Sunday 31 January 2016

தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன் அவர்களின் நேர்காணல்


devaneyan3
கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: என்னுடைய பெற்றோருடைய சொந்த ஊர் திருநெல்வேலி. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் கோபி பாளையம் என்கிற கிராமம். அங்கு எட்டாம் வகுப்பு வரையிலும் அரசு உதவி பெறுகிற கிறித்துவப் பள்ளியிலும், பின் அரசுப் பள்ளியிலும் படித்தேன். பத்தாம் வகுப்பு திண்டுக்கலில் அரசு உதவி பெறுகிற பள்ளியில் படித்தேன். அதன்பிறகு இளங்கலை இயற்பியல் கோபி கலைக்கல்லூரியிலும், முதுகலை இயற்பியல் லயோலா கல்லூரியிலும் படித்திருக்கிறேன். அப்பா ஒரு தனித்தமிழ் ஆர்வலர், பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மாணவர்.
அடிப்டையில் எங்களது கிராமப்புரத்தில் நிறைய விடயங்களைக் கொண்டுவருவதற்கு என்னுடைய அப்பா ஒரு காரணம். பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருந்து பள்ளிக்கூடத்தையே ஒரு சமூகக்கூடமாக மாற்றியவர். அதனால் என்னுடைய வீட்டில் அனைவருக்குமே சமூகப்பணி என்பது சாதாரண விடயம்தான். என்னுடைய வீடு இயல்பாகவே தமிழறிஞர்கள், சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெரியாரிய தொண்டர்கள், அம்பேத்கர் தொண்டர்கள் என்று இந்த மாதிரி சமூகம் சார்ந்து இயங்கும். அதனால் எனக்கு இயல்பாகவே சிறிய வயதிலிருந்தே அதில் ஆர்வம் உண்டு.
அதன்பிறகு என்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கிற காலகட்டத்தில், ஈழத்தமிழர் போரில் என்னுடைய அப்பா தீவிரமாக ஈடுபட்டார். அவருடன் இணைந்து வேலைசெய்ததால், பெரியாரிய அமைப்பு கூட்டங்கள், தமிழ் அமைப்பு கூட்டங்கள் என்று இந்த மாதிரி கூட்டங்களுக்கெல்லாம் சென்று சென்று இயல்பாகவே வீடே அந்த அடிப்படையில் இருந்தது. அதன்பிறகு கல்லூரியில் படிக்கும் பொழுது பெரியாரிய சிந்தனையாளர் திராவிட கழகம் மரியாதைக்குரிய ராமகிருஷ்ணனோடு இனைந்து பணியாற்றுவதற்கும், மரியாதைக்குரிய ஐயா பெருஞ்சித்திரனாருடைய மகன் பொழிலனோடு இணைந்து பணியாற்றுவதற்கான வேலைகளை நிறைய செய்ததற்குப்பின், இயல்பாகவே பெரியாரிய, தமிழ்தேசிய, அம்பேத்கரிய பார்வையும் வந்தது.

அதன்பிறகு கல்லூரி படிப்பு MSc-யை லயோலா கல்லூரியில் முடித்ததற்குப் பிறகு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தது மட்டுமல்லாமல், தமிழ்சான்றோர் அமைப்பில் ஒருங்கிணைக்கிற பொறுப்பை ஏற்படுத்திதமிழ்நாடு முழுவதும் 100 தமிழர்கள் சாகும் வரை பட்டினிப் போராட்டம், தமிழ்வழி கல்விக்கான போராட்டத்திற்கான நெறிப்படுத்துகிற வேலைகளையும், தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தில் தமிழிசை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்துகிற வேலைகளையும், தமிழ்நாட்டில் இருக்கிற தமிழ், தமிழர் அமைப்புகளோடு இணைந்து ஒருங்கிணைக்கிற பணியிலும் இருந்தேன். குறிப்பாக சுப.வீரபாண்டியன், தோழர் தியாகு, மணியரசன், பெரியார்தாசன் இவர்களோடு இயங்குவதற்கான ஒரு பெரிய வாய்ப்பையும், அவர்களோடு நெருங்கிப் பழகி அம்பேத்கார், பெரியாரிய சிந்தனைகளை கிராமப்புற கூட்டங்களில் எற்படுத்துவதற்கும், வீதி நாடகங்கள் போன்ற அமைப்புகள் இயக்கப் பாடல்களோடு பாடுவதற்கான பிரச்சார பயணங்களிலும், தனித்தமிழ் இதழ்கள், பெரியாரிய, மாக்சீய அறிஞர்களின் இதழ்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பணிகளையும் பல்வேறு கட்டங்களில் வேலைசெய்து வந்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment