Wednesday 30 March 2016

சித்த மருத்துவமும் மன நோய்களும்


Psychic1
சித்த மருத்துவத்தில் மன நோய்களுக்கான முழுமையான சிகிச்சை முறைகள் உள்ளன என்பதை அறிமுகப்படுத்தவே இந்தக் கட்டுரை.
பொதுவாக மன நோயாளிகள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்வரை சரியாக இருப்பார்கள். மருந்தை இடையில் கொஞ்சம் நிறுத்தினாலும் மீண்டும் பிரச்சனைகள் உருவாக ஆரம்பிக்கும்.
Psychic2
அப்படியானால் மன நோயாளிகள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?
இல்லை.

அப்படியானால் ஏன் பெரும்பாலானவர்களுக்கு மன நோய் முற்றிலுமாக குணமாவதில்லை?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 29 March 2016

தமிழனின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்!


tamilanin1
வெள்ளஅபாயத்தை முன்னரே உணர்ந்து அதை எதிர்கொள்ளும் வகையில் கட்டிடடத்தை வடிவமைத்துள்ளனர் தாமிரபரணி கரையோர பகுதி மக்கள்!
2015 டிசம்பர். சென்னை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பயமுறுத்திவிட்டு கடைசியில் நெல்லையில் மையம் கொண்டிருந்தது. அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் அங்கு கனமழை தொடர்ந்து கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டன. தாமிரபரணி நதி பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழை இருந்ததால், வினாடிக்கு 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கனஅடிவரை தண்ணீர் கரைபுரண்டு ஓடிய போதும் அது எங்கும் கரையை உடைக்கவில்லை. நதியோர குடியிருப்புகளை மூழ்கடிக்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கவில்லை. இத்தனைக்கும் சென்னையில் பொங்கிய அடையாற்றை விடவும் பலமடங்கு பெரியது தாமிரபரணி. ஓடும் தண்ணீரின் அளவும் மிகஅதிகம். கடந்த 1992-ம் ஆண்டு கடைசியாக தாமிரபரணியில் பெருவெள்ளம் வந்தபோது கூட, இன்றைய சென்னை அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏன்?

தாமிரபரணி நதிக்கரை மக்களின் வெள்ளநீர் மேலாண்மை மற்றும் கட்டிட அறிவியல் பாரம்பரியம் மிக்கது. இன்றளவும் அவர்கள் ஆற்றை சிறப்பாக மேலாண்மை செய்கிறார்கள். தாமிரபரணி ஆற்றில் 18-ம் நூற்றாண்டில் ஒன்பது முறை பெருவெள்ளம் வந்து ஊர்களை அழித்திருக்கிறது.   வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். ஆனால், தாமிரபரணி நதிக்கரை மக்கள் அந்த வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 28 March 2016

ஆரோக்கிய வாழ்விற்கு வழிகோலும் மத்தியதரைக்கடல் நாடுகளின் உணவுமுறை


arokiya vaazhvirku1
மெடிட்டரேனியன் டயட் (Mediterranean Diet) என்ற பத்திய உணவுமுறை ஒரு ஆரோக்கியமான உணவுமுறை என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உணவுமுறையாகும். இந்த மாதம், மார்ச் 2016, தேசிய ஊட்டச்சத்து மாதம் (March is National Nutrition Month 2016) என்பதால் இந்த உணவுமுறை மீண்டும் இம்மாதம் பரவலாக செய்திகளில் பேசப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பிரிவு பிரசுரிக்கும் “ஹார்வர்ட் ஹார்ட் லெட்டர்”(Harvard Heart Letter – http://www.health.harvard.edu/newsletters/harvard_heart_letter/2016/april) என்ற செய்தி அறிக்கையின் சமீபத்தியப் பதிப்பு (ஏப்ரல் – 2016); மெடிட்டரேனியன் டயட் உணவுமுறை இதயநோய் வருவதைத் தடுக்க உதவும் என்பதுடன் நிரந்தர உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஐந்து ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

சற்றொப்ப 1,000 அதிக எடையும், உடற்பருமனும் (overweight or obese people) கொண்டவர்கள் பங்குபெற்ற ஆய்வில் மெடிட்டரேனியன் டயட் உணவு முறையுடன், பிற உடல் எடை குறைக்கப் பரிந்துரைக்கப்படும் உணவு முறைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை முறையே குறைந்த கொழுப்பு உணவு (low-fat diet), குறைந்த மாவுச்சத்து உணவு (low-carb diet), மற்றும் அமெரிக்க நீரிழிவு சங்கம் (ADA-American Diabetes Association) பரிந்துரைக்கும் உணவு ஆகிய உணவு முறைகளாகும். ஒரு ஆண்டுக்குப்பிறகு மெடிட்டரேனியன் டயட் உணவு முறையைப் பின்பற்றியவர்கள் 5 முதல் 10 கிலோ வரை எடை குறைந்திருப்பதும், குறைந்த கொழுப்பு உணவு முறையைப் பின்பற்றியவர்களையும் விட அதிக எடை குறைந்தவர்களாக அவர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

verkadalai8
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்குப் பலவகை உணவுமுறைகளைப் பின்பற்ற வாய்ப்பிருந்தாலும், 30% மாரடைப்பையும் பக்கவாதத்தையும் தடுக்க உதவும் மெடிட்டரேனியன் டயட் முறையைப் பின்பற்றுவதை கடைப்பிடிக்கலாம், இதய நோய்களைத்தடுக்க மெடிட்டரேனியன் டயட் உணவு முறை சிறந்தது என்று அந்த அறிக்கையில் அறிவுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 27 March 2016

மத்திய, மாநில அளவில் நல்லாசிரியர் விருதுபெற்ற தமிழறிஞர் திரு. இ.கோமதி நாயகம் அவர்களின் நேர்காணல்


gomathi-nayagam7
கேள்வி: உங்களது பூர்வீகம், பிறப்பு, படிப்பு பற்றி கூறுங்கள்?
பதில்: என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில். நான் பள்ளிக் கல்வி வரை அங்கு உள்ள கோமதி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தேன். அதன் பிறகு தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு என்கிற ஒரு திருத்தலத்தில் உள்ள அரசர் மொழிக் கல்லூரியில் இணைந்து நான்காண்டுகள் படித்து வித்வான் பட்டம் பெற்றேன். 1970ல் வித்வான் பட்டத்தை முடித்த நான் சென்னை வந்து அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கினேன். 2008 முடிய சென்னை கோடம்பாக்கம், வில்லிவாக்கம், ஆவடிக்குப் பக்கத்திலுள்ள தண்டரை போன்ற பள்ளிகளில் ஏறத்தாழ முப்பத்து எட்டு ஆண்டுகள் நான் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் கௌரவ விரிவுரையாளராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றி, 2011வது ஆண்டுடன் என்னுடைய அரசுப்பணி நிறைவு பெற்றது. இது என்னுடைய கல்வி மற்றும் கல்வி சார்ந்த பணிகளைப் பற்றியது.

சித்தர்கள் காட்டும் வாழ்வியல் கல்வி, திருமந்திரம் ஒரு சிறப்பு நோக்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் நான் பெற்றுள்ளேன். மேலும் 1979ம் ஆண்டு முதல் 2003 வரை தமிழக பாடநூல் கழகத்தினுடைய தமிழ் பாடநூல் உருவாக்கக் குழு, பாடத்திட்டக்குழு மற்றும் அது சார்ந்த பணிகளில் ஈடுபட்டு முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடநூல்களை உருவாக்குகின்ற ஒரு நல்ல வாய்ப்பினை இறைவன் எனக்குத் தந்தான். அதோடுகூட தமிழகக் கல்வித்துறையின் சார்பில் மக்கள்தொகைக் கல்வி, பெண் கல்வி மற்றும் கைவினைக் கல்வி, திறந்தவெளி பள்ளிக் கல்வி, வயது வந்தோர் கல்வி இதுபோன்ற பல்வேறு கல்வி நிலையில் பாடநூல்கள், பயிற்சி நூல்களை உருவாக்குகின்ற பணி தமிழகமெங்கும் தொடக்கப்பள்ளி முதல் ஆசிரியர் கல்வி வரை ஆசிரியர் பெருமக்களுக்கு பணியிடைப் பயிற்சி நடத்துகின்ற ஒரு வாய்ப்பு, B.Ed பயிற்சி பெறுகின்ற கல்லூரிகளிலே சிறப்புப் பயிற்சி கொடுக்கின்ற, சிறப்பு சொற்பொழிவாற்றுகின்ற வாய்ப்பு இவற்றையெல்லாம் நான் செய்தேன். இன்றும் இயன்ற அளவிற்கு செய்துகொண்டிருக்கின்றேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 23 March 2016

தன்னம்பிக்கை தாய்


thannambikkai thaai
19 வயதான ராம்நாத் down syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்றாலும்,   பத்தாம் வகுப்பு தேர்வில் 93 சதவிகிதம் மதிப்பெண்களும், பிளஸ் 2 தேர்வில் 72 சதவிகிதம் மதிப்பெண்களும் பெற்று தன்னம்பிக்கையின் அடையாளமாக  தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ படித்து வருகிறார்.  அவரை சந்திப்பதற்காக ராம்நாத் வசிக்கும் சென்னை மந்தவெளி இல்லம் சென்ற போது ஆங்கிலத்தில் நம்மை வரவேற்று நலம் விசாரிக்கிறார்.  முதலில் ராம்நாத்தின் அம்மா உஷா சுப்ரமணியத்திடம் பேசினோம்.
“1996ஆம் ஆண்டு ராம்நாத் பிறந்தவுடன் அவனிடம் உள்ள குறைபாட்டை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம். என் கணவரின் மன உறுதியாலும்,  இரு வீட்டாரின் அன்பினாலும், பிரார்த்தனையினாலும், ஆதரவினாலும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு படிப்படியாக பல்வேறு கடின முயற்சி அதாவது பிசியோதரபி மற்றும் குரல் வளை பயிற்சியின் காரணமாக இன்று அவனுடைய இந்தக் கல்வி வளர்ச்சி என்பது சாத்தியமாகி இருக்கிறது.
கேள்வி: எப்போது பள்ளியில் சேர்த்தீர்கள்?

பதில்: “8 வயதில் பள்ளியில் சேர்த்தோம். அவன் படித்த S.I.E.T Dyslexia Center-ல் உள்ள ஆசிரியர்களின் அன்பும் விடாமுயற்சியும் அவனுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமாகும்.   குறிப்பாக வீட்டில் வந்து பாடம் சொல்லித்தரும் லலிதாராமசாமியின் பங்கு இன்றியமையாதது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 22 March 2016

நியாயத்திற்குத் துணையாகும் நெருப்பு


niyaayam fi
தமிழ்க் காப்பியங்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்றாலும், அவற்றிற்குள் ஒரு பொதுத்தன்மை காணப்பெறுகின்றது. காப்பியப் படைப்பாளர்கள் தம் காப்பியங்களைத் ஒரு பொது மரபிற்குள் கொண்டு வந்துவிடுகின்றனர். ஒற்றை மனிதராக நியாயத்திற்காகப் போராடும்போது அவர்களுக்கு யாரும் துணையில்லாதபோது நெருப்பு துணைசெய்வது என்பது தமிழகக் காப்பியங்களில் காணப்பெறும் பொதுமரபாக உள்ளது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையைத் தீக்கொளுவச் செய்கின்றாள். கம்பராமாயணத்தில் கம்பர் அனுமன் வாயிலாக இலங்கையில் தீப்பரவச்செய்கின்றார். இரண்டு காப்பியங்களில் தனிமனிதர்கள் நியாயத்திற்காகப் போராடுகிறார்கள். இவர்களின் போராட்டம் வெற்றி பெற நெருப்பு உதவுகின்றது.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி நெருப்பினை உருவாக்குகிறாள். இராமாயணத்தில் அனுமன் தன் வாலில் வைத்த நெருப்பை இலங்கை முழுவதும் பரப்புகிறான். இரண்டு நெருப்புகளுமே உருவாக்கப்பட்டவைதான். ஒரு வேறுபாடு உண்டு. கண்ணகி தானே உருவாக்கிய நெருப்பு மதுரையை அழிக்கிறது. அனுமனை அழிக்க வைத்த நெருப்பு வைத்தவர்களையே சுடுகின்றது. இவ்விரு காப்பியங்களில் காணப்படும் தீப்பரவல் பற்றிய செய்திகளை ஒப்பிட்டு காப்பிய ஆசிரியர்களின் பொது முடிவுகளை அறிந்து கொள்ள இக்கட்டுரை முனைகின்றது.
கண்ணகி உருவாக்கிய நெருப்பு:

niyaayam1
வானக்கடவுளரும் மாதவரும் கேட்டீமின்
யானமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 21 March 2016

இந்தியாவில் திருமணத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு (Marital Rape ) -ஒரு பார்வை


thirumanaththil2

அண்மையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. மேனகா காந்தி அவர்கள் இந்தியாவைப் பொருத்தவரை திருமணத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு(Marital Rape) சட்டப்படி குற்றமாகப் பார்க்கப்பட மாட்டாது என்று அறிவித்தது, மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை திருமணம் என்பது புனிதமாகப் பார்க்கப்படுவதாலும், மதங்களும், சமூகக் கட்டமைப்பும் பெண்கள் என்பவர்கள் ஆணின் உடைமை என்பதை அங்கீகரிக்கும் காரணத்தினாலும் இந்த நாட்டில் திருமண உறவில் பெண் வல்லுறவு செய்யப்பட்டால் அது தவறு இல்லை என்று சட்டம் சொல்கின்றது.  இது மிகப் பெரிய மனித உரிமை மீறல் என்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம். இந்தியாவில் திருமணத்தில் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை, தெரியாத பிற ஆண்களிடம் வன்புணர்விற்கு ஆளாகும் பெண்களை விட 40 மடங்கு அதிகம் என்பதுதான் அதிர்ச்சித் தரும் தகவல் என்று  2014-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2013 -The Criminal Law (Amendment )Act 2013- இல் “15 வயதிற்கு உட்பட்டவராக மனைவி இல்லாத பட்சத்தில் கணவன் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தால் அது குற்றம் இல்லை.” என்று கூறுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 20 March 2016

குறையில்லாத கிராமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தலைவர் குத்தம்பாக்கம் இளங்கோ அவர்களின் நேர்காணல்: இறுதிப் பகுதி


kuththambakkam Elango3
கேள்வி: முன் மாதிரியான கிராமங்களுக்காக என்னென்ன முயற்சிகள் எடுத்து வருகிறீர்கள்?
பதில்: மாதிரி கிராமம் என்றாலே அரசாங்கம் பேசுகிறதே அந்த மாதிரி கிராமம் இல்லை. நன்றாக சாலை இருக்கவேண்டும், ஒரு தண்ணீர் தொட்டி இருக்கவேண்டும் இவையெல்லாம் இருந்தால்தான் மாதிரி கிராமம் என்று நினைக்கிறார்கள். இல்லை, சிரித்த முகங்களுடைய மக்கள் இருந்தால்தான் அது மாதிரி கிராமம். மகாத்மா காந்தி கண்ட சிரித்த முகம் எப்பொழுது இருக்கும், பசியில்லை என்றால் இருக்கும், தன் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்ட குடும்பம் என்றால் அங்கு இருக்கும் முகங்கள் சிரிக்கும். நிலைத்த புன்னகையுடைய, முகங்களையுடைய இந்தியர்களைக் காண ஆசைப்படுகிறேன் என்கிறார் மகாத்மா காந்தி. 
Elango Nerkaanal2புன்னகை எப்பொழுது நிலைத்த புன்னகையாகும் என்றால், ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்த அன்று சிரிப்பார்கள், மறுநாள் அந்த ரூபாயை அவருடைய கணவன் குடித்து காலி செய்துவிட்டால் அந்தப் பெண் சிரிக்க மாட்டார். குடியை நிறுத்த முடியாது, ஆனால் அளவாகத்தான் குடிக்கிறார், குழந்தைகளைக் காப்பாற்றுகிறார், ஞாயிற்றுக்கிழமை என்றால் சிறிது குடித்துவிட்டு படுத்துக்கொள்கிறார் என்ற அளவிற்கு இருக்கிறது. நான் மதுவிலக்குக்கு ஆதரவு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் நான் குடிகாரர்களோடு பிறந்து வளர்ந்தவன், குடியை நிறுத்திவிட முடியுமா என்னால்?, கண்டிப்பாக முடியாது. ஆனால் குடியினுடைய தாக்கத்தை என்னால் குறைக்க முடியும். சிறிது சிறிதாக தாக்கம் குறைந்து குறைந்து குடி நின்று போவதற்கு வாய்ப்பு வரலாம். ஆனால் அது இப்பொழுது அல்ல. இந்த மாதிரி சீரான வளர்ச்சியைக் கொண்டுவருவதற்காக, மக்களிடம் இறங்கி களத்தில் நிறைய வேலைசெய்ய வேண்டியதிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 17 March 2016

சூரிய ஒளி மின்சாரத்தின் பல்வேறு பயன்பாடுகள்: படக்கட்டுரை

சூரிய ஒளி மின்சாரத்தின் பல்வேறு பயன்பாடுகள்


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20046

Wednesday 16 March 2016

சனநாயகம் தூக்கில்! (கவிதை)


jananaayagam7
கபட,வேடதாரிகள் அரியணையில்
சட்டமும், அரசியலும் அவர்கள் கையில்!
மக்களும்
தூய அரசியலும்
சனநாயகத்தின் இருவிழிகள்!
தூயஅரசியல்சுதந்திர வெளியில்
தேசத்தின் ஒருமித்த
மக்கள் கூட்டத்தின்
விருப்பும்
கருத்து வெளிப்பாட்டு
சுதந்திரமும் இணைந்து
தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள்

அரசை ஆளும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20038

Tuesday 15 March 2016

கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை: பகுதி-2


kabeer dasar fi
துறவறம் தேவையற்றது:
இறைவனை அடையத் துறவறம் மேற்கொள்வதை கபீர்தாசர் ஆதரிக்கவில்லை. இல்வாழ்வில் முறைப்படி வாழ்ந்தே இறைவனை அடையமுடியும் என்பதை அவர் ஆணித்தரமாக நம்பியதும் அவரது பலபாடல்களின் வழி தெரிகிறது.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (குறள்: 48)
அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் ஆற்றுப்படுத்தி வாழும் வாழ்வு துறவற நோன்பைவிட மேலானது என்ற குறளின் கொள்கை கபீர்தாசரின் பாடல்களிலும் எதிரொலிக்கக் காணலாம்.
குறிப்பிட்ட நோக்கமின்றி வெளியே அலைந்து திரிபவனை
அவனது இல்லத்திற்குத் திரும்ப அழைப்பவனே
உண்மையில் எனக்குப் பிரியமானவன்.
வீட்டில்தான் அன்பின் சங்கமம்.

வீட்டில்தான் வாழ்வின் நுகர்ச்சி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 14 March 2016

விமர்சனம்


criticism
ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி. நண்பர் ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்தால் ‘விளையாட வா’ என்றார். அவசர அவசரமாகக் கிளம்பி மைதானத்திற்கு ஓடினேன். 3 மணி நேரம் நன்றாக விளையாடிவிட்டு, களைப்போடு வீட்டிற்கு வந்தேன். மனைவி தொலைக்காட்சியில் திரை விமர்சனம் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவளுடன் சேர்ந்து நானும் பார்க்கத் தொடங்கினேன்.
திரையில் வந்தவரோ ஒவ்வொரு திரைப்படமாக வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். கடைசியாக அவ்வாரத்தில் திரைக்கு வந்த ஒரு திரைப்படத்தை முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். நிகழ்ச்சியும் முடிந்தது. நான் வேறு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு மாற்றினேன். அங்கும் அதே திரை விமர்சனம். ஆனால் முன்பு பார்த்த தொலைக்காட்சியில் முதலிடம் பிடித்த திரைப்படம் இந்த தொலைக்காட்சியில் ஆறாவது இடம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதெப்படி அந்த தொலைக்காட்சியில் முதலிடம் பிடித்த திரைப்படம் இந்த தொலைக்காட்சியில் ஆறாவது இடம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  சூடான தேநீருடன் வந்த என் மனைவி கூறினாள், முதலிடம் பிடித்த அத்திரைப்படம் அதே தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்ட படமென்று. அப்படியென்றால் அத்திரைப்படதிற்கான உண்மையான விமர்சனம்??????

vimarsanam1
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் விமர்சிக்கப்படுகின்றது. நாம் செய்யும் ஒரு நல்ல செயல் சிலருக்குக் கெட்டதாகப் படலாம், கெட்ட செயல் சிலருக்கு நல்லதாகப் படலாம். ஆக மொத்தத்தில் நாம் எது செய்தாலும் விமர்சிக்கப்படுகின்றோம். இவ்வாறான விமர்சனத்தை எப்படி அணுகவேண்டும். நண்பரிடம் கேட்டேன். இரண்டு விதமாக அணுகலாம் என்று சொன்னார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 13 March 2016

குறையில்லாத கிராமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தலைவர் குத்தம்பாக்கம் இளங்கோ அவர்களின் நேர்காணல்- பகுதி-2


kuththambakkam Elango1
1947ல் சுதந்திரம் அடைந்த அன்று இந்தியாவில் 1ரூபாய் 17 பைசா சேர்ந்தது 1 டாலர். 1948ல் 1ரூபாய் 13பைசா சேர்ந்தது 1 பவுண்டு. அன்றைக்கு இந்த நாட்டினுடைய பொருளாதாரம் யார் கையிலிருந்தது, விவசாயி கையிலிருந்தது. விவசாயம்தான் நாட்டைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது. 60 வருடத்தில் 66 கொடுத்து 1 டாலர் வாங்குகிறேன். நீ என்னுடைய பொருளாதாரத்தையே வீழ்ச்சி செய்துவிட்டாய், என்னையையும் கேவலமாக்கி கைகட்டி நிற்க வைக்கிறாய். நான் பருத்தி விளைய வைக்கிறேன், நான் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும், என்னுடைய பருத்தி இல்லை என்றால் துணி போட முடியாது, என்னுடைய தக்காளி இல்லை என்றால் சென்னையில் வாழ முடியாது. என்னுடைய கத்தரிக்காய் இல்லையென்றால் டெல்லியில் வாழ முடியாது.
kuththambakkam nerkaanal1
திட்டமிட்டு விவசாயிகளையும், கிராமத்து மக்களையும் உங்களுடைய பக்கம் இழுத்து நம்ப வைத்துவிட்டாய். என்னுடைய நம்பிக்கையை நான் இழந்துவிட்டு பயிர் செய்துவிட்டேன், என் வீட்டில் சோறு இருக்கிறது, பால் இருக்கிறது, பழம் இருக்கிறது, எல்லாமே இருக்கிறது. நான் மிகவும் கூனிக் குறுகி மிகவும் நொந்துபோன தாழ்வானவனாக நான் நினைத்து வாழ்கிறேன். உன்னிடம் ஒன்றும் கிடையாது, தமிழைக்கூட மாற்றிப் பேச கற்றுக்கொண்டாய். ஆனால் நீ நினைக்கிறாய் அங்கு உட்கார்ந்துகொண்டு கால்மேல் காலைப்போட்டு விவசாயிகள் பாவம் என்று நினைக்கிறாய். இங்கு எங்களுடைய தேங்காய் இல்லை என்றால் நீ வாழ முடியாது. அந்தத் தேங்காயைக் கொண்டுவந்து முட்டாள்கள் தெருவில் உடைக்கிறோம். இவையனைத்தையும் எப்படி மாற்றுவது. இது பெரிய வேலை ஒன்றும் கிடையாது, ராக்கெட் விடுவதோடு ஒப்பிடும்பொழுது மிகச் சிறிய வேலை. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 10 March 2016

எப்படியும் நாளை எழுதிட வேண்டும் !!(கவிதை)


eppadiyum naalai1.jpg


கடிகார மணி அடிக்கும் முன்
விறு விறு என்று எழுந்தேன்
கண்கள் கசக்கிய படி
மணியை பார்த்தேன்
ஆறடிக்க இன்னும் 15
நிமிடங்கள்
மனம் துயில் கொள்ளவே
விரும்பினாலும்
கால்கள் அடுக்களையை
நோக்கியே நடந்தன
சென்ற மாதம் படிக்க
ஆரம்பித்த நாவலை

எப்படியும் இந்த வாரமாவது

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19888

கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை


kabeer dasar1
கபீர்தாசர் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், இவர் ‘சந்த் கபீர்’ எனவும் அழைக்கப்படுவார். பொதுவாக, கபீர்தாசர் ஓர் இசுலாமிய நெசவாளர் குடும்பத்தில் வளர்ந்தவரென்றும், பக்தி இயக்கக் காலத்தில் இராமனந்தர் என்ற குருவினால் ஈர்க்கப்பட்டு இராமரையும் வழிபட்டார், இந்து-முஸ்லீம் ஒற்றுமை இவரது அறிவுரைகளால் மேம்பட்டது என்பதும் வரலாறு. ஆனால் இவரது பிறப்பு மீதும், வாழ்க்கையின் மீதும் எண்ணற்ற தொன்மங்களும் புனையப்பட்டுள்ளன. இந்தியவியல் ஆய்வாளர், வெண்டி டோனிகர் (Indologist, Wendy Doniger), இந்த முயற்சிகள் கபீர்தாசரை ஒரு இந்துவாக உலகின் முன்னிறுத்த உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் அவை என்றும் கூறுவார். எவ்வித ஆதாரமுமற்ற அப்புனைவுகளில், கபீர்தாசர் ஒரு பிராமணத் தாயாரால் கைவிடப்பட்ட குழந்தை என்றும், இசுலாமிய நெசவாளி ஒருவர் அவரை வளர்த்ததாகவும், இசுலாமியராக வளர்க்கப்பட்ட கபீர்தாசர் பிற்காலத்தில் இராமபக்தராக மாறினார் என்றும், அவரது குடும்பம், மனைவி, மக்கள் பற்றியும் புழங்கிவரும் கதைகள் பற்பல.
கபீர்தாசர் இந்து, இசுலாமியம் ஆகிய இருமதங்களின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வெறுத்து அவற்றின் மீது கேள்விகளை எழுப்பியவர். கபீர்தாசர் ராம்-ரஹீம் என்ற அடிப்படையில் ஒருவரையும் வேறுபடுத்திப் பார்த்தவர் அல்லர். இவரது சிந்தனைகளின் வெளிப்பாடுகள் இறைவனைப் பற்றிய கருத்துகள், இறைவழிபாட்டைப் பற்றிய கருத்துகள் என யாவும் இந்து-முஸ்லீம் மதக் கோட்பாடுகளை ஒருங்கிணைத்தே வெளிப்பட்டன. அவை இந்துமுஸ்லிம் நல்லுறவை வளர்க்கும் இயக்கமாகவும் விளங்கியது. இவரது பாடல்களில் சில சீக்கிய மதத்தின் ஆதிகிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன. நெசவாளராக வாழ்ந்து, சமயநல்லுறவிற்கு பெரும்பங்காற்றிய சிறந்த கவிஞரான கபீர்தாசரின் பெயரில் அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ‘சந்த் கபீர்’ என்ற சிறந்த நெசவாளருக்கான விருதை மத்திய அரசு கடந்த ஐம்பது ஆண்டுகளாக (1965இல் இருந்து) வழங்கி வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 9 March 2016

முகப்பருவின் மர்மம்


mugapparu8

முகப்பரு (acnevulgaris):
பொதுவாக பதின் வயதில்(Teenage) கிட்டத்தட்ட எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு பிரச்சனை முகப்பரு. அதிலும் பதின் வயதின் கடைசி வருடங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதிலும் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை விட அதிகமாகக் காணப்படும். ஆனால் சில பெண் பிள்ளைகளுக்கு இதன் தீவிரம் மிக அதிகமாக இருக்கும். சிலருக்கு இலேசாக ஆரம்பித்து சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு இது தொடர் பிரச்சனையாக இருக்கும்.
mugapparu1

சில பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் கூட இது ஒரு பிரச்சனையாக தொடர்வதுண்டு.

காட்சி ஊடகங்களில் (தொலைக்காட்சி, சினிமா) பணியாற்றும் பெண்களுக்கு முகப்பரு பெரிய தொல்லையாக இருந்து மன உளைச்சலைத் தரும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

குறையில்லாத கிராமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தலைவர் குத்தம்பாக்கம் இளங்கோ அவர்களின் நேர்காணல்


kuththambakkam Elango1

கேள்வி: உங்களைப் பற்றி கூறுங்கள்?
பதில்: என் பெயர் இளங்கோ, இரசாயனப் பொறியாளர். குத்தம்பாக்கம் என்னுடைய சொந்தஊர், இதுதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். இந்த கிராமத்தில நான்தான் முதல் பொறியாளரானேன். இந்த குத்தம்பாக்கம் கிராமம் சென்னைக்கு மிக அருகாமையில் இருந்தாலும் பின்தங்கிய கிராமம்தான். மக்கள் ஏழையாக இருந்தார்கள், மதப் பிரச்சனைகள் நிறைய இருந்தது, கள்ளச்சாராயம் காய்ச்சும் பழக்கம் இருந்ததால் குடிகாரர்கள் நிறைய இருந்தார்கள், அதன்காரணமாக வன்முறை நிறைய இருந்தது. நான் இளைஞராக வளரும்பொழுதே இதற்கு ஒரு மாற்று கண்டுபிடிக்க முடியுமா? என்ற சூழ்நிலையில்தான் படித்தேன். வழக்கம்போல் படித்துமுடித்தவுடன் கல்வி வெளியில் அனுப்பிவிடும், இரசாயனப் பொறியாளருக்கு வேலை இங்கு கிடைக்காது, வெளியில்தான் வேலை கிடைத்தது. எனவே வெளியில் சென்று பணம் சம்பாதித்துவிட்டு ஊருக்கு வரும்பொழுதெல்லாம் ஒரு குறை தெரியும். நான் மட்டும் ஏதோ முன்னேறுவதுபோல் தெரிகிறது, நம்முடைய ஊர் அப்படியேதான் இருக்கிறது என்று தோன்றும்.

என்னுடைய குத்தம்பாக்கம் கிராமத்தில் ஓயாமல் சண்டையாக இருக்கிறது, சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் சண்டைப்போட்டுக்கொள்வார்கள். இதற்கு தீர்வு கண்டிருக்கலாமே என்ற தேடுதல் இருந்துகொண்டே இருந்தது. நான் பார்த்த பெட்ரோலியம் வேலைகள் எல்லாம் ஆபத்தான வேலைகள், அதிகபட்ச நேரம் அதற்காக சென்றுவிடுகிறது, ஆனால் கிராமத்திற்காக வேலை செய்யவேண்டும் என்றால் அதிக நேரம் தேவைப்படுகிறது. எனவே அந்த மாதிரியான பொறுப்பான வேலையை விட்டுவிட்டு வேறு ஏதாவது சுலபமான வேலையைத் தேடினால், ஊர் மக்களுக்கு வேலை செய்யலாம் என்று CSIRல் விஞ்ஞானியாக பணிபுரிந்தேன். ஒன்பது ஆண்டுகள் இதில் வேலை செய்து வந்தேன். இவ்வேலையில் ஒரு பக்கம் ஆய்வு செய்தாலும் சிறிது நேரம் கிடைக்கும். அதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குத்தம்பாக்கம் கிராமத்தில் மக்களைப் பார்த்து பயிற்சி நடத்துவது, சின்னச்சின்ன சமுதாயப் பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்று திரட்டி அந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு காண்பது என்று பல வேலைகள் நடந்துகொண்டிருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 2 March 2016

யாருடைய குரல் சிறந்த குரல்?(சிறுகதை)


yaarudaya kural fi
வானம் மேகமூட்டமாய் இருந்தது, மழைவரும் போலிருந்தது. இக்காட்சி கண்ட கானகமயில் ஒன்று மிக்கமகிழ்ச்சி கொண்டது. அது மொட்டைப்பாறை ஒன்றின்மீது ஏறிநின்று தோகைகளைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதீதஉற்சாகத்தில் அது அகவவும் செய்தது. அருகே இருந்த மரத்தில் குயில்ஒன்று இருந்தது. அது மயிலின் அகவலைக் கேட்டு கீழிறங்கி வந்தது.
“நீ தோகைவிரித்தாடுவதைப் பார்ப்பது கொள்ளைஅழகுதான்! ஆனால் அகவல் மட்டும் வேண்டாம்! இனியகுரலுக்குத்தான்நான் இருக்கிறேனே?”- என்ற அது ‘அக்காவ்…அக்காவ்…’ என ராகமிட்டுப்பாடிக் காட்டியது.

கிளிஒன்று வானில் பறந்துசென்றது. அது இவைகளின் உரையாடலைக் கேட்டு கீழிறங்கி வந்தது. அது குயிலிடம் “நீ பாடுவது இனிமைதான்! ஆனால் குறுகிய காலஅளவில் அடுத்தடுத்து கூவுவதைக் கேட்க ஒரே இரைச்சலா இருக்கு! ஆனால் நான் கொஞ்சும்கிளி! மனிதர்கள் தங்கள் மழலைகளை ‘தத்தைமொழி பேசும்கிள்ளை’- என எங்கள் குரலோடு ஒப்பிட்டுத்தான் பேசுகிறார்கள்!”- என்றது. அதோடு ‘கீ…கீ…’ என்று பாடியும் காட்டியது. பாறைஇடுக்கை மாடப்பொந்தாய் மாற்றி வசித்துவந்த புறாஒன்று அங்கு வந்துசேர்ந்தது. அது “மனிதர்கள் என்னை சமாதானத்தூதுவன் என்கிறார்கள்! உலகில் சமாதானமே மிகச்சிறந்த விடயம்! ஒரு உயர்ந்த நிலையில் என்னை வைத்துப்பார்ப்பதால் நான் அடக்கமாகக் குணுகுகிறேன்!”- என்றது. புறா சொன்னதைக் கேட்ட அங்கிருந்த மற்ற பறவைகள் மூன்றும் நமட்டுச்சிரிப்பு சிரித்தன. கேவலமான குணுகலுக்கு இப்படி ஒரு விளக்கம் வேறா என்று அவைகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 1 March 2016

பொன்விலங்கில் பூட்டப்பட்ட மதுரை


madurai1
மதுரை சார்ந்த எழுத்தாளர்களுள் நா.பார்த்தசாரதி குறிக்கத்தக்கவர் ஆவார். இவர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி என்றாலும் அவர் வாழ்ந்த ஊர் மதுரை ஆகும். மதுரையில் வாழ்ந்த பிறகு அவர் சென்னைக்குச் செல்கிறார். அங்குப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை படிக்கிறார். இதன்பிறக ஆய்வுப்படிப்பினை அவர் தொடர்கிறார்..
இதழாசிரியராக, சமுதாய மற்றும் வரலாற்று நாவலாசிரியராக, விளங்கும் இவர் படைப்புகளில் பொன்விலங்கு என்பது மதுரையை மையமிட்ட நாவலாகும். இதில் இடம்பெறும் சத்தியமூர்த்தி சத்தியத்திற்குத் தலைவணங்கும் கதைப்பாத்திரமாவான். இவனின் மனம் கவர்ந்த மோகினி என்ற நாட்டியப்பெண் கலைகளின் அரசி என்றாலும் அவளின் வாழ்க்கை கவலைகளால் நிரம்பியது ஆகும். இவர்கள் இருவரின் நாகரீகமான ஈர்ப்பின் இடையில் நிற்பவள் பாரதி என்னும் வசதிமிகுந்த சத்தியமூர்த்திக்கு வேலை வாய்ப்பளித்த கல்லூரி நிறுவனரின் மகள் ஆவாள். இந்த முக்கோணக் காதல் கதையில் எவர் காதலும் நிறைவேறாமல் போவது பொன்விலங்கின் சோகம் ஆகும்.
பொன்விலங்கு என்ற இந்தக்கதையின் தலைப்பே பொற்றாமரை என்ற மதுரையின் தொன்மம் சார்ந்து நா.பார்த்தசாரதியால் வைக்கப்பெற்றுள்ளது. மோகினி என்ற கதைப் பாத்திரம் நடனம் ஆடும் குலம் சார்ந்த பெண் ஆவாள். அவளின் வாழ்க்கையைச் சித்திரிக்கும்போது மதுரையில் கலைஞர்களின் நிலையைப் பற்றி நா.பார்த்தசாரதி விளக்க முனைகிறார். பணஆளுமை, அதிகார ஆளுமை ஆகியவற்றிற்கு கலைஞர்கள் அடிபணிந்து போகவேண்டிய நிர்பந்தம் இருந்ததை இந்நாவல் எடுத்துரைக்கிறது.

மதுரை நகர வீதிகளில் சத்தியமூர்த்தியும் மோகினியும் நடக்கும்போது மதுரைப் பகுதிகள் நா. பார்த்தசாரதியால் வாசகர் கண்முன் நிறுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.