Monday 11 April 2016

நீரிழிவு நோய் மருத்துவர் V.வேணுகோபால் அவர்களின் நேர்காணல்: இறுதிப் பகுதி

கேள்வி: சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?
Dr.Venugopal24
பதில்: அதிக நாட்களுக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கும். சிலர் ஆயுள்காப்பீடு எடுக்கச்செல்வார்கள், மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வார்கள் அந்த நேரத்தில் முதலில் இருப்பது தெரியும். ஒருவருக்கு சிறிய விபத்து நடந்திருக்கும், நேற்று வரையிலும் சர்க்கரை நன்றாகத்தான் இருந்தது மருத்துவ பரிசோதனையில் ஆனால் இன்றைக்கு இருசக்கர வாகனத்தில் ஒரு சிறிய விபத்து நடந்திருக்கும். அதன் காரணமாக இரத்தப்பரிசோதனை செய்தால் சர்க்கரை ஏறியிருக்கும். எனவே திடீரென்று ஏற்பட்டிருக்கும் அலட்சிகள்.
90 பேருக்கு அறிகுறிகள் இல்லாமலே இருந்து, சர்க்கரை ஒரு அளவிற்கு மேல் போகும்பொழுது அவர்களுக்கு முதன் முதலில் அதிக தாகம், நா வறட்சியினால் தாகம், நிறைய நீர் செல்வது போன்ற அறிகுறிகள் உருவாகும். இதனை Polyurea, Polydipsiya என்பார்கள். சிலருக்கு சாப்பிட்டாலும் பசி அடங்காது, மறுபடியும் மறுபடியும் சாப்பிடவேண்டும் என்கிற சூழ்நிலை இருக்கும். இது ஆரம்பநிலை. சிலருக்கு காலில் மதமதப்பு, எரிச்சலோடு உள்ள வலி, கால் குத்தல், சோர்வு, எவ்வளவு சாப்பிட்டாலும் சோர்வு இருக்கும் அடித்துப்போட்டமாதிரி, அப்படியே தூங்கலாமா என்று தோன்றும்.

மற்றொன்று ஆண்களுக்கு பிறப்புறுப்பு முனையில் இருக்கிற தோலில் சிறிய சிறிய புண்கள், அழுக்கு சேருகிறது போல் சேர்ந்து நமச்சல் இருக்கும். நிறையபேர் இதனை பாலியல் நோயா என்றுகூட சந்தேகப்பட்டுவிடுவார்கள். அப்படியெல்லாம் இல்லை, இது ஆண்களுக்கு ஏற்படுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment