Thursday 26 May 2016

வள்ளி என்றொரு நாயகி(சிறுவர் சிறுகதை)


valli1
மன்னர் விக்கிரமங்கலத்திற்குக் குழந்தை பாக்கியம் கிடையாது. இதனால் மன்னரும் ராணியாரும் பெரிதும் துயருற்றனர். இருவருக்கும் பெண்குழந்தைகள் என்றால் கொள்ளைப்பிரியம், ஒரு பெண்குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க இருவரும் ஆசைப்பட்டனர். மன்னர் தனது விருப்பத்தை தனது தாய்மாமன் நிறைமதியாரிடம் தெரிவித்தார். நிறைமதியார் மன்னரின் தாய்மாமன் மட்டுமல்ல, அரசின் ராஜகுருவும் கூட, அவரின் வழிகாட்டுதலின்படியே மன்னர் தனது பரிபாலனத்தை நடத்திவந்தார். “தத்தெடுப்பதற்கான அவசியம் இப்போது இல்லை! காலம் கனியும்!”- என்றார் ராஜகுரு, மன்னர் குழம்பிநிற்பதைப் பார்த்த அவர் மேலும் “முனைமுறிந்த அம்புகள் வழிகாட்டும்!”- என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார். ராஜகுரு எப்போதும் அப்படித்தான், பூடகமாகவே பேசுவார், ஆனால் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அட்சரங்கள் பெறும், அதற்கான பொருளை உடனடியாகப் விளங்கிக்கொள்ள முடியாது. காலத்தின் போக்கில்தான் விளங்கிக்கொள்ள முடியும். மன்னரின் நலம்விரும்பியான ராஜகுருவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு சிறிதுகாலம் காத்திருப்பது என மன்னரும் ராணியாரும் முடிவுசெய்தனர்.

வள்ளி ஒரு ஏழைச்சிறுமி, பத்துவயதுப் பெண், சிறுவயதிலேயே தாய்தந்தையரை இழந்தவள், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். அவள் வசித்தவந்த ஊரின் பெரியதனக்காரர்கள் வீட்டுக் கால்நடைகளை மேய்ப்பது அவளது வேலை, அதில் கிடைத்த  சிறுவருவாயில் அவள் தன்னையையும் பாட்டியையும் பாதுகாத்து வந்தாள். மற்ற சிறுவர்சிறுமியர் போன்று பள்ளிசெல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் அவளுக்கு உண்டு, ஆனால் இயல்பாகவே எதையும் கூர்ந்துகவனித்து கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவள்,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment