Tuesday, 14 January 2020

அன்னதானம் என்னும் பண்பாடு


siragu annathanam1
பாரதநாடு பழம்பெருமை வாய்ந்த நாடு, பல்வேறு சமயங்களைக் கொண்டிருக்கின்ற நாடு ஒவ்வொரு சமயத்தரும் தங்களுக்கென்று தனிக்கோட்பாட்டை, தத்துவத்தை வகுத்துக் கொண்டனர். சமயங்களும், கொள்கைகளும் பலவாறாக இருப்பினும் அடிப்படையில் அவையனைத்தும் ஒன்றுபட்டே நிற்கின்றன.
சமயங்கள் மக்களை நல்வழிப்படுத்தி அறவழியில் அவர்களைச் செலுத்துவதற்கும், நல்வழிப்படுத்துவதற்கும் ஒரு காரணியாக விளங்குகின்றன. கோவில்கள் பண்பாட்டுக்களங்களாகவும் அமைந்திருக்கின்றன. தானங்கள் செய்யும் இடமாகவும் கோயில்கள் விளங்குகின்றன. அன்னதானம், ஆடைதானம், கோதானம், கண்தானம் போன்ற பல தானங்கள் செய்வதற்கான இடமாகக் கோயில்கள் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
அன்னம் பாலித்தல் என்ற அன்னதானம் தமிழர் பண்பாட்டின் முக்கியக் கூறாக விளங்குகின்றது. மணிமேகலை ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கின்றது. பெரியபுராணம் அடியார்க்கு உணவளித்தலை தலையாய அறமாகக் கொள்கின்றது. இவ்வகையில் அன்னதானம் மிகச் சிறந்த தமிழர் கோட்பாடாக விளங்குகின்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் புதுவயலுக்கு அருகில் உள்ள சாக்கோட்டையில் வீற்றிருக்கின்ற சிவதலத்தைப் பற்றிப் பாடப்பெற்ற புராணம் வீரவனப்புராணம் ஆகும்.

Monday, 13 January 2020

சிறு காப்பியத் தமிழ்


siragu ilakkiyam1
தமிழ்க் காப்பியங்களை, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என்று இரு நிலைகளில் பிரிக்கமுடிகின்றது. இவற்றில் பெருங்காப்பியங்கள் பெருங்காப்பிய இலக்கணம் பொருந்தி நிற்பனவாகும். இவற்றில் சற்று குறைந்தவை சிறு காப்பியங்கள் ஆகின்றன. இச்சிறு காப்பியங்களின் கதை நெறியும் சற்று முரண்பாடு உடைய காரணத்தினாலும் இவை சிறு காப்பியங்கள் என்று வகைமை செய்யப்பட்டுள்ளன.
ஐஞ்சிறு காப்பியங்களின் கதை பொதுமரபு, ஒழுங்கு சார்ந்தனவாக இல்லை. உதயண குமார காவியம் பெருங்கதை என்ற நூலைத் தழுவிய கதை அமைப்பினை உடையது. இதனுள் இரு கதைத்தலைவர்கள் அமைகின்றனர். நாக குமார காவியம் என்பதும் நாக பஞ்சமி என்ற வழிபாட்டு முறையை முன் நிறுத்துவது. சமண சமயத்தாருக்குமட்டும் இது சிறப்பானது என்ற நிலையில் இதுவும் சிறு காப்பியமாக்கப்பட்டுவிட்டது. சூளாமணியும் இரு கதைத் தலைவர்களை உடையது. நீலகேசி என்பது குண்டலகேசியின் மறுப்பு நூல். யசோதர காவியம் நம்ப முடியாத அளவில் உயிர் பிறப்பு, மறு பிறவி போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது. மேலும் இக்காப்பியத்தின் கதை சற்று முரண்போக்கு உடையது. கணவனை விட்டுவிட்டு, யானைப்பாகனுடன் நேசம் கொள்ளும் மனைவி பற்றிய கதை இதுவாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 9 January 2020

ஆசிய பண்பாட்டிற்குச் சமய இலக்கியங்கள் அளித்த சமய நடைமுறைகள் மற்றும் பண்பாட்டுக் கொடைகள்


siragu pakthi ilakkiyam1
ஒரு நாட்டின் சமுதாயச் சூழல், அரசியல் சூழல், பொருளாதாரச் சூழல், புலவர்களின் புலமைத்திறன், புலமை வேட்கை, மக்களின் மனப்போக்கு, மக்களின் சுவை உணர்வு முதலிய பல்வேறு காரணிகளால் காலந்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வகையில் தமிழ் மொழியிலும் பல்வேறு இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றே பக்திஇலக்கிய வகை.
பண்பாடு
மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மனிதர்கள் பகுத்தறியும் திறனைப் பெற்றுள்ளமை ஆகும். இத்திறனால் குறியீடுகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் இயல்வதுடன் பண்பாட்டையும் உருவாக்கவும் பயன்படுத்தவும் இயல்வதுடன் பண்பாட்டையும் உருவாக்குகின்றனர். மக்களின்  வரலாற்றில் அவர்கள் படைத்துக்கொண்ட கருவிகள், சமூகப் பழக்கங்கள், வழக்கங்கள் நம்பிக்கைகள் ஒழுக்கங்கள், கொள்கைகள் முதலியவற்றின்  சாராம்சங்களைப் பண்பாடு எனப் பொதுவாக கூறலாம்.

சமுதாயத்திலிருந்து பெறப்படும், அடையாளங்கள், மதிப்புகள், செயல்பாடுகள் ஆகியவற்றைக் கடத்தக் கூடியதும் பண்பாடு எனப்படும் என்று, தியோபார்கேப்லோ கூறுகின்றார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 8 January 2020

நாமும் பார்ப்போம்


siragu naamum paarppom1
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் நோக்கத்தில் கான்பூர் ஐ.ஐ.டி வளாகத்தில் ஃபைஸின் “ஹம் தேக்கேங்கே” பாடலைப் பாடினர்.  இப்பாடல் இந்து மத உணர்வுகளை அவமதிப்பதாகச் சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. இப்பாடலை எழுதிய ஃபைஸ் இந்திய மாணவர்களும் அரசுக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இப்பாடலைப் பாட விரும்புவார்கள், அப்படியும் ஒரு நிலை வரலாம் என நினைத்திருக்க மாட்டார். இந்து சமயம் குறித்தே அப்பாடலை எழுதுகையில் எண்ணியிருக்கவும் மாட்டார் என்பதையும் பாடலைப் படித்த பின்னர் உறுதியாகக் கூறலாம். அவர் அன்று எழுதிய சூழ்நிலையே வேறு, இந்தியாவில் இன்றைய சூழ்நிலையும் வேறு.

1980களில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக் நடத்திய கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் போராடி புரட்சிப் பாடல்கள் எழுதியவர் உருது மொழிக் கவிஞரான ‘ஃபைஸ் முஹமது ஃபைஸ்’  (Faiz Ahmed Faiz). இடதுசாரி கொள்கைப் பாதையில் பயணித்த இவர் தவறான வழியில் சென்ற அரசை எதிர்த்துப் புரட்சிப்பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றதுடன் அதனால் சிறையும் பட்டார், கலகக்காரர் என்று அடையாளமும் காணப்பட்டார். இலக்கியத்துக்கான நோபல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. கவிஞர் ஃபைஸ் முஹமது ஃபைஸ் அவர்களின் கவிதைகளின் ஆதரவாளர் மறைந்த புகழ்பெற்ற பாகிஸ்தானியப் பாடகர், கஜல் அரசி எனப் பாராட்டப்படும் ‘இக்பால் பானோ’ (Iqbal Bano 1935 – 2009, இவர் இக்பால் பானு எனவும் அறியப்படுவார்). இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்து பாகிஸ்தானியரைக் கரம் பிடித்து அந்நாட்டில் குடியேறியவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சமத்துவ நீதி உலகில் உள்ளதா!?


siragu samaththuva needhi1
வில்லி சிம்மோன்ஸ் (Willie Simmons) அலபாமாவைச் சேர்ந்த 62 வயது கறுப்பினத்தவர், $9 திருடியதற்காக 38 ஆண்டுகள் சிறையில் இருக்கின்றார். அலபாமாவின் habitual Offender Law வின் படி (அதற்கு முன் 3 முறை அவர் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளார்) 1982 ஆம் ஆண்டு அவருக்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஷெல்புரனே (Shelburne) என்ற ஊடகவியலாளர் அவரோடு பேசிய போது சிம்மோன்ஸ் தன்னைப் பற்றி சொன்ன விவரங்கள்:

சிம்மோன்ஸ் இராணுவத்தில் வேலை செய்து வந்த போது போதை பொருளுக்கு அடிமையாகி ஒரு சண்டையில் ஒருவரின் 9$ திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. சிம்மோன்ஸ் குற்றத்தை மறுக்கவில்லை. அந்த சண்டையின் போது தான் போதை மருந்தின் தாக்கத்தில் இருந்தததையும் குற்றத்தையும் அவர் ஒப்புக் கொள்கின்றார். தன்னுடைய சகோதரி 2005 இல் மறைந்தபின் தன்னை பார்க்க யாரும் வருவதில்லை என்றும் தான் ஒரு தனிமையான மனநிலையில் இருப்பதாகவும் அவர் பதிவு செய்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 2 January 2020

சாதி எனும் மாயை (சிறுகதை)


siragu saadhi1
“அம்மா… வந்துட்டீங்களா, என்ன ஐயா, பாப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று கேட்டபடியே வள்ளி வீட்டினுள் நுழைந்தாள். அவள் வந்ததும், கேட்டதும் எதுவுமே காதில் விழவில்லை சுந்தரத்திற்கு. சிந்தனை முழுவதும் மகள் பூங்குழலி பற்றித்தான் ஓடிக்கொண்டிருந்தது.
அடுப்பாங்கரை உள்ளே நுழைந்த வள்ளி, அங்கே புளி கரைத்தபடியே ஏதோ யோசனையில் இருந்த பாரதியைப் பார்த்து, “அம்மா… பாப்பாவுக்கு உடம்பு தேவலையா?” என்று கேட்டாள். பதில் வராததால், மீண்டும், “அம்மா…” என்று கூப்பிட்டாள்.
உடனே, சுயநினைவிற்கு வந்தவளாய், “வா.. வள்ளி, நல்லா இருக்கியா? குழலிக்கு தான் உடம்பு சரியில்லை, அதான் உங்கிட்ட கூட சொல்லமுடியாம போயிட்டோம்..” என்றாள்.

“எனக்கு என்னமா, நல்லா தான் இருக்கேன். பரவாயில்ல அம்மா, அதனால் என்ன, நேத்து வந்து பாத்தா வீடு பூட்டியிருந்தது, அதான், பக்கத்துல கௌரி அம்மாவை கேட்டேன். அவங்க தான், பாப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்தது, அதனால் அவசரமா போயிட்டீங்கனு சொன்னாங்கமா….
என்னாச்சு மா திடீர்னு, இப்ப உடம்பு எப்படி இருக்கு, அழைச்சுக்கிட்டு வந்திட்டிங்களா.. பாப்பாவ?” என்று கேட்டாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 1 January 2020

அந்தக்கரண சுத்தமே ஆசையை நீக்கும்


Siragu pengalukkaana3
ஆசையைப் போல இன்பமுடையதும் எதுவுமில்லை, துன்பம் தருவதும் எதுவுமில்லை. ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே என்பது சரிதான். அலை அலையாக ஆசைகள் நமக்குள் வந்து சேர்கின்றன. அந்த ஆசைகள் நிறைவேறும் வரை அலை அலையாக நம் மனதை அலைக்கழித்து வருகிறது. அதனை அடைந்தால்தான் வாழவே முடியும் என்றாக்கி விடுகிறது. ஆசை நல்லதா கெட்டதா என்று விவாதமே செய்யலாம்.
ஆசை இல்லை என்றால் மனிதன் உயர இயலாது. வீடு வாங்க வேண்டும், நிலம், காடு, கரை, கார், வாகனம், நகை என்று எல்லாம் வாங்க வேண்டும் என்று மனதிற்குள் ஏற்படும் தூண்டுதல்கள் அந்த அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியைத் தேட வைக்கிறது. மனிதனை ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு நகர்த்துவது ஆசை.

இந்த ஆசை நியாயமானதாக இருக்கும் வரை நல்லது. நியாயமில்லாது போகின்ற நிலையில் கெட்டதாகிவிடும். சத்தியமாக உழைத்து பெற்ற பணத்தில் வீடு, நிலம், காடு, கரை வாங்கலாம். மாற்றுவழியில் வந்த பணத்தில் வாங்கினால் துன்பம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சத்தியமான வழியில் சத்தியமான ஆசைகள் நிறைவேறும். நலம் தரும். எனவே ஆசை நல்லது தான், அது சத்தியமான நிலையில் மனிதனை வழி நடத்தும் வரை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.