Thursday, 29 November 2018

ஞானக் கூத்தனின் அறைகூவல்


iragu gnanakooththan1
1930களில் தொடங்கிய புதுக்கவிதையின் தோற்றம் மெல்ல மெல்ல படிநிலையான வளர்ச்சியைப் பெற்ற புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைத் தொடர்ந்து 1950களில் இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் அளித்து வளர்த்தெடுக்கும் பொறுப்பு மணிக்கொடி முன்வந்து ஏற்றுக் கொண்டிருந்தது.

மணிக்கொடி இதழுக்குப் பின்னர் தொடங்கப்பட்ட தீபம், சங்கு, எழுத்து, கசடதபற, ழ போன்ற இதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தோன்றி புதுக்கவிதையை சீரிய நோக்கோடு வளர்த்தெடுக்கத் தவறவில்லை. எனினும் 1960களில் அவ்வப்போது தேக்கம் அடைவது போன்று தென்பட்டு மீண்டும் அந்நிலை ஏற்படாதவாறு அப்போதைய எழுத்து இதழ் தீவிரமான புதுக்கவிதை எது என்பதில் விவாதம் செய்து அதன் விளைவாக ஏற்பட்ட கருத்துரைகள், அது தொடர்பான விமர்சனங்கள் புதிய வளம் சேர்க்க எல்லா விதமான முயற்சிகளையும் எடுத்தன. அதன் விளைவாய் சில சீர்கேடுகள் புதுக்கவிதையில் ஓரளவு தவிர்க்கப்பட்டது. தடுக்கப்பட்டது என்று கூறலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 27 November 2018

“விழித்தெழுக என் தேசம்” – நூல் மதிப்புரை


siragu vizhithezhuka en desam1
‘விழித்தெழுக என் தேசம்’ என்ற உணர்ச்சிகரமான முழக்கத்தைத் தலைப்பாகக் கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்டக் கவிதைகளையும், தனது எண்ணத்தில் தோன்றிய கருத்துகளின் வெளிப்பாடாக எழுதப்பட்ட கவிதைகளையும் ஒரு கவிதைத் தொகுப்பாக அளித்துள்ளார் கவிஞர் சி. ஜெயபாரதன் அவர்கள். இவர் அணுமின்சக்தித் துறையில் பணியாற்றிய பொறியியல் வல்லுநர் என்பதும், வானவியல், அண்டவெளிப் பயணக்கட்டுரைகள், அறிவியல் அறிஞர்கள் குறித்து அதிகம் எழுதும் அறிவியலாளர் என்பதுடன் அவர் கவிதைகள், நாடகங்கள், கதைகள் எனப் பிற படைப்புகளையும் வழங்கியவர் என்பதை இந்நாளில் பலர் அறிவர். மேலும் இவர் அறிவியல் கருத்துக்களை கவிதை வழி காட்டப்படுவதில் முன்னணியில் இருக்கும் அறிவியல் கவிஞரும் ஆவார். ஏன்! சொல்லப்போனால், திரு. ஜெயபாரதன் அவரது அறிவியல் கட்டுரைகளையே கவிதைகளுடன்தான் தொடக்குவார்.

இக்கவிதை நூலில் படிக்கும் முன்னரே இதில் இடம் பெற்றுள்ள கவிதைகள் சிலவற்றை அவை இணைய இதழ்களில் வெளியானபொழுதே நான் படித்த நினைவும் உண்டு. அவரது பிற அறிவியல் நூல்களில் அறிவியல் கவிதைகளை படித்த என் எதிர்பார்ப்பில், நான் எதிர்பார்த்த அளவில் அறிவியல் குறித்த கவிதைகள் இந்நூலில் இடம் பெறவில்லை என்பதில் எனக்குச் சற்று ஏமாற்றமே. திரு. ஜெயபாரதனின் படைப்புகளைக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து படித்து வந்திருக்கும் நான் அவரது கருத்துகளும் சிந்தனையின் வெளிப்பாடும் பெரும்பாலும் அறிவியல், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் அக்கறை, சமூக அக்கறை, பெண்ணியம், சமகால நிகழ்வுகள் குறித்த உணர்வுகளின் வெளிப்பாடு, வாழ்வு குறித்த தத்துவக் கருத்துகள், வாழுமிடம், தாய்நாடு, தாய்மொழி மீது கொண்ட பற்று ஆகியவற்றைச் சுற்றிச் சுழன்று வருவதையே கவனித்து வந்துள்ளேன். இந்நூலில் உள்ள கவிதைகளின் தொகுப்பும் அச்சிந்தனைகளின் பல பரிமாணங்களைத்தான் தொகுத்து வழங்கியுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மீண்டும் ஆணவக்கொலை?!


siragu meendum aanavakolai1
நத்திஷ் – சுவாதி மீண்டும் தமிழ் நாட்டில் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கும் இணையர்கள். சுவாதி வயிற்றில் மூன்று மாதம் கருவை சுமந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தும் அவரைக் கொன்று, முகத்தை சிதைத்து அவர் அடிவயிற்றைக் கிழித்து கருவை சிதைத்துள்ளனர். இப்படி கொடூரமான கொலையைச் செய்தவர் அந்தப் பெண்ணின் தந்தையும், பெரியப்பாவும்.
சாதி எவ்வளவு மூர்க்கமான மனிதர்களை உருவாக்குகின்றது என்பதற்கு இந்த கொலையே சாட்சி.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 81 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏன் இந்த ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன என்று எண்ணிப்பார்த்தால் இங்கு மனித மனங்களில் உள்ள உளவியல் சிக்கல்கள் புரியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 22 November 2018

காணாமல் போன தலைவன் (சிறுகதை)


siragu kaanaamal pona1
அன்று அந்த ஊரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பித்தது.  பொதுவாக மழைக்கு முன்பு லேசாக விழும் ஐஸ் கட்டிகள் அன்று அதிகமாக விழ ஆரம்பித்தன. அப்போது சூரியன் பல்லிளித்துக் கொண்டிருந்தான். பகல் வேளையில் சூரியக் கதிர்கள் பிரகாசமாக இருக்கும் நேரத்தில் பெய்த அதிசயமான மழையை அவன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் பெயர் பாலசுப்பிரமணியன். அவனை எல்லோரும் பாலு என்றுதான் அழைப்பார்கள். அவனுக்கும் அப்பெயர்தான் பிடித்திருந்தது. விசித்திரமாகப் பெய்யும் அப்படிப்பட்ட மழையை அவன் அதற்கு முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறான். அப்போது அவனுக்கு வயது ஐந்து. சிறுவனாக இருந்ததால், அப்போது பார்த்த காட்சிகள் அவன் நினைவில் ஆழமாகப் பதிந்திருந்தன.
அப்போது,“காட்டில் குள்ளநரிக்குக் கல்யாணம் நடக்கும் அதான் இப்படி மழை பெய்கிறது” என்ற செய்தி அவ்வூரில் இருந்த சிறுவர்கள் மத்தியில் பிரபலமாகப் பரவியிருந்தது.

“வானில் தேவர்களுக்குக் கல்யாணம் நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கல்யாணத்தில் கலந்துகொண்ட தேவர்கள் மணமக்களின் மேல் அர்ச்சனை தூவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தூவும்  மலர்கள்தான் இவ்வாறு வந்து விழுகின்றன” என்றும் சிலர் கூறினார்கள். அதையெல்லாம் உண்மை என்று நம்பினான் அவன். அவனுக்கு அப்போது அறியாத வயசு அதனால். ஆனால் இப்போது அப்படி இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 21 November 2018

உலகத்திலேயே உயரமான சிலை


siragu ulagaththile1
மக்கள் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிப்பேசாமல் வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசவைப்பதன்மூலம், தங்கள் மக்கள் விரோதத் தன்மையையும், திறமை இன்மையையும் மறைக்க ஆதிக்கவாதிகள் முயல்வது ஒன்றும் புதிது அல்ல. சமூக இயக்கத்தைச் சரியாக வழிநடத்தும் திறமை இல்லாத இவர்கள் திசைதிருப்பும் கலையில் மிகுந்த திறமை உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் இந்திய பிரதமர் மோடியும், அவரது கூட்டாளிகளும் ஒப்பு உவமை இல்லாதவர்களாகத் திகழ்கிறார்கள்.

கருப்புப்பணத்தை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு, ரூ.500, ரூ1,000பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார்கள். ஆனால் கருப்புப்பணம் ஒழியவே இல்லை என்று ரிசர்வ்வங்கி அறிவித்துவிட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர். வரிவிதிப்பைச் சீரமைப்பதாகச் சொல்லிக்கொண்டு, பொருள் மற்றும் சேவைவரியை (ஜி.எஸ்.டி) விதித்தார்கள். இதில் ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் அழிந்துபோயின.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 20 November 2018

தொடரும் பாலியல் வன்புணர்வு கொலைகளும், அரசின் அலட்சியமும்!


Siragu thodarum paaliyal vanpunarvu1
நம் மாநிலத்தில் தற்போது நடந்துவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன என்பது மிகவும் வருந்தத்தக்க, வேதனைப்படவேண்டிய, வெட்கப்படவேண்டிய ஒரு விசயமாக இருக்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு, பாலியல் வற்புறுத்தலுக்கு, கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றால், (எத்தனை சாதனைகளை நாம் சாதித்தாலும்) இந்த சமூகம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது நம் முன் வைக்கப்படும் மிகப் பெரிய கேள்விக்குறி. உலகளவில் இது, நம் ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமான மிகப்பெரிய இழிவாகப் பார்க்கப்படும். பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி வாழ்ந்தால் தான் அது ஒரு சுதந்திரமான வளர்ச்சியை நோக்கிய சமுதாயமாக இருக்க முடியும்.
பெண்களுக்கு இது மாதிரி கொடுமைகள் நடக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நம் பெண் குழந்தைகளுக்கு நடக்கிறதென்றால், இந்த அரசாங்கம் இதனை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்பது இன்றியமையாதது அல்லவா.!

ஆனால், தண்டிக்க வேண்டிய அரசாங்கமே, இம்மாதிரி கொலைகளை செய்யும் குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறது, காலம் தாழ்த்துகிறது என்றால், குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்துவிடும் என்ற அபாயம் அவர்களுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழத்தானே செய்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 14 November 2018

கோண்டு ஓவியம்


Siragu Gond Art1
கோண்டு ஓவியம் என்பது இந்தியப் பழங்குடியினரான கோண்டு மக்கள் (Gondi or Gond) வரையும் ஓர் ஓவிய முறை. இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களது மொழி தெலுங்கு மொழியின் தாக்கம் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கோண்டு பழங்குடியினர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் வாழ்கிறார்கள், மத்தியப்பிரதேசத்தின் அண்டை மாநிலங்களிலும் பரவியுள்ளார்கள். கோண்டு என்பது பச்சைமலை என்ற பொருள் தரும். இவர்கள் மூதாதையர் வழிபாட்டைக் கடைப்பிடிப்பவர்கள், இராவணனை தங்கள் முன்னோர் என்று கருதுபவர்கள். ஆதலால் இராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்வுகள் இவர்களுக்கு ஏற்புடையதன்று.

இவர்கள் இயற்கையை மிகவும் போற்றுபவர் என்பதால் இவர்கள் ஓவியங்களின் கருத்துகள் இயற்கை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். சுவர் ஓவியங்களாகச் செம்மைப்படுத்தப்பட்ட மண்சுவர்களில் பெரும்பான்மையாகவும், சில சமயங்களில் நன்கு மெழுகிய மண் தரைகளிலும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரைவர். அடர்த்தியான தன்மை கொண்ட வண்ணங்களில், குறிப்பாக காவி, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்கள் ஓவியங்களில் இடம் பெறும். படங்களில் காவி சிவப்பு மஞ்சள் பழுப்பு வண்ணங்களின் தாக்கம் அதிகமாகவும், நீலம், பச்சை தேவைக்கேற்பவும், கருப்பு வெள்ளை குறைவாகவும் இருக்கும். ஓவியத்திற்கான நிறத் தேர்வு இயற்கையில் காணப்படும் நிலையைக் காட்டும் வகையிலேயே பெரும்பான்மையாக அமையும். பழங்குடியின் ஓவியக்கலையாக இருந்ததை உலகஅரங்கில் வெளிக்கொணர்ந்தவர் ஜங்கர் சிங் ஷியாம் (Jangarh Singh Shyam, 1962-2001) என்பவர். இவரால் கோண்டு ஓவியங்கள் மண்சுவர்களில் இருந்து சட்டமிடப்பட்ட கேன்வாஸ் துணிகளுக்கு இடம்பெயர்ந்து, புதிய பாணியை ஏற்றுக்கொண்டு உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.