Wednesday 20 July 2016

கு.சா.கிருஷ்ணமூர்த்தி – பருவமறிந்து பொழிந்த கவிதை மழை


Siragu-krishnamurthy-poet-fi
இருபதாம் நூற்றாண்டு சார்ந்த மரபுக் கவிஞர்களுள் குறி்க்கத்தக்கவர் கு. சா.கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் கவிஞராக உணர்ச்சிப் பெருக்கோடு வாழ்ந்தவர்; தன் மக்கள் திருமண அழைப்பிதழ்களைக் கவிதையால் வடிவமைத்தவர்; மகன் இறந்த துயரத்தைக் கவிதையால் ஆற்றிக்கொண்டவர்; திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, நடிகர், நாடக நூல் ஆசான், நாவலாசிரியர் போன்ற பல அடையாளங்கள் இவருக்கு இருந்தாலும் இவரைக் கவிஞர் என அடையாளப்படுத்துவதே பொருத்தமானது.
இவர் பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தவர். இவர் கவிஞர் கண்ணதாசன், சுரதா போன்றோர்களை வாழ்த்தித் திரையுலகிற்கு வரவேற்ற பெருமைக்குரியவர். நடிகர் பி.யு. சின்னப்பாவிற்குத் தி்ரையுலகில் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment