Thursday 11 February 2016

சங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 148 ஆவது பாடல்


sangappaadalgal 1
காதலும், பிரிவும், அதைச் சார்ந்த மனித மன உணர்வுகளும் நூற்றாண்டுகள் கடந்தாலும் நூறு கோடி ஆண்டுகளானாலும் தொடர்ந்து கொண்டிருப்பன என்றும், மாறா தன்மையன என்றும் சொல்லாமல் சொல்லி நிற்கின்றன நம் சங்க இலக்கியங்கள்.
கார்காலம் வந்துவிட்டது; ஆனால், கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. தோழியோ, ‘இது கார்காலம் அன்று’ என்று கூறுகின்றாள். விடுவாளா தலைவி? கொன்றையும் குருந்தும் மலர்ந்திருக்கின்றன; குளிர்க்காற்று வேறு. இந்தப் பருவத்தைப் போய் ‘கார்காலம் அன்று’ என்று நீ சொன்னால் எப்படி? என்னிடமே நீ தவறாகக் கூறலாமோ? என்று அழகாகச் சாடுகின்றாள் தலைவி.

தலைவிக்கும் தோழிக்கும் இடையே நடக்கும் சொல் நாடகத்தைப் பார்ப்போமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment