Monday 14 December 2015

நன்னூலில் நல்லாசிரியரின் பண்புகள்

nannool2
இயற்றமிழ் இலக்கண நூல்களுள் அகத்தியத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படுகின்ற நூல்களில் ஒன்று தொல்காப்பியம். மற்றொன்று நன்னூல் ஆகும். சிலவகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செறித்துச் சொல்லும் இந்நூல் இலக்கணச் சூத்திரங்களைக் கொண்டது. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நன்னூல் வழிநூல் மட்டுமல்ல, நல்ல வழிகாட்டி நூலும் ஆகும். இந்நூலின் வழி நல்லாசிரியரின் பண்புகளையும், தன்மைகளையும், நடத்தை நெறிகளையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
nannool3
கற்றுக் கொடுக்கிற ஆசிரியர் குலமும், கற்றுக் கொள்கிற மாணவர் குலமும் சேர்ந்ததுதான் குருகுலம். இந்த இரண்டு குலங்கள் இல்லையென்றால் மனித குலத்திற்கு மகத்துவம் இல்லை. குருகுலக் கட்டமைப்புகள் உடைந்து மாணவர் மைய கல்வி ஆதிக்கம் செலுத்துகிறது. “ஒரு தேசத்தின் தலைவிதியை வகுப்பறைகள் நிர்ணயிக்கின்றன.” என்ற பொன்னெழுத்துகளுக்கு மதிப்பை வழங்கியவர்கள் ஆசிரியர்களே. “ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக பெற்றோர், இரண்டாவது பெற்றோராக ஆசிரியர்”. என்ற வைர வரிகள் மாதா, பிதா, குரு போன்றோரின் சிறப்புகளைப் பட்டியலிடுகின்றன. குருமார்களை தெய்வமாக வணங்கிய காலம் போய், குருமார்கள் நண்பர்களாக மாறிவிட்ட புது யுகத்தில் ஆசிரியர்களின் சிறப்புகளை தொல்லிலக்கண நூல்களின் மூலமாக அலசி ஆராய்தல் சாலச் சிறந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment