Tuesday 31 January 2017

மறக்க முடியுமா? அறிஞர் அண்ணா !!


Siragu annaa1

அறிஞர் அண்ணா – பிற மொழி ஆதிக்கத்தால் தமிழ் நாடு இருள் சூழ்ந்த நிலையில் இருந்தபோது தன் தமிழ் மொழியின் ஆற்றலால் தமிழ் மக்களை தன் பக்கம் இழுத்தவர். சோர்ந்து கிடந்த தமிழ் உள்ளத்தில் மொழி கொண்டு உணர்வை ஊட்டிய பேச்சாற்றல் மிக்கவர். அவரின் பேச்சாற்றல் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.
ஒருமுறை விழுப்புரத்தில் அண்ணா பேச சென்றிருந்தார். தேர்தல் நேரம் என்பதால் பல கூட்டங்களில் பேசிவிட்டு இரவு பத்து மணிக்குத்தான் அங்கு அவரால் வரமுடிந்தது. மக்கள் கண்களில் தூக்கம் குடிகொண்டிருந்தது.
மேடையேறிய அண்ணா இப்படி பேசினார்,
” மாதமோ சித்திரை!
மணியோ பத்தரை!
மக்களுக்கோ நித்திரை!
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை!”
என்றவுடன் மக்களின் தூக்கம் கலைந்து, எழுந்த கையொலி அடங்க வெகு நேரம் ஆயிற்று.

இதேபோல் தென்மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்கு அண்ணா பேச வந்தார். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசு, அண்ணா பேசும் மேடைக்கு எதிரே ஒரு பெண் கையில் விளக்குமாறு வைத்திருப்பதாக உள்ள படத்தை மாட்டியிருந்தனர். அதைக்கண்ட தி மு க தொண்டர்கள் ஆத்திரப்பட்டனர். அவர்களை அமைதிப்படுத்தி அண்ணா இப்படி சொன்னார். அவர்கள் ஒன்றும் தவறாக வைக்கவில்லை! அவர்கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு விளக்குமாறு பணித்திருக்கிறார்கள்! என்றார். காங்கிரசு தொண்டர்கள் வெட்கி தலை குனிந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 30 January 2017

தனித்தமிழும் இனித்தமிழும்


newsletter-nov-26-3

தனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை. வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ஒலித்தூய்மை கொண்டுத் தமிழைக் கண்ணெனக் காப்பது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.
தற்காலத்தின் பேச்சு வழக்கு அதிகமாக அயல் மொழி கலப்புடையதாக உள்ளது. பேச்சு மொழி சார்ந்து எழுதப்படும் படைப்பியலக்கியங்களிலும் அயல்மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.
பேச்சுத்தமிழும் எழுத்துத் தமிழும் வேறு வேறு என்ற நிலையை எய்திவிட்டால் பேச்சுத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எழுத்துத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எனவே பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் ஒன்றைஒன்று அதிக அளவில் சார்ந்தே இயங்கவேண்டும். செய்யுள் நடை, வழக்கு நடை ஆகிய இரண்டு நடைகள் தொன்று தொட்டே வந்துகொண்டுள்ளன. செந்தமிழ், கொடுந்தமிழ் ஆகிய இரண்டும் இருந்துள்ளன. செய்யுள் நடையில் திசைச் சொற்கள் குறைவு. வழக்கு நடையில் திசைச் சொற்கள் கலப்பது ஏற்கத்தக்கது. கொடுந்தமிழைத் தாண்டி, வழக்குத் தமிழைத்தாண்டி செய்யுள் நடை இன்னமும் நிலைத்து நிற்கிறது. அன்றைக்கு எழுதிய சிலப்பதிகாரம் இன்றைக்கும் புரிகிறது என்றால் எழுத்துநடைத் தமிழ் உயரிய நிலையில் பேணப்பட்டு வந்துள்ளது என்றே பொருள்.
Siragu-ellaam-kodukkum-tamil1


இந்நிலையில் தமிழின் தூய்மையைக் காத்தல் வேண்டும் என்றால் பேச்சுத்தமிழில் அயல்மொழி வழக்குகளைக் குறைக்கவேண்டும். நல்ல தமிழ் பேசப்பட வேண்டும். நல்ல தமிழில் எழுதப்பட வேண்டும் திரையிசைப்பாடல்களில் அளவுக்கதிகமான ஆங்கிலக் கலப்பு, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பேச்சுமொழியில் அளவுக்கு அதிகமான அயல் மொழிக் கலப்பு. தொலைக்காட்சித்தமிழில், வானொலித்தமிழில், திரைத்தமிழில் அயல்மொழிக் கலப்பு அதிகம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 29 January 2017

மாணவர் போராட்டமும், அதன் பின்னணியும்.!


Siragu Jallikattu_struggle4

உலகமே வியந்து பார்த்த நம் தமிழ் மாணவர், இளைஞர்களின் அறப்போராட்டம் மிகவும் சிறப்புக்குரியது. சல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் இந்த ஆண்டும் மறுக்கப்பட்டதின் விளைவாக தடையை மீறி நடத்துவோம் என பல இடங்களில் சிறிதளவேனும் நடந்துகொண்டிருக்கையில், அலங்காநல்லூரில் பொங்கலன்று நடத்த முற்படுகையில், சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு மாணவர்களும், இளைஞர்களும் அறப்போராட்டத்தை கையில் எடுத்தனர். அன்றைக்கு மறுநாளே சென்னையில் மெரினா கடற்கரையில், வெறும் 300 பேர் கொண்ட மாணவர்குழு அறப்போராட்டத்தில் இறங்கியது.!

இப்போராட்டம் ஒரு புரட்சி என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு, சாதி, மத வேறுபாடின்றி, பாலினம் கடந்து ஏழு நாட்கள் தொடர்ந்து போராடினார்கள் நம் இளைஞர்கள். இந்த சல்லிக்கட்டுப் போராட்டம், நம் மாநில உரிமைக்கான போராட்டம், நம்மக்களுக்கான போராட்டம், நம் பண்பாட்டிற்கான ஒரு பெரும்போராட்டமாக நடந்தேறியிருக்கிறது. நம் பண்பாட்டின் அடையாள விழாவான பொங்கல் விழாவையொட்டி நடைப்பெறும் இந்த ஏறு தழுவுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறவில்லை. விலங்குகள் நல வாரியம் பீட்டாவின் மனு காரணமாகவும், உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாகவும் நடைபெறாத இந்த மஞ்சுவிரட்டு, இவ்வாண்டு நடைபெறும் என பெரும் ஆவலில் இருந்த நம் மக்கள், இவ்வாண்டும் நடைபெறாது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான், தடையை மீறுவோம் என செயல்பட்டார்கள். இந்த இளைஞர்களைத் தடுத்து, கைது செய்யப்பட்டதின் விளைவாக, மாணவர்கள் இதனை அறப்போராட்டமாக மாநிலம் எங்கும் பல இடங்களில் ஆரம்பித்தார்கள்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 26 January 2017

இளந்தமிழர் படையே வருக!(கவிதை)


Siragu-tamilan

இளந்தமிழர் படையே வருக!-தமிழர்
இனமெனும் உணர்வுடனே வருக! வருக!
பண்டுதமிழ் நாட்டுப் பெருமைதனை காக்க
படைதிரண்டு அணியாய் வருக!வருக!
சமர்க்களம் நோக்கி வருக!-புதுச்
சரித்திரம் படைக்க வருக! வருக!
எட்டுத்திசை யெங்கும்புகழ்த் தமிழ்க்கொடி பறக்க

ஏறுநடையிட்டே தமிழ்வீரர் யாவரும் வருக!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25284

Tuesday 24 January 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9


கிழமந்திரி சிரஞ்சீவி: பிராமணனிடத்திலிருந்த ஆட்டைச் சில வஞ்சகர்கள் எப்படி வஞ்சித்துக்கொண்டு போனார்களோ, அப்படியே நான் கோட்டான்கள் இருக்குமிடம் போய் அவர்களை வஞ்சனை செய்து கொல்கிறேன்.
காக அரசன் மேகவர்ணன்: அவர்கள் எப்படி ஆட்டைக் கொண்டு போனார்கள்?
Siragu panchadhandhira kadhaigal9-1

சிரஞ்சீவி: ஒரு தேசத்தில் மித்திரசர்மன் என்னும் பிராமணன் இருந்தான். மாசிமாதத்தில் யாகம் செய்வதற்காக ஒரு பசு அவனுக்குத் தேவைப் பட்டது. அதற்காகப் பக்கத்தில் உள்ளதொரு ஊருக்குப் போய், தகுதியுள்ள ஒருவனிடம் ‘பசு வேண்டும்’ என்று கேட்டான். “நீ நல்ல காரியத்திற் குத்தான் கேட்கிறாய், ஆனால் என்னிடம் பசு இல்லை. ஆடுதான் இருக்கிறது. அதைக் கொண்டு யாகம் செய்” என்று ஒரு பெரிய ஆட்டைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கொண்டுவரும் வழியில் அது அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியது. அதனால் அதை அவன் தோள்மேல் தூக்கிக்கொண்டு வந்தான். சில திருடர்கள் அதைத் தொலைவிலிருந்து பார்த்தார்கள். ஆட்டை எப்படியாவது கைப்பற்றி நம் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். எனவே அவர்களில் ஒருவன் வந்து பிராமணனிடம் சொல்கிறான்:

நித்தியம் அக்னி வளர்க்கின்ற பிராமணனே, நீ ஒழுக்கமுள்ளவனாக இருந்தும் இப்படிப்பட்ட பழியான காரியத்தை ஏன் செய்கிறாய்? ஓர் ஈனமான நாயைத் தோள்மேல் எப்படிக் கொண்டுவருகிறாய்? உங்கள் சாதிக்கு நாய், கோழி, சண்டாளன், கழுதை ஆகியவற்றைத் தொடக்கூடாது என்று சாத்திரம் இருக்கிறதே, தெரியாதா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 23 January 2017

ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு


Siragu kaliththogai1

பாட்டும் தொகையும் என அறியப்படும் சங்க இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. பாவகையினால் பெயர் பெற்ற கலித்தொகை ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், ‘கல்வி வலார் கண்ட கலி’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுவது. சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்ட நூல்களில் அனைத்து நூற்றைம்பது பாடல்களும் சிதைவின்றி கிடைப்பதும் இதன் தனிச்சிறப்பு. நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் கலித்தொகைக்குக் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் கி. பி. 1887 ஆம் ஆண்டில் கலித்தொகையை முதன்முதலில் ஏட்டுச் சுவடிகளை ஆய்ந்து நூலாகப் பதிப்பித்தார்.
                 கடவுள் வாழ்த்து (சிவனை வாழ்த்தும் 1 பாடல்),
                பாலைக்கலி (பெருங்கடுங்கோன் எழுதிய 35 பாடல்கள்),
                குறிஞ்சிக்கலி (கபிலன் எழுதிய 29 பாடல்கள்),
                மருதக்கலி (மருதன் இளநாகன் எழுதிய 35 பாடல்கள்),
                முல்லைக்கலி (அருஞ்சோழன் நல்லுருத்திரன் எழுதிய 17 பாடல்கள்),
                நெய்தற்கலி (நல்லந்துவன் எழுதிய 33 பாடல்கள்),

ஆகிய பாடல்கள் கலித்தொகையில் இடம் பெற்றுள்ளன. பழந்தமிழ்ப் பாடலொன்று ஒவ்வொரு கலிப்பாடல்கள் தொகுப்பும் யார் யாரால் பாடப்பெற்றது என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும், பாடல்களின் அமைப்பையும் நடையையும் கொண்டு நெய்தல் பாடிய நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்து முதற்கொண்டு அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் என்பதும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற இலக்கிய ஆய்வாளர் சிலரின் கருத்தாகவும் இருக்கிறது[1]. மற்ற புலவர்களின் பெயர்களை அறியத் தரும் பழம்பாடலுக்கும் ஓர் உண்மை அடிப்படையாக இருக்கக்கூடும் என்பதால் பிற புலவர்களையும் அந்தந்த கலிப்பாடல்களின் ஆசிரியராகவே வழங்குவது தமிழறிஞர் மரபு. இப்புலவர்களுள் இருவர் அரசர்கள் என்பது கலித்தொகையின் சிறப்பு. ஐந்திணைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கலித்தொகை பாலைத்திணைக்கு முதலிடம் கொடுத்துத் துவங்குகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 19 January 2017

பொங்கல் திருநாள் (கவிதை)


Siragu-pongal6

செங்கரும்புச் சுவைதேறும் செந்தமிழர் புதுப்
பொங்கள் நன்நாள் மலர்ந்தது!-எங்கும்
புதுப்பொலி வுடனேஉழுவார் உள்ளம் எல்லாம்
புத்துணர் வுடனே ஒருவருக் கொருவர்
பொங்கல் நல்வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25192

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8


siragu-panjathandhira-kadhaigal

இரண்டாவது அமைச்சன்: அவன் சொன்னதில் சிறிதும் நன்மை இல்லை. பெரிய துன்பங்கள் நேர்கின்றபோது பகைவருடன் சமாதானம் செய்யக் கூடாது. நெருப்பினால் காய்ச்சிய நீர் அந்த நெருப்பை அவிக்காதா? நம்மைக் கோட்டான்கள் வருத்துகின்றன என்று அவர்களோடு நாம் சமாதானமாகப் போனாலும் அவர்கள் நம்மைக் கொல்லுவார்கள். ஆதலால் மனோபலத்தோடு எதிரிகளைக் கொல்லவேண்டும். வீரத்தினால் உயர்ந்திருப்பவனே உயிருள்ளவன். மற்றவர்கள் பிணத்துக்கு ஒப்பானவர்கள்.

அரசன் (மூன்றாம் அமைச்சனைப் பார்த்து): உன் கருத்து என்ன, சொல்.

மூன்றாம் அமைச்சன்: அரசனே, கேள். பகைவன் தன்னை விட வலிமை உடையவனாக இருந்தால், பொறுத்துக்கொண்டு போகவும் தேவையில்லை, அவனோடு சண்டையிடவும் தேவையில்லை. வேறொரு இடத்திற்குச் சென்று விடுவதே நல்லது. “இந்தச் சமயத்தில் சண்டை செய்யலாகாது” என்று எவன் தன் இடத்தைவிட்டு அந்தச் சமயத்துக்குத் துறந்து போய்விடுகிறானோ அவன் பாண்டவர்களைப் போல வெற்றியடைகிறான். எவன் செருக்குடன் போர் செய்கிறானோ அவன் குலம் அழிந்துபோகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

பண்பாட்டு அறிதல்களில் தொடர்ச்சி


Siragu-culture5

மானுட அறிதல் ஒரு தொடர் செயல்பாடு. பிற மனிதர்கள் அறிந்தவற்றை கற்றுக் கொள்ளும் திறனை பெற்றிருப்பதால்தான் மானுட சமூகம், பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு, அறிவு செயல் வளர்ச்சிகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இன்றைய தனி மனிதன் அறிந்திருப்பது அனைத்தும் முன்னோர்கள் அறிந்தவற்றின் ஒரு துளி மாத்திரமே. முன்னோர்கள் என்பது, மானுட சமூகத்தின் மொத்த முந்தைய தலைமுறைகள் அனைத்தையும் இங்கு குறிக்கிறது. இக்காலத்தில் புதியதாக எதையாவது அறிகிறோமானால், அது முன்னோர்கள் அறிந்தவற்றை மேடையாக்கி, அதன் மேல் நின்றுகொண்டுதான் அறிகிறோம். 

ஆனால் அத்தகைய புதிய அறிதல்கள் நிகழ்வது மிகவும் அபூர்வமே. அதாவது, நாம் தனிமனிதர்கள் அறிந்தவை எனக் கூறுவனவற்றில் பெரும்பான்மையானவை முன்னோர்களின் சுய தேடுதலால் தங்கள் உயிரை எரித்து அடைந்த ஒளியில் அறிந்தவைகளின் சில துளிகளே. அவர்கள் அளித்த அறிவுக்காக நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அத்தகைய அறிதலின் தொடர்ச்சி மானுட இயல்பு. ஆனால் தங்கள் அறிவு முன்னோர்களின் கொடையே என அறியும் மனம், அறிதலில் அடுத்த பாய்ச்சலுக்கான ஏவுதளம். அத்தகைய மனம் முன்னோர்களின் அறிதலை அதற்கான மரியாதையுடனும் எனவே புதிய அறிதலுக்கான விழிப்புடனும் அணுகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 18 January 2017

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”- கவிஞர் இன்குலாப்


Siragu manusangadaa1

21 ஆம் நூற்றாண்டின் பொதுவுடைமை தத்துவத்தின் புரட்சிக்கவி இன்குலாப் என்றால் அது மிகையாகாது. எந்த சூழ்நிலையிலும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது தன் கவிதையை ஒடுக்கப்பட்டோரின் ஆயுதமாக ஏந்தத் தந்தவர். அவர் கவிதைகள் வெறும் சொற்கோர்வை அன்று தீப்பிழம்புகள். தன் தொடக்க காலக் கவிதைகளை கவிஞர் இளவேனில் நடாத்திய கார்க்கி இதழில் எழுதினார் இன்குலாப்.

இசுலாமிய சமூகத்தில் பிறந்திருந்தாலும் தன் வாழ்நாளின் இறுதி வரை பகுத்தறிவாளராக வாழ்ந்தவர். அதனால் தான்,
” சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளிதோரும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன் ” என்ற சமயம் கடந்து அவரால் கவி புனைய முடிந்தது.

தன் கவிதைகளைப் பற்றி இன்குலாப் அவர்கள் இப்படித்தான் கூறுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழே! தாயே! பள்ளி எழுக! தமிழ் உயர்வே துள்ளி வருக!


newsletter-nov-26-3

மார்கழி மாதத்தின் இனிய கீதம் திருப்பள்ளி எழுச்சி. அயர்ந்து தூங்கும் இறைவனை இனிய தமிழால் எழுப்பும் மரபு பக்தி மரபு. பாரத மாதாவைத் துயில் எழுப்பிய மரபு பாரதியின் மரபு. உறங்கும் தமிழரை தமிழ்த்தாய் கொண்டு எழுப்பும் நன்மரபு ஒன்றினைத் தோற்றுவிக்கிறார் மயிலம் ஆ.சிவலிங்கனார். தமிழ்த்தாய்க்கு அவர்  திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார். பத்துப் பாடல்களை உடைய இத்திருப்பள்ளி எழுச்சி  திறம் இன்றைக்குத் தமிழைத் தமிழரை விழிப்படையச் செய்யும் வல்லமை கொண்டது.


தொல்காப்பிய உரைவளம் கண்டவர் ஆ.சிவலிங்கனார். தமிழிலணக்கதின் தன்னிகரற்ற கணக்கர் அவர். அவர் மயிலம் கல்லூரியில் தமிழ் கற்பித்தவர். அவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலா வந்தவர். அவர் மென்மையானத் தமிழ்ப் பேச்சுக்குச் சொந்தக்காரர். அவரின் மாணிக்கவாசகர் காலம் பற்றிய ஆராய்ச்சி முக்கியமானது. அவரின் தமிழ் இலக்கணச் சிந்தனைகள் தமிழ் கற்போருக்கு எளிய வழிகாட்டிகள். தமிழ் இலக்கணத்தையும், தமிழ் உயர்வையும் எண்ணிய அவரின் உள்ளம் மேன்மையானது. அவர் பாடிய தமிழ்த்தாய்த் திருப்பள்ளி எழுச்சி தமிழர் உறங்கும் நேரமெல்லாம் பாடத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா


Siragu pongal1

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்.’
என்ற வள்ளுவப்பெருந்தகையின் கருத்துக்கேற்ப நாம் எல்லோரும் உழவர்கள் பின்னே சென்று கொண்டிருப்பவர்கள் தான்.!

உழவு இல்லையேல் உணவு இல்லை, உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை. இந்த உழவு தான் மனிதர்களை நாகரீக வாழ்வு நோக்கி நகர்த்தியிருக்கிறது. காட்டுவாசிகளான நம் ஆதி மூதாதையர்கள் ஆற்றங்கரையோரமாய் குடில் அமைத்து வாழ்வதற்கு ஆதாரமாய் இருந்தது வேளாண்மை என்ற ஒன்றை ஏற்றுக் கொண்டதினால் தான்.!


தமிழர்களாகிய நாம், நமது வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் விழா தான் இந்த பொங்கல் விழா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். விளை நிலத்தில் விதை விதைத்து, நாற்று நட்டு, பாத்திக்கட்டி, நீர் விட்டு, நெற்பயிரை வளர்த்து பிறகு அறுவடை செய்து, அதன் பின்னே நமக்கு கிடைக்கும் புதிய நெல்லைக் கொண்டு, புதுப்பானையில் வெல்லத்துடன் சேர்த்து பொங்கலிட்டு, அந்த இனிப்பை அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழும் விழா நம் தைத்திருநாளாம் பொங்கல் விழா.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 12 January 2017

உடல்நலத்திற்கு நன்மையளிப்பதும் தொடர்வதற்கு எளிதானதுமான உணவுமுறையே சிறந்த உணவுமுறை


siragu-diet2

ஒவ்வொரு புத்தாண்டும் உடல் எடையைக் குறைப்பதற்கான செயல்முறைகளைக் கடைப்பிடிப்பதற்கும், உடல்நலத்திற்குக் கேடான தீய பழக்கவழக்கங்களை கைவிடுவதற்கும் உறுதி மொழிகளை எடுத்துக் கொள்வது பலருக்கு வழக்கம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மாறிப்போனாலும், தொடர்ந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது மிகச் சிலரே.


படிப்படியாகத் திட்டங்களை செயல்படுத்தாமல் அதிக உடற்பயிற்சி, அடியோடு உணவைக் குறைப்பது போன்ற யாவற்றையும் ஒரேநாளில் செய்ய நினைத்து, உடலும் மனமும் அயர்ச்சியுற்று தளர்ந்து போவதே இத்தோல்விக்குக் காரணம். இப்பிழையைத் தவிர்க்க மருத்துவர்களும், பயிற்சியாளர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால், ஆர்வக் கோளாறால் தங்கள் உடலை வருத்திக் கொள்வதும், பிறகு திட்டங்களைக் கைவிடுவதும், மீண்டும் அடுத்த ஆண்டு திட்டமிடுவதும் வாடிக்கையாக இருப்பதே சராசரி மக்களின் வாழ்க்கை. அமெரிக்காவில் 50% அதிகமானவர்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறார்கள் என்றும், உடல் பருமன் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் “காலப் கருத்தாய்வு” (Gallup Poll) தெரிவிக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 11 January 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7


siragu-panjathandhira-kadhaigal

இரணியகன்: நீ எனக்குப் பகைவன். உன்னோடு நான் நட்புக் கொள்ளலாகாது. பகைவன் தனக்கு அனுகூலமாக நடப்பவனாக இருந்தாலும் அவனோடு நெருங்கிப் பழகலாகாது. தண்ணீர், வெந்நீராக இருந்தாலும் நெருப்பை அவிக்கவே செய்யும். எது தக்கதோ அதைச் செய்ய வேண்டும். தண்ணீரில் வண்டியும் பூமியின்மேல் கப்பலும் செல்ல இயலுமா? ஆகவே பகைவர்களிடத்திலும், மனம்மாறும் வேசியரிடமும் நம்பிக்கை வைக்கலாகாது.

காகம்: நான் உன்னுடனே நட்புக் கொள்வேன். இல்லாவிட்டால் பட்டினியாக இருந்து இங்கேயே என் உயிரை விடுவேன். நெருப்பின் வெப்பத்தினால்பொன் முதலியவை உருகி ஒன்றாகின்றன. ஏதாவது ஒரு காரணத்தினால் விலங்கு பறவைகள் முதலியன நட்பினை அடைகின்றன. பயத்தினாலோ, வேறு ஏதாவது ஓர் ஆசையினாலோ மூடர்களுக்கு சிநேகிதம் உண்டாகிறது. சாதுக்களின் சிநேகிதம் நல்ல பண்பினைக் கண்ட இடத்தில் உண்டாகிறது. மண்பானை சீக்கிரம் உடைந்துபோகிறது. பிறகு அது பொருந்துவதில்லை. இப்படித்தான் கெட்டவர்களுடைய நட்பு. உலோகக் குடம் சீக்கிரம் உடையாது, உடைந்தாலும் பிறகு பொருந்தும். நல்லவர்களுடைய நட்பும் இதுபோன்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 10 January 2017

பெண் விடுதலையும், அதன் அரசியலும்


siragu-pennukku-edhiraana1

நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், பெண்களின் நிலைமை முழுதும் சீரடையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நாமும் பல ஆண்டுகளாக பெண் விடுதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் பின்னே, பெண்களை மேலே வரவிடாமல், அழுத்தி, மண்ணுக்குள் புதைக்கும் ஆணாதிக்க அரசியல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.!


அதுவும் சமீபகாலமாக பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் முதலில் பலியாவது பெண்கள் தான். பெண்களுக்கு படிப்பு ஒரு அரண் என்று சொல்லி படிக்க வைக்கிறோம். ஆனால் அந்த படிப்பு கூட பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முழுமையான விடுதலையைப் பெற்றுத்தரவில்லை என்பது தான் ஒப்புக்கொள்ள வேண்டிய வருந்தத்தக்க உண்மை.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 9 January 2017

ஆரிய திராவிட கிரகணம் – ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு)


siragu-jallikattu

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் மாதிரி இது என்ன புதிதா ஆரிய திராவிட கிரகணம் என்று கேட்கிறீர்களா? கிரகணத்தன்று சூரியனும் நிலாவும் ஓரே நேர்கோட்டில் வருவது போன்று ஆரிய கொள்கைகள் கொண்டவர்களும் திராவிட கொள்கைகள் கொண்டவர்களும் ஒரே நேர்கோட்டில் செயல்படும் சூழ்நிலைகள் தான் ஆரிய திராவிட கிரகணம். அவ்வப்போது நடக்கும் இந்த மறைமுக நிகழ்வு தற்போது ஜல்லிக்கட்டை ஒட்டி வெட்ட வெளி மைதானத்திற்கு வந்திருக்கின்றது.


இங்கு ஆரியம் என்று பொதுவாக ஒரு சாதியினரை குறிப்பிடவில்லை. உழைத்தது சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு செல்வம் கொண்டு பொழுதுபோக பொது வாழ்க்கை வாழ்பவர்களில் சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேன். அவர்கள் இலங்கை, பாலஸ்தீன், ஆப்பிரிக்கா என்று உலகில் இருக்கும் அத்தனை மனிதர்கள் படும் துன்பங்களை எல்லாம் போராடி வழக்குகள் வாதாடி முழுமையாக தீர்த்து விட்டதால் மீதம் இருக்கும் பொழுதுகளை விலங்குகளை காக்க களமிறங்கி இருக்கும் பணக்கார பார்ப்பனர்ககளை மட்டுமே இங்கு ஆரியம் என்று குறிப்பிடுகிறேன். இந்த பணக்கார பார்ப்பனர்களுக்கு உழைக்கும் மக்கள் எல்லோரும் இன்னும் நாகரீகம் அடையாதவர்கள். உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறைகள் அனைத்தும் காட்டு மிராண்டித்தனம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 8 January 2017

தலையங்கம்


siragu-demonetization1

உலக நாடுகளில் இன்றைய இந்தியா மிகப் பழமையான நாகரீகத்தைக் கொண்டது. 1947-க்குபின் ஆங்கிலேயரால் இந்தியா என்று அழைக்கப்பட்ட இந்நாடு 1947-க்குமுன் பல நாடுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு நாட்டிற்கும் தனி பண்பாடு, மொழி, உடை, உணவு மற்றும் வாழ்வுமுறை இருந்து வந்தது. இந்திய ஒருங்கிணையம் ஒரு நாடாக இருந்தாலும், இன்றும் பல தேசிய இனங்களைக்கொண்ட ஒருங்கிணையமாகத்தான் இருந்து வருகிறது. வட இந்தியரையும் தென்னிந்தியரையும் பார்த்தாலே இது தெரியும். மிகப் பழமையானதொரு நாட்டின் பழக்க வழக்கங்களை ஒரு நாளில் மாற்றுவது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம். பலநூறு ஆண்டுகளாக இருந்து வரும் பொருளாதாரத்தை மேற்கத்திய பொருளாதாரமாக மாற்றுவது மிக எச்சரிக்கையாகவும், பொறுமையாகவும் சிந்தித்து சிறிது சிறிதாக செயல்படுத்துவதுதான் உகந்தது. ஆனால் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் அவசரகதியில் ஒரு முடிவை எடுத்து, நேர அவகாசமேதும் கொடுக்காமல் ஒரு முக்கிய முடிவை மக்களின்மேல் திணித்துள்ளார்கள்.


இந்தியா போன்ற பழம்பெரும்நாடுகளின் பொருளாதாரம் 80 விழுக்காட்டிற்குமேல் பணத்தினால்தான். இன்றும் இந்தியாவில் மின் வசதி, இணைய வசதி, சாலை வசதிகளே இல்லாத கிராமங்கள் பல உள்ளன, நாட்டு நடப்புகள் தெரியாமல் வாழ்ந்து வருபவர்கள் கோடிக்கணக்கினர். இந்த நிலையில் இந்தியத் தலைமையமைச்சர் ஓரிரவு 8 மணியளவில் தொலைக்காட்சியில் தோன்றி இன்னும் சிலமணி நேரத்தில் இந்தியாவில் புழங்கும் 86% பணம் செல்லாது என்று அறிவிப்பது முட்டாள்தனத்திலே முட்டாள்தனமானது. பல கிராம மக்களுக்கு இது குறித்து எந்த அறிவிப்புமில்லாமல் இந்த முட்டாள்தன முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 5 January 2017

பிள்ளை மொழிக்கு ஆராரோ!(கவிதை)


Siragu-ellaam-kodukkum-tamil1

அமுதம் சிந்தும் பிள்ளைத் தமிழே
அமிழ்தாய் இனிக்கும் மழழை மொழியே
ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ
மழலை மொழியின் உரைநடை கவியே
மாதவர் போற்றும் கன்னித் தமிழினமே
ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ

காப்பனிந்த பருவம் முதலேநீ பிதற்றும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 4 January 2017

அமுதசுரபி (சிறுகதை)


siragu-amuthasurabi2

ஒருஊரின் நடுவே இரண்டு நாவல்மரங்கள் இருந்தன. ஒன்று கனிதரும் மரமாக (கனிநாவல்) இருந்தது. மற்றொன்று கனிதராத மரமாக (மொட்டைநாவல்) இருந்தது. கனிநாவலின் பழங்களை ஊர்மக்கள் அனைவரும் பெற்று உண்டுமகிழ்ந்தார்கள். அம்மரமும் அனைவருக்கும் உண்ணக்கனிகள் தருகிறோம் என்ற பெருமிதத்துடன் இருந்துவந்தது. ஒருநாள் கனிநாவலைப் பார்த்து மொட்டைநாவல் ஏளனமாகச் சிரித்தபடி “நீ தரும் கனிகளைப் பறிப்பதற்காக மனிதர்கள் உன்னைப்பிடித்து உலுப்புகிறார்கள்! உன் கொப்புகளை வளைக்கிறார்கள்! நீ உறுப்புகளை இழந்து கொண்டிருக்கிறாய்! இந்தநிலை நீடித்தால் விரைவில் நீ நலிவடைந்து வீழ்ந்துவிடுவாய்!”–என்றது. அதற்குக் கனிநாவல் “பிறருக்குக் கொடுப்பது நல்லவிசயம்! அவ்வாறு கொடுப்பதால் எனக்கு நலிவு ஏற்படும் என்றால் அதை நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்வேன்!”என்றது.


நாட்கள் நகர்ந்தன. ஒரு மூன்றுவருடங்கள் ஆகியிருக்கும். கனிநாவல் மேலும் கிளைகள் விட்டு ஒருவிருட்சம் போன்று பெரிதாக ஓங்கி வளர்ந்து நின்றது. மொட்டைநாவலோ வளர்ச்சிகுன்றி நலிவடைந்து தனது பொலிவை இழந்து நின்றது. அதற்கு ஆச்சரியம். நான் யாருக்கும் கனிகள் தரவில்லை, யாரும் என்னைப்பிடித்து உலுப்பியதில்லை, என்கொப்புகளை வளைத்ததுமில்லை, ஏன் பறவைகள்கூட என்னை அதிகம் அண்டியதில்லை, அப்படி இருக்கும்போது எனதுசக்தி முழுவதும் எனக்குத்தானே பயன்பட்டிருக்க வேண்டும்? நான் தானே விருட்சம் போன்று ஓங்கி வளர்ந்திருக்க வேண்டும்? ஆனால் கனிநாவல் வளர்ந்தது எப்படி? இந்தக்கேள்வி மனத்தில் எழ அது கனிநாவலிடம் கேட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 3 January 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6


(சித்திரக்கிரீவன் என்னும் புறாவின் கதை)
கொஞ்ச தூரம் பறந்தபிறகு புறா அரசன் தன் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:
“கண்டகி ஆற்றின் கரையில் இருக்கும் சித்திரவனத்தில் என் நண்பனாகிய எலி அரசன் இரண்யகன் என்பவன் இருக்கிறான். அவன் நமது வலையை அறுப்பான், அங்கே செல்லுங்கள்.”
இதைக் கேட்டுப் புறாக்கூட்டம் பறந்துசென்று எலி அரசன் வளையருகில் இறங்கியது. தனக்கு எவ்வழியிலும் ஆபத்து நேரிடலாம் என்று வளைக்கு நூறு வழிகள் செய்து வைத்திருக்கும் எலியரசன், புறாக்கள் இறங்கிய ஒலியைக் கேட்டு பயந்து உள்ளேயே இருந்தது.
சித்திரக்கிரீவன் (புறா அரசன்): இரண்யகா, நண்பா! எங்களோடு ஏன் பேசவில்லை?
தன் நண்பன் குரலைக் கேட்ட எலியரசன் வளையிலிருந்து வெளிவந்தது.

siragu-panja-thandhiram-story6-1

இரண்யகன்: நான் மிகவும் புண்ணியம் செய்தவன். ஆகவே சித்திரக்கிரீவன் ஆகிய என் நண்பன் என் வீட்டுக்கு வந்தான். இவ்வுலகத்தில் மனம் ஒத்த நண்பர்களோடு பழகுவதைவிட வேறு ஆனந்தம் ஏது?
பறவைகளின் துன்பத்தை அது நோக்கியது.
இரண்யகன்: நண்பா, நீ எல்லாரைக் காட்டிலும் புத்திக்கூர்மை உடையவன் ஆயிற்றே, உனக்கு இப்படிப்பட்ட சோதனை எப்படி ஏற்பட்டது?

சித்திரக்கிரீவன்: எந்தக் காலத்தில் எது நடக்குமோ அது நடக்கும். விதி வலியது. அதற்கு முன் எந்த உபாயம் வெல்லும்? கடல் பெருகி மேலிட்டு வந்தால் அதற்குக் கரை ஏது?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 2 January 2017

திருமண வயது எட்டாத பெண்களின் திருமணங்கள் – ஒரு பார்வை


child-marriage-4

இந்தியா போன்று குழந்தைத் திருமணம் அதிகளவில் நடைபெறும் நாடுகளில், அதனைத் தடுக்க திருமணம் செய்து கொள்ளும் இருபாலருக்கும் சட்டப்படி திருமண வயதாகவில்லை எனின் அந்தத் திருமணம் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பம் எப்போதும் உண்டு. பெரும்பாலான சமயங்களில் பெண்ணுக்கு 18 வயதாகவில்லை எனின் அந்தத் திருமணத்தை செல்லாத திருமணம் (void marriage) என நீதிமன்றங்கள் அறிவிப்பதில்லை. மாறாக விலக்கத்தக்க (voidable marriages) என்றே நீதிமன்றங்கள் கருதுகின்றது. அப்படி நடந்திடும் திருமணங்களில் அந்தக் குழந்தைத் திருமணத்தில் சம்மந்தப்பட்ட மணமகன் அந்தப் பெண்ணின்  இயற்கை பாதுகாவலராக இருக்க முடியாது. Hindu Minority and Guardianship Act 1956 6(c) இன் படி திருமண வயது வராத மணப்பெண்ணின் கணவன் இயற்கை பாதுகாவலர் என்று இருந்தாலும் Prohibition Of Child Marriage Act 2006 என்ற சட்டத்தின் படி மேலே சொல்லப்பட்ட 6(c) எனும் சட்டம் செல்லத்தக்கதல்ல.


ஒரு பெண் திருமண வயது வரும் முன்னர் ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி அவரை திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தங்கள் மகளை மீட்டுக்கொடுக்கக் கூறுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள், நீதிமன்றம் என்ன செய்யும்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=24893