Monday 25 April 2016

கோகினூர் வைரத்தைப் பறி (பரிசாகக்) கொடுத்த பஞ்சாப் மன்னரின் கதை


kohinoor2
இங்கிலாந்து அரசியின் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள  கோகினூர் வைரம் இந்தியாவிற்குச் சொந்தமானது அது மீட்கப்பட வேண்டும் என்று அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான முன்னணி ஆகியவை இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் இந்திய அரசின் நிலைப்பாடு ஒவ்வொருமுறையும் முரணான  தகவல்கள் வழங்கி வருவதாக அமைந்துள்ளது. கோகினூர் வைரம் பரிசாகக் கொடுக்கப்பட்டதால் அன்பளிப்பைத் திரும்பக் கேட்பது முறையல்ல என்ற வகையில்  கருத்துக்களை நீதிமன்றத்தில் முன் வைத்த அரசு, இப்பொழுது கோகினூர் வைரத்தை மீட்பது குறித்த தனது முடிவை அரசு விரைவில் அறிவிக்கும் என்று பின்வாங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கோகினூர் வைரத்தை பரிசாகக் கொடுக்க நேர்ந்த மன்னரின் நிலைமையையும் நாம் பரிசீலனை செய்வது இங்கிலாந்து வைரத்தைப் பெற்றது நேர்மையான முறையில்தானா  என்பதைத் தெளிவுபடுத்தும்.
Duleep_Singh2
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள – என்றொரு பழைய பாடல் உண்டு. அதில் கூறப்பட்ட பரிதாபத்திற்குரிய நிலையில் சில மன்னர்கள் வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. பெயரளவில் மன்னர் என்ற  பட்டம் இருக்கும், ஆனால் உரிமையுடன் ஆள்வதற்கோ நாடிருக்காது. அவர்களுள் ஒருவரென வாழ்ந்தவர் நமது இந்திய மன்னர் துலிப் சிங் (Maharaja Duleep Singh). இவர் சீக்கியப் பேரரசை உருவாக்கிய, “பஞ்சாப் சிங்கம்” என்று புகழப்பட்ட பேரரசர் ரஞ்சித் சிங் (Maharaja Ranjit Singh, the Lion of Punjab) அவர்களின் கடைசி மகன். பிற்காலத்தில் நாடில்லாது வாழ்ந்த மன்னர் துலிப் சிங் ஆட்சிக்கு வந்ததென்னவோ அவரது ஐந்தாவது வயதில். அவரது பிரதிநிதியாக அவரது தாயாரான பேரரசியும், பேரரசியின் சகோதரரும்,  அதாவது மன்னரின் தாய்மாமனும் பொறுப்பேற்று நாட்டை ஆண்டார்கள்.  ஆனால், துலிப் சிங்கின் பத்து வயதிலேயே நாடு ஆங்கிலேயர் வசமானது, அவரும் நாடுகடத்தப்பட்டார். மன்னர் துலிப் சிங்கின் இரங்கத்தக்க வாழ்க்கை வரலாறுதான் நாம் பார்க்கப்போவது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment