Sunday 14 February 2016

நோய் விரட்டும் மூலிகை உணவகம்


mooligai-unavagam4
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மூலிகை உணவகத்தில் ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம்,  கீரை, பொரியல், வாழைப்பூ வடை, பிரண்டைத் துவையல், மூலிகை மோர் என அனைத்து வித்தியாசமான சுவையுடன் பெண் பணியாளர்கள் பரிமாறுகிறார்கள். இது மட்டுமல்ல காலை உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவையும் மூலிகைகளால் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
காலையில் தயாராகும் மூலிகை இட்லி, கம்பு தோசை,  மாலை மூலிகை தோசை, திணை அல்வா, உளுந்தங்களி, சோளமாவு பணியாரம், கேழ்வரகு புட்டு,  உடலுக்கு வலு சேர்க்கும் நில வேம்பு கசாயம், சர்க்கரை நோய்க்கான ஆவாரைக் கசாயம், வேம்பு கசாயம், கொள்ளு ரசம், தூதுவளை சூப், கேழ்வரகு புட்டு, சிறு பருப்பு பாயசம், மூலிகை தேநீர் ஆகியவை எங்களுடைய சிறப்பான வகைகள்.

mooligai-unavagam3
நாள் ஒன்றுக்கு பொதுமக்கள், சென்னை சென்ட்ரல் ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள், அல்லிக்குளம் நீதிமன்ற ஊழியர்கள், காவல் ஆணையரக பணியாளர்கள், நேரு அரங்கத்தில் உள்ளவர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் வந்து  சாப்பிட்டுச் செல்கிறார்கள்.  எந்தெந்த மூலிகையால் என்னென்ன பயன் என்று போர்டிலும் எழுதி வைத்து இருக்கிறார்கள். உணவகத்தின் முன்பு மூலிகை மற்றும் மூலிகைப் பொடிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.  ஒரு முறை இங்கு வந்து சாப்பிட்டு செல்பவர்கள் மறுமுறை கட்டாயம் எங்களைத் தேடி வருவார்கள். காரணம் இந்த மூலிகைகளின் அற்புதம் அப்படி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment