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 17 December 2018

நானாகிய நான் (கவிதை)


siragu mounam2

கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
இடையில் கழியும் நிகழ்காலத்தில் நான்!
எனக்கு இன்னமும் எதுவும் அகப்படவில்லை.
மறையாத முகமொன்றின் காட்சிகள்
என் விழித்திரையில் நிலைகொள்ள
சலனமற்று கண்மூடி நடக்கிறேன்.
இனி எவ்வளவு காலம்தான்  தொடரும்
என் பயணம் என்ற விடைதெரியா வினா
என்னில் நீளத்தான் செய்கிறது
என்ன செய்ய ?
வினாவை அழிக்கும் அழிப்பானைக்
கடையில் வாங்கிவிடவேண்டியதுதான்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Friday, 14 December 2018

அண்ணல் அம்பேத்கர்!


siragu ambedkar1
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 63 வது நினைவு நாள். இந்து மத எதிர்ப்பை தன் வாழ்வியலாகவே கொண்டு பார்ப்பனியத்தை, அது ஏற்படுத்திய நான்கு வர்ணங்களை அதன் புரட்டை, பௌத்தம் என்ற பகுத்தறிவு பண்பாட்டை பார்ப்பனர்கள் எப்படி அழித்து ஒழித்தனர் என்பதை மக்களுக்கு தோலுரித்துக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
அண்ணல் ஏற்படுத்திய அமைப்பைப் பற்றி அண்ணல் அவர்களே கூறும்போது,

“நம்முடைய அமைப்பு நமது குறைபாடுகளை மட்டுமே போக்குவதற்கான அமைப்பு அல்ல. மாறாக, அது ஒரு சமூகப் புரட்சியை உருவாகும் நோக்கம் உடையது. அந்த சமூகப் புரட்சியானது, சமூக உரிமைகளைப் பொறுத்தவரையில் மனிதர்களுக்கிடையே எந்தப் பாகுபாடும் காட்டாததாக இருக்கும். அதோடு, வாழ்வின் உச்சபட்ச நிலையை எட்டும் வாய்ப்பை அனைவருக்கும் சமமாக அளிப்பதன் மூலம், சாதி உருவாக்கியுள்ள செயற்கைத் தடைகளை நீக்கக்கூடிய ஒரு புரட்சியாகவும் அது இருக்கும். நமது அமைப்பானது ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் இவற்றிற்குமான அமைப்பே ஆகும். நாம் நமது அமைப்பை அந்த அளவிற்கு அமைதியாகவே கொண்டு செல்ல விழைகிறோம். இருப்பினும் வன்முறையின்றி இருக்க வேண்டும் என்ற எங்கள் உறுதியானது எங்கள் எதிரிகளின் மனப்போக்கைப் பொறுத்தே உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/

Wednesday, 12 December 2018

புற்றுநோயைக் கண்டறியும் விலை குறைந்த, எளிய சோதனை முறை கண்டுபிடிப்பு

Siragu cancer1
புற்றுநோய் செல்லின் டி.என்.ஏ. தங்கத்துடன் பிணைகிறது. இப்பண்பினால் புற்றுநோயைக் கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை ஒன்று உருவாக்கப்படமுடியும் என்று அறியப்பட்டுள்ளது. இந்த வார “நேச்சர் கம்யூனிகேஷன்” (Nature Communications) இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை அறிமுகப்படுத்தும் இந்த புதிய சோதனை முறை, புற்றுநோய் மருத்துவத்துறையில் நல்லதொரு மாற்றம் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.
இந்த மிக எளிய சோதனையைச் செய்ய ஆகும் செலவும் குறைவு, முடிவுகளும் 90% வரை உறுதியான முறையில் அமையும். விரைவில் பத்து நிமிடங்களுக்குள் சோதனையை செய்து முடித்துவிட முடியும். பயாப்சி போன்று நோயாளியின் உடலை ஊடுருவும் முறையும் இதில் கிடையாது. இரத்தப்பரிசோதனை (ஒரு சொட்டு அளவு இரத்தம்) மூலம் சிறிய அளவில் டி.என்.ஏ. மட்டுமே தேவைப்படுகிறது என்பது இந்தச் சோதனை முறையின் சிறப்பு. இந்தச் சோதனையால் புற்றுநோய் இருக்கிறது என்பதைக் கண்டறியமுடியும், ஆனால் எந்த வகைப் புற்றுநோய் என்பதை அறியக் கூடிய திறன் இச்சோதனைக்கு இல்லை.

இச்சோதனை டி.என்.ஏ. மெத்திலேஷன் (methylation) பண்பை அடிப்படையாகக் கொண்டது. டி.என்.ஏ மெத்திலேஷன் என்பது மெத்தில் குரூப் (methyl group) ஒன்று சைட்டோசைன் நியூக்ளியோட்டைடு (cytosine nucleotide) ஒன்றுடன் இணையும் மரபணு அளவில் நிகழும் ஒரு மாற்றம் என்பது சுருக்கமான அறிவியல் விளக்கம். இந்த மரபணு மாற்றங்களே உயிர்கள் எவ்வாறு இயங்கும், அந்த இயக்கத்தை மரபணுக்கள் எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பதன் அடிப்படையும் ஆகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

குமாருக்கு மட்டும் தெரிந்த அவளுடைய கண்ணீர் (சிறுகதை)


siragu small story2
வழக்கமாக நான்கு மணிக்கு படுக்கையிலிருந்து எழும் பழக்கமுடைய குமார் அன்று பொழுது விடிந்ததுகூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். இரவு படுக்கப்போகும் போதே சொல்லி இருந்ததால் அவனை எழுப்பாமல் தன்னுடைய வழக்கமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் விமலா.
வீட்டிற்கு வெளியில் ஏதோ வண்டியின் ஆரன் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன் கதவைத் திறந்தபோது அவனுக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்தவன் ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில் வந்திருந்தான். அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டாலும், எனக்கு நேரமில்லை, பஸ் வந்திடுச்சி. ஏழு ஏழரைக்கெல்லாம் புறப்படும், கிளம்பி வந்து விடுங்க! என்று இருசக்கர வண்டியில் இருந்து இறங்ககூட நேரமில்லாத அவனது நண்பனான சங்கர் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அப்போது அவனது மனைவி விமலா, ‘போகாமல் இருந்துவிடலாம் என்று தானே! இருந்தீங்க, அதனால்தானே என்னை காலையில் எழுப்ப வேண்டாமென்று சொன்னீங்க!’ என்றாள்.

“போம்மா! ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள்தான் விடுமுறை கிடைக்குது. அன்னைக்குன்னுப் பார்த்து இந்தமாதிரி ஏதாவது நிகழ்ச்சி வந்திடுது” என்று அவன் சலிப்போடு சொன்னாலும் அவனது சலிப்பிற்கான காரணம் சோம்பேறித்தனம் அல்ல என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 6 December 2018

துறவி


Siragu Kasturba-Gandhi2
மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்பவரை மகாத்மாவாக பரிணமிக்கச் செய்தவர்களில் மிகப் பெரிய பங்கு அன்னை கஸ்தூரி பாய் அவர்களுக்கு உண்டு. காந்தியடிகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இளம் வயது முதலே கஸ்தூரி பாய் அவர்களுடன் கலந்து பழகிய காரணத்தினால் காந்தியடிகளுக்கு மிகச் சிறந்த துணைவியாக அன்னை கஸ்தூரிபாய் விளங்கினார்.

அன்னை கஸ்தூரிபாய் அவர்களும் காந்தியடிகளுக்கு பல வழிகளில் வழிகாட்டியாக, காந்தியக் கொள்கைகளை ஏற்பவராக சிறந்த சத்யாகிரகியாக விளங்கியனார். இளம் வயதிலேயே திருமணம் ஆன காரணத்தினால் காந்தியடிகள் கஸ்தூரிபாயை தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ள விரும்பினார். கஸ்தூரிபாயை ஆலயத்திற்கு அடிக்கடி போகக் கூடாது, தோழிகளுடன் உரையாடக் கூடாது என்றெல்லாம் காந்தியடிகள் கட்டுப்படுத்தியதுண்டு. இதற்குக் கட்டுப்பட்டும் கட்டுப்பாடாமலும் கஸ்தூரிபாய் நடந்து வந்தார். கட்டுப்பட்டபோது மகிழ்ந்த காந்தியடிகளில் கட்டுப்படாதபோது வருத்தப்படமால் இருக்க இயலவில்லை. தன் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் கட்டுப்பாட்டை மீறும்போது கோபம் வரும் என்பதை அறிந்துகொள்ள இந்த அனுபவங்கள் காந்தியடிகளுக்குக் கைகொடுத்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 5 December 2018

வெளிச்சத்திற்கு வரும் பாலியல் புகார்கள் (#MeToo)


siragu Metoo4
கடந்த 2017 ஆம் ஆண்டு ட்விட்டர் (Twitter) சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்ட #MeToo இயக்கம் இன்று உலகம் முழுதும் பாணி(Trend) ஆகிவிட்டது. #MeToo என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒலிக்கும் சமூகக் குரல்.
திரைத்துறை

ஹாலிவுட்டில் ஆரம்பித்த இக்குரல் இன்று இந்தி மற்றும் தமிழ் திரைத்துறை வரை ஒலித்துக்கொண்டிருந்தது. திரைத்துறையில் இதுபோன்ற அத்துமீறல்கள் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே நடப்பதாக நம்பப்படுகிறது. புகழ் மற்றும் பணம் புரளும் துறை என்பதால் வாய்ப்பு தேடி வரும் பெண்களும் சில ஆண்களும் தெரிந்தே இதில் விழுவதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில், எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறக்கூடாது என்பதில் யாருக்கும் நிச்சயம் மாற்று கருத்து இருக்காது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.