Monday 6 June 2016

பழந்தமிழரின் நம்பிக்கைகள்


palanthamilarin-nambikkai-fi
உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானதாகக் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்து பின்பற்றி வருகின்றனர். தங்களது எண்ணத்திற்குத் தக்கபடி ஏற்படுகின்ற குறிப்பினுக்குத் தக்கவாறு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அக்குறிப்புகள் நன்மை சார்ந்ததாகவோ அல்லது தீமை பற்றிய குறிப்பினை வெளிப்படுத்துவனவாகவோ இருப்பதாக பழந்தமிழர்கள் கருதியும் வந்துள்ளனர். அவைகள் பற்றிய பதிவுகளையும் இட்டுச் சென்றும் உள்ளனர். தமிழர்களது இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாது, பிற காப்பிய நூலான சிலப்பதிகாரம் உட்பட சில நூல்களிலும் இவை காணக்கிடைக்கின்றன. அவை பற்றி இப்பகுதியில் காண்போம்.
நாளும் கோளும்:
palanthamilarin nambikkai2

பழந்தமிழர் தங்களது வாழ்வில் ஏதேனும் ஒரு முக்கிய செயலை தொடங்கும்முன் நல்ல நாள் பார்த்தும், நல்ல வேளை பார்த்தும் தொடங்கினர் என எண்ணுதல் தகும். ஏனெனில் இன்றைக்கும் வீட்டில் ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற, நாள் கிழமை பார்ப்பது, தொடர்ந்து வாழ்வியலோடு தொடர்வது நாம் அனைவரும் அறிந்தது. இவ்வழக்கமானது இடையில் புகுத்தப்பட்டதன்று. பொதுவாய் ஒரு பழக்கம் என்பது உடனடியாகப் புகுத்தக் கூடியதும் அல்ல. அவை பல்வேறு மாறுதல் அடைந்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகும். அவ்வகையில் பழந்தமிழர்கள் நாளும் கிழமையும் பார்த்து தங்களது செயலினை ஆற்றியுள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment