Wednesday 30 December 2015

தற்காலக் கல்வி முறை: பகுதி -10


tharkaalakkalvi3
கல்வித்துறையில் தற்போது தேவைப்படும் மாற்றம் எதுவெனில், மதிப்பிற்குரிய ஆழ்ந்த அறிவினை உருவாக்கும் கோட்பாடு மட்டுமேயாகும். அனைத்துத் தரப்பு மாணவர்களின் பின்புலத்தையும் கருத்தில் கொண்டு இக்கோட்பாட்டை வடிவமைக்க வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்விச் சூழலில், சமக்கல்வி வாய்ப்பளித்து அவரவர் திறமை ஆற்றலுக்கேற்ப முழுமையான வளர்ச்சி பெற உதவுவதுதான் கல்வியின் முக்கியச் சவாலாகும். பழங்காலக் கல்வியைவிட இக்காலக் கல்வி முறை சவால் நிறைந்தது. காரணம் அனைவருக்கும் வேலை தருவது என்பது இயலாத நிலை. இக்கால சமூகச் சவால்களை எதிர்நோக்கும் அளவில் அனைவரையும் உருவாக்குவது கல்விக்கு விடுக்கப்பட்ட அறைகூவல். இந்தியாவில் தற்போது பல்வேறு வகையான கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன.
மத்திய நடுவண் அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் தங்களுக்கு என்று தனித்த கல்விக் கொள்கையைக் கொண்டு செயல்படுவதால் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. இதனால் மக்களிடையே எந்த கல்விமுறை சிறந்தது என்ற குழப்பம் நிலவுகிறது.
tharkaalakkalvi5
மாநில கல்வித்திட்ட முறையில் பயிலும் மாணவர்களுக்குமிடையே உயர்வு தாழ்வு மனப்பான்மை தோன்றுகிறது. இவ்வாறன்றி மொழிப் பாடங்களைத்தவிர மற்ற அனைத்துப் பாடங்களையும் நாடு முழுமைக்கும் ஒரே பாடத்திட்டமாக வகுப்பதென்பது உயர்வு-தாழ்வு மனப்பான்மையைப் போக்கும். இதனால் போட்டித் தேர்வுகள் என்பது சிக்கலுக்குரியதாக இருக்காது. அதேபோல மாணவர்கள் கல்வி கற்கும் இடங்களில் வேறுபாடு எதன் பொருட்டும் காணக்கூடாது என்பதும் சமூக நீதிக்கொள்கையாகும்.

என் மாணவர்களிடம் கல்வியில் என்ன சிக்கல் உள்ளது என்று கேட்டபோது ‘கல்வியே இன்று சிக்கல்தான்’ என்று பதில் தந்தார்கள். ‘ஏன் அப்படி?’ என்று கேட்டபோது புரியாத மொழியில் கல்வி, என்ன படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம் என்பது தெரியாமலேயே எதையோ படிப்பதாக அந்நியப்பட்டு நிற்கும் வேலையில்லா சூழல்என்றார்கள்………

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சென்னை வெள்ளத்தில் 130 பேரை காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டவர்..


Peter Van Geit (3)
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் பீட்டர் வெய்ன் கெய்ட். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டம் பாலவாக்கத்தில் வசித்து வருகிறார். தான் நடத்திவரும் மலையேறும் குழுவுடன் இணைந்து சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் பீட்டர் வெய்ன் கெய்ட் பத்திரமாக மீட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றையும் பீட்டர் வழங்கினார். கிட்டத்தட்ட 3000 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். தற்போது பீட்டரும் அவரது குழுவினரும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று தேங்கிக் கிடக்கும் குப்பைகளையும் சாக்கடை அடைப்புகளையும் தூய்மைப்படுத்தி வருகின்றனர். பீட்டர், சாக்கடையில் இறங்கி தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி வருவதோடு, குப்பைகளை கைகளால் அள்ளி, அதனை மிதிவண்டிகளில் ஏற்றி அகற்றி வருவது சென்னை மக்களை வியப்படையச் செய்துள்ளது. இளைஞர்கள் அவரது சேவையைப் பார்த்து வியந்து போவதோடு தாங்களும் அவருடன் களம் இறங்கி வருகின்றனர். ‘சிறகு’ அவரை சந்தித்தது. அவருடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப்பற்றி?
பீட்டர் வெய்ன் கெய்ட்: பெல்ஜியம் நாட்டின் Lokeren தான் என் சொந்த ஊர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்தேன். பாலவாக்கத்தில் தங்கி உள்ளேன். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறேன். இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்’பை (மலையேறும் குழு) உருவாக்கி நடத்தி வருகிறேன்.
உங்கள் மலையேறும் குழு பற்றி?

பீட்டர் வெய்ன் கெய்ட்: தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். நாங்கள் நாடு முழுவதும் உள்ள மலைப் பிரதேசங்களில் பயணம் செய்து, அங்குள்ள குப்பைகள், பிளாஸ்டிக், கழிவுப் பொருட்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மேலும் உறுப்பினர்களுக்கு காட்டுயிர்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 28 December 2015

பாலின சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா


paalina samaththuvam4
பாலின சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா … ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் (டிசம்பர் 15, 2015) வெளியிட்ட அறிக்கையில் காணும் தகவல் இது. ஐ.நா.வின் வளர்ச்சி திட்டப் பிரிவு (United Nations Development Programme – UNDP) ஒவ்வொரு நாட்டின் மனிதவள மேம்பாட்டின் நிலையை அளவிடும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் (Human Development Index -HDI) அடிப்படையில் நாடுகளின் நிலையை ஆய்ந்து, தரவரிசைப்படுத்தி ஆண்டறிக்கைகள் வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையில் மனிதவளம் மேம்பாடு அடைவதன் அறிகுறியாக; நீண்ட ஆரோக்கியமான ஆயுள், கல்வி கற்கும் வாய்ப்பு, அடிப்படை வசதிகள் கொண்ட வாழ்க்கைத் தரம் (a long and healthy life, access to knowledge and a decent standard of living) ஆகியவை உலகளவில் 188 நாடுகளுக்கிடையே ஒப்பிடப்பட்டுத் தரவரிசைப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சியில் இருக்கும் அரசு இத்தகவலை உரிய முறையில் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத் திட்டத்தை வகுக்க உதவ வேண்டும் என்பதே இந்த ஐ. நா. அறிக்கை வெளியிடப்படுவதன் நோக்கம். தங்களது நாட்டு மக்களின் உடல்நலம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மற்றநாட்டு தரவரிசையுடன் ஒப்பிட்டு நாட்டு மக்களும் தங்களது வாழ்க்கை நிலை பற்றிய ஒரு புரிதலை இந்த அறிக்கையின் மூலம் பெறலாம். உடல்நலம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள் தனிமனித முன்னேற்றத்தையும் குலைக்கும், அதனால் அந்த நாடும் வளர்ச்சியில் பின்தங்கும்.

paalina samaththuvam2
அறிக்கைகள் வெளியிடப்படுவது என்பது முதல் படிதான். அதில் உள்ள தகவல் சேரவேண்டியவர்களைச் சென்று சேர்கிறதா என்பதே மிக முக்கியமானது. இந்த அறிக்கை கூறும் தகவல்கள் பற்றி இந்தியப் பத்திரிக்கைகளில் ஆங்கிலப் பத்திரிக்கைகள் கவனம் செலுத்திய அளவிற்குத் தமிழ் நாளிதழ்கள் கவனம் செலுத்தவில்லை. ஓரிரு இணைய இதழ்களும் ஓரிரு பத்திரிக்கைகளும் செலுத்திய கவனமும் அந்த அறிக்கையின்படி இந்தியப் பெண்களில் 80 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை, இந்தியப் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பது போன்ற மிக மேலோட்டமான தகவல்களே. அதாவது, தமிழ்த் திரைப்படச் சங்கத்தின் தேர்தலுக்குக் கொடுத்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஊடகங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. எனினும் கொஞ்சம் விரிவான செய்தியாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது இந்திய மக்களின் நிலை என்ன என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை தமிழ்ப் பத்திரிக்கைகள் உணர வேண்டியத் தேவை இருக்கிறது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 27 December 2015

கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் நேர்காணல்


kasi aananthan
கேள்வி: உங்கள் பிறப்பு, இளமைக்காலம், பூர்வீகம் பற்றி கூறுங்கள்?
பதில்: நான் தமிழீழத்தின் தென்பகுதியில் மீன்பாடும் தேன்நாடு என்று அழைக்கப்படுகின்ற மட்டக்களப்பு பகுதியில் நாவற்குடா என்னும் சிற்றூரில் பிறந்தேன். சித்திரை மாதம் 4ம் நாள் 1938ம் ஆண்டு நான் பிறந்தேன். 4.4.1938 என்னுடைய பிறந்த நாள். நாவற்குடா என்னுடைய அம்மாவினுடைய ஊர். அதே மட்டக்களப்பில் அமிர்தகலி எனது தந்தையாருடைய ஊர். அங்கேதான் நான் வளர்ந்தேன். இந்த அமிர்தகலி என்கிற சிற்றூரையும், நாவற்குடா என்கிற சிற்றூரையும் இணைப்பதுபோல, மீன்கள் பாடுவதாகச் சொல்லப்படும் அந்த அழகிய நீல உப்பேரி, 15 கல் தொலைவுக்கு நீண்டு நெடிதாகிக் கிடக்கிறது. அந்த உப்பேரி, கடலோடு தொடர்புடைய ஏரி.

kasi aananthan nerkaanal1
அந்த ஏரியில் முழு நிலவு வேளையில் படகிலேறி ஊர்ந்து, அந்த ஆற்றில் படகைச் செலுத்துகிற சவல் என்று சொல்லுகிற அந்தத் துடுப்பை, தோனியிலிருந்து ஆற்றின் உள்ளே விட்டு அதன் மறுமுனையை காதிலே வைத்து கேட்டால் ஒரு வீணை இசைப்பதைப் போன்ற ஒரு இனிய ஓசை அந்த ஆற்றிலிருந்து எழும். அதைத்தான் மீன் பாடுவதாகச் சொல்லுகிறார்கள். உலகில் இப்படியான இசை வேறு எங்கோ ஒரு நாட்டில்தான் இருப்பதாகச் சொன்னார்கள். அமெரிக்க ஆய்வாளர்கள் வந்து இதை ஆய்வு செய்திருக்கிறார்கள். அது ஆழமாகக் கல்லில் இருக்கின்ற அந்த கருங்கற் பாறையில் ஒட்டியிருக்கிற பகுதியில் அலைமோதி எழுகிற இசையா அல்லது ஊறி பாடுகிற இசையா அல்லது மீன்கள்தான் எழுப்புகிற இசையா என்று இன்னும் அவர்கள் சரியாக கண்டறிய முடியவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 24 December 2015

வியர்க்குருவைப் போக்க வழிமுறைகள்


viyarkuru2

  • வியர்க்குரு உள்ள இடத்தில், வெள்ளரிக்காயை அரைத்து தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், வியர்க்குரு பிரச்சனை நீங்கி, சருமம் குளிர்ச்சி பெரும்.
  • சருமத்தில் கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்து வந்தால் வியர்க்குரு பிரச்சனை தீரும்.
  • சீரகப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து, வியர்குரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் வியர்க்குரு நீங்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 23 December 2015

அரசியல் உணர்வு


arasiyal unarvu1
சென்னையில் மழை நீர் வடிந்து விட்டது. சென்று கடலில் கலந்து விட்டது. பல உயிர்ப் பலிகளுடனும் பெரும் பொருட் சேதங்களுடனும், பல மனிதர்களின் வாழ்க்கையின் மேல் இருந்த நம்பிக்கைகளுடனும். இத்தகைய சேதங்களுக்குப் பின்னும் சென்னை மீண்டு வந்து கொண்டிருக்கிறது. வந்தாக வேண்டும். அதுதான் நியதி. அது மனிதர்களின் கீழ்மைகளையும் மேன்மைகளையும் அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறது. உலகம் முழுவதும் பேரழிவுகள் ஏற்படும்போது அடையாளங் காட்டுவதைப் போல. அங்கு நாம் கண்ட மேன்மைகளும் கீழ்மைகளும் எத்தனை நாள் நம்முடன் இருக்கப்போகிறது என்பதே நாம் அடைந்திருக்கும் நாகரீகத்தின் அளவுகோல். பேரழிவுகள் வரும் இடங்களில் எல்லாம் மனிதர்களின் உன்னதமும் இழிவுகளும் சேர்ந்து வெளிப்படுவது இயல்பானதுதான். அதுதான் மனிதகுலத்தைத் தொடர்ந்து இருக்க வைக்கிறது. ஆனால் அவற்றின் மூலம் மனிதர்கள் அடைவதுதான், அந்தந்த நாகரீகங்கள் தொட்டிருக்கும் அல்லது தொடப்போகும் உச்சங்களை அடையாளம் காட்டுபவை.
இந்தப் பேரழிவு, நாம் அடைந்திருக்கும் நாகரீகத்தின் உச்சத்தை நமக்குக் காட்டுமா? அழிவின் தருணத்தில் வெளிப்படும் உன்னதங்கள் மிக இயல்பானவை. பேரழிவின் தாண்டவம் மனித உணர்வுகளைத் தூண்டுவதால், இயல்பாக அந்த உன்னதங்கள் அந்தந்த மனிதர்களின் இயல்பிற்கேற்ப வெளிப்படும். இங்கு அவர் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினார். இவர் எதுவுமே செய்யவில்லை போன்ற புலம்பல்கள் அர்த்தமில்லாதவை. களத்தில் இறங்காதவர்கள் இவற்றைப்பார்த்துக் கவலையற்று இருந்தார்கள் என்பது சரியானதல்ல. அவரவர் இயல்பிற்கேற்ப வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டிருப்பார்கள். இயல்பிற்கேற்ற களப்பணிகளை செய்திருப்பார்கள். இவை பற்றி பேசி, எழுதிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் களப்பணி செய்தவர்கள் அல்ல. அவ்வாறு செய்வது சாத்தியமும் இல்லை. ஆனால் அனைவரும் பேரிழப்பின் உணர்வெழுச்சிகளை அடைந்திருப்பார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 22 December 2015

தமிழகமும் மழை வெள்ளமும்


thamilagamum mazhai vellamum14
‘எல் நினோ’ என்பது பருவநிலை மாற்றத்தினைக் குறிக்கும் பெயர். உலகில் பெருகிவரும் தொழிற்சாலைகளினால் வளிமண்டலத்தில் வெப்பநிலை உயருகிறது. இதனால் கடல் நீர் ஆவியாகும் தன்மை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது. இந்த 2015-ம் ஆண்டினை ஆராய்ச்சி ஆய்வாளர்கள் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையானது எப்பொழுதும் இருப்பதைவிட அதிகமாக 80 டிகிரி பாரன்கீட் வந்துள்ளது. இதுபோன்று இந்தியப் பெருங்கடலிலும் வெப்பநிலை உயருகின்றது. வளிமண்லடத்தில் வெப்பநிலையின் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றது, கடல் நீர் மட்டம் உயருகிறது, கடல் நீர் ஆவியாவதும் அதிகமாகிறது. இந்த ‘எல் நினோ’ பருவமாற்றத்தினை, கடந்த அக்டோபர் மாதமே ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். அளவுக்கு அதிகமான கடல்நீர் ஆவியாகி வளிமண்டலத்தை அடைந்து, அங்கு மழை தரும் மேகங்களாக மாறியதின் விளைவைத்தான் தமிழகம் தற்போது சந்தித்தது.
thamilagamum mazhai vellamum3
இந்த உலகில் வெப்பமயமாதலைத் தடுப்பதற்கென்று (climate change conference) வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின் தங்கிய நாடுகள் என்று அனைத்துத் தலைவர்களும் ஒன்று கூடி Global warming –யை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பநிலை உயர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் தொழிற்சாலைகளின் புகை, வாகனப்புகை, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் வாயு, காடுகளை அழித்தல், சாலைகளை விரிவுபடுத்துவதற்காக சாலை ஓரத்தில் உள்ள மரங்களை வெட்டுதல் போன்றவற்றால் Global warming ஏற்படுகிறது. உலகத் தலைவர்கள் வெப்பமயமாதலை (Climate change conference) தடுப்பதாக AC அறையில் அமர்ந்துதான் பேசுகிறார்கள். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை குறை கூறுகிறது, வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை குறை கூறுகிறது. இப்படி மாறி மாறி வெறும் பேச்சு மட்டுமே நடைபெறுகிறதே தவிர, வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் இவர்கள் எடுக்கப்போவதில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 21 December 2015

சங்கப் பாடல்களை அறிவோம்: புறநானூறு – 189


purananooru189
சங்க காலத்தில் மன்னனும் புலவனும் ஈதலில் வல்லவர்களாய் இருந்தமை ஒரு புறம்… அப்படி மன்னன் வாழாத நிலையில் அவனை வழிப்படுத்தி அறநெறிப்படுத்தும் அரிய பணியினை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய் விளங்கிய புலவர்களே செய்துள்ளனர். மன்னனிடம் கொடுப்பதின் இன்பத்தைத் துணிவுடன் உணர்த்தியுள்ளனர். அந்த வகையில் அமைந்த புறநானூற்றுப்பாடல் இது. பாடலை இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்.
மன்னனாகட்டும்…கல்லாத மக்களாகட்டும்… இருவருக்கும் சாப்பிட நாழி உணவுதான் தேவை. உடுப்பதற்கு இரண்டு உடைகள் போதுமானவை. இவை தவிர மனிதனின் தேவைகள் என்ன? ஆதலால், செல்வம் உடையவர்கள் மற்றவர்களுக்குக் கொடுங்கள். நாமே அனுபவித்துவிடலாம் என்று நினைத்தால், பலவற்றை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் செய்கின்றார் புலவர்.. புறநானூற்றின் 189 ஆவது பாடல். இதோ பாடல்..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 20 December 2015

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சரியான தருணம் இது..


neer nilaigal3
நுாறு ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த மழைதானே. அடுத்த கன மழை எப்போதாவதுதானே வரப்போகிறது என்று, அனைத்தையும் மறந்து பழையபடியே இருக்கப் போகிறோமா? இந்த அளவுக்கு மழை அடுத்த ஆண்டும் வரலாம், ஏன் அடுத்த மாதம்கூட வரலாம். மாறிவிட்ட புவி வெப்பச் சூழ்நிலையில் எதுவும் எப்போதும் நடக்கும். நாம் அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, தற்காத்துக் கொள்ளப் போகிறோமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி..
கடந்த சில தினங்களில் தமிழகமெங்கும் கொட்டித் தீர்த்த பருவ மழை, பல படிப்பினைகளை நமக்கு கொடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் பெரிய அளவில் வெள்ளச்சேதம் ஏற்பட்டதற்கு, நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு தான் பிரதான காரணம். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்குப் பின் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண்பது எளிதாகியுள்ளது. மேலும் வெள்ள நீருடன், பல ஆண்டுகளாக சென்னையில் தேங்கி இருந்த, பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், துணிக் கழிவுகள் உள்ளிட்டவை கடலுக்கு இழுத்து செல்லப்பட்டன. இதனால், சென்னையின் நீர்வழித் தடங்கள் சுத்தமாகியுள்ளன. அரசு குறைந்தபட்சம் இப்போதாவது நிலைமையை உணர்ந்து, நீர் வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் அனைத்தையும் தயவு தாட்சண்யமின்றி காலி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 17 December 2015

இளநரையைப் போக்க வழிமுறைகள்

ilanarai1

  1. முசுமுசுக்கை இலையின் சாறு மற்றும் நல்லெண்ணெயை சம அளவு சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
  2. அன்றாடம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்து வந்தால் இளநரை மறையும்.
  3. இளநரையை மாற்றும் சக்தி பசுவெண்ணெய்க்கு உண்டு. அதனால் இதனுடன்கறிவேப்பிலைப் பொடியை சேர்த்து சாப்பிட இளநரை மறையும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 16 December 2015

அவி சொரிந்து ஆயிரம் வேட்டல்!

தினமணியில் மாலன் எழுதிய தரையில் வீழ்ந்த நட்சத்திரம்! என்ற கட்டுரையில் இரண்டு பிரச்சினைகளை நாட்டுப்பற்றிற்கு எதிரானவை என்று சாடியிருக்கிறார்:
avi sorindhu fi
1) நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டைவிட்டு வெளியேறிவிடலாம் என்று தன் மனைவி தன்னிடம் சொன்னதாக அமீர் கான் சொல்லியது.
2) இந்து மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் சாதீயக் கட்டமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்த எழுத்தாளர் குல்பர்கி வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பிற எழுத்தாளர்கள் தங்களுடைய சாகித்ய அகாதமி விருதுகளை திருப்பி அனுப்பிக் கண்டனம் தெரிவித்தது.
இந்த இரண்டு நிகழ்வுகளும் நாட்டில் இந்து மத நம்பிக்கையின் பெயரில் நடந்த வன்முறைகளுக்கு எதிரான கண்டனங்கள்.
அமீர் கான் என்ற நடிகரையாவது அவர் சார்ந்த மதத்தை வைத்து, மாட்டுக்கறி தின்றதற்காகக் கொல்லப்பட்ட ஒரு இஸ்லாமியருக்காகப் பரிந்து பேசும் மதவெறியர் என்று ஓரளவு கதைகட்டிவிடலாம். அறிவுசார் எழுத்தாளர்கள் மத வேறுபாடின்றி, தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பி அனுப்பித் தங்கள் எதிர்ப்பைக் காட்டியதை “ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்” என்று மாலன் சாடியிருப்பதை என்னவென்று சொல்வது? இந்துத்வ வெறியர் என்றா அல்லது நாட்டுப் பற்றாளர் என்றா?
இவையிரண்டையும் எந்தவிதத்தில் ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்டாக எடுத்துக் கொள்ளமுடியும்? நாட்டில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுப்பவர்களைத் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல்வாதிகள் தூற்றலாம். அந்த வேலையை எழுத்துத் துறையில் இருக்கும் மாலன் செய்திருப்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

அமீர் கான் ஒரு இந்தியக் குடிமகனாகத் தன் குமுறலைச் சொல்லியது “ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்” என்பது ஒருபக்கம் இருக்கட்டும். நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக அவரைக் குமுற வைத்த நிகழ்வுகளில் ஒன்றைப் பார்ப்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 15 December 2015

கறிவேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

kariveppilai3
வளர்ந்து வரும் நவ நாகரீகச் சூழலில் தமிழ்ச்சமூகத்தின் உணவு, உடை, மொழி, உறைவிடம், கலாச்சாரம், பண்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் செல் அரித்துக் கொண்டும், மாற்றம் பெற்றும் வருகிறது. மாற்றங்கள் வளர்ச்சியின் அறிகுறிதான் என்றாலும் ஆரோக்கியத்தில் நமது பாரம்பரிய உணவை மறந்து உடலுக்கு தீமை செய்யக்கூடிய, நமது சீதோஷ்ண நிலைக்கும், உடலுக்கும் ஒத்துவராத உணவுகளை உட்கொண்டு வருவதால் நோய்களின் இருப்பிடமாக தமிழர்கள் மாறிக்கொண்டு வருகின்றனர்.
ஒரு வீட்டில் வாழுகிறவர்கள், இன்று மருத்துவச் செலவிற்கும் சேர்த்து கணக்கு போட்டு வாழும் சூழலுக்கு நடைமுறை வாழ்க்கை அவர்களை நகர்த்தியுள்ளது. வருமுன் காப்போம், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று உடல் நலத்தில் தமிழரின் தாரகமந்திரம் தவிர்க்கப்பட்டு வருகிறது.
நம் ஊரில் இயற்கையாக விளையக்கூடிய காய்கறிகளில் எத்தனை வகையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன என்பதை அறியாததன் விளைவே நோயாளிகளாய் வாழும் சூழலில் உள்ளோம். இக்கட்டுரையில் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் கறிவேப்பிலையைப் பற்றிக் காணப்போகிறோம்.

என்னது கறிவேப்பிலையா? அதில் என்ன சத்து உள்ளது, குழம்பில் வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தும் இந்தக் கறிவேப்பிலையில் அப்படி என்ன சத்து உள்ளது. அப்படியே குழம்பில், சட்டினியில் பயன்படுத்தினாலும் தட்டிற்கு வந்தால் தூக்கி தூர வைத்து விட்டே சாப்பிடுகிறோமே… அப்படி என்ன இதில் சத்து? என நீங்கள் கேட்கக்கூடும். இதோ அதற்கான பதில்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 14 December 2015

நன்னூலில் நல்லாசிரியரின் பண்புகள்

nannool2
இயற்றமிழ் இலக்கண நூல்களுள் அகத்தியத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படுகின்ற நூல்களில் ஒன்று தொல்காப்பியம். மற்றொன்று நன்னூல் ஆகும். சிலவகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செறித்துச் சொல்லும் இந்நூல் இலக்கணச் சூத்திரங்களைக் கொண்டது. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நன்னூல் வழிநூல் மட்டுமல்ல, நல்ல வழிகாட்டி நூலும் ஆகும். இந்நூலின் வழி நல்லாசிரியரின் பண்புகளையும், தன்மைகளையும், நடத்தை நெறிகளையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
nannool3
கற்றுக் கொடுக்கிற ஆசிரியர் குலமும், கற்றுக் கொள்கிற மாணவர் குலமும் சேர்ந்ததுதான் குருகுலம். இந்த இரண்டு குலங்கள் இல்லையென்றால் மனித குலத்திற்கு மகத்துவம் இல்லை. குருகுலக் கட்டமைப்புகள் உடைந்து மாணவர் மைய கல்வி ஆதிக்கம் செலுத்துகிறது. “ஒரு தேசத்தின் தலைவிதியை வகுப்பறைகள் நிர்ணயிக்கின்றன.” என்ற பொன்னெழுத்துகளுக்கு மதிப்பை வழங்கியவர்கள் ஆசிரியர்களே. “ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக பெற்றோர், இரண்டாவது பெற்றோராக ஆசிரியர்”. என்ற வைர வரிகள் மாதா, பிதா, குரு போன்றோரின் சிறப்புகளைப் பட்டியலிடுகின்றன. குருமார்களை தெய்வமாக வணங்கிய காலம் போய், குருமார்கள் நண்பர்களாக மாறிவிட்ட புது யுகத்தில் ஆசிரியர்களின் சிறப்புகளை தொல்லிலக்கண நூல்களின் மூலமாக அலசி ஆராய்தல் சாலச் சிறந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 13 December 2015

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: வெள்ளச் சேதத்திற்கு முக்கியக் காரணமா?

sembarambaakkam3
சென்னையை மட்டும் இல்லாமல், தமிழகத்தையே கதி கலங்க வைக்கும் பெயராகிவிட்டது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் மிகவும் பெரியது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் இந்த ஏரியின் கொள்ளவு 3,645 மில்லியன் கன அடி.  அதன் உயரம் 24 அடி. இதன் உபரிநீர் வெளியேறும் இடத்தில் உருவாகிறது அடையாறு ஆறு. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாற்றில் இணைந்து மணப்பாக்கம் தொடங்கி திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது.
சென்னையிலும், அதைச்சுற்றியுள்ள ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் அளவைக் கணக்கில் கொண்டு பார்த்தால் எந்த ஒரு நீர்நிலையையும் கட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று தான். ஆனால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ஏரிகளின் நீர்மட்டத்தை நிர்வகித்து இருந்தால் சென்னைக்கு ஏற்பட்ட சேதத்தை குறைத்தியிருக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

சர்வதேச வானிலை மையம் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே எச்சரித்திருந்தது. சென்னையில் வரலாறு காணாத அளவில் மழை பெய்யும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தமிழக அரசை எச்சரிக்கை செய்ததாக அதன் இயக்குனர் சிவன் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 11 December 2015

தங்கத் தமிழ் (கவிதை)

thangaththamil1
உயிர் மெய்யான தங்கத் தமிழ்
பயிர் செய்வது உங்கள் கையில்!
உயிர் என்பதாய் யான் மொழிதல்
உயர் காதல் தமிழில் அதனால்.
புதிய சொற்கள் கருத்துகள் தினம்
புதிதாய் பழகிட என்ன கனம்!
குளம் குட்டையாய் தேங்குவதா மனம்!

வளமுடை நதியான பிரவாகம் தனம்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19154

Thursday 10 December 2015

மார்கழிக் கோலங்கள் (சிறுகதை)

markali kolangal1
அம்மாவின்குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்பது போன்றிருந்தது.ரம்யாபோர்வைக்குள் சுருண்டுகொண்டாள். குளிருக்கு அப்படி முடங்கிக் கொள்வது இதமாக இருந்தது.
“எத்தனை தடவை எழுப்புறது? சொன்னா சட்டுனு எழுந்திரிக்க மாட்ட?” – அம்மாகுரலில் கடுமைகாட்ட வேறுவழியின்றி எழுந்து கொண்டாள்.
வெடவெடவென்று நடுங்கியபடி அம்மாவோடு வாசலுக்கு வந்தவளுக்கு அங்கேஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஊசிபோன்று உடலைக்குத்தும் பனியையும் பொருட்படுத்தாமல், அந்த அதிகாலை வேளையிலும் ஒவ்வொரு வீட்டுவாசலிலும் பெண்கள் அமர்ந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதிலும், சிலபெண்கள் குளித்து ஈரத்துணியால் தலையைக் கொண்டையிட்டு பளிச்சென்று குங்குமம் துலங்கிய நெற்றியுடன் கோலம் இட்டுக் கொண்டிருந்தார்கள்.
ரம்யா அவள் தெருவை இதுவரைப் பார்த்திராத கோணம் இது. தெரு விளக்கின் மினுமினுப்பில் வாரியிறைக்கப்பட்ட வண்ணங்களுடன் தெருவே அழகாகக் காட்சியளித்தது.
தெருவின் ஓட்டுமொத்த சுறுசுறுப்பு அவளையும் தொற்றிக்கொள்ள “இன்னிக்கு என்னமா விசேஷம்?” – என்று கேட்டாள்.
“இன்னிக்கு மார்கழி மாசப்பிறப்பு ரம்யா!” – என்றார் அம்மா.

“நான் கோலம் போடவாமா?” – ரம்யா கேட்டாள்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கடவுள்

kadavul1
மனித அறிவு புதிய பரிணாமங்களை எட்டிப்பிடிக்கும்தோறும் நாத்திகவாதம் அதன் எல்லையை விரித்துக்கொண்டே செல்கிறது. மனிதனின் லௌகீக வாழ்வின் பாதுகாப்பு உறுதியாகும்தோறும், கடவுளின் தேவையும் குறைந்துக் கொண்டே செல்கிறது. இது ஒரு முரண்இயக்கம் என்றோ அல்லது இயற்கையான நேர்இயக்கம் என்றோ அவரவர் பார்வைக்கேற்ற வியாக்கியானங்களை செய்து கொள்ளலாம்.
கடவுள் என்பது ஒரு இருப்பா அல்லது ஒன்றும் இல்லாததா? அது ஒரு கருத்தா அல்லது நம்பிக்கையா? கடவுளை உள்ளவாறே விளக்க முடியுமா? கடவுள் என்றாலே பதிலளிக்க முடியாத கேள்விகள்தான். இல்லையெனில் நம்பிக்கைகள். சிலரை கேள்விகளும் இன்னும் சிலரை நம்பிக்கைகளும் முன்னெடுத்துச் செல்கின்றன. அவ்வாறு முன்நகர்த்தாத கேள்விகளாலும் நம்பிக்கைகளாலும் மனிதர்களுக்கோ கடவுள்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.

மனிதப் பரிணாம வளர்ச்சியில், எண்ணங்கள் தோன்றிய காலத்திலேயே கடவுள் அல்லது அதற்கு இணையான கருத்து தோன்றியிருக்கக் கூடும். எண்ணங்களே தேடுதலுக்கான தேவையைத் தோற்றுவிக்கின்றன. அவையே அறிதல்களைத் தூண்டுகின்றன. அறியமுடியாதவற்றின் மேல் அச்சத்தையும் தோற்றுவிக்கின்றன. எனில் இன்று நாம் அறியும் கடவுள்களை தோற்றுவித்தது சந்தேகமே இல்லாமல் மனித எண்ணங்களும் சிந்தனைகளும்தான். அது மனித இனத்தின் தவிர்க்க முடியாத தேவையாக இருந்திருக்கலாம் மனம் என்னும் புயலில் தாக்குண்டு சிதறாமல் இருப்பதற்கான பற்றுகோலாக இருந்திருக்கலாம்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 9 December 2015

சங்கப் பாடல்களை அறிவோம் : குறுந்தொகை-130

sangappaadalgal2
மணம் பேசி வரவேண்டிய காதலன் வரவில்லை. அவன் எங்கு போனான் என்பதும் தெரியவி்ல்லை, அவனை எப்படித் தேடுவது என்று தெரியாமல் அல்லல்படும் பெண்ணை ஆற்றுவிக்கும் தோழியின் எண்ண அலைகளே இப்பாடல். இந்தப் பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவர்.
நிலம்தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே.

சாதாரணமாக, நாம் பேசிக்கொள்ளும் பேச்சு வழக்கிலே இப்பாடலின் மொழிநடையும் அமைந்துள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 3

438 days fi
காற்றைக்கிழித்துக் கொண்டு கடல் நீரோட்டத்துடன் மென்மையாக அவர் படகு மிதந்துகொண்டிருந்தபொழுது, திடீரென வானில் கடலோரத்தில் வாழும் பறவைகள் கூட்டம் தென்பட்டது. ஆல்வரெங்கா உற்றுப்பார்த்தார். அவரது கழுத்துத் தசைகள் இறுகின. வெப்பமண்டலத் தீவு ஒன்று மூடுபனியில் இருந்து வெளிப்பட்டது. பசிபிக் கடலின் பவளப்பாறைத் திட்டுகள், சிறிய மலையைச் சூழ்ந்த பசுமையான நிலம், அதைச் சுற்றி நீலநிற நீர் சூழ்ந்து பலவண்ணக் காட்சியாகத் தோன்றியது.
பிரமை இவ்வளவு நேரம் நீடிக்காதே, எனது வேண்டுதல்களுக்குப் பதில் கிடைத்துவிட்டதா? என்று எண்ணிய ஆல்வரெங்காவின் மனதில் வேகமாகப் பல மோசமான கற்பனைகளும் விரிந்தன. அவர் கரையில் இருந்து விலகிச் சென்றுவிடக்கூடும், கடலை நோக்கிப் பின்னோக்கி போய்விடவும் கூடும்… முன்னர் அவ்வாறுதானே நடந்தது, கரை ஒதுங்கும் நேரத்தில் மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அந்தத் தீவையே கூர்ந்து கவனித்து கடற்கரை ஓரம் தோன்றுவதை வைத்து மேலும் அதைப்பற்றிய விவரங்கள் அறிய முயன்றார். அது ஒரு குட்டித்தீவு. அவர் கணிப்பின்படி ஒரு கால்பந்தாட்ட மைதானத்தைவிடப் பெரிதானது அல்ல. அது இயற்கையுடன் ஒன்றி சாலைகளோ, ஊர்திகளோ, வீடுகளோ இல்லாமல் இருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சான் ஓசேயில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு


maaveerar6

“நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.” – வேலுப்பிள்ளை பிரபாகரன்
உங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்.. – இராஜ் சுவர்ணன்
உலகம் முழுதும் தத்தம் நாட்டு விடுதலைக்காகப் போராடி மரணித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். அமெரிக்காவில் மே மாதத்தில் அந்த அஞ்சலி நிகழ்வு நடைபெறும். இங்கிலாந்து, ஆத்திரேலியா, கனடா போன்ற பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளில் நவம்பர் 11-ம் நாள் இறந்த வீரர்களுக்கு (The Glorious Dead) அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தமிழீழ மக்களுக்கும், உலகெமெங்கும் பரந்துபட்டு வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் நவம்பர் 27-ம் நாளில் ஈழமண்ணிற்காக தம் இன்னுயிரை ஈன்ற மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செய்யப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது. அந்நாள் செ. சத்தியநாதன் எனும் லெப்டினெண்ட் சங்கர் தம் உயிரை தமிழ்மண்ணிற்காக தியாகம் செய்த நாள்.

1982-ம் ஆண்டு அக்தோபர் திங்கள் அதிகாலையில் ஒரு இளைஞன் முற்றுகையிட்டிருந்த சிங்கள வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டு ஓடுகிறான், அப்பொழுது சிங்கள் காடையனின் குண்டொன்று அவனது வயிற்றை கிழிக்க, அங்கிருந்த தோழர்கள் அவனைக் காப்பாற்றி மருத்துவ சிகிச்சைக்காக தாய்த்தமிழகத்திற்கு அழைத்து வருகின்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கண் கலங்கி நின்ற தலைவரின் முன்னிலையிலும், தோழர்களின் முன்னிலையிலும் 1982 நவம்பர் 27-ம் நாள் மாலை 6:05 மணியளவில் லெப்டனெண்ட் சங்கர் நம்மை விட்டு பிரிகிறான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்களப்பலி இவன். இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூறப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 8 December 2015

மாசுநீக்கி மாண்புறுவோம் (கவிதை)

water pollution

அகமாசோ   அனைத்துவகை   தீமை   கட்கும்
அடித்தளமாய்   அமைகின்ற   கொடிய   மாசு
முகம்பார்த்து   அறிவதற்கும்   முடிந்தி   டாது
முயன்றாலும்   எளிதாகத்   தெரிந்தி   டாது
நகம்போல   வெட்டியதை   எறியா   விட்டால்
நாகம்போல்   கொத்திவிடும்   நஞ்சைக்   கக்கி
தகவாழ்வு   நாம்பெறவே   எண்ணத்   தூய்மை

தாயன்பு     இரக்கமனம்   அமைய   வேண்டும் !

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19126

இறவா வரங்களே! (கவிதைகள்)


eelam
இனி ஒருபோதும்
தமிழர் வரலாற்றில்
எழுதப்படமுடியா…….
எம் இனத்தின்
வீர காவியங்களே!
வரையப்படமுடியா……
எம்இனத்தின்
உயிர் ஓவியங்களே!

உம் குருதியால்
தமிழர் தேசத்தை
உலக வரைபடத்தில்

வரைந்தவர்களே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19125

சங்கப் பாடல்களை அறிவோம் புறநானூறு-185

sanga paadalgal3
தொண்டைமான் இளந்திரையனின் பாடல் இது. இடையூறின்றி செலுத்த வேண்டியது வண்டி மட்டுமல்ல; நாட்டின் ஆட்சியையும்தான் என்பதை நயமோடு சொல்லுகின்ற பாடல்.
கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ் அள்ளற்பட்டு
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.
பொதுவியல் திணையில், பொருண்மொழிக் காஞ்சித்துறையில் அமைந்த பாடல்.

வண்டியினுடைய சக்கரமும் அச்சும் இணைந்தது போல்தான் இவ்உலகத்து இயக்கமும். நாடு காவலாகிய வண்டியைச் செலுத்துகின்றவன் திறமையானவனாக இருந்தால் வண்டியானது, தடையின்றிச் செல்லும். அதைச் செலுத்துகின்றவன், வண்டியைச் செலுத்துகின்ற முறைமை குறித்துத் தெளிவில்லாதவனாக இருந்தால் அவ்வண்டி ஒவ்வொரு நாளும் பகையாகிய சேற்றில் அகப்பட்டு மிகப்பலவாகிய தீய துன்பத்தினை மேன்மேலும் உண்டுபண்ணும் என்கின்றார் தொண்டைமான் இளந்திரையன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 7 December 2015

438 நாட்கள் கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 2

438 days1
கடலில் வீசி எறிந்துவிட்டதால், தூண்டிலோ தூண்டில் இரையோ இல்லாமல், மீன்பிடிப்பதற்கு ஆல்வரெங்கா ஒரு துணிச்சலான முறையைக் கையாண்டார். சுறாக்கள் வருகின்றனவா என்பதில் எச்சரிக்கையுடன் ஒரு கண் வைத்துக்கொண்டே, படகின் ஓரத்தில் மண்டியிட்டு அமர்ந்து, இருகைகளையும் தோள்வரை நீரில் கவனமாக நீட்டினார். தனது மார்பு படகின் பக்கவாட்டில் அழுந்தியிருக்க, கைகளை அசைக்காமல் சிறிது இடைவெளிவிட்டுக் காத்திருந்தார். ஏதேனும் ஒரு மீன் அவரது இருகரங்களுக்கு இடையே அகப்பட்டால், விரைவாக அமுக்கி, அதன் செதில்கள் மீது நகத்தால் அழுந்தப் பிடித்துக் கொள்வார். பல மீன்கள் தப்பிவிட்டன, ஆனாலும் ஆல்வரெங்கா விரைவில் இவ்வாறு மீன் பிடிப்பதில் திறமைசாலியாகிவிட்டார், மீனைப்பிடித்து அது கடிக்கும்முன் படகினுள் வீசலானார்.
கோர்டபா மீன் வெட்டும் கத்தியினால் திறமையாக மீனைச் சுத்தம் செய்து வெட்டி, விரலளவு சிறு துண்டங்களாக்கி வெய்யிலில் காயவைத்தார். இருவரும் மீன்களையே மாற்றி மாற்றித் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆல்வரெங்கா பச்சைமீனையும் காய்ந்த மீனையும் சேர்த்தே விழுங்கத் தொடங்கினார். வித்தியாசம் தெரியாத அளவிற்கு அவருக்குச் சுவையே தெரியாமல் மரத்துப்போய்விட்டது, அதனால் சுவை பற்றி அவர் கவலைப்படவில்லை. மிகவும் அதிர்ஷ்டம் இருந்தால் அவர்களால் ஆமைகளைப் பிடிக்க முடிந்தது. சிலசமயம் தானே பறந்து வந்து படகில் விழும் பறக்கும் மீன்களும், அவர்களுக்குக் கிடைத்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தற்காலக் கல்வி முறை -9

kalvimurai12
மாணவர்கள் திறன் வளர்த்தலில் பாடத்திட்டம் பெரும் பங்காற்றுகிறது.
மெக்காலே கல்விமுறைதான் தற்போதைய குறைபாட்டிற்குக் காரணம் என்று கூறிக்கொண்டிருக்காமல், இந்தியக் குழந்தைகளுக்கேற்ற கல்விமுறையை இந்தியாவின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டங்களைக் கொண்ட கல்விமுறையை உருவாக்க வேண்டும்.
புரிந்துகொண்டு படிக்கும் கல்வி முறையும், புரிந்து கொண்டு படைப்புகளை உருவாக்கும் கல்விமுறையும் தற்காலத் தேவையாக உள்ளது.
அறநூல்களைப் பயிலுவதும், பாடமாக வைப்பதும், பயன்படுத்துவதும் இன்று குறைந்துவிட்டது. வாழ்க்கையின் நிலைகெடும் ஒவ்வொரு நிலையிலும், தக்க அறிவுரை அளித்துக் காக்கக்கூடியவை அற நூல்கள். இவை பழைய அனுபவங்களின் சாரங்கள். இவற்றை மறக்காமல் பயின்று போற்ற வேண்டும், மாணவர்களுக்குக் குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.

kalvimurai8
மாணவர் கற்கும் பாடங்கள் அறிவு சார்ந்து மாணவனின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவதாக அமையவேண்டும். அறிவு நுட்பமுடையவனாக ஒவ்வொரு மாணவரும் உருவாகவேண்டுமெனில் சிறந்த ஆளுமைக்கான பண்புகள், மனவெழுச்சியைக் கட்டுப்படுத்துதல் முதலானவற்றைத் தரக்கூடிய பாடத்திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். அறநெறிப் பாடங்களே தன்னம்பிக்கை, சுய-மதிப்பு, சுய முன்னேற்றம், ஒழுக்க வளர்ச்சி போன்ற பண்புகளை மாணவர்களிடம் தரக்கூடியவை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.