Sunday 27 March 2016

மத்திய, மாநில அளவில் நல்லாசிரியர் விருதுபெற்ற தமிழறிஞர் திரு. இ.கோமதி நாயகம் அவர்களின் நேர்காணல்


gomathi-nayagam7
கேள்வி: உங்களது பூர்வீகம், பிறப்பு, படிப்பு பற்றி கூறுங்கள்?
பதில்: என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில். நான் பள்ளிக் கல்வி வரை அங்கு உள்ள கோமதி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தேன். அதன் பிறகு தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு என்கிற ஒரு திருத்தலத்தில் உள்ள அரசர் மொழிக் கல்லூரியில் இணைந்து நான்காண்டுகள் படித்து வித்வான் பட்டம் பெற்றேன். 1970ல் வித்வான் பட்டத்தை முடித்த நான் சென்னை வந்து அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கினேன். 2008 முடிய சென்னை கோடம்பாக்கம், வில்லிவாக்கம், ஆவடிக்குப் பக்கத்திலுள்ள தண்டரை போன்ற பள்ளிகளில் ஏறத்தாழ முப்பத்து எட்டு ஆண்டுகள் நான் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் கௌரவ விரிவுரையாளராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றி, 2011வது ஆண்டுடன் என்னுடைய அரசுப்பணி நிறைவு பெற்றது. இது என்னுடைய கல்வி மற்றும் கல்வி சார்ந்த பணிகளைப் பற்றியது.

சித்தர்கள் காட்டும் வாழ்வியல் கல்வி, திருமந்திரம் ஒரு சிறப்பு நோக்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் நான் பெற்றுள்ளேன். மேலும் 1979ம் ஆண்டு முதல் 2003 வரை தமிழக பாடநூல் கழகத்தினுடைய தமிழ் பாடநூல் உருவாக்கக் குழு, பாடத்திட்டக்குழு மற்றும் அது சார்ந்த பணிகளில் ஈடுபட்டு முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடநூல்களை உருவாக்குகின்ற ஒரு நல்ல வாய்ப்பினை இறைவன் எனக்குத் தந்தான். அதோடுகூட தமிழகக் கல்வித்துறையின் சார்பில் மக்கள்தொகைக் கல்வி, பெண் கல்வி மற்றும் கைவினைக் கல்வி, திறந்தவெளி பள்ளிக் கல்வி, வயது வந்தோர் கல்வி இதுபோன்ற பல்வேறு கல்வி நிலையில் பாடநூல்கள், பயிற்சி நூல்களை உருவாக்குகின்ற பணி தமிழகமெங்கும் தொடக்கப்பள்ளி முதல் ஆசிரியர் கல்வி வரை ஆசிரியர் பெருமக்களுக்கு பணியிடைப் பயிற்சி நடத்துகின்ற ஒரு வாய்ப்பு, B.Ed பயிற்சி பெறுகின்ற கல்லூரிகளிலே சிறப்புப் பயிற்சி கொடுக்கின்ற, சிறப்பு சொற்பொழிவாற்றுகின்ற வாய்ப்பு இவற்றையெல்லாம் நான் செய்தேன். இன்றும் இயன்ற அளவிற்கு செய்துகொண்டிருக்கின்றேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment