Monday 15 February 2016

தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன் அவர்களின் நேர்காணல்: இறுதிப் பகுதி


devaneyan3
கேள்வி: இன்றைக்கு குழந்தைகளுக்கு பள்ளிகளில் தரமான கல்வி, சத்தான உணவு, விளையாட போதிய அனுமதியும் உண்டா? இதை உங்கள் பார்வையில் எப்படி பார்க்கிறீர்கள்?
devaneyan1
பதில்: இன்றைய சூழலில் முதலில் ஆரம்பப்(Nursery) பள்ளிக்கூடமே, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்று நினைக்கிறேன். இன்றைக்கு Nurse கையிலிருந்து குழந்தையை வாங்கியதும், ஆரம்பப்(Nursery) பள்ளிகளில் சேர்த்துவிடவேண்டும் என்கிற தவறான மனப்பாங்கு எல்லா இடத்திலும் இருக்கிறது. இது அயோக்கியத்தனமான செய்தி என்று நான் சொல்கிறேன், இதுமிகவும் கோபத்தில் சொல்கிற விடயம். அப்படிப் பார்க்கும்பொழுது, மிகவும் அடிப்படையான ஒன்றாக நான் எண்ணுவது என்பது, ஒரு ஆரம்பப்(Nursery) பள்ளிக்குச் செல்கிற குழந்தைக்கும், குழந்தை பராமரிப்பு மையம் என்று சொல்லப்படுகிற குழந்தை மையங்கள், குழந்தை பாதுகாப்பு மையம், குழந்தை நல மையம் என்று சொல்லப்படுகிற அங்கன்வாடிக்கு செல்கிற குழந்தைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாலே, எந்த அளவிற்கு நாம் குழந்தை உரிமைகளை மீறுகிறோம் என்பது புரியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment