Wednesday, 29 May 2019

தொகுப்பு கவிதை (குளவிக் கூடு, ஒளிப்பிழம்பான பாதை, ஓய்வு, அச்சு)

குளவிக் கூடு


siragu kulavi koodu1
கூடு கட்டிய குளவியின்
‘ஈ’ என்ற ஓசை காதுக்குள் புகுந்து கொள்கிறது.
அது, தான் கட்டிய கூட்டிற்குள் நுழைய
ஏன் என்னிடம் அனுமதி கேட்கிறது?

கஜா புயல் தாக்கிய போது எங்கே சென்றது
அந்தக் குளவி?
எங்கே ஒளிந்திருக்கும்?
அதன் பிள்ளைகள் என்ன ஆனது?
என்ற கேள்விகள்
அதனுடைய ‘ஈ’ ஒலியோடு துளைத்துக் கொண்டிருந்தது.



மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 28 May 2019

ராகுல சாங்கிருத்தியாயன் பார்வையில் ‘ஆரியர் வருகை’

siragu volka-to-ganges cover
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற தலைப்பில், ராகுல சாங்கிருத்யாயனால் இந்தியில் ‘வால்கா சே கங்கா’ என்று எழுதப்பட்ட இந்த நூல் மானுடவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியம் என்ற தகுதி பெற்றது. இந்த வரலாற்றுப் புனைவில் 20 கதைகளில் மனித சமுதாயத்தின் வளர்ச்சி தொகுக்கப்படுகிறது. இந்நூல் 1943 இல் வெளியிடப்பட்டு பின்னர் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ராகுல சாங்கிருத்தியாயன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து எழுதியதற்காக மூன்றாண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சிறையில் உருவான நூல் இது. இந்நூலை எழுதியதற்காக சமயப் பழமைவாதிகளால் வசை பாடப்பட்டார். இருப்பினும் மறு ஆண்டே அடுத்த பதிப்பு வெளிவரும் அளவிற்கு நூல் விற்பனையானது. தமிழில் கண. முத்தையா மொழிபெயர்ப்பில் இந்நூல் முன்னரே 1949ல் வெளிவந்து முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புடையது. நூலின் மொழிபெயர்ப்பும் கண. முத்தையா வால் சிறையில்தான் எழுதப்பட்டது. கால்நூற்றாண்டிற்கும் மேல் இந்திப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் என். ஸ்ரீதரன் சமீபத்தில் இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். அது 2016 இல் கவிதா பப்ளிகேசஷன்ஸ் வெளியீட்டில் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. என். ஸ்ரீதரன் பல குறிப்புகளையும் தேடிக்கொடுத்து வாசிப்பை விரிவாக்க உதவியுள்ளார்.

ராகுல சாங்கிருத்தியாயன், கேதார்நாத் பாண்டே என்ற பெயருடன் உத்தரப்பிரதேச குக்கிராமம் ஒன்றில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். துவக்கப்பள்ளி வரை மட்டுமே முறையான கல்வி கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிட்’ என்ற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழும் அறிந்து கொண்டார். ராகுல சாங்கிருத்தியாயன் இந்துவாகப் பிறந்து இந்து சமயத் தத்துவங்களை அறிந்தவர். ஆரிய சமாஜத்தின் சுவாமி தயானந்த சரஸ்வதியின் மேல் பற்று கொண்டவர். இலங்கையில் புத்த மதத்தைத் தழுவி புத்த பிக்குவாகவும் தீட்சை பெற்று ராகுல சாங்கிருத்தியாயன் என்று மாறியவர். பெளத்த தத்துவங்களிலும் பாலி மொழியிலும் வல்லுநர். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 27 May 2019

குறளனும் கூனியும்


siragu ilakkiya kaadhal1
காதல் உலக உயிர்களின் தொடர்ச்சங்கலிக்கு வித்து. காதல் இல்லை எனின் இந்த பூமிப்பந்தின் வாழ்வு என்றோ முடிந்திருக்கும். உலக இலக்கியங்கள் அனைத்தும் காதல் உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது அழகான பெண் ஒருத்திக்கும் ஆணழகன் ஒருவனுக்குமிடையே உள்ள காதல் அன்பினையே பெரும்பாலும் விவரிக்கும். பெண்ணானவள் நீண்ட கருங்குழலும், கைகளில் வளை அணிந்தும் அன்ன நடை பயின்று வர, ஆணனவன் திரண்ட தோள்களோடு அகன்ற மார்புகளுடன் கையில் வாளேந்தி நிமிர்ந்த நடையுடன் நடந்து வர இருவரின் கண்களும் ஒரு நொடிக் கலப்பால் காதல் கொண்டு மகிழ்ந்தனர் என்று படித்திருப்போம். ஆனால் உருவத்தில் அழகில்லாதோர் காதல் கொள்வது பிழையா? அழகு காண்போரின் உள்ளத்து எண்ணத்தை பொறுத்தே உள்ளது. எந்த உயிருக்கும் காதல் உணர்வு பொதுவானது. கட்டமைக்கப்பட்ட அழகு காதலில் இரண்டாம் பட்சமே என்று கலித்தொகை பாடல் ஒன்று இயம்புகிறது. மருதன் இளநாகனார் மருதக்கலி 94வது பாடலில் அழகான காதல் உணர்வினை குறளனுக்கும் கூனிக்கும் நடுவில் தன் பாடல் வரிகளில் விவரிக்கின்றார். குறளன் இரண்டடி உயரம் கொண்டவன். கூனி வளைந்த முதுகு கொண்டவள். அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் ஊடல் பின் எவ்வாறு காதலாக மாறுகின்றது என்பதை காண்போம்.
பாடல் :
மருதன் இளநாகனார், குறளனும் கூனியும் சொன்னது
குறளன்:

என் நோற்றனை கொல்லோ?
நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன், நின்றீத்தை!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 24 May 2019

குறுந்தொகையும் சூழலியலும்


siragu kurundhogai1
\நவீன அறிவியல் யுகத்தில் இன்று பரவலாகப் பேசப்பெறும் ஒரு துறை சூழலியலாகும். “சுற்றுச்சூழல் (Environment) என்னும் சொல்லுக்கு நேரடிப்பொருள் சுற்றுப்புறம் (Surroundings). 1960க்கு முன் வரை, இச்சொல்லானது, வெப்பம், ஒளி, போன்ற இயற்பியல் காரணிகள் உள்ளிட்ட உயிரிகளின் சூழலைக் குறித்தது. பின்னரோ, அபரிமிதமான வளர்ச்சிப்போக்கில் விரிந்த தொழில்பெருக்கம், வேளாண்மை விரிவு, சூழல்மாசுகள், மக்கட்பெருக்கம் இவை தொடர்பான பிரச்சினைகளால் அச்சொல் மறுபரிசீலனைக்கு உள்ளானது.”
இத்தகு கருத்தாக்கங்கள் எழுவதற்கு முன்பே தோன்றிய பழந்தமிழ் இலக்கியங்களில், சூழலியல் சிந்தனைகள் குறித்துத் தேடுவது அவ்வளவு பொருத்தமற்றதுபோலத் தோன்றினாலும், இன்றைய சூழலியல் கருத்தாக்கத்திற்கான வேர்களையும் விழுமியங்களையும் அவை கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.
நிலப்பாகுபாடும் திணைக்கோட்பாடும் வரையறுத்தளித்த வாழ்வியற் சிந்தனைகள் தமிழிலக்கணத்தின் பொருள் இலக்கணமாகத் துலங்குவது குறிப்பிடத்தக்கது என்றே கொள்ளலாம்.

வளமிகு வாழ்விற்குப் புறப்பொருள் தேடுதலின் காரணமாகக் தொலைத்த அகப் பொருளின் ஆழத்தையும் பொருளையும் தெளிவுற விளக்கி, அறத்தின்வழியே பொருளுணர்த்தி இன்பம் நல்க விழைந்த தமிழ் இலக்கிய, இலக்கண நோக்குகள் என்றும் போற்றத்தக்கவை. அவை சூழலியற் கருத்துக்களின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டு திகழ்வதைக் கண்கூடாகக் காணலாம். அந்த அடிப்படையில் குறுந்தொகையும் சூழலியலும் என்கிற பொருண்மையில் சில கருத்துக்களை, இக்கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சங்க இலக்கியத்தில் வானிலையியல்

siragu vaanilai1
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பைப் பார்த்ததுமே நினைவுக்கு வருவது ஔவையின் வாக்குதான். இலக்கியத்தில் அறிவியல் குறித்துப் பேச அல்லது எழுதத் தொடங்கும் எந்தவொரு ஆராய்ச்சியாளருக்கும் முதலில் தோன்றுவது திருவள்ளுவமாலையில் ஔவையார் எழுதியுள்ள “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்ற பாடலே. இந்தப் பாடல் ஔவையாரோடு வள்ளுவரையும் நினைவிற்கு கொண்டு வந்து விடும். ஔவையின் வாக்கு குறித்து அதிக விளக்கம் கூறத் தேவையில்லை.மிகச்சிறிய அலகாகக் கருதப்படும் அணுவையே துளைத்தல் குறித்த சிந்தனை இலக்கியத்தில் எப்படி வந்தது என்பது மிகப்பெரிய வியப்புதான். தொடர்ச்சியாக நினைவில் வருவது, வள்ளுவரின் பெயராகும்.உலக வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது நீர் எனக் கூறிடின் அதில் மிகையில்லை. ஆங்கிலத்தில் Water – the elixir of life “ என்று சொல்வார்கள். இதையே வள்ளுவர் –
”நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன் றமையாது ஒழுகு.”
siragu vaanilai

என்கிறார். எவ்வகையில் உயர்ந்தவராக இருந்தாலும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. அதுபோலவே மழை பெய்யவில்லை என்றால் வாழ்க்கையின் ஆதாரமான நீரும் இல்லை. இது ஒரு சுழற்சிச் சக்கரம் போன்றது. இரண்டு வரிகளுக்குள் அடங்கும் இந்த அரிய கருத்துக்கு நிகரான ஆங்கில Water is the elixir of life என்ற கருத்து நிச்சயமாக வள்ளுவருக்கு முன்னால் தோன்றியிருக்க முடியாது. ஆனால் தமிழில் இந்தக் கருத்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பதியப்பட்டிருக்கிறது என்றால், பெருமைப்படுவது ஒருபுறம் இருக்க, அறிவியல் நோக்குப் பார்வையில் வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. வள்ளுவருக்கு முன்னர் குடபுலவியனார் என்ற புலவர் புறநானூற்றில் இக்கருத்தை மிக அழகாக சொல்லுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2/

தமிழ்நாட்டை பாலைவனமாக ஒருபோதும் அனுமதியோம்!


iragu hydro carbon2
ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் செய்தி நாம் எல்லோரும் அறிந்ததே. இதற்கு மக்களின் போராட்டங்கள் வலுக்கும் இந்நிலையிலும் கூட, அதற்கான பணியை தொடங்கி விட்டன அந்நிறுவனங்கள். விழுப்புரம் தொடங்கி நாகை மாவட்டம் வரை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான கிணறுகளை வெட்டும் பணி, மத்திய அரசின் அனுமதியோடு மிக துரிதமாக நடைபெற ஆயுத்தமாகி வருகின்றன. நாடு முழுவதும் 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில், மட்டும் 274 இடங்களில் கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை, 1794 சதுரகிலோ மிட்டர் தூரம் வரை தோண்டுவதற்கான பணி தொடங்கப்படவுள்ளன.
இதன்படி, நாகை மாவட்டத்தின், மயிலாடுதுறை செம்பனார் கோவில் மற்றும் வேதாரண்யம் கரியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. அப்பகுதிகளில் விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டங்களை நடந்த துவங்கியுள்ளனர். மக்களின் இந்த கடும் எதிர்ப்பை மீறியும் அந்நிறுவனம் தங்களுடைய பணியை தொடர்வதற்கான பொக்லைன் இயந்திரங்களை விவசாய நிலங்களில் கொண்டுவந்து இறக்கியுள்ளனர்.

இப்படி ஏன் மக்கள் எதிர்ப்பை மீறியும் மத்திய அரசு இந்த கொடூர செயலில் ஈடுபடுகிறது, இதனால் என்ன லாபம் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 22 May 2019

மழை ஏன் பெய்கிறது? (சிறுகதை)


siragu rain
மரம் செடிகொடிகளின் இலைகளில் மழைத்துளிகள் துளிர்த்து இருந்தன. வீசியவாடைக் காற்றில் அத்துளிகள் சிறுசாரலாய் முகத்தில் தெறித்தன. நந்தினி தன் வீட்டுக் கொல்லையில் இருந்தாள். அவள் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள். எட்டு வயது சிறுமி அவள். சற்றுமுன் பெய்தமழையின் குளிர்ச்சி கொல்லை எங்கும் நிறைந்திருந்தது. நந்தினிக்கு திடீரென்று “மழை ஏன் பெய்கிறது?” – என்ற சந்தேகம் வந்தது.
மேகத்தேரில் பவனி சென்று கொண்டிருந்த வருண பகவான் நந்தினியைப் பார்த்தார். அவர் அவள் முன்னே தோன்றினார். வருணனின் பேரழில் தோற்றம் அவளை வணங்கச் செய்தது. நந்தினி அவரிடம் “தாங்கள் யார்?”–என்று கேட்டாள். “நான் வருணன்! மழையின் கடவுள்!”–என்றார் அவர். சற்றுமுன் தன் மனத்தில் எழுந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டாள்.
“மழை பெய்தால் உனக்கு எப்படி இருக்கிறது?”–கேட்டார் வருணன்.
“மழை பெய்தால் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது!”–நந்தினி சொன்னாள்.
“அதற்காகத் தான் மழை தருகிறேன்!”–என்ற வருணன் நந்தினி தனது பதிலில் திருப்தி அடையவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

“கருணை, கொடை, அருள், அமுது இந்த நான்கு வார்த்தைகளுக்கும் பொருள் தெரிந்து கொண்டுவா! நான் ஏன் மழை தருகிறேன் என்பதைச் சொல்கிறேன்!”–என்றவர் அங்கிருந்து மறைந்து போனார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.