Tuesday 31 May 2016

விட்டுச்செல்லும் சுற்றுச்சூழல்..

Environment11

அழகிய மலைத்தொடர்கள், சமவெளி எங்கும் விளைச்சல்கள், ஆங்காங்கே பருவம் தவறாத மழைப்பொழிவு என்று அழகுறச் செழித்திருந்தது தான் நமது பாரதத் திருநாடு.
கடுங்குளிர், கடும் வெப்பம், அதிக மழைப்பொழிவு, குறைந்த மழைப்பொழிவு, மிதமான வெப்பநிலை, சீரான பருவ நிலை மாற்றம், பாலைவனம் மற்றும் பனி மலை இவ்வாறாக ஒரு கண்டத்தில் நிலவும் கால நிலை அனைத்தும் நம் நாட்டில் நிலவுவதால் தான் நமது நாட்டிற்கு துணைக்கண்டம் என்று பெயர். இயற்கை அன்னை அளித்த பெரும் கொடைதான் நாம் இங்கு பிறந்திருப்பது. அத்தகைய நாட்டை பேணிக் காத்தல் என்பது நம் தலையாய கடமை!

Changing Environment

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு காரணங்களால் இன்று நமது சுற்றுச்சூழல் பெருவாரியாக மாசுபட்டு வருகிறது.


மக்களிடம் எவ்வளவு தான் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டு வந்தாலும் அதை ஒரு அலட்சியப்போக்கோடு கடந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே மக்கள் தான் சமூக வலை தளங்களில் சமுதாயத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாக வசனமும் பேசி வருகிறார்கள். சிலர் எழுதுவதோடு நில்லாமல் செயலிலும் ஈடுபடுகிறார்கள், இது பாராட்டத்தக்க விடயம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment