Wednesday 1 June 2016

ஆரெயில் நெடுங்கொடி அறிவித்த செய்திகள்


aareyil1

அணி என்பது அழகு என்பதைக் குறிக்கிறது. இலக்கியங்களில் அழகுக்காகவும், பாடலின் பொருளைத் தெளிவாக விளக்கும் பொருட்டும், உவமை, உருவகம் போன்றவற்றைப் புலவர்கள் கையாளுவது வழக்கம். அது அழகுக்கு அணி அணிவித்து அழகை மேம்படுத்தும் ஒரு முயற்சி.

இவ்வாறு செய்யுள்களில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றின் இலக்கணத்தை உரைப்பது அணி இலக்கணம் எனப்படும். அணிகள் பலவகைப்படும். தமிழ்ச் செய்யுள்களில் காணப்படும் அணிகளைக் கூறும் தமிழின் தொன்மையான இலக்கண நூல் ‘தண்டியலங்காரம்’ ஆகும். இந்த நூலில் 35 அணிகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று ‘தற்குறிப்பேற்ற அணி’. இயற்கையில் இயல்பாக நிகழும் நிகழ்வொன்று ஒரு கருத்தைக் குறிப்பதாகக் கூறி இலக்கியங்களில் புலவர்கள் தங்கள் கருத்தை ஏற்றிப் பாடலாகப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படுகிறது.

பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்
(தண்டி, நூ. 56)
(பெயர்பொருள் = அசையும் பொருள்; அல்பொருள் = அசையாத பொருள்)

அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களின் இயல்பான இயற்கை அமைப்பின் மீது புலவர் தனது குறிப்பை ஏற்றுவதைத் தற்குறிப்பேற்ற அணி என்று வரையறுக்கிறது தண்டியலங்காரம் நூல். தற்குறிப்பேற்ற அணி ஒரு குறிப்பிடத்தக்க அணி. இந்த அணி தமிழிலக்கியங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு அணி எனவும்; 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment