Tuesday 24 May 2016

தாலாட்டுப் பாடுங்கள்


thaalaattu3
அழுகின்ற குழந்தையை அரவணைத்து அதனை மடியில் போட்டு தாலாட்டி தூங்க வைக்கும் மரபு தமிழ்ச் சமூகத்தில் இன்றைக்கு அருகி வருகின்றது என்றே சொல்ல வேண்டும். அழுகின்ற குழந்தைக்கு கணினியில் குழந்தைகள் பாடல் நாம் காண்பித்தாலும், நாம் நம் நாவினை அசைத்துப் பாடும் தாலாட்டுப் போல் சிறப்பாக இருக்காது. “தால்” என்றால் நாக்கு “ஆட்டுதல்” என்பது அசைத்தல், நாவினை அசைத்துப்  பாடுவதால் தால்+ஆட்டு=தாலாட்டு எனப் பெயர் பெற்றது என்று கூறுவர். அதே போன்று தால் என்றால் தொட்டில் என்றும்  பொருள்படும். தாய் தொட்டிலை ஆட்டிக் கொண்டே பாடுவதால் தாலாட்டுப் பாடல் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

பெரும்பாலும் தமிழ்ச் சமூகத்தில் ஆண் குழந்தை தாலாட்டு, பெண் குழந்தை தாலாட்டு என்று பிரித்து பாடும் வகையும், இருபாலருக்கும் ஒரே தாலாட்டு பாடும் மரபும் உண்டு. ஆண் குழந்தைகளுக்கு வீரம் செறிந்த பாடல்களையும், பெண் குழந்தைக்கு மென்மையான பாடல்களையும் வைத்துள்ளனர் என்ற போதும் இன்றைக்கு சூழலில் இருபாலருக்கும் ஒரே தாலாட்டுப் பாடலை படுவதே  இளமையிலிருந்தே சமத்துவத்தை குழந்தைகளிடம் கொண்டுச் செல்லும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment