Tuesday, 17 September 2019

பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் …


siragu periyar1

“பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’, ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும்” (பக்கம் – 286); என்று நகைச்சுவையாகத் தனது கருத்தை வலியுறுத்த முனையும் பெரியார், நாம் ஒருவரை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது அவருடைய பணம், படிப்பு, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, திறமை ஆகியவற்றுக்காக அல்ல என்கிறார்.
அப்படியானால் எதற்காக நாம் ஒருவரை நினைவில் நிறுத்துகிறோம்? அதற்குப் பெரியாரே கூறும் விடை, “மனிதர்களாக — மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத்தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆகுங்கள் என்பதற்காகவே யாகும்” என்ற தெளிவான ஒரு வரையறையை வகுக்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 13 September 2019

சங்க இலக்கியங்களில் கடலியல் சமூகம்


siragu kadaliyal2
தமிழர்களின் உள்ளத்து உணர்ச்சிகளையும் வேட்கைகளையும் புலப்படுத்துவதற்கு இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டவை சங்க இலக்கியங்கள். மக்கள் தங்கள் வாழிடங்களை ஐந்து வகை நிலங்களாகப் பாகுபாடு செய்துள்ளனர். வயல், காடு, மலை கடல், மணல்பகுதிகள் என ஐந்தாகப் பிரித்து, தனித்தனிப் பெயரிட்டு அழைத்தனர். தங்கள் வாழிடங்களுக்கேற்ப, அக்காலத்தில் காணப்பட்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள், தொழில், விழாக்கள், சடங்குகள், உணவுமுறை போன்றவற்றை சங்கப்பாடல்களில் பதிவு செய்துள்ளனர். இப்பாடல்களில் மனித சமுதாயத்தின் உயர்ந்த கருத்துக்களையும் வாழ்வியல் விழுமியங்களையும் காணமுடிகிறது. சங்க அகப்பாடல்களில் குறுந்தொகையில் கடலியல் சார்ந்த வரலாற்றுச் செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. குறுந்தொகை நெய்தல் திணைப் பாடல்களில் இடம்பெறும் கடலியல் சமூக வரலாற்றை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

சங்ககால புலவர்கள் 473 பேரில் 205 பேர் குறுந்தொகையிலுள்ள 401 பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களுள் 46 புலவர்கள் குறுந்தொகை நெய்தல் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இந்நூல் 72 நெய்தல் திணைப்பாடல்கள் உள்ளன. இவற்றில் மூன்று பாடல்களை 381, 313, 326 இயற்றிய புலவர்கள் பெயர் தெரியவில்லை. அம்மூவனாரே கடல் சார்ந்த சமூக வரலாற்றை மிகுதியாகப் பத்துப்பாடல்களில் பாடியுள்ளார். அம்மூவனர் கடல் சார்ந்த நிலப்பகுதியின் வரலாறு, அங்கு வாழும் விலங்குகள். பறவைகள், செடி, கொடிகள், தொழில், உணவு முறை, மக்களின் இயல்புகள் மற்றும் தலைவன் தலைவியின் திணை அகஒழுக்கம் குறித்த செய்திகளை மிகுதியாகப் பாடியுள்ளார். சங்க இலக்கியங்களாகத் திகழ்ந்த பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாகும். எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவை புறச் செய்திகளைக் கூறுகின்றன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை , அகநானூறு என்ற ஐந்தும் அகம் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பரிபாடல் அகம் புறம் இரண்டையும் ஒருங்கே உணர்த்தும் நூலாகும். சங்க இலக்கியங்கள் மனித வாழ்வை முதன்மைப்படுத்தி பாடுகின்றன. இயற்கை அதற்கு உறுதுணையாய் இரண்டாம் இடமே பெறுகின்றது. சங்க இலக்கியத்தில் விண்ணைத் தொட்டு நிற்கும் மலைகளையும், நீண்ட கடற்பரப்பையும், வயல்வெளிகளையும், அடர்ந்த காடுகளையும் உணர்ச்சி ததும்ப வலிமைமிக்க கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர். அகப்பாடல்களில் முதற்பொருளையும், கருப்பொருளையும் அறிவியல் பூர்வமாகப் பாடியுள்ளனர். இவை உரிப்பொருளுக்கு பின்னணியாக அமைந்துள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 11 September 2019

பார்ப்பன பெண்களின் முன்னேற்றத்தில் சுயமரியாதை இயக்கம் !


siragu-suyamariyaadhai1
அண்மையில் தோழர் ஓவியா எழுதிய கருஞ்சட்டைப் பெண்கள் என்ற நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் பற்றி பல செய்திகளை சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக தந்தை பெரியார் அவர்களாலும், சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளாலும் பயன் பெற்றோர் பார்ப்பனர் அல்லாத பெண்கள் மட்டுமல்ல பார்ப்பன பெண்களும் என்ற தகவலை குடியரசு ஏட்டில் 1930 இல் வெளிவந்த ஒரு கடிதம் மற்றும் குமரன் இதழில் வெளிவந்த கடிதம் இவற்றை தொகுத்து தரப்பட்டிருந்த செய்தியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பார்ப்பன பெண்கள் என்றாலும் மனுவின் படி அனைத்துப் பெண்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களே!
பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என தெளிவாக கூறுகின்றது.(மனு அத்தியாயம் 9; சுலோகம் 32)

குறிப்பாக விதவைகளின் மறுவாழ்வை வலியுறுத்தி அன்றைய காலக்கட்டங்களில் சுயமரியாதை இயக்கம் சுழன்று பரப்புரை செய்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூட அதனை வலியுறுத்தி பல பாடல்களை இயற்றி உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 9 September 2019

இனியது கேட்கின்… இனிது இனிது இனியவை நாற்பது


siragu inidhu inidhu1
 ‘நானாற்பது’ என அறியப்படும், பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ‘நாற்பது’ எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களுள் இரண்டாவது நூல், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எழுதிய ‘இனியவை நாற்பது’ என்ற நூல். ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு ‘நன்மை தருவனவற்றை’ அல்லது ‘இன்பம் தருவனவற்றை’, ‘இனியவை’ எனக் கூறும் 40 பாடல்கள் கொண்ட தொகுதி என்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது. ‘இனிது நாற்பது’, ‘இனியது நாற்பது’, ‘இனிய நாற்பது’ என்ற பெயர்களும் இந்த நூலையே குறிக்கும்.

இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்துப் பாடல் மும்மூர்த்திகளான சிவன், திருமால், பிரம்மா ஆகியோரை வணங்குதல் இனிது எனக் கூறுகிறது. பிரம்மாவைக் குறித்துக் குறிப்பிடுவதாலும், இன்னா நாற்பது கருத்துகளினை அடியொட்டி எழுதப்பட்டுள்ள கருத்துகளாலும் இந்த நூல் இன்னா நாற்பது நூலுக்குப் பிறகு தோன்றியது என்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தது எனவும் கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 5 September 2019

செம்மொழி இலக்கியங்களில் உழவு


siragu ulavu2
ஆடை இல்லாமல் மனிதன் வாழ்ந்தது முதல், அறிவியல் கல்வி செழித்தோங்கும் இந்த விஞ்ஞானக் காலம் வரை மனிதன் உணவைத்தேடி அலைந்த வண்ணமேயிருக்கிறான். செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிற மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட நவீன எந்திரங்களால் மண்ணிலே விதைக்காமல் உணவைச் சுயமாகத் தரமுடியாது.
கடவுளை வேண்டுகிற அடியார்கள்கூட உணவுக்காகப் பிரார்த்திக்கின்றனர். திருமங்கை ஆழ்வார்,
“கூறைசோறு இவைதந்து எனக்கு அருளி
அடியேனைப் பேணி ஆண்டுகொள் எந்தாய்”
உணவும் இருப்பிடம் தந்து என்னை ஆட்கொள் என்று வேண்டுகிறார்.
சங்க இலக்கியத்தில் பசித்த வறியோருக்கு உணவு அளித்த மனிதனை ‘பசிப்பிணி மருத்துவன்’ எனப் புகழ்ந்துள்ளனர். இதன் மூலம் பசிபோக்குபவன் ஒரு மருத்துவன் என்பதை இந்த உலகத்துக்கே தந்தவர்கள் சங்கத்தமிழர், உணவின் முக்கியம் அறிந்துதான் திருவள்ளுவர் “உழவு” என்ற தலைப்பில் தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழுந்தும் உழவே தலை’. (1031)

பலதொழில்களைச் செய்து சுழன்றாலும் இறுதியில் ஏர்த்தொழிலின் பின்னாலேயே இந்த உலகம் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்பமடைந்தாலும் உழவே தலையானது என்று சொல்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 4 September 2019

காஷ்மீர்-370 பிரிவு நீக்கம் ஒரு பிரச்சினையே அல்ல?


siragu-pirivu-370-2
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்திய அரசு அண்மையில் சட்டம் பிறப்பித்தது. இதற்கு சில எதிர்க்கட்சிகள் உட்பட சீனாவும் பாகிஸ்தானும் கடும் அதிருப்தி தெரிவித்தன. இக்காஷ்மீர் விவகாரம் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்தது. இது உண்மையிலேயே ஒரு பிரச்சினையா?

1947-ல் சுதந்திரம் அடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவை எல்லைகளாகக் கொண்டு காஷ்மீர் தனி நாடு உதயமானது. அதுவரை எந்த சர்ச்சையும் இல்லை. காஷ்மீரில் முஸ்லீம்கள் அதிகம் இருந்ததால், தன்னுடன் இணைத்துக்கொள்ள பாகிஸ்தான் துடித்தது. இதுவே சர்ச்சையின் முதல் காரணி.இராணுவ உதவியுடன் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து சுமார் 35% நிலப்பரப்பை ஆக்கிரமித்தது. இதனால் அதிர்ந்து போன காஷ்மீரை ஆண்ட இந்து மன்னர் இந்தியாவுடன் இணைத்தார். இருந்தாலும் முறையாக மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும், சர்வதேச விதிமுறைகளை மதிப்பதற்காகவும், ஒரு தற்காலிக கருவியாக 370 சட்டப்பிரிவு 1949-ல் அமல்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 3 September 2019

மாசுக் கட்டுப்பாடு நிறுத்தி வைப்பு

siragu maasu kattuppaadu3
நீடித்த நிலையான வளர்ச்சிக்கான உலக நிறுவனமும், ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழுவும் (International Institute for Sustainable Development and Council for Energy, Environment and Water)இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களினால் ஏற்படும் மாசுகள் பற்றி ஆய்வு செய்து ஓர் அறிக்கையை 6.8.2019 அன்று புதுதில்லியில் வெளியிட்டது.
அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டால் கந்தக டையாக்சைட் (Sulphur dioxide), நைட்ரஸ் ஆக்சைட் (Nitrous oxide) ஆகிய காற்று மாசுகள் வெளிவருகின்றன. இந்த மாசுகளை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால் மக்களுக்கு நுரையீரல் நோய் ஏற்பட்டு 3,00,000 முதல் 3,20,000 பேர்கள் வரை அகால மரணம் அடைவார்கள் என்றும், மேலும் இந்த நோய்களுக்கு சிகிச்சை செய்யும் செலவுரூ.5.1 கோடி ஆகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் “பதறிப்போன” இந்திய அரசு உடனே இம்மாசுகளைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்று 2017ஆம்ஆண்டு ஒரு சட்டத்தை இயற்றியது. இச்சட்டப்படி அனல் மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் 2017ஆம்ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பாகவே முறையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாசுகள் வெளியாவதைத் தடுக்க வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.