Tuesday 29 March 2016

தமிழனின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்!


tamilanin1
வெள்ளஅபாயத்தை முன்னரே உணர்ந்து அதை எதிர்கொள்ளும் வகையில் கட்டிடடத்தை வடிவமைத்துள்ளனர் தாமிரபரணி கரையோர பகுதி மக்கள்!
2015 டிசம்பர். சென்னை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பயமுறுத்திவிட்டு கடைசியில் நெல்லையில் மையம் கொண்டிருந்தது. அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் அங்கு கனமழை தொடர்ந்து கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டன. தாமிரபரணி நதி பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழை இருந்ததால், வினாடிக்கு 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கனஅடிவரை தண்ணீர் கரைபுரண்டு ஓடிய போதும் அது எங்கும் கரையை உடைக்கவில்லை. நதியோர குடியிருப்புகளை மூழ்கடிக்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கவில்லை. இத்தனைக்கும் சென்னையில் பொங்கிய அடையாற்றை விடவும் பலமடங்கு பெரியது தாமிரபரணி. ஓடும் தண்ணீரின் அளவும் மிகஅதிகம். கடந்த 1992-ம் ஆண்டு கடைசியாக தாமிரபரணியில் பெருவெள்ளம் வந்தபோது கூட, இன்றைய சென்னை அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏன்?

தாமிரபரணி நதிக்கரை மக்களின் வெள்ளநீர் மேலாண்மை மற்றும் கட்டிட அறிவியல் பாரம்பரியம் மிக்கது. இன்றளவும் அவர்கள் ஆற்றை சிறப்பாக மேலாண்மை செய்கிறார்கள். தாமிரபரணி ஆற்றில் 18-ம் நூற்றாண்டில் ஒன்பது முறை பெருவெள்ளம் வந்து ஊர்களை அழித்திருக்கிறது.   வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். ஆனால், தாமிரபரணி நதிக்கரை மக்கள் அந்த வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment