Wednesday 17 February 2016

கால்பந்து தமிழச்சி!


kaalpandhu1
தமிழகத்தின் முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவராகத் தேர்வாகியுள்ளார் ரூபாதேவி. அவருடன் ஒரு நேர்காணல்..
உங்களைப்பற்றி?
ரூபாதேவி: திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர்.பட்டி கிராமம்தான் எனது சொந்தஊர். அப்பா குருசாமி ஒரு மில் தொழிலாளி. அம்மா சென்னம்மாள். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்கள். ஒரு அக்கா, ஒரு அண்ணன் இருக்கிறார்கள். அக்காள் விஜயலட்சுமியின் பராமரிப்பில் படித்து வளர்ந்தேன். திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் பி.எஸ்.ஸி., வேதியியல் மற்றும் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் சுகாதார ஆய்வாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பு முடித்துள்ளேன். ஆரம்பத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். சம்பளம் குறைவு, போட்டிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை போன்ற காரணங்களால் வேலையை விட்டுவிட்டேன்.
கால்பந்து போட்டி ஆர்வம் எங்கிருந்து வந்தது?

ரூபாதேவி: திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது மூத்த மாணவர்கள் விளையாடுவதைப் பார்த்துத்தான் எனக்கு கால்பந்தில் ஆர்வம் வந்தது. அப்போது நடந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்றது ஆர்வத்தை அதிகமாக்கியது. என் பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ் என்னை ஊக்கப்படுத்தி நிறைய பயிற்சிகள் கொடுத்தார். பள்ளியில் படிக்கும்போது திண்டுக்கல் அணி சார்பாக மாவட்டப்போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment