Thursday 28 April 2016

கவிதைச் சோலை (காலம் கடந்திடும் ஞானம்!, தமிழ் மொழியால் ஓன்று சேர்வோம்!, கண்ணீர்த் துளிகள்)


காலம் கடந்திடும் ஞானம்!

எழுதியவர்: ராஜ் குணநாயகம்
kaalam-fi]
முரண்பாடு என்பது
புத்த சிலைகளின்மீதா
புத்த போதனைகளின்மீதா
புத்த பகவான்மீதா
இல்லை
அதன் பின் ஒளிந்திருக்கும்
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின்மீதா?
வேர்களையும்
ஒளிந்திருக்கும் உறங்கும் வித்துக்களையும்
விட்டுவிட்டு
களைகளை நோந்துகொள்வதிலும்
அழித்திட முயற்சிப்பதுவும்
நிரந்தர தீர்வாகிடுமோ?
நீ வணங்கும் கடவுளோடு சேர்த்து

புத்த பகவானையும் வணங்கிவிட்டுப்போ

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://siragu.com/?p=20431

Wednesday 27 April 2016

மாதவிலக்கு


maadhavidaai2
தலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் என்ன யூகிக்கிறீர்கள்? அதைப் பற்றியா? ஆம் அதைப் பற்றியேதான்.
இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். ஏனென்றால் பட்டென்று உடைத்தாற் போல் எதையும் எழுதி ஏன் தூற்றலை வாங்குவானேன் என்று நினைத்து,  “அந்த 3 நாட்கள்” என்று நாசுக்காக தலைப்பைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். பிறகு தான் ஞானோதயம் ஓங்கி உச்சந்தலையில் கொட்டியது. உள்ளதைஉள்ளபடியே காட்டும் மாயக்கண்ணாடியாய் மாறி அதையே தலைப்புமாக வைக்க தீர்மானித்தேன்.
ஏன் தலைப்பிற்கே இவ்வளவு தடுமாற்றம்? அப்படி எதைத்தான் உள்ளே கூறப்போகிறேன்? என்று முகச்சுளிப்போடு அருவருப்பாய் தலைப்பையே வெறித்துக்கொண்டு இருக்காதீர்கள். சற்றே பொறுமையாகி நில்லுங்கள், சக வாழினியைப் படிக்கச் சொல்லலாம்.

maadhavidaai3
யார் அந்த சகவாழினி? ஆஹா! கண்டுபிடித்துவிட்டீர்கள். அவள் தான் பெண்!!. பெண்ணென்றால் என்ன தோன்றுகிறது உங்களுக்கு? நிலவு தோன்றுகிறதா?, மலர்கள்?, வானவில்?, போதை ஏறுகிறதா?.. பொறுத்தருளவும். நான் ஏன் போதை ஏறுகிறதா என்ற வார்த்தையைக் கூறினேன் என்றால் பெண்ணை பெரும்பாலும் போதை பொருளாகத்தான் பார்க்கின்றார்கள். அதற்குக் காரணமென அந்த உடலுறவு ஒன்றை மட்டும் சொல்லித் திரிகின்றனர் சிலர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 26 April 2016

அம்பேத்கரை புறக்கணிப்போம்


Dr.Ambedkar4
ஏப்ரல் 14 அன்று நானும் எனது நண்பனும், இன்னொரு நண்பனைப் பார்க்க சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் சந்திக்க வேண்டிய நண்பன், முன்கூட்டியே வந்து காத்துக் கொண்டிருந்ததால், சற்று வேகமாகவே சென்று கொண்டிருந்தோம். எங்கள் நேரம், சாலையில் போக்குவரத்து நெரிசல். காரணம் அன்று அம்பேத்கர் பிறந்தநாள் என்பதால் மக்கள் பலர் மாலை அணிவித்துக் கொண்டிருந்தார்கள் இந்த வெயிலிலும். போக்குவரத்துக் காவலர்களின் ஒழுங்குபடுத்துதலால் போக்குவரத்து நெரிசல் அதிக நேரம் நீடிக்கவில்லை.
நான், என் நண்பனிடம் டாக்டர் அம்பேத்கருக்கு இத்தனை பேர் மாலை அணிவிக்க வந்தது மகிழ்ச்சி என்றேன். காலையில் நேரமாக வந்திருந்தால் ஒரு நிமிடமாவது மரியாதை செலுத்தியிருக்கலாம், திட்டமிடாமல் போய்விட்டோம். இப்பொழுது நேரமாகிவிட்டது, எனினும் சந்திக்க வேண்டிய நண்பனை அழைத்து ஒரு ஐந்து நிமிடம் அவகாசம் கேட்கலாமா? என்றேன்.

அதற்கு என் நண்பன், டாக்டர் அம்பேத்கர் சில சட்டம் இயற்றியதைத் தவிர பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே உழைத்தவர் என்றான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 25 April 2016

கோகினூர் வைரத்தைப் பறி (பரிசாகக்) கொடுத்த பஞ்சாப் மன்னரின் கதை


kohinoor2
இங்கிலாந்து அரசியின் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள  கோகினூர் வைரம் இந்தியாவிற்குச் சொந்தமானது அது மீட்கப்பட வேண்டும் என்று அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான முன்னணி ஆகியவை இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் இந்திய அரசின் நிலைப்பாடு ஒவ்வொருமுறையும் முரணான  தகவல்கள் வழங்கி வருவதாக அமைந்துள்ளது. கோகினூர் வைரம் பரிசாகக் கொடுக்கப்பட்டதால் அன்பளிப்பைத் திரும்பக் கேட்பது முறையல்ல என்ற வகையில்  கருத்துக்களை நீதிமன்றத்தில் முன் வைத்த அரசு, இப்பொழுது கோகினூர் வைரத்தை மீட்பது குறித்த தனது முடிவை அரசு விரைவில் அறிவிக்கும் என்று பின்வாங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கோகினூர் வைரத்தை பரிசாகக் கொடுக்க நேர்ந்த மன்னரின் நிலைமையையும் நாம் பரிசீலனை செய்வது இங்கிலாந்து வைரத்தைப் பெற்றது நேர்மையான முறையில்தானா  என்பதைத் தெளிவுபடுத்தும்.
Duleep_Singh2
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள – என்றொரு பழைய பாடல் உண்டு. அதில் கூறப்பட்ட பரிதாபத்திற்குரிய நிலையில் சில மன்னர்கள் வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. பெயரளவில் மன்னர் என்ற  பட்டம் இருக்கும், ஆனால் உரிமையுடன் ஆள்வதற்கோ நாடிருக்காது. அவர்களுள் ஒருவரென வாழ்ந்தவர் நமது இந்திய மன்னர் துலிப் சிங் (Maharaja Duleep Singh). இவர் சீக்கியப் பேரரசை உருவாக்கிய, “பஞ்சாப் சிங்கம்” என்று புகழப்பட்ட பேரரசர் ரஞ்சித் சிங் (Maharaja Ranjit Singh, the Lion of Punjab) அவர்களின் கடைசி மகன். பிற்காலத்தில் நாடில்லாது வாழ்ந்த மன்னர் துலிப் சிங் ஆட்சிக்கு வந்ததென்னவோ அவரது ஐந்தாவது வயதில். அவரது பிரதிநிதியாக அவரது தாயாரான பேரரசியும், பேரரசியின் சகோதரரும்,  அதாவது மன்னரின் தாய்மாமனும் பொறுப்பேற்று நாட்டை ஆண்டார்கள்.  ஆனால், துலிப் சிங்கின் பத்து வயதிலேயே நாடு ஆங்கிலேயர் வசமானது, அவரும் நாடுகடத்தப்பட்டார். மன்னர் துலிப் சிங்கின் இரங்கத்தக்க வாழ்க்கை வரலாறுதான் நாம் பார்க்கப்போவது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர் அப்துல் ரஹ்மான் அவர்களின் நேர்காணல்: இறுதிப் பகுதி


tntj-fi
கேள்வி: தானே புயலில் தாங்கள் எந்த மாதிரியான உதவிகளை செய்தீர்கள்?
பதில்: தானே புயலிலும் பொருளாதாரம் ரீதியான உதவிகள், மீட்புப் பணிகள், உணவு வழங்குதல் என்று செய்தோம். இந்த வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் செய்த உதவியை விட சிறிது குறைவாக இருந்தாலும் தேவையான அளவிற்கான பணிகளை நாங்கள் செய்தோம்.
கேள்வி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இங்கு என்ன பணிகள் மேற்கிறார்களோ இதே பணிகள்தான் வெளிநாட்டில் இருக்கிற கிளைகளும், வெளி ஊரில் இருக்கிற கிளைகளும் செய்கிறார்களா?
பதில்: வெளிநாடுகளில் இருப்பவர்களைப் பொறுத்தவரையில் இங்கு இருக்கும் தேவை அளவிற்கு அவர்களுக்கு இருக்காது. எங்களுடைய முக்கிய குறிக்கோள் ஒன்று இருந்தாலும்கூட அதில் சில இடங்களுக்குத் தகுந்தாற்போன்று சில வேலைகள் கூடும், சில வேலைகள் குறையும். உதாரணமாக இங்கு பிரச்சார நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துவோம். வாரத்திற்கு 200, 300, 500, 600 என்று வாராந்திரமாக கணக்குப்போட்டுப் பார்த்தால் ஆயிரக்கணக்கான கூட்டங்கள் ஒரு வாரத்திற்கே நடந்துவிடும். ஒரு மாவட்டம் என்று எடுத்துக்கொண்டால், மாவட்டத்திற்கு 50 கிளைகள் இருந்தது என்றால் ஒவ்வொரு கிளைகளிலும் ஒரு கூட்டம் நடத்துவார்கள். பெண்களை மட்டும் ஏற்பாடு செய்து அவர்களுக்கான அரங்க நிகழ்ச்சி நடத்துவார்கள். மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடத்துவார்கள். வாராந்திரமாகவே பல்லாயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடக்கிறது பிரச்சார இயக்கங்கள் மற்றும் பல்வேறு செய்திகளை சொல்வதற்கு.

ஆனால் வெளிநாடுகளில் பார்த்தீர்கள் என்றால் அதற்கான தேவைகள் இருக்காது. மக்களை ஏற்பாடு செய்து வாராந்திரமாக ஒரு பெரிய பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாது, அது குறையும். அதே மாதிரி அரசாங்கத்தை மீறி அங்கு எதுவும் செய்துவிட முடியாது. நாம் சொந்த நாட்டு குடிமக்கள், நாம் இங்கு வேலை செய்வது மாதிரி, வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருக்கிற மக்கள் நாம் செய்யும் அளவிற்கு செய்ய முடியாது. அதனால் சில வேலைகள் குறையும். அப்படி குறைந்தாலும்கூட அவர்கள் அங்கு இருந்துகொண்டு இங்கு என்ன செய்யமுடியுமோ, அதாவது இங்கு இருக்கிற மக்களுக்கு உதவிகள் செய்வது, ஆர்வம் ஊட்டுவது, பொருளாதார ரீதியாக மக்களுக்கு உதவிகள் செய்வது மாதிரியான வேலைகளில் அவர்கள் பங்கெடுத்துக்கொள்வார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 21 April 2016

பாரெங்கும் தமிழ் (கவிதை)


tamil mozhi fi

பாரெங்கும் பாரீர்! பாரெங்கும் பாரீர்!
தமிழினம் தனித் தன்மையோடு சேருவதை
பாரீர்! பாரீர்! பாரீர்!
பேதமைகளை தூக்கியெரிந்து ஒன்றாவதை பாரீர்!

வையகம் வென்றிட தோழமையோடு நடைபோடும்


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20400

Wednesday 20 April 2016

பாரதிதாசன் பாடிய முல்லைக்காட்டில் மணக்கும் நகைச்சுவை


puratchi kavignar1
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்றே பலராலும் அறியப்பட்டாலும் நகைச்சுவை பாடுவதில் ஈடு இணையற்றவர் பாரதிதாசன். அவர்தம் பாடல்களில் மெல்லிய நகைச்சுவை இழையோடுவதைக் காண முடியும். காப்பியங்கள் பாடினாலும், தனிக்கவிதைகள் பாடினாலும் நகைச்சுவை ஆங்காங்கே மிளிரச் செய்வது இவரது தனித்த பாங்கு ஆகும். இருண்ட வீட்டில் பாத்திரங்களை வருணிக்கும் போது, படிப்பவர் தன்னையறியாமல் வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு இவரின் கவியாற்றல் பெருகிக்கிடக்கிறது. பாண்டியன் பரிசிலும் நரிக்கண்ணன் மகனை வருணிக்கும் திறத்தில் நகைச்சுவை கலந்தே இருக்கும். இவைதவிர நகைச்சுவை, சிரிப்பு என்றே தலைப்பிட்டு அவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றில் நகைச்சுவை உணர்வு நிரம்பிக்கிடக்கின்றது. அவரின் கவிதைச் சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
முல்லைக்காடு என்ற தொகுப்பில் நகைச்சுவை என்ற தலைப்பில் ஒரு பகுதி அமைந்துள்ளது. அதில் அவர் தன் காலத்தில் நடைபெற்ற நகைச்சுவை கலந்த நிகழ்வுகளைப் படைத்தளித்துள்ளார்.

பாரதிதாசனார் சென்னை நகரத்தில் அவ்வப்போது குடியேற வேண்டியவராக இருந்தார். அப்போது அவர் தங்குமிடத்திற்கு பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அதனை அழகான ஒரு கவிதையாக வடித்துள்ளார். சென்னையில் வீட்டு வசதி என்பது அவர் எழுதிய கவிதையின் தலைப்பு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 19 April 2016

கவலைகளைக் களைவோம்!


kavalaigalai2
4+4 = 8
1+7 = 8
5+3 = 8
ஆக ஒரே விடைக்கு இத்தனை கூட்டு விதி முறைகள் உள்ளது. இதில் எவருக்கும் சந்தேகம் கிடையாது. நம்பினால் நம்புங்கள் இது போலத் தான் வாழ்க்கையும், ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான சூழ்நிலையும் அமைப்பும்.
என்ன ஒவ்வொரு வேளையும், சூழ்நிலை மாறுமே தவிர வாழ்க்கை மாறாது.பிடித்தோ பிடிக்காமலோ தெரிந்தோ தெரியாமலோ தனக்கு வேண்டிய ஒன்றை வாழ்க்கைநம்மைக் கருவியாய்க் கொண்டு நிகழ்த்திக்கொண்டு தான் இருக்கும்.

ஆகப்பெரும் மகிழ்ச்சியிலும் ஒன்றும் நேரப்போவதில்லை,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 18 April 2016

கற்க கசடற- இணையமும் ஆர்வமும் இருந்தால் போதுமே!


inaya thalam3
இணைய வசதிகள் பெருகிவிட்ட இன்றைய நாளில் அறிவினை வளர்த்துக்கொள்ளவும், திறன்களை பெருக்கிக் கொள்ளவும் ஏராளமான இணையதளங்கள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன. ஒருவர் தனக்கு கற்பதற்கான வாய்ப்பு இல்லை என்றோ, மறுக்கப்பட்டது என்றோ கூறவே இயலாது. ஆர்வம் இன்மை அல்லது சோம்பேறித்தனம் மட்டுமே திறன்கள் இல்லாத தன்மைக்குக் காரணம் என்று இனி சுட்டப்படும். ஏனென்றால் அந்த அளவிற்கு சுயமாக கற்றறிந்து கொள்வதற்கு வசதிகள் பெருகிவிட்டன.
அத்தகைய இணையதள கல்வி கற்கும் வாய்ப்புகளை கீழே உள்ள சிறிய பட்டியல் மூலமாக அறிந்துகொள்ள முயல்வோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 17 April 2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில தலைவர் பக்கீர் முகமது அல்தாஃபி அவர்களின் நேர்காணல்


tntj5
கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: என்னுடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில்தான் பள்ளிப் படிப்பை படித்தேன். அங்கு ஐந்தாம் வகுப்புவரை படித்துவிட்டு, அதன்பிறகு இசுலாமிய மார்க்கம் குறித்த கல்விக்காக எனது பெற்றோர்கள் அனுப்பி வைத்துவிட்டார்கள். நெல்லை மாவட்டம் தென்காசியில் பத்தாண்டு காலம் மார்க்கக் கல்வியை முடித்தேன், 2002ன் இறுதியில் அது முடிந்தது. 2003ன் துவக்கத்தில் நான் இந்தக் கொள்கை, அமைப்பின்பால் ஈர்க்கப்பட்டு இதில் ஒரு பிரச்சாரகனாக உள்ளே நுழைந்து இன்றுவரையிலும் பணி செய்து கொண்டிருக்கிறேன். பள்ளிக்கூடத்தில் படித்தது ஐந்தாம் வகுப்பு வரையிலும்தான். அதன் பிறகு மார்க்கக் கல்வி என்று போய்விட்டேன். அதன் பிறகு சொந்த விருப்பத்தின்பேரில் எட்டாம் வகுப்பை தனியாக படித்து தேர்வு எழுதினேன், பத்தாம் வகுப்பும் எழுதினேன். திறந்த வெளி பல்கலைக்கழகம் முறையில் M.A வரலாறு படித்து அதற்குரிய சான்றிதழைப் பெற்றிருக்கிறேன்.
கேள்வி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் எப்போது துவங்கப்பட்டது, எதற்காக துவங்கப்பட்டது?

tntj2
பதில்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற இந்த அமைப்பைப் பொறுத்த வரையிலும், இது 1980களின் துவக்கத்தில் கொள்கை ரீதியாக துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு அது பல்வேறு பரிணாமங்கள் அடைந்து பலதரப்பட்ட பெயர்களில் இயங்கியிருக்கிறது. அப்படியே கடந்து கடந்து கடந்து கடைசியாக 2003ல்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயரில் நாங்கள் பணி செய்ய ஆரம்பித்திருக்கிறோம். அதற்கு முன்பு பல பெயர்களில் இயங்கியிருக்கிறோம். இது 1980 களின் துவக்கத்தில் இதே கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக துவக்கப்பட்டது. இதனுடைய நிறுவனர் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சார்ந்த பி.ஜெயினுலாபதி. அவருடைய பதவிக்காலம் முடிந்ததற்குப் பிறகு நாங்கள் இந்த நிர்வாகத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 15 April 2016

பொருளாதார விளையாடல்கள்: இறுதிப் பகுதி

முதலாளித்துவம் தோன்றிய சிறிது காலத்திலேயே அது அமைப்பாக உருவெடுத்துவிட்டது என்றே தோன்றுகிறது. முன்பே கூறியவாறு, ஒரு அமைப்பாக முதலாளித்துவத்தின் முக்கியமான பணி உற்பத்திக்குத் தேவையான பொருட்களையும் மனித உழைப்பையும் ஒருங்கிணைத்து நுகர்வுப் பொருட்களை உருவாக்கி, அவற்றை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம் லாபத்தைப் பெறுவது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள், உற்பத்திக்குத் தேவையான பண முதலீட்டை அளிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி. அதைவிட முக்கியமாக கச்சாப் பொருட்களை பெறத் தேவையான அதிகாரமும் உற்பத்தியான நுகர்வுப் பொருட்களை நுகர்வோர்களால் ஏற்றுக்கொள்ள வைப்பதற்குமான அதிகாரமுமே அதன் உண்மையான முதலீடுகள்.
porulaadhaara vilayaadalgal2
அத்தகைய அதிகாரத்தை உடையவர்கள் முதலாளித்துவ அமைப்பில் இல்லையெனில் அது விலை கொடுத்து வாங்கப்படும். இங்கு அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம் மட்டும் அல்ல. அது அறிவால் பெற்ற அதிகாரமாக இருக்கலாம், கல்வியால் பெற்றதாக இருக்கலாம், நட்பால் பெற்றதாக இருக்கலாம். இந்த அதிகாரத்தை அடையும் முயற்சியில், முதலாளித்துவ அமைப்புகளில் பெரும்பாலானவை எல்லா அற உணர்வுகளையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றன. பெரும்பாலும் இந்த அறமீறல்கள், அவை அடைந்த அதிகாரத்தின் துணை கொண்டு சட்டப்பூர்வமாக மீறப்படுபவை. இந்த அதிகாரம் எவ்வளவுக்கெவ்வளவு கச்சாப் பொருட்களை குறைந்த விலையில் பெற உதவுகிறதோ எவ்வளவுக்கெவ்வளவு நுகர்வுப் பொருட்களை அதிக விலைக்கு விற்க உதவுகிறதோ அந்த அளவுக்கு அந்த முதலாளித்துவ அமைப்பு வெற்றிகரமாக இயங்கும். பொது வெளியில் உள்ள பணப்புழக்கத்தை தன்னை நோக்கி ஈர்க்கும். முதலாளித்துவ அமைப்பின் நோக்கம், பொதுவெளியில் புழங்கும் பணத்தை தன்னை நோக்கிக் குவிப்பதுதான்.

பெரும்பாலும் முதலாளித்துவத்தைத் தழுவி விட்ட உலகப் பொருளாதாரத்தில், பணம் இவ்வாறு முதலாளித்துவ அமைப்புகளிடம் குவிகிறது. அந்தக் குவிதலின் ஒரு பகுதி உற்பத்தியின் உழைப்புக்காக அளிப்பதன் மூலம் பரவலாக்கப்படுகிறது. இந்தப் பரவலாக்குதல் மொத்த உற்பத்தியின் ஒரு சிறு பகுதியே. தொழில் இயந்திரமயமாக்கப்படுவதன் மூலம் பணத்தின் பரவலாக்கம் மேலும் குறைக்கப்படுகிறது. இயந்திர மனிதர்களை (Robots) பெருமளவில் தொழில்களில் பயன்படுத்துவது தற்போது

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

குற்றாலமலையில் உள்ள 2,500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு எழுத்துக்களை இன்றளவிலும் படிக்க இயலவில்லை!


kutraala malai4
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள பொதிகைமலை தொன்மையும், தனித்தன்மையும் வாய்ந்ததாகும். 1,868 மீட்டர் உயரமுள்ள இம்மலை, நெல்லை, கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் போன்ற தமிழக மற்றும் கேரள மாவட்ட எல்லைப் பகுதிகளுக்குள் அமைந்துள்ளது. இதில் குற்றால வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒரு புடவுக்கு வெளிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு எழுத்துக்கள், பல ஆண்டுகளாகவே அகழ்வாராய்ச்சியாளர்களிடம் கண்ணாமூச்சிக் காட்டிக்கொண்டிருக்கிறது. சுமார் 2500 வருடங்களுக்கு முற்பட்ட அக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை இன்றளவிலும் முழுமையாகப் படிக்க இயலவில்லை.
அப்படி என்னதான் அக்கல்வெட்டில் உள்ளன என்பதை நேரடியாகப் பார்ப்பதற்காக அங்குசெல்ல முடிவெடுத்தோம். குற்றாலத்திலிருந்து 35 கி.மீ. தூரத்திற்கு மலை வழியே கால்நடையாக நடந்து செல்லவேண்டும். குற்றால நண்பர் ஒருவர் வழிகாட்ட, இடுப்பு உயரத்திற்கு புதர்களால் சூழப்பட்ட பாதைகள் ஊடாக, செங்குத்துச்சரிவு ஊடாக, ஆறுகள் ஊடாக,… காட்டுப்பயணம் தொடர்ந்தது. 4 மணிநேர மலை நடைப்பயணத்திற்குப்பின், கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்தோம். இந்த இடத்தின் பெயர்தான், ‘சன்னியாசிபுடவு’. உள்ளூர் மக்கள், இதனை ‘பரதேசி குகை’ எனஅழைக்கின்றனர்.

நெடுங்காலத்திற்கு முன்னர் சன்னியாசி ஒருவர் இப்புடவிலே வாழ்ந்ததாகவும், காட்டில் கிடைப்பவற்றை உண்டு அங்கேயே காலம் கழித்ததாகவும் வழிகாட்டி தெரிவித்தார். வழிகாட்டிக்கு அந்தப்புடவு மட்டும்தான் தெரிந்திருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் இருக்குமிடம் அவருக்குத் தெரியாது என்றதால், அரைமணி நேரமாக துருவித்துருவி தேடிப்பார்த்து எழுத்துக்களை ஒருவழியாகக் கண்டுபிடித்தோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 14 April 2016

இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21: ஒரு பார்வை !!


law book and gavel
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 21 என்ன சொல்கின்றது என்றால், “No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law”
எந்த மனிதனின் வாழ்வுரிமையும்  அல்லது தனி மனிதஉரிமையும் சட்டப்படியானவழிமுறை தவிர்த்து வேறு எதன் மூலமும்  பிடுங்கிக்கொள்ளப்படமாட்டாது. சுருங்கச்சொல்ல வேண்டும் எனின் குற்ற விசாரணை மற்றும் தண்டனைக்கு தகுந்த விசாரணை இன்றி ஒரு நபரின் தனிப்பட்ட உரிமைகளையும், உயிரையும் எடுக்கக் கூடாது.
அதன்படி இந்திய உச்சநீதி மன்றங்கள் இந்த சரத்து 21-ஐ கொண்டு தீர்ப்பு வழங்கும் நிலையில்  பரந்தகன்ற பொருள்விளக்கம் கொண்டே கையாள்கின்றன.

Maneka Gandhi எதிர்  Union of India 1978 SC 597, என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு  சரத்து 21-ஐ அரசு தனி மனிதருக்கு எதிராகக்கையாளும் போது தன்னிச்சையான, நியாயமற்ற அல்லது பொய்யான நடவடிக்கைகளை  எடுக்கக்கூடாது என்று அரசிற்கு விதிமுறைகள் கூறியது. மேலும் சரத்து 14, 19, 21 ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நீதிமன்றம் நிறுவியது. ஒரு நபரின் தனி மனித உரிமையைப் பறிக்கும் பட்சத்தில் சரத்து 14 மற்றும் 19-ல்கூறியுள்ளவற்றையும் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியது. மேலும் சரத்து 21 ஒரு நபர் சுரண்டப்படாது மனித தகுதியோடு, மரியாதையாக வாழ வழிவகுக்கின்றது. அதன் படி,  தனி நபரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது ஒரு அரசின் அரசமைப்பு கடமையாகும். குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 12 April 2016

சிறந்த உணவுமுறை எது?


diet1
பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண்குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்
என்று இருவேறுபட்ட உணவு உண்ணும் நிலைமை உலகில் உள்ளதைக் கவிஞர் கண்ணதாசன் சுட்டிக் காட்டியிருப்பார்.

ஆனால், மற்றொரு மாறுபட்ட கோணமும் நம்மிடம் உண்டு. நன்கு வகைவகையாக சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று சமையற்குறிப்புகளைத் தேடி அலைவது ஒரு பக்கம் என்றால், சாப்பிட்ட உணவு உடற்பருமனையும், அதன் மூலம் பிற வகையில் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கக் கூடாது என்ற நோக்கில், ஆரோக்கியமான உணவுமுறை எது என்றும் மறுபக்கம் நாமே தேடிக் கொண்டிருப்போம். உணவு பற்றிய கட்டுரை என்பதால் “You can’t eat your cake, and have it too” என்ற ஆங்கிலப் பழமொழியையோ, “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்ற தமிழ்ப்பழமொழியையோ நினைவு கூரலாம். “The irony of life” என்று இது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல எதிரெதிர் பலன்களையும் அடைய விரும்பும் மனநிலை நம்மிடம் இருப்பதுதான் நடைமுறை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 11 April 2016

நீரிழிவு நோய் மருத்துவர் V.வேணுகோபால் அவர்களின் நேர்காணல்: இறுதிப் பகுதி

கேள்வி: சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?
Dr.Venugopal24
பதில்: அதிக நாட்களுக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கும். சிலர் ஆயுள்காப்பீடு எடுக்கச்செல்வார்கள், மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வார்கள் அந்த நேரத்தில் முதலில் இருப்பது தெரியும். ஒருவருக்கு சிறிய விபத்து நடந்திருக்கும், நேற்று வரையிலும் சர்க்கரை நன்றாகத்தான் இருந்தது மருத்துவ பரிசோதனையில் ஆனால் இன்றைக்கு இருசக்கர வாகனத்தில் ஒரு சிறிய விபத்து நடந்திருக்கும். அதன் காரணமாக இரத்தப்பரிசோதனை செய்தால் சர்க்கரை ஏறியிருக்கும். எனவே திடீரென்று ஏற்பட்டிருக்கும் அலட்சிகள்.
90 பேருக்கு அறிகுறிகள் இல்லாமலே இருந்து, சர்க்கரை ஒரு அளவிற்கு மேல் போகும்பொழுது அவர்களுக்கு முதன் முதலில் அதிக தாகம், நா வறட்சியினால் தாகம், நிறைய நீர் செல்வது போன்ற அறிகுறிகள் உருவாகும். இதனை Polyurea, Polydipsiya என்பார்கள். சிலருக்கு சாப்பிட்டாலும் பசி அடங்காது, மறுபடியும் மறுபடியும் சாப்பிடவேண்டும் என்கிற சூழ்நிலை இருக்கும். இது ஆரம்பநிலை. சிலருக்கு காலில் மதமதப்பு, எரிச்சலோடு உள்ள வலி, கால் குத்தல், சோர்வு, எவ்வளவு சாப்பிட்டாலும் சோர்வு இருக்கும் அடித்துப்போட்டமாதிரி, அப்படியே தூங்கலாமா என்று தோன்றும்.

மற்றொன்று ஆண்களுக்கு பிறப்புறுப்பு முனையில் இருக்கிற தோலில் சிறிய சிறிய புண்கள், அழுக்கு சேருகிறது போல் சேர்ந்து நமச்சல் இருக்கும். நிறையபேர் இதனை பாலியல் நோயா என்றுகூட சந்தேகப்பட்டுவிடுவார்கள். அப்படியெல்லாம் இல்லை, இது ஆண்களுக்கு ஏற்படுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 7 April 2016

மகிழ்ச்சிக்கான இரகசியங்கள்!

magizhchiyaana1
1.”எதற்கு அவசியமே இல்லையோ அதை நினைத்து எப்பொழுதும் கவலைப்படாதீர்கள்”.
2.”ஏதாவது மனம் பொருந்தாத நிகழ்வு நடந்தாலோ, தவறான நிகழ்வொன்று நேர்ந்தாலோ  இது தவறான நிகழ்வுதானே அன்றி தவறான வாழ்க்கை கிடையாது என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.”
3.”உங்களுக்குத் தெரிந்தவரையில் இருப்பது இந்த ஒரே வாழ்க்கை மட்டும் தான். உங்களுக்குப் பிடித்தது போல பிறருக்கு இடையூறின்றி இரசித்து வாழுங்கள்.”
4.”மனமுடையும் பொழுதுகளில் தனியே அழுதுவிடுங்கள்! அது மனச்சுமையையும் குறைக்கும், கண்களில் உள்ள தூசுகளையும் வெளியேற்றும்.
5.”பிறரிடம் பேசும் பொழுதுகளில் நல்லெண்ணத்தை அதிகம் விதையுங்கள், அவரோடு சேர்ந்து உங்கள் எண்ணமும் வளர்ச்சி அடையும்.”

இவை எல்லாம் தெரிந்தும்  கவலைப்படும் மனதை என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கூறுகிறீர்களா?,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 6 April 2016

பொருளாதார விளையாடல்கள்

porulaadhaara vilayaadalgal1
உலகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளதாரத் துறையின் கைக்கு சென்று கொண்டிருக்கும் காலம் இது. மிக சமீபத்திய எதிர்காலத்தில் அதிகாரம் முற்றிலும் பொருளாதாரத்துறையைச் சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறு அடையப்பட்டிருந்தாலும், அது எப்போதுமே பொருளாதாரத்தை சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அதன் தொடக்கமும், செயலியக்கமும், முடிவும் பொருளாதாரத்தைச் சார்ந்தே இருக்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனில் அதன் விளைவுகள் மனித சமூகத்திற்கு முற்றிலும் சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
porulaadhaara-vilayaadalgal9
பொருளாதாரத்தின் மறுபெயர் நுகர்வு. பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை மனித சமூகம் உபயோகப்படுத்தி, அதைக் கழிவாக மீண்டும் பூமிக்கு அளிப்பது நுகர்வு. உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ளவையும் உயிரற்றவையும், தொடர்ந்து மற்றொன்றை நுகர்ந்து தானும் மாறி நுகர்ந்தவற்றையும் பிறிதொன்றாக மாற்றி வேறொன்றின் நுகர்வுக்குத் திரும்ப அளித்துக் கொண்டே இருக்கின்றன. இது ஒரு இடைவிடாத இயக்கம். மனிதர்கள் இன்று உருவாக்கும் பெரும்பான்மையான கழிவுகள் பிற உயிரினங்களால் நுகரமுடியாதவையாக உள்ளதால் பூமி மனிதக் கழிவுகளின் குப்பைக்கூடமாக மாறிவருகிறது. மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கெல்லாம் உணவே அவற்றின் நுகர்வின் பெரும் பகுதி. உயிரில்லாதவை பிற உயிரினங்களாலோ இயற்கையின் விசைகளாலோ நுகரப்படுகிறது. நுகரப்படுவதன் எதிர் விளைவாக அவை நுகரவும் செய்கின்றன. இந்தத் தொடர் இயக்கங்களின் மூலமே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 5 April 2016

சங்க காலத் தமிழரின் விளையாட்டுக்கள்


tamilargalin-vilayaattu9
மனித இனத்தில் விளையாட்டும் விளையாட்டுக்கள் எப்பொழுதும் முக்கிய இடங்களை வகித்துவருகின்றன. அவற்றைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் அநேக இடங்களில் பரவியுள்ளன. சங்ககால விளையாட்டுக்கள் வாழ்வில் பெரும்பாலும் விளையாட்டை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் அவர்களது வீரத்தை பறைசாற்றுபவையாக இருந்துள்ளன. அவைகள் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு இப்பகுதியில் காணலாம். மேலும் பெண்கள் விளையாட்டுக்கள் எப்படிப்பட்டவையாக இருந்துள்ளன என்பதையும் இப்பகுதியில் காணலாம்.
  1. புனலாடுதல்:

பெண்கள் பலர் சூழ்ந்து நிற்க ஆடவர்கள் தங்கள் வீரத்தை காட்டும் விதமாக நீர்த்துறை அருகே தாழ்ந்த கிளைகளையுடைய மருத மரத்தினின்று ஆழமிக்க கிணற்றுக்குள் பாய்ந்து மூழ்கி அக்கிணற்றின் அடியில் இருக்கும் மணலை எடுத்து அங்கு சூழ்ந்திருந்த பெண்களிடம் தம் வீரத்தைக் காட்டும் விதமாக அம்மணலை நுகர்ந்து காட்டியதாக புறநானூறு பாடலின் வாயிலாகவே நமக்கு ஆதாரம் கிடைக்கிறது. அவற்றின் தன்மையைப் பற்றியும் அழகுற விளக்குகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 4 April 2016

வெப்ப அலைகள்(Heat Waves)


veppa alaigal1
மே மாதம் வரப்போகிறது. கோடையின் தாக்கமும் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த வருடம் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் சேர்த்து வெயிலின் காய்ச்சலுக்கு, ஐ.நா-வின் அறிக்கைப்படி 2248 பேர் இறந்தனர். பின்னர் அதைப்பற்றி அரசும் மறந்துவிட்டது, நாமும் மறந்துவிட்டோம். ஆனால் வருமுன் சிந்திப்பதே சாலச்சிறந்தது என்பதால், வெயிலின் பாதிப்பை முன் கூட்டியே கணித்து பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, நம்மை நாமே தயாராக்கிக் கொள்வோம்.
பொதுவாகவே பேரிடர் பாதிப்புகளில், நாம் நிலநடுக்க பாதிப்புகளையும், சுனாமி, வெள்ளம், புயல் போன்றவற்றின் பாதிப்புகளை மட்டுமே நாம் கவனத்தில் கொள்கிறோம். வெப்ப அலைகள்(Heat waves) என்பதனை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இதுபெரும் தவறு என்பதனை அதிகரித்துக் கொண்டிருக்கும் புவி வெப்பநிலை, நமக்கு எச்சரிக்கிறது. வெப்ப அலைகள் என்றால் சுற்றுப்புறம், காற்று ஆகியவற்றில் வெப்பத்தை ஏற்படுத்துவது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 3 April 2016

நீரிழிவு நோய் மருத்துவர் V.வேணுகோபால் அவர்களின் நேர்காணல்


Dr.Venugopal1
கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: நான் பேராசிரியர் மருத்துவர் வேணுகோபால். பிறந்தது திருவண்ணாமலை அருகில் இருக்கும் போளூர் என்ற ஒரு சிறிய நகரம். அவ்விடத்திலே பத்தாம் வகுப்புவரை முடித்துவிட்டு, லயோலா கல்லூரியில் P.U.C. முடித்து, அதற்குப் பிறகு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் M.B.B.S மற்றும் M.D இரண்டையும் முடித்தேன். அதன் பிறகு உதவி பேராசிரியராகவும், பேராசிரியராகவும் அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்தேன். ஸ்டான்லியில் இருபது வருடத்திற்கு மேலும், சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாண்டும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இரண்டாண்டும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஒன்றரை ஆண்டும் என்னுடைய பணி இருந்தது.
அதற்குப் பிறகு வெளிநாட்டில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் மாநகரில் மூன்றாண்டுகளுக்கும் மேலும், அமெரிக்காவில் மேயோ கிளினிக்கிலும் என்னுடைய பணி முடிந்ததற்குப் பிறகு, மறுபடியும் தமிழகத்திற்குத் திரும்பிவந்து பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் மருத்துவத்துறை பேராசிரியராகவும், அதற்குப் பிறகு முதல்வராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றபிறகு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டப்படிப்பு இயக்குனராக இருந்து பதினைந்து நாட்களுக்கு முன் ஓய்வுபெற்று, இப்பொழுது சர்க்கரைநோய் துறை என்பதால் அதிலே சிறப்புப் பயிற்சிகள் பெற்றிருப்பதால் அதை இப்பொழுது எடுத்துக்கொண்டு இப்பொழுது அதன் ஆலோசகராக சிறப்புத் துறை மருத்துவராகப் பணியாற்ற இருக்கின்றேன்.
கேள்வி: சர்க்கரை நோய் என்றால் என்ன?

Diabetic patient doing glucose level blood test
பதில்: என்னுடைய கருத்துப்படி இதற்கு தவறான பெயர் கொடுத்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். சர்க்கரை நோய் என்று சொல்வதற்குப் பதிலாக, சர்க்கரை அதிகமான மாற்றம் ஏற்படுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம். நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்து என்ற மூன்று முக்கியமானது. மாவுச்சத்தில் முக்கியமானது என்னவென்றால், செரித்த பிறகு கடைசியாக மாறுவது குளுக்கோஸ் அல்லது சர்க்கரை. குளுக்கோஸ் என்பது ஒரு வகையான சர்க்கரை. இதனுடைய பணி என்னவென்றால், இதுதான் நம் உடம்பிற்கு சக்தி(Energy) கொடுக்கக்கூடியது. எப்படி காருக்கோ அல்லது மற்ற வாகனங்களுக்கோ பெட்ரோல் எரிபொருள் சக்தி கொடுக்கிறதோ, அதுபோல் இது ஒரு எரிபொருள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.