Tuesday 21 June 2016

வாழ்க வளமுடன் !!!


Siragu- vaazhga valamudan2

நான் எப்படியெல்லாம் இருந்தேன் தெரியுமா?, நான் இப்படி ஆனதற்கு நீங்கள் தான் காரணம். என் வாழ்க்கை மாறியதற்கு நீங்கள் தான் காரணம், என் கனவைத் தொலைத்தது உங்களால் தான். நான் இப்பொழுது வாழும் வாழ்க்கை எனக்குச் சம்பந்தமில்லாத ஒன்று என்று கூப்பாடு போடும் உங்களைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். சற்றே வாய்க்குப் பூட்டுப் போட்டுவிட்டு மனதைத் திறந்து வையுங்கள் சிறிது நேரம் மட்டும். மனதைத் திறக்கத் தெரியாவிட்டால் கண்களையாவது திறந்து படியுங்கள் அது போதும், ஆஞ்சநேயர் போல நெஞ்சைப் பிளக்க முற்பட வேண்டாம்! நீங்கள் செய்யவும் மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த உலகம் எப்படிப்பட்டதென்று முழுமையாகப் புரிந்து கொண்டால் உங்களுக்கே மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். இந்த உலகம், உங்களையே சில நேரங்களில் உங்களுக்கு எதிராக திசை திருப்பும் அற்புத குணம் கொண்டது, ஆனால் அதையும் தாண்டி நமக்கு இருக்கும் ஒரு பெரிய துணையும் பக்க பலமும் யார் தெரியுமா?, நாம் தான் அது!. அதைப் புரிந்துகொள்ளும் வரைதான் சோகங்களுக்கும் வேதனைகளும், புரிந்து கொண்டால் எல்லாம் இனி உங்கள் வசமே. அது எப்படி? இந்த உலகம் ஒரு உயிரற்ற பொருள் தானே! இது எப்படி என்னை திசை மாற்றும் என்று கேட்பீர்களானால், இந்த உலகம் என்னவோ உயிரற்றதாக இருப்பினும் உயிருள்ளவைகளை வைத்துத்தான் நம்மை  ஆட்டிப்படைக்கிறது. குழப்பமாக இருந்தால் வாருங்கள்  உங்களை ஓரிடத்திற்கு அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன் !

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment