Tuesday 15 December 2015

கறிவேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

kariveppilai3
வளர்ந்து வரும் நவ நாகரீகச் சூழலில் தமிழ்ச்சமூகத்தின் உணவு, உடை, மொழி, உறைவிடம், கலாச்சாரம், பண்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் செல் அரித்துக் கொண்டும், மாற்றம் பெற்றும் வருகிறது. மாற்றங்கள் வளர்ச்சியின் அறிகுறிதான் என்றாலும் ஆரோக்கியத்தில் நமது பாரம்பரிய உணவை மறந்து உடலுக்கு தீமை செய்யக்கூடிய, நமது சீதோஷ்ண நிலைக்கும், உடலுக்கும் ஒத்துவராத உணவுகளை உட்கொண்டு வருவதால் நோய்களின் இருப்பிடமாக தமிழர்கள் மாறிக்கொண்டு வருகின்றனர்.
ஒரு வீட்டில் வாழுகிறவர்கள், இன்று மருத்துவச் செலவிற்கும் சேர்த்து கணக்கு போட்டு வாழும் சூழலுக்கு நடைமுறை வாழ்க்கை அவர்களை நகர்த்தியுள்ளது. வருமுன் காப்போம், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று உடல் நலத்தில் தமிழரின் தாரகமந்திரம் தவிர்க்கப்பட்டு வருகிறது.
நம் ஊரில் இயற்கையாக விளையக்கூடிய காய்கறிகளில் எத்தனை வகையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன என்பதை அறியாததன் விளைவே நோயாளிகளாய் வாழும் சூழலில் உள்ளோம். இக்கட்டுரையில் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் கறிவேப்பிலையைப் பற்றிக் காணப்போகிறோம்.

என்னது கறிவேப்பிலையா? அதில் என்ன சத்து உள்ளது, குழம்பில் வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தும் இந்தக் கறிவேப்பிலையில் அப்படி என்ன சத்து உள்ளது. அப்படியே குழம்பில், சட்டினியில் பயன்படுத்தினாலும் தட்டிற்கு வந்தால் தூக்கி தூர வைத்து விட்டே சாப்பிடுகிறோமே… அப்படி என்ன இதில் சத்து? என நீங்கள் கேட்கக்கூடும். இதோ அதற்கான பதில்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment