Tuesday 12 July 2016

எண்ணங்களே எல்லாம்


Siragu-ennangal-article5

நம் எண்ணங்களே எல்லாவற்றிற்கும் காரணம். அவற்றால் தான் நாம் இந்த நிலைமையிலும், இனி வரும் காலங்களிலும் செயல்படப் போகிறோம் என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை. நல்லனவற்றைச் சிந்தித்தால் நல்லனவே நிகழும் என்பதும் தீயனவற்றை சிந்தித்தால் தீயனவே தான் நிகழும் என்பதையும் பல ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் முன்னோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். இதைத் தான் நாம் இப்பொழுது நம் வாழ்வில் பரிட்சை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆக, நமக்கு இதுதான் என்பது தெரிந்துவிட்ட ஒன்றாகவே இருந்த போதிலும், அதைச் செயல்படுத்த நாம் தயங்குகிறோம். இந்தத் தயக்கம்தான் நம்மை அடக்கி வைத்து அழுத்தப்பட்ட மன நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது.


“நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்!” இது விவேகானந்தர் என்ற ஒரு பெருமகானால் தரப்பட்டது. இன்று அவர் உயிருடன் இல்லை என்றாலும் அவர் விட்டுச்சென்ற வார்த்தை ஒவ்வொன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதாகவும், வாழ்க்கையை மாற்றக் கூடிய வரமாகவும் திகழ்ந்து வருகிறது என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை. இந்த இடத்தில் ஒரு பலத்த சிந்தனை உங்களுக்குள் எழலாம், அதாவது, நினைப்பது எப்படி நம்மை மாற்றும் என்று? இதோ உங்களுக்காகவே இருக்கிறது அந்த வாழ்வியல் சூத்திரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment