Sunday 31 July 2016

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி: தரம் எங்கே உள்ளது?


Siragu-engineering9

தமிழகத்தில் தற்போது வரை ஏறத்தாழ 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த வருடம் நடந்து முடிந்துள்ள பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஒரு இலட்சம் இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் மட்டும் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகின்றனர். இவர்களில் வேலைக்கு தகுதி உள்ளவர்கள் என்று பார்த்தால், மிக சொற்பமாக உள்ளனர்.

இன்றைக்கு தமிழகத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் முதலிடத்தில் உள்ளவர்கள் பொறியியல் பட்டதாரிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பெரிய நிறுவனங்கள் இதற்கு முன்னர், கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து வளாகத்தேர்வு நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து, தத்தமது நிறுவனங்களில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை அளித்து வந்தனர்.

Siragu engineering3

இம்மாதிரி வளாகத் தேர்வில் தேர்ச்சி அடைந்து, பணிக்குச் செல்பவர்களுக்கு, நிறுவனமே தங்களது வேலைக்குத் தேவையான பயிற்சியை அளித்து, பணி வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.


வளாகத் தேர்வில் தேர்ச்சி அடையாமல், பொறியியல் படிப்பை முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களின் நிலைமை மோசம். அதுவும் கிராமங்களில் உள்ள பொறியியல் கல்லூரியில், பொறியியல் கல்வியை முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 28 July 2016

கண்ணாடி வீடு!(கவிதை)


Siragu-kannaadi-veedu2

கண்ணாடி வீடுள்ளிருந்து
கல்லெறிந்தால்
யாருக்கு பங்கம்……?
நாம் அனுபவிக்கும் துன்பங்கள்
நாம் செயும் காரியங்களின் விம்பங்கள்
நம் நிம்மதியிலா வாழ்வு
நம் அளவிலா,அடங்காத ஆசைகள்,மோகங்கள்!
இதுவே நம் வாழ்வின்
இரகசியம்
சித்தாந்தம்

நிஜமும் கூட!
இது நமக்கு

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21090

Wednesday 27 July 2016

மனிதம்


Siragu-manitham1

நாம் வாழக்கூடிய நமது வாழ்க்கையானது, ஒருமுறைதான். நம் வாழ்க்கையானது அர்த்தமுள்ளதாகவும், பிறருக்கு முன் உதாரணமாகவும் விளங்கக்கூடிய மகத்தான மனிதர்களின் வாழ்வியலை, சமூக அக்கறையுள்ள அம்மனிதர்களின் பதிவு தான் இம் மனிதம்,
கள்ளக்குறிச்சி ராஜா, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் நிபுணர்.

Siragu-manitham4

சிறைக் கைதிகளின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையினையும் அவர்களது அன்றாட பழக்க வழக்கங்களையும் அருகில் இருந்து கவனித்து, அவர்களும் இச்சமூகத்தில் தங்களது வாழ்க்கையினை வாழ்வதற்கு வழிகாட்டும் மகத்தான மனிதர்கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மனதில் தோன்ற விடாமல், நல்வழிப்படுத்தும் சமூக அக்கறையுள்ள மனிதர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 26 July 2016

மரபணு மாற்றம் செய்த உணவுகள் தேவையே – அறிவியல் அறிஞர்கள்



கிரீன் பீஸ் (Greenpeace) பசுமைப் போராளிகள் தலைமையகத்திற்கும், உலக ஐக்கியநாடுகளின் சபைக்கும், உலக நாடுகளின் அரசாங்கங்களின் கவனத்திற்கும் ….

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை திட்டத்தின் குறிக்கோளின் படி, வளரும் மக்கட்தொகையின் தேவையை நிறைவு செய்யும் வகையில் உலகளாவிய முறையில் உணவு, தீனி, தீவனங்கள் உற்பத்தியின் அளவு வரும் 2050ஆம் ஆண்டுக்குள் சுமார் இருமடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Siragu marabanu maatram article1


கிரீன் பீஸ் பசுமைப் போராளிகள் தலைமையின்கீழ் நவீன வேளாண்முறைகளை எதிர்க்கும் அமைப்புகள், தொடர்ந்து இந்த உண்மைகளை மறுத்து வருவதுடன், உயிரியல் தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் புதுமைகளைப் புகுத்தும் செம்மை வேளாண் முறைகளையும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் நவீன உயிரியல் தொழில்நுட்ப முறையில் முன்னெடுக்கப்படும் செம்மை வேளாண் முறைகளின் பயன்,ஆபத்து, தாக்கம் ஆகியன பற்றிய தவறானக் கருத்துக்களைப் பரப்புவதுடன், அனுமதிக்கப்பட்ட கள சோதனை முறைகள், வேளாண் ஆய்வுத் திட்டங்களைத் தடைசெய்து குலைக்கும் குற்றங்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 25 July 2016

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம்


Siragu indhiya porulaadhaaram2

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்கிறார்கள். இந்த ஆண்டு 8% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி) எட்டுவோம், அடுத்த ஆண்டு 10% வளர்ச்சியை எய்துவோம், 2025-இல் உலக வல்லரசாகி விடுவோம் என்கிறார்கள். இதில் காங்கிரஸ் ஆட்சியா, பிஜேபி ஆட்சியா என்ற வேறுபாடெல்லாம் இல்லை. ஆனால் நமக்குத் தெரிந்தவரை, இந்தியாவில் ஒருசில பணக்காரர்களின் தொகை அதிகரித்துள்ளது. ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். இலவசப் பொருள்களை நம்புகிறார்கள். அதையே நம்பி வாக்களிக்கவும் செய்கிறார்கள். விவசாயிகள் பிழைப்புக்கு வழியின்றித் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நடுத்தர மக்கள் தினசரி உயரும் விலைவாசியால் அவதிப்படுகிறார்கள். 1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது 1 டாலருக்கு 1 ரூபாய் என்று இருந்த மதிப்பு, இன்று 1டாலருக்கு 68 ரூபாய் அளவுக்கு வீழ்ந்துள்ளது (“வளர்ச்சியடைந்துள்ளது” என்று ஒருவேளை பிரதமர் மோதி, மன்மோகன் சிங் போன்ற அரசியல், பொருளாதார நிபுணர்கள் சொல்லலாம்!)

அதனால்தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்று தலைப்பிடாமல் பொருளாதார மாற்றம் என்று இக்கட்டுரைக்குத் தலைப்பிட்டுள்ளேன்.


சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 24 July 2016

முக்கியத் தேவை


Siragu mukkiyath thevai1

விடுதலை பெற்ற இந்த 69 ஆண்டுகளில் இந்திய நாடு பெரும் வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கின்றது என்று தான் நாம் இன்று வரையில் பாட நூல்களில் படிக்கின்றோம். இன்றைக்கு இந்த தொழில்நுட்ப யுகத்தில் இந்த நாட்டின் பல்வேறு துறைகள் மிக அதிகமான வளர்ச்சி பெற்றிருக்க நாம் காண்கின்றோம். ஆனால் இந்த வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியாக இந்தியாவில் இருக்கின்றதா  என்று சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக இல்லை. இன்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். இந்தியாவில் 259.5 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.19 வருமானம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்று 2011ல் நடந்த கணக்கெடுப்பு கூறுகின்றது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 21.3% மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்.  இது ஒரு புறம் இருக்க, சாதியின் பெயரால் இங்கே நடக்கும் கொடுமைகள் ஏராளம். 2020-இல் வல்லரசு நாடாக இந்தியா திகழும் என்று ஒரு புறம் நாம் பெருமை கொண்டாலும்; இன்றும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை  சாதிய அடிப்படையில்  நடந்து கொண்டே இருக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 21 July 2016

கவிதைச் சோலை(ஒற்றுமை கண்டு உவக்கும் தாய்!, அஸ்தமிக்கும் மனித உறவுகள்!)



puratchi kavignar13



என் பிள்ளைகள் மூவர்
மூவரும் ஒன்றாய் இருப்பதைக்
கண்டு மாற்றான் ஒருவன் செய்யும்
சதியினை ஊனும் சதையும் எலும்புமாய்
இணைந்து வலிமையுடைய ஒற்றுமையால்
முறியடித்து வெற்றி பெறுவதில் வல்லவர்கள்!

என் பிள்ளைகள் மூவரும்
மாற்றுக் கருத்துடையராய் இருப்பினும்
உடம்பில் ஓடும் இரத்தத்திசு போல
என்றும் இணைந்தே இருப்பர்!

அவ்வரிய முத்துக்களை பெற்றெடுக்க

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21060

Wednesday 20 July 2016

கு.சா.கிருஷ்ணமூர்த்தி – பருவமறிந்து பொழிந்த கவிதை மழை


Siragu-krishnamurthy-poet-fi
இருபதாம் நூற்றாண்டு சார்ந்த மரபுக் கவிஞர்களுள் குறி்க்கத்தக்கவர் கு. சா.கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் கவிஞராக உணர்ச்சிப் பெருக்கோடு வாழ்ந்தவர்; தன் மக்கள் திருமண அழைப்பிதழ்களைக் கவிதையால் வடிவமைத்தவர்; மகன் இறந்த துயரத்தைக் கவிதையால் ஆற்றிக்கொண்டவர்; திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, நடிகர், நாடக நூல் ஆசான், நாவலாசிரியர் போன்ற பல அடையாளங்கள் இவருக்கு இருந்தாலும் இவரைக் கவிஞர் என அடையாளப்படுத்துவதே பொருத்தமானது.
இவர் பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தவர். இவர் கவிஞர் கண்ணதாசன், சுரதா போன்றோர்களை வாழ்த்தித் திரையுலகிற்கு வரவேற்ற பெருமைக்குரியவர். நடிகர் பி.யு. சின்னப்பாவிற்குத் தி்ரையுலகில் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 19 July 2016

நல்ல நேரம்


Siragu nalla neram article3

நேரம்! பொதுவாக மூன்று வகைக்குள் அடங்கும், அவை இறந்த, நிகழ் மற்றும் எதிர்காலங்கள். இறந்தகாலம் என்பவை நம் முடிந்த செயல்களையும் கடந்து வந்த நேரங்களையும் குறிக்கும். அதே போல நிகழ்காலம் என்பது இதை நான் எழுதிக்கொண்டு இருப்பது, எதிர்காலம் என்பது நீங்கள் படிக்கப்போகும் சமயம். இப்படித்தான் காலங்கள் வகையுண்டு. ஆனால் பொதுவாக இவை எப்பொழுதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது. மாறாக நல்ல நேரம், கெட்ட நேரம் தான் அதிகம் நம் கவனத்திற் கொள்ளப்படுகிறது.


நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதன் மூலம் உங்களால் ஒன்றையும் மாற்ற முடியாது. நம்பிக்கைகள் என்றுமே நமக்குத் தேவையான ஒன்று தான், அதை நான் எப்பொழுதும் மறுப்பதில்லை. ஆனால் பல மூட நம்பிக்கைகளைத்தான் வேண்டாம் என்கிறேன். உடனே என்னை நாத்திகன் பட்டியலில் சேர்த்துவிட வேண்டாம், பிறகு நான் வணங்கும் விக்கிரகங்களை சான்றாக அனுப்ப வேண்டி வரும். இல்லையென்றால் நினைத்தாலும் தான் பரவாயில்லை, அந்த உரிமையாவது வாசகர்களுக்குக் கொடுக்காவிட்டால் எப்படி என்னை நான் எழுத்தாளர் வரிசையில் சேர்த்துக்கொள்வது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 18 July 2016

துன்பத்துள் வீழும் கன்னியாகுமரி ரப்பர் விவசாயிகள்


Siragu rubber article2

”ரப்பர்” குமரி மாவட்டத்தின் முக்கியமான தொழில் வளங்களில் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் ரப்பர் சாகுபடி அதிகளவில் நடைபெறுகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரப்பர் உலகத்தரம் வாய்ந்தது என்பதால் குமரி ரப்பருக்கு சர்வதேச மார்க்கெட்டில் எப்போதுமே கடும் கிராக்கிதான். ஆனால் அண்மைக்காலமாக ரப்பரின் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சோகம் தனிக்கதை.


குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓர் ஆண்டில் மட்டும் குமரி மாவட்டத்தில் இருந்து முப்பதாயிரம் டன் ரப்பர் உற்பத்தியாகிறது. சொந்தமாக ரப்பர் தோட்டம் வைத்திருப்பவர்கள், அவர்களால் பணி அமர்த்தப்பட்ட பணியாளர்கள், அரசு ரப்பர் தோட்டங்கள் அதன் பணியாளர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ரப்பர் பயிரை நம்பியே வாழ்கின்றன. குமரி மேற்கு மாவட்ட மக்களின் பொருளாதாரத்திற்கு கை கொடுப்பதிலும் ரப்பர் பயிரே முக்கியத்துவம் பெறுகிறது. எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் போதே, தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் என்று ஒரு இடி இவர்கள் மேல் இடிக்க, இடிந்து போய் கிடக்கிறார்கள் குமரி மாவட்ட ரப்பர் சாகுபடியாளர்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சீரழிக்கின்றனவா சிறார் சீர்நோக்கு இல்லங்கள்?


chiraar (2)
சென்னை கெல்லீஸ் ‌சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களில் இரு தரப்பினரிடையே மோதல், தப்பியோட்டம், தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மூன்று ஆண்டுகளில் 100 மாணவர்களுக்கு மேல் சீர்திருத்த பள்ளிகளில் இருந்து தப்பியோடியதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
மாவட்டத்துக்கு ஒரு கூர்நோக்கு இல்லம் அமைக்க வேண்டும் என்று சிறார் நீதிச் சட்டம் கூறினாலும் தமிழ்நாட்டில் எட்டு கூர்நோக்கு இல்லங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிறார்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் சென்னை, கடலூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை, கோவை ஆகிய இடங்களில் 8 கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மதுரை, கோவை கூர்நோக்கு இல்லங்கள் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்தன. இதில், மதுரை கூர்நோக்கு இல்லம் 2015 பிப்ரவரி முதல் செயல்படுவதில்லை. இங்கு வரும் சிறுவர்கள் திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 15 July 2016

கோம்பிப் பாட்டு(கவிதை)


Siragu-kombi-paattu1

எப்பொழுதும் நான் குறிப்பிடவிரும்பும் ஒன்று;
பெருமையும், இறுமாப்பும், அரட்டையும்
உறுதியாகச் சொல்ல உதவாத அரைகுறைப் பார்வையும்
பேசுபவர்மீது நாம் கொண்ட மதிப்பைக் குலைத்துவிடும்.
இருப்பினும் உலகையே அவர் சுற்றி வருவார்
பார்ப்பதையெல்லாம் பார்த்து வருவார்
பயணம் முடித்தே வந்தார் என்றால்

பத்துமடங்கு துணிவும் அதிகரித்துவிடும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 July 2016

அகிலாவின் “மழையிடம் மௌனங்கள் இல்லை” கவிதைகளில் பெண் மௌனமும் மழை அதிர்வுகளும்

Siragu Akilaavin poem3

எழுத்து அனைவருக்கும் பொதுவானது எனினும் பெண்ணின் பார்வையில் பார்க்கும் போது பெண் எழுத்து தனித்துவமானது. தமிழிலக்கியச் சூழலில் இன்று உரக்க ஒலிக்கும் விவாதங்களிலொன்று பெண்கள் எழுதும் கவிதைகளைப் பற்றியது. எல்லா விவாதங்களையும் போல இதிலும் முன்னெடுத்துச் செல்வதற்கான கருத்துக்கள் குறைவு ஆரவாரங்கள் அதிகம். இது இயல்பானது என்று இலக்கிய வரலாற்றைப் பார்க்கும் போது தெளிவாகிறது. தமிழில் புதுக் கவிதையின் வருகை இது போன்ற விவாதங்களை உருவாக்கியது. இத்தகைய போக்கினால் அகிலாவின் கவிதை மொழி தனித்துவமானது. மக்கள் தங்கள் ஆற்றலின் வலிமையும், சிறப்பையும் நன்குணர்ந்து போராட்டக்களத்தில் இறங்குவர். எத்தகைய போராட்டமாயினும். புரட்சித்தன்மையில் வெடிப்பனவே சீர்திருத்தங்கள் தோன்றியதை இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த வகையில் கவிஞர்கள் இப்போராட்ட உணர்வடைய மக்களின் எழுச்சியைப் பாடும்பொழுது, தற்காலச் சமூக போக்குகளிலிருந்து திரண்டெழும் அனுபவ மூலங்களைக் கவிதை ஆக்குவர் மேலும் மக்களையும், மக்கள் சார்ந்த நிகழ்வுகளையும் அகிலா கவிதைகளில் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.


தமிழ்க் கவிதையில் பெண் விடுதலை பேசிய பாரதிக்கும், பாரதிதாசனுக்குப் பிறகு சுயமான பெண் விழிப்பை உணர்த்தியக் கவிஞராக விளங்குகிறார். பழைய சமூக அமைப்பில் தீண்டாதவர் என ஒதுக்கப்பட்டது போலவே, பெண்கள் பின்புத்தி உள்ளவர்கள் என ஒதுக்கிய காலம் மாறி இன்று எல்லாமே பெண்கள் என ஆனபோது போராட்டங்கள் ஏராளம். இந்த வகையில் அகிலா கவிதைகளில் பெண் மௌனத்தையும், அதன் அதிர்வையும் காணலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 12 July 2016

எண்ணங்களே எல்லாம்


Siragu-ennangal-article5

நம் எண்ணங்களே எல்லாவற்றிற்கும் காரணம். அவற்றால் தான் நாம் இந்த நிலைமையிலும், இனி வரும் காலங்களிலும் செயல்படப் போகிறோம் என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை. நல்லனவற்றைச் சிந்தித்தால் நல்லனவே நிகழும் என்பதும் தீயனவற்றை சிந்தித்தால் தீயனவே தான் நிகழும் என்பதையும் பல ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் முன்னோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். இதைத் தான் நாம் இப்பொழுது நம் வாழ்வில் பரிட்சை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆக, நமக்கு இதுதான் என்பது தெரிந்துவிட்ட ஒன்றாகவே இருந்த போதிலும், அதைச் செயல்படுத்த நாம் தயங்குகிறோம். இந்தத் தயக்கம்தான் நம்மை அடக்கி வைத்து அழுத்தப்பட்ட மன நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது.


“நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்!” இது விவேகானந்தர் என்ற ஒரு பெருமகானால் தரப்பட்டது. இன்று அவர் உயிருடன் இல்லை என்றாலும் அவர் விட்டுச்சென்ற வார்த்தை ஒவ்வொன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதாகவும், வாழ்க்கையை மாற்றக் கூடிய வரமாகவும் திகழ்ந்து வருகிறது என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை. இந்த இடத்தில் ஒரு பலத்த சிந்தனை உங்களுக்குள் எழலாம், அதாவது, நினைப்பது எப்படி நம்மை மாற்றும் என்று? இதோ உங்களுக்காகவே இருக்கிறது அந்த வாழ்வியல் சூத்திரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 11 July 2016

மன்னியுங்கள் அப்பா, மன்னியுங்கள் அம்மா


Siragu mannichchidunga article4

அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு

இதுவரை உங்களுக்கு நான் கடிதம் எழுதியதில்லை, எழுத நினைத்ததும் இல்லை. ஆனால் இன்று எழுதுகிறேன். ஒருவேளை இனிமேல் உங்களுக்கு கடிதம் எழுத முடியாமல் போகலாம். இதுவே என் கடைசி கடிதமாகவும் ஆகலாம். எனவே எழுதுகிறேன்.

சென்ற வாரம் ஆனந்திற்கும் ஆனந்திக்கும் திருமணம். அவர்கள் பெயர்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை போல, அவர்களின் உள்ளங்களும் ஒன்றுபற்றிருந்தது. எனவே நானும், துளசியும், சில நண்பர்களும் சேர்ந்து திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்தோம்.


ஆனந்த், ஆனந்தியின் மனங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டதுபோல், அவர்களின் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. காவல்நிலையம் போனார்கள், சட்டம் மணமக்களுக்கு ஆதரவாக இருந்தது. கெஞ்சிப் பார்த்தார்கள், தற்கொலை மிரட்டல் விடுத்தார்கள், கொலை மிரட்டலும் விடுத்தார்கள் பயனில்லை. கடைசியாக சாபமும் விட்டார்கள். அந்த சாபம் எனக்கும் சேர்த்துதான். பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் பிள்ளைகளை நான் பிரித்துவிட்டேன் என்றும், எனவே இதுபோல் திருமணம் நானும் செய்து உங்களை அவமானப்படுத்துவேன் என்பதுதான் அவர்களின் சாபம் அல்லது ஆசை அல்லது பழிதீர்த்தல்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 10 July 2016

அடையாளம் தொலைக்கும் நாஞ்சில் நாடு!….


siragu Naanjil nadu1

திருவிதாங்கூர் அரசின் நெற்களஞ்சியமாக இருந்த நாஞ்சில் நாடு இன்று தன் அடையாளத்தை இழந்து நிற்கின்றது. குமரி மாவட்டம் இப்படி ஆகி விட்டதே என கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கின்றார்கள் இயற்கை காவலர்கள். நெல் விவசாயத்தில் கொடி கட்டி பறந்த நாஞ்சில் நாட்டில் இப்போது நெல் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகின்றது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு அறுவடை காலத்திலும் சில விவசாயிகளுக்கு அது தான் கடைசி சாகுபடியாக இருப்பது தான் வேதனைக்குரிய ஒன்று. நாகர்கோவிலில் இருந்து வடமதியை(அழகியபாண்டியபுரம்) நோக்கி பயணிப்பதே சுகமான கவிதை தான். நகரின் எல்லைப் பகுதியில் இருக்கும் சி.பி.ஹச் மருத்துவமனையை கடந்ததும் சமுத்திரமாக விரிகின்றது புத்தேரி பெரிய குளம். அதனைத் தொடர்ந்து வடமதி முழுவதும் வரிசை கட்டி நின்று செழுமை சேர்த்துக் கொண்டிருக்கின்றது நெல் வயல்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 8 July 2016

மனித ஆயுளை நீள வைக்கும் பழங்கள்


Siragu fruits1

மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘ஏ’ குறைவால் பார்வைக்கோளாறு, மலைக்கண் நோய் ஏற்படும். இப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ 2743 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 6 July 2016

காதல் பாதை சரியானதா?


Siragu-kaadhal-paadhai1

முன்பெல்லாம் ஒரு சிலரிடம் மட்டுமே காதல் கலாச்சாரம் ஏற்பட்டது. இப்போதோ அது ஒரு கெளரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் காதல் வலையில் விழ நேர்ந்தது ஒரு வெட்கத்திற்குரிய விசயமாகக் கருதப்பட்டது. இப்போதோ பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் காதல் அனுபவத்திற்குச் செல்லாமலிருப்பது ஒரு குறைவு போலவும், வெட்கத்திற்குரியது போலவும் எண்ணப்படுகிறது.


பெரும்பாலும் காதல் என்பது எதிர்பாலின ஈர்ப்பு விசையின் விளைவாகவே ஏற்படுகிறது. தொடர்ந்து பேசக்கிடைக்கும் வாய்ப்புகள், பழகக்கிடைக்கும் சந்தர்ப்பங்கள், ஒருவரையொருவர் நெருங்க வைக்கும் சூழ்நிலைகள், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு உணர்வு ரீதியான ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. பெரும்பாலும் எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரிடமுள்ள ஏதாவது ஒரு விசயம் மிகவும் பிடித்து விடுவதால் காதல் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அந்த ஒரு விசயம் அழகு, இனிமையான வார்த்தைகள், கவரும் தன்மையுள்ள ஒரு நடவடிக்கை, கரிசனையான செயல், வேடிக்கையாகப் பேசும் திறன், அக்கறையான விசாரிப்பு, தனித்திறமை, இப்படி ஏதாவது ஒன்றாக இருக்க முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 5 July 2016

ஒப்பிடாதீர்கள் ! ஒத்துக்கொள்ளுங்கள் !


Siragu oththukkol2

ஒப்பிடுவது என்பது நம்மில் வளர்ந்துள்ள களை எடுக்கப்பட வேண்டிய குணம். நமது ஒட்டு மொத்த நிம்மதியை குத்தகைக்கு எடுத்து அணு அணுவாய் நம்மை சித்திரவதைகள் செய்யக்கூடியது இந்த ஒப்பிடுவது. “அவன் வண்டி(மகிழுந்து) வாங்கிட்டான்! நானும் வாங்கனும்”, “அவன் இரு சக்கரவண்டி வாங்கியிருக்கான், அதுக்காகவே நானும் வாங்கனும்” இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த ஒப்பிடுதல். ஒப்பிடுதல் என்பது எவ்வளவு கீழ்த்தரமானது என்றால் நமது சுயமதிப்பை வெகுவாக நமக்குள்ளே கீழே தள்ளிவிடும். “நேத்து இந்நேரம் வேலைக்குச் சேர்ந்தான் வீடு வாங்கிட்டான்” என்பதால் வீட்டை மட்டும் தான் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள், அவர் அதற்கான எடுத்த சிரமத்தை அல்ல. உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆப்பிரிக்கா கண்டத்தில் நுறு கோடி பேர் தான் வாழ்கின்றனர், ஆனால் நம் இந்திய நாட்டில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், பாருங்கள் எவ்வளவு வித்தியாசம் என்று. ஒப்பிட்டு ஒப்பிட்டு, பார்த்துப் பார்த்து அதை அடைய முடியாமல் போகும் பொழுது நமது மதிப்பை நாமே நொந்து கொள்வோம். அப்படி இல்லை என்றால் நமது பெற்றோரையோ, நாம் வேலைக்குச் சேர்ந்த நிறுவனங்களையோ நொந்து கொள்வதும் உண்டு.

ஒருவரை உங்களுடன் ஒப்பிடுவது ஆரோக்கியமான முறையில் இருக்கும் பட்சத்தில் அங்கு நன்மை மட்டும் கிடைக்கும். உதாரணத்திற்கு, “அவன் வண்டி வாங்கியிருக்கான், ஆனால் இந்தக் வண்டி வாங்க அவன் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்! அவனைப் போலவே நானும் உழைச்சுக் கஷ்டப்பட்டு அதை ஒரு நாள் வாங்குவேன்” என்று நீங்கள் எண்ணும் பொழுதுகள் உங்களுக்குள் இருக்கும் ஒப்பிடும் தன்மை உங்களை ஒரு நல்ல பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் நாம் தான் அதைச் செய்வதில்லையே!, கடனை வாங்கியாவது அந்தக் வண்டி நம் வீட்டின் முன் நிற்க வேண்டும் என்று அதை வாங்கி வைத்துவிட்டு கடனும் கட்டி, வண்டியையும் விற்கும் நிலைமைக்கெல்லாம் சிலர் தள்ளப்படும் தவிர்க்க இயலாத சூழலை நாம் கண்டும் கேட்டும் இருப்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 4 July 2016

கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்


Siragu gavaththai eerkkum sol3

சொற்களைக் கோர்த்து சொற்றொடராக்குவது ஒரு கலை. பேசி முடிக்கும் வரை கேட்போர் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் தக்க வைத்துக்கொள்வது ஒரு தனிக் கலை. பேச்சாற்றலால் சிலர் இதை சாதிக்கும்போது விருப்பத்தின் அடிப்படையில் / அனிச்சையாகச் சிலர் இதை சாத்தியமாக்குகிறார்கள்.

உரையாற்றும்போது அவையில் உள்ளோர் சிந்திக்கத் தேவையான சமயத்தைக் கொடுப்பதற்காக ஒரு சொல்லை சொல்லி நிறுத்துவதற்கு ஆங்கிலத்தில் filler என்று பெயர். இந்த filler வார்த்தைகளைத் தேவையான இடத்தில் சரியான சமயத்தில் பயன்படுத்துவது மற்றவர்களை சிந்திக்க வைக்கும், ஆவலைத் தூண்டும். அதே வார்த்தைகளைத் தேவைக்கதிகமாகவும், அநாவசியமான இடங்களிலும் உபயோகிப்பது சலிப்பைத் தரும்.

கவிதையில் ஒரு சொல் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது அதன் இனிமை கூடும், அழகு கூடும், சொல்ல நினைக்கும் கருப்பொருளை வலியுறுத்த இந்த உத்தி உதவும்.


entrance exam3

மாணவர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்கும்படி பாடம் நடத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஒவ்வொரு வாக்கியத்தின் துவக்கத்திலோ, முடிவிலோ ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் ஆசிரியர் சொல்லும்போது மாணவர்களின் கவனம் பாடத்தில் இல்லாமல் அவ்வார்த்தையைப் பின் தொடர்வதில் செல்லும். அவர் எத்தனை முறை ஒரு வார்த்தையைச் சொன்னார் என்று கணக்கெடுக்கத் துவங்குவர். தன் தோழன் / தோழியிடம் தான் ஊகிக்கும் சமயத்தில் சரியாக ஆசிரியர் ஒரு வார்த்தையைச் சொல்வார் என்று பந்தயம் கட்டி விளையாடுவது சுவாரசியமான பொழுதுபோக்காக மாறிவிடும்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கணவனால் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள்- அவர்களின் தண்டனைகள் பற்றிய ஒரு அலசல் !!


Siragu kanavanaal1

கணவன் தன் மனைவி மீது  தொடர்ந்து  வன்முறை தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கின்ற போது, அது மன ரீதியாகவும் இருக்கலாம் அல்லது உடல் ரீதியாகவும் இருக்கலாம்; இந்தத் தொடர் தாக்குதலால் அந்தப்  பெண் ஒரு  விதமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார் என்கின்றது ஆய்வுகள். இதனை ஆங்கிலத்தில் Battered Woman Syndrome என்று அழைக்கின்றார்கள். இதைப் பற்றி முதலில் 1970 -இல் டாக்டர். லெனோரே வால்கெர் (Dr. Lenore Walker) என்ற உளவியல் நிபுணர் தான் கோட்பாடாக, இந்த  சமூகத்தில் ஒரு பெண் மன மற்றும் சமூக ரீதியாக தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாகும் போது எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறார் என்று “The Battered Woman” என்ற நூலில் கூறினார்.

தொடர்ந்து தாக்குதலுக்கு தன் கணவனால் உள்ளாகும் பெண் ஒரு வன்முறை சுழற்சிக்கு ஆளாகி மன ரீதியாக பாதிப்படைகின்றாள். அப்படி பாதிக்கப்படும் பெண் அந்தக் குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க தன் கணவனை கொலை செய்கின்றாள். Dr . Walker தெளிவாகக் கூறுகின்றார் இது ஒரு நோய் அல்ல தொடர்ந்து  கணவனால் துன்பப்படுத்தப்படும் பெண் பல்வேறு சமூகக் காரணங்களால் அந்த உறவில் இருந்து வெளியேற முடியாமல் கணவனைக் கொன்றுவிடுகின்றாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.